Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Paarvai Naan Ariven
Un Paarvai Naan Ariven
Un Paarvai Naan Ariven
Ebook100 pages30 minutes

Un Paarvai Naan Ariven

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Un Paarvai Naan Ariven

Read more from Rajeshkumar

Related to Un Paarvai Naan Ariven

Related ebooks

Related categories

Reviews for Un Paarvai Naan Ariven

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Paarvai Naan Ariven - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    க்ரைம் ப்ராஞ்ச் கருங்கல் கட்டிடம்.

    விடியற்காலையின் கிழக்கு திசை சூரியனை பெற்றெடுக்கும் முயற்சியில் இருந்தது. கட்டிட வளாகத்தில் இருந்த வேப்ப மரங்களில் காகங்கள் கரைந்து கொண்டிருக்க - க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் இன்பசாகர் தன் புல்லட்டில் தடதடத்து - உள்ளே நுழைந்து - ஓரமாய் நிறுத்தி ஸ்டாண்ட் இட்டார்.

    செண்ட்ரி கான்ஸ்டபிள்கள் அடித்த சல்யூட்டை பொருட்படுத்தாமல் - வராந்தாவில் வேக நடை போட்ட இன்பசாகர்க்கு முப்பது வயது இருக்கலாம். சதை பிடிப்பான சதுர முகம். அரட்சியான உடம்புக்கு ஏற்ற உயரம். யூனிஃபார்முக்கு மிகச் சரியாய் பொருந்தினார். வராந்தாவின் பாதி வழியிலேயே இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் எதிர்கொண்டார்.

    குட்மார்னிங் சார்.

    ஸாரி மிஸ்டர் பிலிப்ஸ்! இது எனக்கு குட்மார்னிங் இல்லை. பேட் மார்னிங்... போன்ல விஷயத்தைக் கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன். நம்ம கஷ்டடியில் இருந்த விசாரணைக் கைதி கெளதம் தற்கொலை பண்ணிட்டு சாகிற வரைக்கும் நீங்க பண்ணிட்டிருந்தீங்க?

    அது வந்து சார்.

    ஐ டோண்ட் வாண்ட் எனி அக்னி எக்ஸ்ப்ளனேஷன் ஃப்ரம் யூ.

    ப்ளீஸ் ஹியர்... மீ... சார்.

    சொல்லுங்க இன்பசாகர் நடந்து கொண்டே இருக்க இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் தொடர்ந்தார்.

    அந்த விசாரணைக் கைதி கௌதமோட கைக்கு ஒரு துரு பிடிச்ச பிளேடோட பாதி பகுதி கிடைச்சிருக்கு சார்.

    எப்படி கிடைக்கும்?

    தெரியலை சார்... அவனே உடம்பில் எங்கேயாவது மறைச்சு கொண்டு வந்திருக்கலாம்.

    இன்பசாகர் எரிச்சலானார். இதோ பாருங்க பிலிப்ஸ் ஏதாவது சொல்லணுமேங்கிறதுக்காக எதை வேணுமின்னாலும் சொல்லாதீங்க. அந்த கௌதமை ரெண்டு நாளா நிர்வாணமா நிக்க வைச்சுதான் விசாரணை பண்ணிட்டிருக்கோம். பாதி பிளேடு அவனால எப்படி மறைச்சு கொண்டு வந்திருக்க முடியும்.

    பிலிப்ஸ் மெளனமாய் தொடர்ந்தார்.

    இன்பசாகர் கேட்டார்.

    சம்பவம் நடந்தபோது மணி எவ்வளவு?

    சரியா அஞ்சு பத்து சார்.

    செண்ட்ரீஸ் எவ்வளவு பேர் இருந்தாங்க?

    ரெண்டு பேர்.

    கெளதம் அந்த துரு பிடிச்ச பிளேடால தன் மணிக்கட்டு ரத்த குழாயை அறுத்துகிட்டு மண்டையை போடற வரைக்கும் யாரு கவனிக்கலை...?

    அவன் அறுத்துக்கிட்டதே தெரியலை சார். ரத்தம் ஏராளமா மிஞ்சு போறதைப் பார்த்த பின்னாடிதான்... ரத்தக்குழாயை அறுத்துகிட்ட விஷயம் தெரிஞ்சுது.

    ராத்திரி கடைசியா கௌதமை மீட் பண்ணினது யாரு?

    நான்தான் சார்.

    அதுக்குப் பின்னாடி அவனைப் பார்க்க யாரும் வரலை?

    இல்லை சார்.

    வராந்தா முடிந்து போயிருக்க அதன் கோடியில் ஈர வாசனையோடு விசாரணைக் கைதிகளை அடைத்து வைக்கும் ஸெல் வந்தது.

    டாக்டர் ஒருவரும், ஃபாரன்ஸிக் ஆபீசர் ஒருவரும் இறுகிய முகங்களோடு காத்திருக்க இன்பசாகர் ஸெல்லுக்குள் நுழைந்தார்.

    அழுக்கான சிமெண்ட் சீட்டில் - கௌதமின் உடல் மல்லாந்து தெரிந்தது. தரை பரப்பு பூராவும் கருஞ்சிவப்பு நிறத்தில் உறைந்து போன ரத்தம்.

    ரத்தம் அந்த குளிர் வேளைக்கு கட்டி ஒட்டிப் போயிருக்க காற்றில் ஒரு வீச்சம் பரவியிருந்தது.

    இன்பசாகரின் பார்வை கௌதமின் மணிக்கட்டுக்கு போயிற்று. பிளேடால் அறுத்த காயம் ஆழமாய் தெரிந்தது.

    அந்த பிளேடு எங்கே?

    ஃபாரன்ஸிக் ஆபீசர் முன்னால் வந்து ஒரு வெள்ளைத் துணியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த ரத்தம் தோய்ந்த அரை பிளேடைக் காட்டினார்.

    இன்பசாகர் பிளேடை பார்த்துவிட்டுக் குரல் கொடுத்தார். செண்ட்ரீஸ்.

    ஸெல்லுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1