Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek Ashok Rajesh
Vivek Ashok Rajesh
Vivek Ashok Rajesh
Ebook116 pages55 minutes

Vivek Ashok Rajesh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Vivek Ashok Rajesh

Read more from Rajeshkumar

Related to Vivek Ashok Rajesh

Related ebooks

Related categories

Reviews for Vivek Ashok Rajesh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek Ashok Rajesh - Rajeshkumar

    24

    1

    சாந்தகுமார் கண் விழித்தபோது மதியம் மூன்று மணி. நேற்றைக்கு ராத்திரி அளவுக்கு மீறி சாப்பிட்ட ட்ரிப்ளெக்ஸ் ஸ்காட்ச் விஸ்கி - நெற்றி நரம்புகளில் கனமாய் உட்கார்ந்திருந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டே கையை நீட்டி - கட்டிலின் இடது பக்கமிருந்த இண்டர்காம் ரிஸீவரை எடுத்தான். தன் பி.ஏ.வை விளித்தான்.

    ‘‘கோபால் தாஸ்...’’

    "ஸார்...’’

    "ஃபங்க்ஷன் எத்தனை மணிக்கு...?’’

    "ஆறு மணிக்கு ஸார்... பட் ஃபைவ் தர்ட்டிக்கே... ஸீட்ல உட்காரணும். அவார்ட்ஸ் கமிட்டியின் கண்டிப்பான உத்தரவு...’’

    அஞ்சு மணிக்கு புறப்பட்டா போதுமா...?

    ‘‘போதும்...’’

    என்னைப் பார்க்கிறதுக்காக யாராவது வந்து காத்திட்டிருக்காங்களா?

    ‘‘எஸ்... ஸார்..."

    "யார்... யார்...?’’

    "கோல்ட் லோட்டஸ் மூவிஸ் ப்ரொட்யூசர் நட் கர்ணி... ரெட்சன் பிக்சர்ஸ் ராமாநாயுடு... எம்.எம். மூவிலேண்ட் மாஸாவியா, லட்சுமி பிக்சர்ஸ் கிரிதர், டைரக்டர் மோகன் தேவ்... அதுல... ராமாநாயுடு ரொம்ப நேரமா வந்து காத்திட்டிருக்கார். மத்தியானம் லஞ்சுக்கு கூட அவர் போகலை...’’

    "அதை ஏன்யா உக்காத்தி வச்சிருக்கே...? ராசியில்லாத மனுஷன்... ஜெகன்லாலைப் போட்டு எடுத்த ரெண்டு படமும் ப்ளாப். விட்ட பணத்தை -எடுக்கிறதுக்காக... இப்ப என்கிட்டே வந்திருக்கார். கால்ஷீட் கிடையாதுன்னு நீயே சொல்லி அனுப்பிடு...’’

    "சரி ஸார்...’’

    ‘‘லட்சுமி பிக்சர்ஸ் கிரிதரை. உள்ளே அனுப்பு...’’

    "அவர் இப்பத்தான் - ரெண்டு நிமிஷத்துக்கு முந்திதான்... வந்தார் ஸார்... மத்தவங்க... ரொம்ப நேரமா...’’

    "சொல்ற ஆளை உள்ளே அனுப்புய்யா... சினி ஃபீல்டுல இன்னிக்கு... வாய்ஸும் பசையும் உள்ள ஆளு கிரிதர் தான்... பணத்துக்கு மதிப்பு குடுத்து பழகுய்யா...’’

    "எஸ் ஸார்...’’

    சாந்தகுமார் ரிஸீவரை வைத்து விட்டு - வெல் வெட் போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட் கார்ந்தான். கண்ணாடி ஜன்னல்களில் - சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் அடர் நீலநிற ‘கர்ட்டன்’கள் அடை காத்தன. ஏ.ஸி மெதுவாய் உறுமி கசிந்து கொண்டிருக்க - வாஷ்பேசினை நோக்கிப் போன சாந்தகுமாருக்கு வயது முப்பத்திரண்டு. கடந்த ஐந்து வருஷ காலமாய் இந்தி, தெலுங்கு, தமிழில் நெம்பர் ஒன் ஹீரோ இவன்தான். படத்திற்கு அரை கோடி சம்பளம். தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர் மன்றங்கள். இவன் வில்லனிடம் ஒரு அடி வாங்கினாலும் - தியேட்டர்க்கு தீ வைத்து விடுகிற ரசிகர்கள் அதிகம். படம் சரியில்லை - என்று யாராவது முனகிக் கொண்டு - தியேட்டரை விட்டு வெளியே வந்தால் - அவனுடைய வயிற்றில் நிச்சயமாய் கத்தி பாய்ந்து விடும். ரசிகர்களின் இந்த வெறி, சாந்தகுமார்க்கு பிடிக்கும். ஆனால் மேடையில் பேசும்போது - என் ரசிகர்கள் மென்மையாக இருக்க வேண்டும். ஒரு தாயின் மனதோடு தொண்டாற்றுங்கள் என்று சொல்லி - கிளிசரின் உதவியோடு கண் கலங்குவான். சென்ற ஜனவரியில் இவனுக்கு... பத்ம விபூஷன் கிடைத்தது. எப்படி கிடைத்தது என்று ஆராயப் போனால் - வழியெல்லாம் நாறிவிடும்... அந்த விருதை ஜனாதிபதியிடமிருந்து - முறைப்படி - வாங்கிக் கொள்ளத்தான் - டெல்லி வந்திருக்கிறான் சாந்தகுமார். சாயந்தரம் ஆறு மணிக்கு பங்க்ஷன்... வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தான். சதை பிடிப்பான மாநிற முகம் - ரோஸ் பௌடரின் உதவியாலும் - மேக்கப் கின்னின் பூச்சாலும் - நிறம் பெற்று சோபிதமாய் தெரிந்தது. பரட்டையும், சுருட்டையும் கலந்த தினுசில் - அடர்த்தியான தலைமுடி. கண்களுக்கு கீழே தெரிந்த - இரண்டு கருவளையங்களை கவலையோடு விரலால் தேய்த்துப்பார்த்து விட்டு இனிமேல் ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக கண்டவளைத் தொடக் கூடாது என்று ஒரு தற்காலிக சபதம் செய்து கொண்டான்.

    கதவு திறந்தது.

    கிரிதர் உள்ளே வந்தார். ஐம்பது வயது உடம்பு. வட நாட்டுக்காரர்களுக்கே உரிய காரட் நிறம்.

    வழுக்கை மண்டையில் சொற்பமாய் வெள்ளி முடிகள்.

    ‘‘நமஸ்தே சாந்தகுமார்...’’

    "ஆயியே... கிரிதர்ஜி.’’

    கிரிதர் கையில் வைத்திருந்த - பொக்கேயை நீட்டிக் கொண்டே இந்தியில் பேசினார்.

    ‘‘இந்த சின்ன வயசுல உங்களுக்கு பத்மவிபூஷன் பட்டம் கிடைச்சுது சாதாரண விஷயமில்லை. உங்களுடைய சாதனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...’’

    ‘‘எல்லாம்... உங்க மாதிரியான... பெரியவங்களோட ஆசீர்வாதம் தான்.’’

    ‘‘இந்த தன்னடக்கம் இன்னும் உங்களுக்கு நிறைய விருதுகளை வாங்கிக் கொடுக்கும்...’’

    ‘‘உட்காருங்க கிரிதர்ஜி...’’

    நீலநிற வெல்வெட் சோபாவில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்தார்கள்.

    "பங்க்ஷன் - எத்தனை மணிக்கு...?’’

    "ஆறு மணிக்கு...’’

    ‘‘உங்களுக்கு இந்த விருது கிடைச்சதுல... சினிமா இண்டஸ்ட்ரி பூராவும் பொறாமையில வெந்துகிட்டு இருக்கு... சாந்த குமார்..."

    தெரியும்! நான் எதைப் பத்தியும், யாரைப்பத்தியும் கவலைப்படறதில்லை... எனக்கு என்னோட தொழில்தான் முக்கியம்... இந்த விருதுகளெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்...

    ‘‘உங்களுக்கு இந்த விருது கிடைச்சதைப் பற்றி ஃபீல்டுல ஒரு பேர் கிளம்பியிருக்கு... அதை கேள்விப்பட்டீங்களா...?’’

    ‘‘என்ன...?’’

    ‘‘உங்களுக்கு பத்மவிபூஷன் விருது கிடைச்சதுக்கு காரணம் ஒரு சென்ட்ரல் காபினெட் மந்திரிதானாம். அவரோட பொண்ணுக்கும், உங்களுக்கும் க்ளோஸ் காண்டாக்ட் இருக்கிறதாகவும்... அடுத்த வருஷ ஆரம்பத்தில் அந்தப் பொண்ணை நீங்க கல்யாணாம் பண்ணிக்கப் போறதாகவும்... அந்த நன்றிக்குத்தான் இந்த விருதுன்னும் பேசிக்கறாங்க...’’

    சாந்தகுமார் உள்ளுக்குள் அதிர்ந்தான்.

    "இந்த உண்மை எப்படி வெளியே வந்தது...? யார் முலமா கசிந்திருக்கும்...?’’

    "என்ன சாந்தகுமார்... இந்த ரூமரைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?’’

    சாந்தகுமார் கஷ்டமாய் சிரித்தான்.

    ‘‘நீங்களே இதை ரூமர்ன்னு சொல்லிட்டீங்க... என்கிட்டே கால் ஷீட் கேட்டு... நான் கொடுக்காத ஆத்திரத்துல சில ப்ரொட்யூஸர்ஸ் கிளப்பிவிட்ட வதந்தி இது... பை த...பை... இதை யார் உங்களுக்கு சொன்னது...?"

    ‘‘ஃபீல்டுல பரவலா... இதைப் பேசிக்கறாங்க..."

    ‘‘அழகான

    Enjoying the preview?
    Page 1 of 1