Iruttuku Irandu Niram
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Iruttuku Irandu Niram
Related ebooks
Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Oru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodu...! Rating: 4 out of 5 stars4/5Thattungal Thirakkaathu Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Nirangal Rating: 3 out of 5 stars3/5Vithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Manasellam Maya Rating: 5 out of 5 stars5/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Andre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Kaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsDecember Iravukal Rating: 0 out of 5 stars0 ratingsEthayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsMudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKannukkul Neethaan Rating: 5 out of 5 stars5/5Karupu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Iruttuku Irandu Niram
0 ratings0 reviews
Book preview
Iruttuku Irandu Niram - Rajeshkumar
25
1
ஆடி வெள்ளிக்கிழமை காலை ஒன்பதரை மணி. குங்குமத்தையும் மஞ்சளை வாங்கி கொண்டு — மைலாப்பூர் கற்பகாம்பாள் சந்தியிலிருந்து முகத்தில் மினுமினுக்கும் வியர்வையோடு வெளிப்பட்டாள் மனோகரி. கும்பல் கசகசப்பிலிருந்து விடுபட்டு கோயில் வாசலுக்கு வந்து, ஆட்டோ ஏதாவது தட்டுப் படுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த வினாடி —
பூக்கடை பக்கத்தில் - 'கலர்' பார்ப்பதற்கென்றே வந்து காத்திருந்த நான்கைந்து கல்லூரி மாணவர்கள், மனோகரின் முதுகுக்கு பின்னால் நேர்முக வர்ணனை செய்தார்கள்.
மச்சி
...
ம்...
அம்மணிக்கு அமலா நிறம்...
"பானுப்ரியா கண்ணு...
ஸ்ரீதேவி இடுப்பு...
கழுத்துல லைசன்ஸ் இருக்கா பாரு மச்சி?
இல்லேமா... இன்னும் எவனும் பட்ட போடலை...
நீ போட்டுடேன்...
ஒருவன் சொல்ல மனோகரி நின்றாள்.
அம்மணி நிக்கிறா...
திரும்பறா...
முறைக்கிறா...
வர்றா...
போச்சுடா... நழுவிடலாமா...?
டேய் மச்சி! ஒரு பொட்டச்சிக்குப் பயப்படலாமா... சொல்லும்மா...! அவள் என்னதான் பண்ணிடுவான்னு பார்க்கலாம்...
மனோகரி அவர்களை நெருங்கினாள். கோபமான குரலில் கேட்டாள்; உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சி இருக்காங்களா?
ஏன், நாத்தனார் இல்லாத குடும்பமா இருந்தால் பரவாயில்லைன்னு நினைக்கறியா...?
கும்பலின் ஒருவன் கேட்க — மற்றவர்கள் சிரித்தார்கள்.
மனோகரி முகம் சிவந்தாள். கல்லூரிக்குப் போக வேண்டிய நேரத்துல — இப்படி கோயில் வாசலுக்கு முன்னாடி வந்து நின்னுகிட்டு, போற வர்ற பெண்களை மோசமா பேசுற நீங்க... அந்தப் பிச்சைக்காரர்களை விட மோசமானவங்க...
மச்சி... டேய்! அம்மணிக்கு சாமி வந்துடுச்சி...
மனோகரி தன் காலில் இருந்து செருப்பை உருவினாள். ஆமாண்டா! எனக்கு சாமி வந்துடுச்சு... இப்போ பூசையும் பண்ணப் போறேன்... ஒவ்வொருத்தனா வந்து பிரசாதம் வாங்கிட்டு போங்க...
மனோகரி ஒருவனின் சட்டை காலரைப் பற்றிக் கொண்டு செருப்பை உயர்த்த - ஒரு, மாணவன் அவளுடைய மாணிக்கட்டைப் 'கப்' பென்று பற்றிக் கொண்டான்.
மரியாதையா செருப்பை கீழே போடு...
என் கையை விடு...
செருப்பை கீழே போடு... முதல்லே...
விடுடா... கையை...
என்னடி சொன்னே...?
— மாணவன் மனோகரியின் மணிக்கட்டை முறுக்கிய அதே விநாடி — பின்பக்கமிருந்து அந்தக் குரல் கேட்டது.
மனோகரி! செருப்பை கீழே போட்டுடு...
மனோகரி திரும்பினாள்.
கணேசன்... புன்னகையோடு நின்றிருந்தான். மனோகரியின் கையிலிருந்த செருப்பு தன்னிச்சையாய் உதிர, கண்களில் நீர் மோதிக்கொண்டு நின்றது. கணேஷ்! இ...இவங்க... இ... இவங்க...
தெரியும் ரோட்டோர ரோமியோக்கள் ஊர்ல இருக்கிற அழகான பெண்களை பார்வையாலேயே கற்பழிச்சு சுகம் காண்கிற காமுகப் பேர்வழிகள். எல்லாக் கோயில்களுக்கு முன்னாடியும் இப்படி நாலைஞ்சு தடிமாடுகள் நின்னுட்டுதான் இருக்கும். அதையெல்லாம் கண்டுக்காமல் போகணும்...
மச்சி, இவன் நம்மளைத் திட்றான்...
அந்த மாணவர்கள் அரைவட்டமாய் கணேசனை சூழ்ந்தார்கள். ஏண்டா இவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வர்றீயே... நீ யார்ரா...?
ஒரு மனிதன்...
டேய்! தத்துவம் பேசறான்...
இரண்டு சாத்து சாத்தினால், நிதானத்துக்கு வந்துடுவான்.
கணேசன் சிரித்தான். என்மேல... எவன் கையை வைச்சாலும் சரி... ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அவர் மப்டியில் இருந்த போது... தாக்கின குற்றத்துக்காக... அவன் ஆறு மாசம் கம்பி என்ன வேண்டி வரும்...
மாணவர்கள் அதிர்ந்து போய் — ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு — மெல்ல பின் வாங்கினார்கள். கணேசன் மார்புக்கு குறுக்கா கைகளைக் கட்டிக்கொண்டு ஓரடி முன்னாள் வந்தான்,
வாங்கடா! என்னை எவன் சாத்த விரும்பினாலும்... தாராளமா வந்து சாத்தலாம்...ம்... வாங்க...
மச்சி... கழண்டுக்குவோம்... இனியும் இங்கே நின்னுட்டிருந்தா... வேன்ல அள்ளிக்கிட்டு போயிடுவாங்க. ஆசாமியோட மீசையும், தலையையும், பார்த்தப்பவே... இவன் போலீஸ் இலாகா ஆளாகத்தான் இருக்கனும்ன்னு சந்தேகப்பட்டேன்.
சொல்லிக் கொண்டே அவர்கள் பொன்னம்பல வாத்தியார் வீதியின் மறுமுனையை நோக்கி ஓட கணேசனும் மனோகரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து புன்னகைத்தபடி ரோட்டை நோக்கி நடந்தார்கள்.
நீங்க விளையாட்டுக்காக இன்ஸ்பெக்டர்ன்னு சொன்னதை அவங்க நம்பிட்டாங்க... போலிருக்கு...
என்னோட கிராப்பும், மீசையும் சமயத்துல எப்படி உதவுது பார்? ஆமா... அவங்க உன்னை என்னான்னு சொல்லி கலாட்டா பண்ணினாங்க...?
அதை வேற சொல்லனுமா...?
சொல்லு கேட்போம். நான் ஒரு வருடமா காதலிக்கிற என்னோட மனோகரியைப் பற்றி அவங்க என்ன சொன்னாங்கன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?
மனோகரி தலை குனிந்துக் கொண்டே சொன்னாள்.
எனக்கு அமலா நிறமாம்.
சரியாதான் சொல்லியிருக்கான் அப்புறம்...?
பானுப்ரியா கண்ணாம்...
இதுவும் சரி...
ஸ்ரீதேவி இடுப்பாம்...'
இதுவும் சரி...அப்புறம்...
அப்புறமென்ன...? அவ்வளவுதான்...
கழுத்துக்குக் கீழே பசங்க ஒன்னும் சொல்லலையா?
ச்சீ! அவர்களைவிட நீங்க மட்டம்...! அது சரி... தமிழ் படங்கள்ல கதாநாயகி ஆபத்துல மாட்டிக்கிட்டா... கதாநாயகன் மூக்கு வேர்த்து காப்பாத்த வந்துடற மாதிரி நீங்க எப்படி சரியா கோவில் வாசலுக்கு வந்தீங்க...?
இன்றைக்கு ஆடி வெள்ளிக்கிழமை நிச்சயமா கோயிலுக்கு போயிட்டுதான் ஆபீசுக்கு போவேன்னு நினைச்சேன். வந்துட்டேன். பஸ்சில் ஏகப்பட்ட கூட்டம். இல்லேன்னா பத்து நிமிடத்துக்கு முந்தியே வந்திருப்பேன்...
"ஆமா இன்றைக்கு நீங்க ஆபீசுக்கு போகலை...?'
போகலை...
ஏன்...?
காரணத்தை சொன்னா திட்டுவே...
திட்டமாட்டேன்... சொல்லுங்க...
வந்து... வந்து... இன்றைக்கு ஒரு சினிமா கம்பெனியிலிருந்து மேக்கப் டெஸ்டுக்காக கூப்பிட்டிருக்காங்க... அதான்... போய்... பா... பார்த்துட்டு...வர...
மனோகரி தன் பெரிய விழிகளால் முறைத்தாள்.
பாத்தியா... முறைக்கிறே...?
பின்னே... உங்களை கொஞ்சனுமாக்கும்...? இதோ பாருங்க... நீங்க கண்ணுக்கு லட்சணமா ஹீரோ மாதிரி இருக்கீங்க. நான் ஒத்துகிறேன். அதுக்காக... சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு... இருக்கிற வேலைக்கும் ஒழுங்கா போகாமே... ஒவொரு சினிமா கம்பெனிக்கும் படை எடுக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்லீங்க...
சரி மனோகரி! இந்த ஒரு தடவை மட்டும்... போய்ட்டு வந்துடறேன். பெரிய சினிமா கம்பெனி. முழுசா புதுமுகங்களை வைச்சே படம் தயாரிக்கப் போறாங்களாம்... கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்ன்னு நினைக்கிறன்.
நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா?
சொல்லு...
கூடிய சீக்கிரமே... உங்க சினிமா ஆசையாலே... இப்ப பார்த்திட்டிருக்கிற குமாஸ்தா வேலையும் போகப்போகுது...
சொல்லாதே! உன் நாக்குல மச்சம் இருக்கு. பலிச்சுடப் போகுது... மனோகரி...
பலிச்சாத்தான் உங்களுக்கு புத்தி வரும்.
இதுதான் என்னோட கடைசி சினிமா முயற்சி. இந்த முயற்சியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கலைன்னா... இனிமே... பாலச்சந்தர், பாரதிராஜா நேரில் வந்து நடிக்க வான்னு கூப்பிட்டாலும் போகமாட்டேன்.
சத்தியமா...?
நீ கும்பிடற சாமி சத்தியமா... போகமாட்டேன்.
சரி... உங்களை இப்போ... எந்த படக் கம்பெனியிலிருந்து கூப்பிட்டிருக்காங்க...?
கோல்ட் மவுண்டன் பிக்சர்ஸ். தி.நகர் போகணும்...
போய்ட்டு எப்போ திரும்புவீங்க...?
சயந்தரமாயிடும்...
சாயந்திரம் எங்கே சந்திக்கலாம்...?
நீயே... சொல்லு...
பனகல் பார்க்...
வந்துடறேன்...! நீ போகவேண்டிய பஸ் வந்தாச்சு... ஓடிப்போய் சீட்டைப் பிடி...
கணேசன் சொல்ல மனோகரி சற்றே சேலையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு --- பல்லவனை நோக்கி ஓடினாள்.
கணேசன் பாண்டிபஜார் நிறுத்தத்தில் இறங்கி, தணிகாசலம் தெருவில் நீளமாய் நடந்து ஏராளமான, மரங்களுக்கு மத்தியில் குளுமையாய் சிக்கியிருந்த -- அந்த பங்களாவின் காம்பவுண்டு கேட்டுக்கு முன்பாய் வந்து நின்றான்.
பிரமாண்டமான பங்களா. கிட்டத்தட்ட அரை கோடி ரூபாயை விழுங்கிட்டு சாதுமாதிரி நின்றிருந்தது.
எவர்சில்வர் கம்பிகள் பொருத்தப்பட்ட காம்பவுண்டு கேட் வெய்யிலில் அபாரமாய் மின்னியது.
கேட்டில் நின்றிருந்த வாட்ச்மேன், கணேசனைப் பார்த்ததும், பவ்யமாகி நெற்றியில் சல்யூட் பதித்து ---- உள்ளே போங்க சார்" --- என்றான்.
கணேசன் ஆச்சர்யப்பட்டுக்கொண்டே உள்ளே போனான். போர்டிகோவில் மாருதியும், பென்ஸ் காரும் பளபளப்பாய் கேக் துண்டங்கள் மாதிரி நின்றிருந்தன. பங்களாவின் இரண்டு பக்கங்களிலும், பசேலென்ற சதுர புல் வெளிகள் பார்வைக் இதமாய் கிடைத்தது. சலவைக் கற்கள் பதித்த போர்டிகோ படிகளில் ஏறி, வராந்தாவில் கால் பதித்த விநாடி ---
உள்ளேயிருந்து ஒரு வேலைக்காரப் பெண் எதிர் பட்டாள். சுத்தமான பல் வரிசையைக் காட்டி புன்னகைத்தாள். எம்... பின்னாடி வாங்க...
மனசு முழுக்க வியப்பு வழிய கணேசன் நடந்தான்.
முன்னறையைக் கடந்ததும் --- ஒரு ஆக்கி மைதானத்தின் -- நல்ல -- நீல அகலத்தோடு பெரிய ஹால் வந்தது. ஹாலுக்கு நடுவே ஐந்தடி குறுக்களவில், சிவப்புக் கம்பளம் மெத்மெத்தென்று மாடிக்கு வழிகாட்டியது.
வேலைக்காரி முன்னால் நடக்க --- கணேசன் தொடர்ந்தான்.
மாடிப்படிகளில் உயர்ந்தார்கள். வராண்டாவின் முதல் அறைக்கு வந்ததும், வேலைக்காரி நின்றாள். மறுபடியும் பல் வரிசையைக் காட்டினாள்.
கதவைக் காட்டி --- உள்ளே போங்க...
என்றாள்.
கணேசன் தயக்கமாய் அந்த வேலைக்காரியை ஏறிட்டான். உள்ளே யா...யார்... இருக்காங்க...?
போய்ப் பாருங்க தெரியும்...
கணேசன் கதவைக் திறந்துகொண்டு உள்ளே போனாள். ஏ.சி. குளிர் உடம்பை வருடியது. பார்வை அறைக்கு நடுவேயிருந்த வெல்வெட் சோபாவுக்குப் போக, அவனுடைய இதயப் பிரதேசத்தில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது.
2
கணேசனின் பார்வை சோபாவில் உட்கார்ந்திருந்த பெண்ணின் மேல் ஆணியடித்த மாதிரி நிலைத்துப் போயிருக்க --- அவள் தன் அழகான கண்களைக் கொட்டி - ஐஸ்கிரீம் குரலில் கேட்டாள். என்ன கணேசன்... அப்படி பார்க்கிறீங்க...?
நீ... நீங்க... நிகிலாதானே...?
ஆமா...
---- அவள் சிரித்தாள். இந்தியாவின் நம்பர் ஒன் நடிகைன்னு பேர் வாங்கியிருக்கிற அதே நிகிலாதான் நான்...
கணேசன் பேசத் திணிறினான். இங்கே... கோல்ட் மவுண்டன் பிக்சர்ஸ் கம்பெனி என்று... ஒரு...
அது என்னோட சினிமா கம்பெனிதான்...
மேக்கப் டெஸ்ட்டுக்கு... என்னைக் கூப்பிட்டது...?
நான்தான்...
ரொம்ப நன்றிங்க...! நான் இந்த அதிர்ஷ்டத்தை எதிர் பார்க்கலை...
நிகிலா புன்னகைத்தாள். உங்களுக்கு நடிக்கிறதுல அவ்வளவு ஆர்வமா...?
ரொம்ப... ரொம்ப...
முதல்ல உட்காருங்க...
பரவாயில்லீங்க! நான் நிற்கிறேன்.
எனக்கு நின்னுட்டு பேசறவங்களைக் கண்டா பிடிக்காது...
கணேசன் சட்டென்று எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
நிகிலா கன்னங்குழைய ஒரு பூ மலர்கிற மாதிரி சிரித்தாள்.
கணேசன் கிறங்கிப் போய் --- அவளையே பார்த்தான். உடம்பை பூக்களில் நெய்தமாதிரி என்ன ஒரு தளதளப்பு! கையில்லாத ரவிக்கை வெளிப்படுத்திய -- அந்த இரண்டு தோள்களிலும் சலவைக்கல் மாதிரி என்ன ஒரு மினுமினுப்பு!
கணேசன்! இப்படி கெட்ட பார்வையெல்லாம் என்னைப் பார்க்கக்கூடாது...
ச... சாரி...
கணேசன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க...?
டயர்கள் தயாரிக்கிற ஒரு கம்பனியில் குமாஸ்தாவா இருக்கேன்.
சம்பளம் என்ன கிடைக்கும்?
ஆயிரத்து நூறு ருபாய்... பிடித்தமெல்லாம் போக கைக்கு எண்ணூறு ரூபா வந்து சேரும்...
உங்களுக்கு இன்னும் கல்யாணம்...?
ஆகலை...
சினிமாவில் நடிக்க நீங்க ஏன் இவ்வளவு ஆர்வப் படறீங்க...?
எனக்கு சின்ன வயசிலிருந்தே... கலைத் தாகம் உண்டு...
இது பொய். உண்மையான காரணத்தை நான் சொல்லட்டுமா? சினிமாவில் நடிக்க வந்தா பணம் நிறைய கிடைக்கும். பேரும், புகழும் அலைமோதும். கார், பங்களா, பேங்கில் கணிசமான தொகைன்னு வசதியா வாழலாம்... இதுதானே உங்க உண்மையான எண்ணம்?
வந்து... வந்து...
பொய் பேசினால் எனக்குப் பிடிக்காது கணேசன்...
ஆ... ஆமா... நான் வசதியான வாழ்க்கைக்காகத்தான் சினிமாவில் நடிக்க ஆசைப்படறேன்...
அந்த வசதியான வாழ்க்கை உங்களுக்கு -- சினிமாவில் நடிக்காமலேயே... கிடைச்சாலும் பரவாயில்லையா...
கணேசன்