Ethayum Oru Thadavai!
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ethayum Oru Thadavai!
Related ebooks
Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Iravukal! Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsPoovil Oru Sooravali Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Yutham Rating: 0 out of 5 stars0 ratingsKodu Thandathey! Rating: 4 out of 5 stars4/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Andre, Appothe, Antha Nimishame! Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Mul Nilavu and Mattroru Naal Rating: 5 out of 5 stars5/5Thappu Sei Thappi Sel! Rating: 0 out of 5 stars0 ratingsPistal Vazhthu Rating: 0 out of 5 stars0 ratingsArai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyaatha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsMeendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Muraiyil Maranam! Rating: 5 out of 5 stars5/5Sumathi Engira Sumai Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Puyalum Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thappikkum Velai and Arukil Oru Naragam! Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Urainthu Pona Unmai! Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Ethayum Oru Thadavai!
0 ratings0 reviews
Book preview
Ethayum Oru Thadavai! - Rajeshkumar
ராஜேஷ்குமார்
அபாய அறிவிப்பு - 1
கடைகளில் விற்கப்படும் உடனடி இட்லி மாவு, உடனடி சப்பாத்தி, புரோட்டா இவைகளை வாங்கும் போது எச்சரிக்கை அவசியம். இதுமாதிரியான பொருட்களில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பென்சாயிக் அமிலம் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இது மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கும் போது அந்தப் பொருட்களை தயாரித்து தரமான கம்பெனிதானா என்பதைப் பார்க்க வேண்டும். அதன்பிறகு லேபிள் விபரங்கள், உட்பொருள், காலாவதி தேதி, வைக்கப்பட வேண்டிய வெப்பநிலை, எது மாதிரியான வேதிப் பொருள் எந்த சதவீத அளவுக்கு கலக்கப்பட்டுள்ளது என்பதை கவனமாகப் படித்துப் பார்த்துவிட்டு வாங்க வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் எதையாவது வாங்கி வயிற்றுக்குள் தள்ளினால் டாக்டர்களுக்கு ஃபீஸை அள்ளித் தர வேண்டியிருக்கும்.
1
சென்னையின் அமெரிக்கத் தூதரகம்.
விசா வழங்கும் பெண் அதிகாரிக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தாள் அஸ்திரா. பாப் தலையும் லிப்ஸ்டிக் பூச்சுமாய் இருந்த அந்த பெண் அதிகாரி தன் கையில் வைத்து இருந்த பேப்பர்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே வேகமான அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டாள்.
உங்கள் பெயர்?
அஸ்திரா...
வயது?
இருபத்தி மூணு...
அமெரிக்காவுக்குப் போவது இதுதான் முதல் முறையா?
ஆமாம்...!
உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது?
சென்ற மே மாதம்.
தேதி..?
பதினாறு.
அதாவது திருமணம் நடந்து ஆறுமாதம் முடியப் போகிறது?
ஆமாம்...
உங்கள் கணவர் பெயர் சூர்யகுமார்?
ஆமாம்.
இன்ஷியல்?
ஜே...
ஜே ஃபார்?
ஜெயராமன்
உங்கள் கணவர் சூர்யகுமார் சிகாக்கோவில் எந்த கம்பெனியில் - என்ன வேலை பார்க்கிறார்?
பாத் ஃபைண்டர் டெக்னாஜி கம்பெனியில் சீஃப் ப்ரோக்ராமராய் இருக்கிறார்.
கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே மிஸ்டர் சூர்யகுமார் சிகாக்கோ புறப்பட்டு போய்விட்டார் இல்லையா?
ஆமாம்!
நீங்கள் ஏன் அப்போது போகவில்லை?
என்னுடைய பாஸ்போர்ட்டில் ஒரு சிறிய பிரச்னை இருந்தது. அதன் காரணமாய் விசாவுக்கு உடனடியாய் விண்ணப்பிக்க முடியவில்லை.
அந்த தூதரகப் பெண்மணி கண்ணைச் சிமிட்டினாள்.
இந்த ஆறுமாத காலமும் உங்களுக்கு ஒரு பெரிய சுமையாய் இருந்து இருக்குமே...?
அஸ்திரா ஒரு சிறிய புன்னகையோடு தலையைக் குனிந்து கொண்டாள்.
யுவர் விசா ஈஸ் க்ரேண்டட். நீங்கள் அமெரிக்கா போகலாம். விஷ் யூ ஏ ஹேப்பி மேரீட் லைஃப்...
தேங்க்யூ மேடம்...!
அஸ்திரா அவளுக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு விசா கேபினில் இருந்து வெளியே வந்தாள். விசிட்டர்ஸ் ஹாலில் காத்திருந்த அவளுடைய அப்பா விநாயக மூர்த்தி எழுந்து வேக வேகமாய் அவளை நோக்கி வந்தார்.
என்னம்மா ஆச்சு...?
விசா கிடைச்சாச்சுப்பா.
ஒண்ணும் பிரச்னை இல்லையே?
ஒரு பிரச்னையும் கிடையாது. அந்த அம்பாசிடர் பெண் ஏதோ ஒரு தோழிகிட்ட பேசற மாதிரி விசாவுக்கு ஓ.கே.சொல்லிட்டா.
உடனே மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேசி விபரத்தைச் சொல்லும்மா...!
இதோ...!
என்று சொன்னவள் தன் கைப்பையில் வைத்து இருந்த செல்போனை எடுத்து சர்வதேச எண்ணின் தொடர்போடு தன் கணவன் சூர்யகுமார் எண்ணுக்கு போன் செய்தாள். வீடியோ கால் வசதியோடு கூடிய செல்போன் அது.
மறுமுனையில் ரிங் போயிற்று.
சில விநாடிகளுக்குப் பின் சிகாக்கோவில் இருந்த சூர்யகுமாரின் முகம் செல்போனின் வலது பக்க மூலையில் உற்பத்தியாயிற்று. கலைந்து போன தலை முடியோடு அழகான இளைஞன். முகத்தில் தூக்கக் கலக்கம்.
ஹாய் அஸ்திரா!
என்றான்.
என்ன... தூங்கிட்டு இருந்தீங்களா?
பின்னே.. இப்போ மணி என்ன தெரியுமா.. ராத்திரி பதினோரு மணி. இந்நேரம் வரைக்கும் உன்னோட போன் வரும் வரும்ன்னு வெயிட் பண்ணி பண்ணி களைச்சுப் போய் இப்பத்தான் கண்ணை மூடி ஒரு தூக்கம் போட்டேன். சரி.. சரி.. விசா என்னாச்சு?
க்ரேண்டட்.
சூப்பர்...! எப்போ புறப்பட்டு வர்றே?
அதை நீங்கதான் சொல்லணும்.
அடுத்த வாரமே புறப்பட்டுடு... நான் டிக்கட் போட்டு அனுப்பிடறேன்.
என்னங்க!
சொல்லு.
என்னோட சித்தி பொண்ணுக்கு அடுத்த மாசம் ஏழாம் தேதி கல்யாணம். கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடறேன்.
அடுத்த மாசம் ஏழாம் தேதியா.. சரியாப் போச்சு. அவ்வளவு நாளெல்லாம் என்னால வெயிட் பண்ணிட்டிருக்க முடியாது. அஸ்திரா! இப்போ சிகாக்கோவில் அருமையான ஸ்நோ சீஸன். நீ வந்து பார்த்தியன்னா அசந்து போவே.. ‘புதிய வானம் புதிய பூமி’ன்னு சத்தமாய் பாடத் தோணும். இந்த சீஸன் இன்னும் பதினஞ்சு நாளைக்குத்தான் இருக்கும். அப்புறம் காணாமே போயிடும்.. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. விசா கிடைச்சாச்சு. மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு சிகாக்கோ வந்து சேரு.
என்னங்க.. நான் என்ன சொல்ல வர்றேன்னா...?
நீ ஒண்ணையும் சொல்ல வேண்டாம். நீ சென்னையில் இல்லாமே போனாலும் உன் சித்தியோட பொண்ணு கல்யாணம் நடக்கும். என்னைக் கொஞ்சம் கவனி அஸ்திரா....
சரி, நான் அப்பா அம்மாகிட்டே கேட்டுட்டு...
என்னது...! அப்பா அம்மாகிட்டே பர்மிஷன் கேட்கிறதுக்கு நீ என்ன ஸ்கூல்ல படிக்கிற பொண்ணா? உன்னோட அப்பா பக்கத்துல இருக்காரா... இருந்தா அவர்கிட்டே செல்போனைக் குடு. நான் அவர்கிட்டே பேசிக்கிறேன்!
வேண்டாம்... வேண்டாம்...! நீங்க எப்போ டிக்கெட் வாங்கி அனுப்பறீங்களோ அன்னிக்கே நான் புறப்பட்டு வர்றேன்.
இப்பத்தான் நீ என் அஸ்திரா. அடுத்த வாரத்துல ஒருநாள் உன்னோட ஜர்ணி டேட் இருக்கும். டிக்கெட்டை மெயில் பண்றேன்...
சரி..!
என்ன குரல்ல சோகம்...? சென்னையை விட்டுப் பிரியப்போகிற ஃபீலிங்கா...? நீ சிகாக்கோ வந்து பாரு... சென்னையை அந்த நிமிஷமே மறந்து போயிடுவே?
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா? சென்னை சென்னைதாங்க...
அஸ்திரா சொல்லிச் சிரித்துக் கொண்டு இருக்கும்போதே செல்போனின் வீடியோ பதிவில் பேசிக் கொண்டிருந்த சூர்யகுமாரின் கையில் இருந்த போனை யாரோ பறிப்பதற்காகக் கையை நீட்டுவதும் சூர்யகுமார் புன்னகையோடு சற்றே சாய்வதும் தெரிந்தது.
ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் அஸ்திராவின் பார்வைக்குத் தட்டுப்பட்ட அந்தக் காட்சி அவளை நிலைகுலைய வைத்தது.
சூர்யகுமார் பேசிக் கொண்டிருக்கும் போது அவனுடைய கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றது ஒரு பெண்ணின் கை.
அஸ்திராவுக்கு இருதயத் துடிப்பு எகிறியது.
‘இவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது படுக்கையறையில்!’
‘இவர்க்குப் பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள்!’
‘யாரவள்?’
மறுமுனையில் சூர்யகுமாரின் குரல் கேட்டது.
"என்ன அஸ்திரா... பேச்சையே காணோம்.