Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velvet Yutham
Velvet Yutham
Velvet Yutham
Ebook193 pages59 minutes

Velvet Yutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Velvet Yutham

Read more from Rajeshkumar

Related to Velvet Yutham

Related ebooks

Related categories

Reviews for Velvet Yutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velvet Yutham - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    ஆச்சர்யம்... ஆனால் உண்மை!

    கிரிமினல்களைக் காட்டிக் கொடுக்கும் கிருமிகள் - இப்போது காவல்துறைக்கு கிடைத்து இருக்கும் புதிய நண்பர்கள். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க காவல்துறை இப்போது கைரேகை, மற்றும் பிற அங்க அடையாளங்களை வைத்து புலன் விசாரணை நடத்தி வருகிறது. சில புத்திசாலியான குற்றவாளிகள் இந்த முறையிலும் தப்பித்து போய்விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தப்பித்துப் போகாமல் இருக்க அமெரிக்காவின் ‘கொலரோடா’ பல்கலைக்கழகம் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளது. இந்த முறைக்கு ‘பேக்டீரியல் ஜெனிடிக்’ என்று பெயர். B.G. எனப்படும் இந்த முறை குற்றவாளிகளைப் பிடிக்க எவ்விதம் செயல்படுகிறது என்பதை இரண்டாவது அத்தியாத்தின் ஆரம்பத்தில் பார்ப்போம்.

    ஒரு குழந்தை மெல்ல நடப்பதைப்போல் வாஷிங்டனின் காலைப் பொழுது நிதானமாய் விடிந்து கொண்டிருந்தது. பனிப்புகையில் சூரியன். ஆகாயத்தில் பறக்கும் பறவையினங்கள். நகரின் கிழக்கு வானம் ஆரஞ்சுவர்ண டிஸ்டெம்பர் அடித்த சுவர் பரப்பைப் போல தெரிய, ஸ்நோ லேக் பேவ் மெண்டில் டாக்டர் பென்சன் ஜாக்கிங் சூட்டில் வேகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தார்.

    டாக்டர் பென்சனுக்கு ஐம்பது வயது இருக்கலாம். முறையான உடற்பயிற்சி, தினம் தவறாத நடைபயிற்சி, நேரம் தவறாத உணவு பழக்கம் அவருடைய உடலை கட்டுப் கோப்பாக வைத்து இருந்தது. ஒரு இருபது வயது இளைஞனின் துள்ளல் அவருடைய நடையில் தெரிந்தது.

    "குட்மார்னிங் டாக்டர்... எதிரே வந்த அட்வகேட் லார்சன் கையினை உயர்த்த பென்சனும் தன் கையை உயர்த்தினார்.

    குட் மார்னிங் லார்சன்...

    இன்றைக்கு நீங்கள் பத்து நிமிடம் லேட் டாக்டர்...

    உண்மை... வாக்கிங் புறப்பட்டு வெளியே வரும் போது, ஒரு அவசர செல்ஃபோன் அழைப்பு. பேசிவிட்டு வெளியே வர தாமதமாகிவிட்டது. வழக்கமாய் இந்நேரத்திற்கு செர்ரி கார்டன் அவென்யூவில் சந்தித்து குட்மார்னிங் சொல்லிக் கொண்டிருப்போம். பை... த...பை இன்றைக்கு மேரி எல்லீஸ் மர்டர் ஜட்ஜ்மெண்ட் டே இல்லையா மிஸ்டர் லார்சன்? பேசிக்கொண்டே நடந்தார்கள்.

    ஆமாம்... பதினோரு மணிக்கு தீர்ப்பு

    தீர்ப்பு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    கொலைக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர்க்கும் மின்சார நாற்காலிதான்... அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    அவர்கள் இரண்டு பேரும் நிரபராதிகள். உண்மையான குற்றவாளிகள் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் என்று சொல்லப்படுவது உண்மையா..?

    அது உண்மையில்லை டாக்டர்... கேஸை திசை திருப்ப நடந்த முயற்சி. என்னுடைய ஆணித்தரமான வாதத்தால் அந்த முயற்சி தவிடு பொடியாகிவிட்டது. மேரி எல்லீஸ் ஒரு அழகான மாடலிங் பெண். அந்தப் பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டு இருந்தாலோ, கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்து இருந்தாலோ குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை தான் கிடைத்து இருக்கும். ஆனால்மேரிஎல்லீஸ் கொலை செய்யப்பட்ட விதம் கொடுமையானது. இரண்டு கொலையாளிகளும் அந்தப் பெண்ணின் உடலை ஊசியால் குத்தி குத்தியே ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேற்றியே கொன்று இருக்கிறார்கள். மேரி எல்லீஸ் கொலை செய்யப்பட்ட முறையை வைத்துதான் நீதிபதி தீர்ப்பைக் கொடுக்கப் போகிறார். அந்த தீர்ப்பு நிச்சயமாய் மரண தண்டனையாகத்தான் இருக்கும். மின்சார நாற்காலிகளில் அவர்கள் சடலமாவது உறுதி...

    ஒரு பெண்ணை இப்படி கொடூரமாய் கொலை செய்ய என்ன காரணம்...?

    நான் அந்த இரண்டு பேர்களையும் குறுக்கு விசாரணை செய்தபோது அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா டாக்டர்?

    என்ன..?

    அந்த இரண்டு கொலையாளிகளும் எதற்கெடுத்தாலும் பந்தயம் போட்டுக் கொள்வார்களாம். அன்றைக்கு அவர்கள் போட்ட பந்தயம். ஒரு பெண்ணை எத்தனை தடவை ஊசியால் குத்தினால் இறந்து போவாள் என்பது. அதற்காக ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டு இருந்தபோதுதான் மேரிஎல்லீஸ் என்கிற அந்த மாடலிங் கேர்ள் அவர்களிடம் மாட்டியிருக்கிறாள். ஒரு இடத்துக்கு கொண்டு போய் நான்கு நாட்கள் வைத்து இருந்து, அவளிடம் விரும்பியபோதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொண்டு, சாப்பிட ஒன்றும் கொடுக்காமல் பட்டினிப் போட்டு பார்சல் தைக்கும் ஊசியால் குத்தி குத்தியே சாகடித்து இருக்கிறார்கள். இறந்த உடலை டிஸ்போஸ் செய்வதற்காக மெர்வின் லீஸ்டன் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்த போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஒரு சார்ஜெண்டால் கைது செய்யப்பட்ட போது மாட்டிக் கொண்டார்கள். என்று சொன்ன லார்சன் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு பென்சனை ஏறிட்டார்.

    டாக்டர்...! இந்த வாஷிங்கடனில் நீங்கள் ஒரு புகழ்பெற்ற மனநல மருத்துவர். மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்துக் கொண்டு இருப்பவர். பந்தயம் போட்டுக் கொண்டு மனித உருவில் இருக்கும் இரண்டு பேர் அப்படி ஒரு பெண்ணை ஊசியால் குத்தி குத்தி அவளுடைய உடம்பை சல்லடையாக்க என்ன காரணம்?

    பென்சன் பேவ்மெண்ட்டின் ஓரமாய் இருந்த ஒரு சிமெண்ட் இருக்கையைக் காட்டினார்.

    அப்படி உட்கார்ந்து பேசுவோமா லார்சன்?

    பை ஆல் மீன்ஸ்....

    இருவரும் சிமெண்ட் இருக்கையில் போய் உட்கார்ந்தார்கள். இப்போது பேவ்மெண்ட்டில் வாக்கிங் செல்பவர்களின் கும்பல் லேசாய் அதிகரித்தது தெரிந்தது. சூரியனின் வெளிச்சம் கூடியிருந்தது.

    பென்சன் பேச ஆரம்பித்தார்.

    லார்சன்...! மனித மனம் ஒரு ஆழ்கடல். அதில் புதைந்து இருக்கும் ரகசியங்கள் ஆயிரம். ஆழ்கடல் அமைதியாய் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மனித மனம் அப்படியில்லை. அதற்குள் சில சுனாமி எண்ணங்கள் தூக்கக் கலக்கத்தில் உலா வந்து கொண்டிருக்கும். அந்த சுனாமி எண்ணங்களின் தூக்கக் கலக்கம் தெளியாமல் இருக்கும்வரையில் ஒரு மனிதன் நல்லவன். அந்த எண்ணங்கள் தூக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யும் போதுதான் அவன் மற்றவர்க்குப் பிரச்னையாய் மாறுகிறான். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாய் இருப்பது இல்லை. ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த குழந்தைகள் கூட குணத்தால் வேறுபடும்போது மற்றவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. மேரி எல்லீஸ் என்ற பெண்ணைக் கொன்ற அந்த இரண்டு பேர்க்கும் ‘மல்டி போலார் டிஸ் ஆர்டர்’ பிரச்னை இருந்து இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

    மல்டி போலார் டிஸ் ஆர்டர்?

    எஸ்...! இது ஒருவகையான மன விவகாரம். விவகாரம்ன்னு சொல்றதைக் காட்டிலும் மன விகாரம்ன்னே சொல்லலாம். இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள் பார்ப்பதற்கு அமைதியாய் காட்சியளித்தாலும் உள்ளுக்குள் - புயல்களையும் சூறாவளிகளையும் சந்தித்துக் கொண்டு இருப்பார்கள். இயற்கைக்கு மாறான செயல்களைப்பற்றி யோசிப்பார்கள். அதை செய்து பார்த்தால் என்ன என்றும் சிந்திப்பார்கள். அந்த சிந்தனையை செயல்படுத்த நேரம் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். மேரிஎல்லீஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்குக் காரணம் அந்த கொலையாளிகளுக்குள் பதிவாகியிருக்கும் ‘மல்டி போலார் டிஸ் ஆர்டர்’ என்ற நோய்தான்...

    லார்சன் சிரித்தார். "அது என்ன நோயாகவோ இருந்துவிட்டு போகட்டும். எனக்கு இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது டாக்டர். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதும் தப்பு. யார் எப்படி செய்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதும், மறுபடியும் ஒரு தடவை நிரூபணம் ஆகியுள்ளது.

    தீர்ப்பு வேறுவிதமாக இருந்துவிட்டால்..?

    அப்படியிருக்க வாய்ப்பு இல்லை டாக்டர்... நான் என்னுடைய வாதங்களை ஆணித்தரமாய் எடுத்து வைத்துள்ளேன்.

    தீர்ப்பு பதினோரு மணிக்குத்தானே..?

    "ஆமாம்... நீதிபதி

    Enjoying the preview?
    Page 1 of 1