Irandhu Kidandha Thendral
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Irandhu Kidandha Thendral
Related ebooks
Raththa Gnayiru Rating: 5 out of 5 stars5/5Enna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Pachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsNee Engey... En Anbe...! Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Oru Rojavum Sila Thottakkalum Rating: 5 out of 5 stars5/5Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Pattaampoochikal Rating: 0 out of 5 stars0 ratingsIraththam Illatha Yuththam Rating: 0 out of 5 stars0 ratingsThai Manne Vanakam Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam Rating: 0 out of 5 stars0 ratingsSandarpatthai Payanpaduthi Kol Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 5 out of 5 stars5/5Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Yutham Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neeril Neenthum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5Mella Varum Boogambam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Irandhu Kidandha Thendral
0 ratings0 reviews
Book preview
Irandhu Kidandha Thendral - Rajeshkumar
ராஜேஷ்குமார்
கல்லீரல் என்னும் காவலன் :
மனித உடல் சிறப்பாக செயல்படுவதற்கான பிள்ளையார் சுழி என்ன தெரியுமா? கல்லீரல். ஆம்! மனித உடலில் கல்லீரல் போன்று - ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளைச் செய்யும் உறுப்பு வேறு எதுவும் இல்லை. ஆனால் கல்லீரல் குறித்த விழிப்புணர்வும், அக்கறையும் நம் மக்களிடம் கொஞ்சமும் இல்லை என்பதுதான் வேதனை. ஜீர்ண நலத்துறை மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கல்லீரலைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள் வியப்பானவை. இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் அந்த விஷயங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.
1
அந்த நள்ளிரவு நேர இருட்டை பஸ்ஸின் முகப்பு விளக்குகள் சாப்பிட்டுக்கொண்டே ஹைவேஸ் ரோட்டை அடையாளம் காட்ட - டிரைவர் உச்சபட்ச வேகத்தில் பஸ்ஸை விரட்டிக் கொண்டிருந்தார்.
குமரனுக்கு ஜன்னலோர சீட் வசதியாய் இருந்தது. குளிர்ந்த காற்று முகத்தில் மோதியதில் கண்கள் சொருகி அவ்வப்போது தூக்கம் வந்தது. பஸ் ஏதாவது ஒரு காரணத்துக்காக வேகம் குறைகிறபோது அந்தத் தூக்கம் அறுந்துபோக உடல் நிமிர்ந்து உட்கார்ந்தது.
குமரன் தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தான்
நேரம் 12.15
‘ஆனந்தி இந்நேரத்துக்கு தூங்கியிருப்பாளா?’
‘இல்லை டி.வி.யைப் போட்டுக் கொண்டு ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாளா?’
குமரன் தன் மனசாட்சியோடு பேசிக் கொண்டு இருக்கும்போதே அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்து இருந்த செல்போன் வைபரேஷனில் அழைத்தது. எடுத்துப் பார்த்தான்.
அவனுடைய மனைவி ஆனந்திதான்.
மனசு பூராவும் சந்தோஷம் பூசிக் கொள்ள செல்போனை காதில் ஒற்றி மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவான குரலில் பேசினான்.
இப்பத்தான் நினைச்சேன்...!
மறுமுனையில் ஆனந்தி சிரிப்போடு கேட்டாள்.
என்னான்னு...?
நீ இந்த நேரத்துக்கு என்ன பண்ணிட்டிருப் பேன்னு? என்ன... டி.வி.யில் படம் பார்த்துகிட்டு இருந்தியா...?
இல்லை...
பின்னே?
நம்ம கல்யாண ஆல்பத்தைப் பார்த்துட்டிருந்தேன்.
அந்த ஆல்பத்தை எத்தனை தடவைதான் பார்ப்பே?
எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துட்டே இருக்கலாம். சரி... பஸ் இப்போ எங்கே வந்துட்டு இருக்கு?
பஸ் இப்பத்தான் திருப்பத்தூரை க்ராஸ் பண்ணி அஞ்சு நிமிஷமாச்சு!
நீங்க நம்ம ஊர் வந்து சேரும்போது எப்படியும் பொழுது விடியற நேரமாயிடும்ன்னு நினைக்கிறேன்.
சந்தேகமே வேண்டாம்.
டிரைவரைக் கொஞ்சம் வேகமாய் ஓட்டச் சொல்லுங்களேன்...!
அவர் இப்பவே இந்த பஸ்ஸை ஃப்ளைட்டாகவும் தன்னை ஒரு பைலட்டாகவும் நினைச்சுகிட்டு தான் பறந்துட்டிருக்கார்.
வேண்டாங்க...! கொஞ்சம் மெதுவாய் ஓட்டச் சொல்லுங்க.
பயப்படாதே ஆனந்தி..! நல்ல எக்ஸ்பீரியன்ஸான டிரைவர்தான். எங்கே வேகமாய் போகணுமோ... அங்கே போறார். மத்த இடங்களில் வெரி காஸியஸ் டிரைவ் தான்...!
அப்புறம்... நான் சொன்னதை யோசனை பண்ணீங்களா?
வேலை விஷயம்தானே?
ஆமா...!
நான் வந்து சொல்றேன்...!
இப்பவே சொன்னா என்னவாம்?
இதோ பார் ஆனந்தி...! அதெல்லாம் நிதானமாய் உட்கார்ந்து பேச வேண்டிய விஷயம்... இப்போ பஸ்ஸுல எல்லாரும் நல்லாத் தூங்கிட்டு இருக்காங்க. என் பக்கத்து சீட்டுக்காரர் நல்லாத் தூங்கிட்டு இருந்தவர் லேசாய் அரைக் கண்ணைத் தொறந்து முறைச்சுப் பார்க்க ஆரம்பிச்சுட்டார். நான் இப்ப போனைக் கட் பண்றேன். நாளைக்குக் காலையில் பேசிக்கலாம்...
சரி.. காலையில் உங்களுக்கு என்ன டிஃபன் பண்ணட்டும்...?
ரவா தோசையும் தக்காளி சட்னியும்.
ரெடியாய் இருக்கும்!
வந்துடறேன்..
செல்போனை குமரன் அணைத்த விநாடி வேகமாய் போய்க் கொண்டிருந்த பஸ் சட்டென்று வேகம் குறைந்து ஊர்ந்தது. டிரைவர் கண்டக்டரைப் பார்த்து குரல் கொடுத்தார்.
பழனியப்பன்!
என்னண்ணே?
கேட்டைப் போட்டுட்டான். பதினஞ்சு நிமிஷம் ‘தவம்’ பண்ணியாகணும்.
எங்கெங்கியோ பாலத்தைப் கட்டறானுக. இங்கே கட்டமாட்டேங்கிறாங்க
என்று சொன்ன டிரைவர் ஒரு கெட்ட வார்த்தையை உச்சரித்து விட்டு பஸ்ஸை ஒரு லாரிக்குப் பின்னால் நிறுத்தினார்.
குமரன் வெளியே எட்டிப்பார்த்தான்.
சற்று தூரத்தில் எரிகிற சிவப்பு விளக்கோடு ஒரு லெவல் கிராஸிங் பார்வைக்குக் கிடைத்தது.
இதுவரைக்கும் எத்தனையோ தடவை இதே வழியில் குமரன் பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறான். முதல் தடவையாய் இன்றைக்குத்தான் அவன் பயணம் செய்த பஸ் ரயில்வே கேட்டுக்கு முன்பாய் நின்றிருக்கிறது.
அவனுக்கு முன்புற சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு பயணி கண்டக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
யூரின் பாஸ் பண்ணிட்டு வரலாமா...?
ஃபாரீனே போய்ட்டு வரலாம். தாராளமாய் போய்ட்டு வாங்க. இப்பத்தான் கேட்டைப் போட்டிருக்கான். திறக்க எப்படியும் பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேலாயிடும்...!
கண்டக்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு குமரனும் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கி நின்றான். அவனுக்குள்ளும் அந்த இயற்கை உபாதையின் அவஸ்தை இருந்தது. மெள்ள நடந்தான். சுற்றிலும் மெலிதான அரையிருட்டு. பஸ்ஸுக்குப் பின்னால் எந்த ஒரு வாகனமும் நிற்காததால் ரோட்டைக் கடந்து மறுபக்கம் போனான். குப்பை கூளம் நிறைந்த பகுதி என்பது அடித்த காற்றிலேயே தெரிந்தது. பாலிதீன் கவர்கள் பறந்தன. காற்றில் கழிவுகளின் நாற்றம்.
குமரன் பாதுகாப்பான இடம் தேடி சற்றே உள்ளே போனான். அதே விநாடி செருப்பு அணிந்த கால்களுக்குக் கீழே எதையோ கடினமாய் ஒன்றை மிதித்து விட்டது போன்ற உணர்வு.
‘என்ன அது?’
கீழே குனிந்து பார்த்தான். கறுப்பாய் ஓரடி நீளத்தில் எதுவோ தெரிந்தது. குனிந்து பார்த்தான். அந்த மெலிதான இருட்டிலும் குமரனின் பார்வைக்கு அது தெளிவாய் பிடிபட்டது.
கணுக்கால் வரை வெட்டப்பட்ட ஒரு மனிதக்கால்.
முதுகுத் தண்டில் குளிர் பாய குமரன் பயந்துபோனவனாய் இரண்டடி பின்வாங்கினான்.
இப்போது அவனுடைய கால்களுக்குக் கீழே வேறு எதுவோ மிதிபட்ட மாதிரி இருந்தது.
பார்வை அங்கே போயிற்று.
மிரண்டான்.
மனித உடலின் ஏதோ ஒரு பாகம் உறைந்து காய்ந்து போன ரத்தத்தோடு தெரிந்தது.
பலமாய் அடித்த காற்றில் இப்போது குப்பென்ற நாற்றம்.
கல்லீரல் என்னும் காவலன் :
பொதுவாக நம் மக்கள் கண்களுக்குத் தென்படும் உறுப்புகளை மட்டுமே உடல்பாகங்களாகக் கருதுகிறார்கள். அதனால்தான் முகத்தில் ஒரு சிறிய பரு அல்லது மரு வந்தாலே பதறிப்போய் டாக்டரைப் போய்ப் பார்க்கும் மனிதர்கள்