Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraththam Illatha Yuththam
Iraththam Illatha Yuththam
Iraththam Illatha Yuththam
Ebook140 pages40 minutes

Iraththam Illatha Yuththam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Iraththam Illatha Yuththam

Read more from Rajeshkumar

Related to Iraththam Illatha Yuththam

Related ebooks

Related categories

Reviews for Iraththam Illatha Yuththam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraththam Illatha Yuththam - Rajeshkumar

    14

    1

    ‘லென்ஸ்’ வார இதழின் பத்திரிகை அலுவலகம் அந்த காலை நேர பத்து மணிக்கு பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

    ப்ரிண்ட்டிங் இயந்திரங்களின் ஓசை சாத்திய கதவுகளைத் தாண்டி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க - மவுனமாய் ஏசி அறைகளுக்குள் பதுங்கிக் கொண்ட கம்ப்யூட்டர்களில் கம்ப்போசிங்... இமேஜ் ப்ராசஸிங்... மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.

    எடிட்டோரியல் செக்ஷனுக்குள் குணாலும் ஜெனிஃபரும் நேற்றைக்கு கவர் செய்த மேட்டரை மூன்று வெவ்வேறு வடிவங்களில் கட்டுரைகளாக்கி எடிட்டரின் பார்வைக்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

    குணால்... மனுஷங்கள்ல இப்படியும் இருப்பாங்களா...?

    யாரைச் சொல்றே ஜெனிஃபர்...?

    நேத்திக்கு நாம பார்த்தோமே ஒரு வி.ஐ.பி. கவிஞர்...

    ஓ... அவரா... அவருக்கு கர்வம் கொஞ்சம் அதிகம்...

    அதுக்காக இப்படியா... ‘லென்ஸ்’ல தங்களைப் பத்தி நியூஸ் வராதான்னு வி.வி.ஐ.பி.க்களே ஏங்கிட்டிருங்காங்க... நாம பேட்டி கேட்டா உடனே டயம் ஒதுக்கித் தர்றாங்க... இந்த ஆள் இப்படி இழுத்தடிக்கிறாரே...? பேட்டி தர்றதில் இஷ்டமில்லைன்னு ஒரே வார்த்தையில் சொல்லிடலாமே...?

    குணால் சிரித்தான்.

    அதெப்படி சொல்ல முடியும்... அவருக்குப் பேட்டி தர்றதில் இஷ்டம் இருக்கே...

    அப்புறம் ஏன் இழுத்தடிக்கிறார்...?

    சில பேர் அப்படித்தான்... இழுத்தடிச்சா அவங்க வேல்யூ அதிகமாகும்... அவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்ன்னு நினைப்பாங்க...

    நெவர்... இனிமே நான் அந்த ஆள் இருக்கிற திசையில் தலை வெச்சுக் கூடப் படுக்கமாட்டேன்... அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தா எனக்கென்ன... எனக்கு சுயமரியாதைதான் முக்கியம்...

    ம்கூம்...

    என்ன ம்கூம்...?

    நீ பத்திரிகை வேலைக்கு லாயக்கில்லை...

    ஏன்...?

    பர்சனல் ஈகோவை பெரிசா நினைச்சா வாசகர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு போகவே முடியாது... சில அவமானங்களைத் தாங்கிக்கறது நம்ம வேலையின் ஒரு பகுதின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்...

    குணால் சொன்ன போது இன்ட்டர்காம் இசையைக் கொட்ட ஆரம்பித்தது.

    ரிசீவரை எடுத்த ஜெனிஃபர் - சட்டென்று பவ்யமாகி - மரியாதை கலந்த குரலில் சொன்னாள்.

    குட்மார்னிங் ஸார்...

    ...

    ஆயிடுச்சு ஸார்...

    ...

    இதோ கொண்டு வர்றேன் ஸார்...

    ...

    குணாலுமா...? ஓக்கே ஸார்... நாங்க ரெண்டு பேரும் வர்றோம்... பேசி முடித்து ரிசீவரைச் சாத்தினாள்.

    குணால்... என்று அவள் வார்த்தையை ஆரம்பிக்க - குணால் அவளைப் பாதியில் மறித்தான்.

    எடிட்டர் பேசினார். அப்படித்தானே...?

    ஆமா...

    ரெண்டு பேரையும் அவரோட கேபினுக்கு வரச் சொன்னார்...?

    ஆமா... இந்த மேட்டர் ரெடியான்னு கேட்டார்... கொண்டு வரச் சொன்னார்...

    எந்தெந்த வேலை எவ்வளவு சீக்கிரத்தில் முடியும்ன்னு கரெக்டா ஜட்ஜ் பண்ணி வெச்சிருப்பார்... தவிர நம்ம கிட்டே அவர் ஏதோ புது விஷயம் பேசப் போறார்ன்னு நினைக்கிறேன் ஜெனிஃபர்...

    எப்படிச் சொல்றிங்க குணால்...?

    அதனாலதான் நம்ம ரெண்டு பேரையும் வரச் சொல்லியிருக்கார்... இல்லைன்னா ஸ்க்ரிப்ட்டை எடுத்துக்கிட்டு யாராவது ஒருத்தரை வரச் சொல்லியிருப்பார்...

    வராந்தாவில் நடந்து கொண்டே - ஜெனிஃபர் சிரித்தாள்.

    எடிட்டரை நீங்க நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கீங்க...

    அந்த நீள வராந்தாவின் இறுதியில் இருந்த எடிட்டரின் அறையை நெருங்கினார்கள். பெஞ்ச்சில் சிலர் காத்திருந்தார்கள்.

    பிஏ.விடம் சொல்லி விட்டு - குணாலும், ஜெனிஃபரும் உள்ளே போனார்கள்.

    குட்மார்னிங் ஸார்...

    சலவை சோப்புக்கு மாடலாய் நிறுத்தலாம் போன்ற பளீர் வெண்மை வேஷ்டி - சர்ட்டில் கம்பீரமாக நிரம்பியிருந்தார் எடிட்டர். உடைகள் மட்டுமல்ல - தலை முடியும் தொண்ணூறு சதவீதம் வெள்ளைதான்.

    உக்காருங்க...

    ஜெனிஃபர் தன் கையிலிருந்த காகிதக் கத்தையை அவரிடம் நீட்டிக் கொண்டே சொன்னாள்.

    கவிஞர் கர்ணமேகனைத் தவிர எல்லா விஐபிக்களுமே பேட்டி தந்துட்டாங்க ஸார்... எடிட்டர் அந்த காகிதக் கத்தையை ஓரமாய் வைத்தார்.

    இந்த மேட்டர் இருக்கட்டும்... இதை அப்புறமா நான் பார்த்துக்கறேன்.. நான் உங்களைக் கூப்பிட்டது வேற ஒரு விஷயமா...

    குணாலும், ஜெனிஃபரும் ஒருத்தரை யொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

    ‘நான் அப்பவே சொன்னேனே...’ என்ற பெருமிதம் குணாலின் பார்வையில் மிதந்தது. எடிட்டரின் வார்த்தைகள் தொடர்ந்தன.

    போன மாசம் நம்ம பத்திரிகையில் வாசகர்களுக்காக கவிதைப் போட்டி ஒண்ணு அறிவிச்சிருந்தோம் ஞாபகம் இருக்கா...?

    ஆமா ஸார்... சொல்லுங்க...

    அந்தப் போட்டிக்காக ஏகப்பட்ட கவிதைகள் குவிஞ்சிருந்தது... அதிலிருந்து பத்துக் கவிதைகளைப் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கோம்... அந்தப் பத்துக் கவிதைகளில் ஒரு கவிதை இது...

    சொல்லிக் கொண்டே எடிட்டர் அந்தக் காகிதத்தை நீட்டினார்.

    அனுப்பிய வாசகியின் வண்ண போட்டோ ‘பின்’ செய்யப்பட்டிருக்க - முகவரி இத்யாதிகளுக்குக் கீழே அந்த ஐந்து வரிக் கவிதை ஓடியிருந்தது.

    சிவனுக்கு

    மட்டுமல்ல

    எனக்கும் உண்டு

    நெற்றிக் கண்.

    கல்வி!

    குணாலும், ஜெனிஃபரும் கவிதையைப் படித்து விட்டு ஒரே குரலில் சொன்னார்கள்: அற்புதமா இருக்கு ஸார்...

    ஜெனிஃபர் வார்த்தைகளைத் தொடர்ந்தாள்.

    "கல்வியோட சக்தியையும் முக்கியத்துவத்தையும் எளிமையா அதே சமயத்தில் நச்சுன்னு இந்தப் பொண்ணு

    Enjoying the preview?
    Page 1 of 1