Vellai Iruttu
By Rajesh Kumar
()
About this ebook
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5
Related to Vellai Iruttu
Related ebooks
Nenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratingsPoiyai Thavira Verondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingskaikuttaikkul Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsThaa! Rating: 5 out of 5 stars5/5Violet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai...! Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Paarijathangal Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Athikaalaik Kolai Rating: 0 out of 5 stars0 ratingsOlinthaalum Vidamaatten Rating: 5 out of 5 stars5/5Oru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nizhal! Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 0 out of 5 stars0 ratingsVaanaville Vaanamalla Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnoduthan Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsOru Rojavum Sila Thottakkalum Rating: 5 out of 5 stars5/59-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Neruppu Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsIni Illai Ilaiyuthirkaalam Rating: 5 out of 5 stars5/5Ainthu Gram Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPudhu Bramma Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vellai Iruttu
0 ratings0 reviews
Book preview
Vellai Iruttu - Rajesh Kumar
http://www.pustaka.co.in
வெள்ளை இருட்டு
Vellai Iruttu
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
***
1
வலைத்தளத்தில் சிக்கிய வைர வரிகள்:
ஒரு நாளைக்கு ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் பல்வேறு வகையான கருத்துக்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுதான் முடிவானது என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. கோடைகாலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும் மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. அதே சமயம் உடம்புக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்சனையே. இப்படிக் குடிப்பது சிறுநீரகங்களுக்குக் கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். ஏ.ஸி.அறைகளில் பணியாற்றுபவர்களுக்குத் தாகம் எடுக்காது. என்றாலும் அவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம்.
சென்னையின் புறநகர்ப்பகுதி.
விடிவதற்கு இன்னமும் முப்பது நிமிடம் மீதியிருந்த அந்த வைகறை இருட்டில், ஒரு மினி வேன் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருக்க, அதன் முதுகில் ஒரு ப்ளக்ஸ் போர்டு கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. கழுத்தில் மப்ளரோடு இருந்த ராகவன், வேனை ஒட்டிக் கொண்டிருந்தான். சிகரெட் புகையும் வாயோடு தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த இளைஞனைக் கூப்பிட்டான். குரலில் ஏதோ ரகசியம் பேசுகிற தொனி.
இளங்கோ...!
சொல்லு...!
அந்த இளங்கோ உதட்டிலும் சிகரெட் தொற்றியிருந்தது.
மணி எத்தனை...?
அஞ்சே முக்கால்.
இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்துடுவோம். இருட்டு கரையறதுக்கு முன்னாடி ஃப்ளக்ஸ் போர்டைக் கட்டிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஸ்பாட்டை விட்டுக் கிளம்பிடணும்...
வழியில் செக் போஸ்ட் ஒண்ணு இருக்கு.
செக்போஸ்ட்காரன் ஏதாவ துபிரச்சனை பண்ணினான்னா போனைப் போட்டுக் குடுத்துட வேண்டியதுதான்.
ராகவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன், யாரோ அழைப்பதற்கு அடையாளமாய் ஒளிர்ந்தது.
இளங்கோ...! என்னை யாரோ கூப்பிடறாங்க, எடுத்து யார்னு கேளு...!
இளங்கோ தன் விரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த கடைசி சென்டிமீட்டர் சிகரெட்டை வெளியேசுண்டி எறிந்துவிட்டு, வைப்ரேஷனில் ஒளிர்ந்து கொண்டு இருந்த செல்போனை எடுத்து இடது காதுக்குக் கொடுத்தான். மறுமுனையில் ஒரு குரல் கேட்டது.
என்ன... ஸ்பாட்டுக்குப் போயிட்டீங்களா...?
போயிட்டிருக்கோம்.
விடிஞ்சு வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடி ஃப்ளக்ஸ் போர்டை அந்தபைபாஸ் ஃபைவ் ரோடு கார்னர்ல ஃபிக்ஸ் பண்ணிடணும்.
பண்ணிடுவோம்...!
எல்லாமே திட்டம் போட்டபடி நடக்கணும்...!
நடக்கும்...
சரி, ஏதாவது பிரச்சனைன்னா எனக்குப் போன் பண்ணு...!
மறுமுனை செல்போனை அணைத்து விடவே வேனை ஒட்டிக் கொண்டிருந்த ராகவன் கேட்டான்.
போன்ல யாரு...?
நமக்குப் படியளக்கிற பெருமாள்.
ரொம்பவும் பயப்படறார் போலிருக்கு...!
பின்னே... பயம் இருக்காதா...?
இளங்கோ சொன்ன விநாடி, வேன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அந்த செக்போஸ்ட்டின் குறுக்குக் கம்பத்துக்கு முன்பாய் நின்றது.
செக்போஸ்ட் சென்ட்ரி கையில் ஆறு செல் பெரிய டார்ச்சோடு வேனை நெருங்கினார்.
வேன் எங்கே போகுது...?
பொன்னேரி
வேன்லஎன்ன..?
ஃப்ளக்ஸ் போர்டு...! சா.ம.மு.க. கட்சியின் மாவட்டச் செயலாளர் அனல் புண்ணியகோடியின் பிறந்த நாள் விழா ஃப்ளக்ஸ் போர்டு.
உள்ளே ஃப்ளக்ஸ் போர்டு மட்டும்தானா..?
இல்லே வேற ஏதாவது இருக்கா..?
வேற ஒண்ணும் இல்லை...! வேணும்னா பார்த்துக்க.
செக்போஸ்ட் சென்ட்ரி ஒரு நம்பாத பார்வையோடு வேனுக்குள் ஏறிப்பார்த்தார். ஃப்ளக்ஸ்போர்டின் மேல் டார்ச்சின் வெளிச்ச வட்டத்தை வீசினார். போர்டில் ‘அனல் புண்ணியகோடி’ தன் தலைக்குமேல் இரண்டு கைகளையும் உயர்த்திப் பெரிதாய்க் கும்பிடு போட்டபடி சிரித்தார். பல்வரிசை கொட்டை கொட்டையாய்த் தெரிந்தது. அவருடைய போட்டோவுக்குக் கீழே கவிதை வரிகள் ஓடியிருந்தன.
வாழும் வள்ளலே! புண்ணிய பூமியே!
இன்று உனக்குப் பிறந்த நாள்.
உன் தொண்டர்களாகிய
எங்களுக்குச் சிறந்த நாள்.
ஏழை மக்களுக்குத் தங்களுடைய
துன்பங்களை மறந்த நாள்.
உனக்கு வாழ்த்துக்களைச் சொல்ல
அணி அணியாய் வருகிறோம்.
செக்போஸ்ட் சென்ட்ரி டார்ச் வெளிச்சத்தை அணைத்து விட்டுத் தலையசைத்தார். மூங்கில் கம்பு மேல் நோக்கி உயர்ந்தது.
ம்... போங்க...!
வேன் நகர்ந்தது.
ராகவன் பெருமூச்சு விட்டான்.
நல்லவேளை... ஆர்.சி.புக் கேட்கலை...!
சென்ட்ரிக்கு டியூட்டி முடியுற நேரம். அதுவும் தூக்கக் கலக்கம் வேற... அதுதான் அதிகமாய்க் குடையலை...!
வேன் வேகம் எடுத்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடம் -
பொன்னேரி பைபாஸ், ஐந்து சாலைகளின் சங்கமத்தோடு வந்தது. சுற்றிலும் போடப்பட்டு இருந்த சோடியம் வேபர் விளக்குகள் வெளிச்சத்தை உச்சபட்சமாய் உமிழ்ந்து, அந்த இடத்தை ஒரு வெளிச்சக் காடாய் மாற்றியிருந்தன.
வேனை ஒரு மின்சாரக் கம்பத்துக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினார்கள்.
சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.
எந்தத் திசையிலும் ஆள் நடமாட்டம் இல்லை என்பது ஊர்ஜிதமானதும் ஃப்ளக்ஸ் போர்டை இறக்கித் தூக்கிக் கொண்டு போய் மின்சாரக் கம்பத்தோடு சேர்த்து வைத்துக் கட்டினார்கள்.
இளங்கோ கேட்டான்.
ஸ்டிக்கரை நீ ஒட்டுறியா... நான் ஒட்டட்டுமா..?
நீயே ஒட்டு...! என்னைவிட நீதான் உயரம்..!
சொன்ன இளங்கோ, தன் கையில் வைத்து இருந்த நீண்ட கவரைப் பிரித்து, அந்த ஒரு அடி நீளமுள்ள இரண்டு ஸ்டிக்கர்களை எடுத்தான். கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட ராகவன், ஃப்ளக்ஸ் போர்டு அருகில் போய் நின்றான். அனல் புண்ணியகோடி ஃப்ளக்ஸ் போர்டில் சிரித்துக் கொண்டிருக்க, அவருக்குக் கீழே தெரிந்த வாசகங்களைப் பார்த்தான்.
‘வாழும் வள்ளலே...!. புண்ணிய பூமியே..!
இன்று உனக்குப் பிறந்த நாள் என்ற வரிகளைப் படித்துவிட்டுக் கையில் இருந்த ஒரு ஸ்டிக்கரைப் பிரித்து ‘பிறந்த நாள்’ என்ற வார்த்தையின் மேல் ‘இறந்த நாள்’ என்னும் வார்த்தையை ஒட்டினான்.
பிறகு கடைசி இரண்டு வரிகளில்