Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannellam Unnoduthan
Kannellam Unnoduthan
Kannellam Unnoduthan
Ebook272 pages2 hours

Kannellam Unnoduthan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kannellam Unnoduthan

Read more from Rajeshkumar

Related to Kannellam Unnoduthan

Related ebooks

Related categories

Reviews for Kannellam Unnoduthan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannellam Unnoduthan - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    வாழ்த்துக்கள்.

    அழகிரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுக்கினான், ராஜேந்திரன். அழகிரி அவனை முறைத்தான். முதுகில் செல்லமாய் அடித்தான்.

    ஏண்டா திருமணம் நடந்து சுத்தமா பத்து மணி நேரம் ஓடிப் போச்சு... இப்ப வந்து வாழ்த்து சொல்றியா...? உன்னை...! வயிற்றில் குத்தினான்.

    சாரிடா அழகிரி... ராத்திரி ரெயிலை தவற விட்டுட்டேன்... அதான் காலையில் முகூர்த்தத்துக்கு வந்து சேர முடியலை...

    சரி... உன்னோட மனைவி எங்கே...?

    அவளுக்கு உடம்பு சரியில்லை. அவங்க அம்மா வீட்ல இருக்கா...

    எதைக் கேட்டாலும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுடா பாவி...! சரி... வா... என் புத்தம்புது பெண்டாட்டியை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்... அழகிரி ராஜேந்திரனின் கையைப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள் கூட்டிப் போனான்.

    டேய்... அழகிரி...

    ம்...

    உன் மாமனார் வீடு சின்னதாயிருந்தாலும்... அழகாயிருக்கு...

    ஒரு காலத்தில் ‘ஓகோ’ன்னு வாழ்ந்த குடும்பம்... இன்னிக்கு அவங்க நிலைமை சரியில்லை...

    சரி... மாமனார் வீட்ல எத்தனை நாள் கேம்ப்...?

    நாளைக்கு காலையில் பத்து மணிக்கெல்லாம்... பெங்களூர் கிளம்பிடுவோம்... அம்மாவும் அப்பாவும் இன்னிக்கு இராத்திரியே புறப்படணும்ன்னு சொன்னாங்க... நான்தான் இராத்திரி தங்கிட்டு நாளைக்கு காலையில் புறப்படலாம்ன்னு சொன்னேன்...

    ராஜேந்திரன் கண்களை சிமிட்டினான்.

    அந்த இராத்திரி எப்போ...?

    அந்த வயித்தெரிச்சலை ஏண்டா கேக்கிறே...?

    ஏன்... என்னாச்சு...?

    இன்னும் ஒரு வாரத்துக்கு நாள் சரியில்லையாம்... அஷ்டமி, நவமி, கரிநாள், கீழ்நோக்கு நாள்’ன்னு ஜோசியர் எதை எதையோ சொல்லி வர்ற ஞாயிற்றுக்கிழமைக்கு அந்த இராத்திரியை கொண்டு போயிட்டார். மனுஷன் கைக்கு கிடைச்சா கட்டிவெச்சு உதைக்கணும் போலிருக்கு...

    பொண்ணோட பேரென்ன.?

    தாரா...

    மாடிப்படியில் ஏறினார்கள். பட்டு வேட்டியும் அங்கவஸ்திரமும் அணிந்த ஒரு வழுக்கைத் தலை மனிதர் எதிர்பட - அழகிரி சொன்னான்.

    இவர் தாராவோட அப்பா... அந்த காலத்திலேயே ராஜா சர் பட்டம் வாங்கினவர்...

    வணக்கம் தம்பி...

    மாமா...! இவன்... எனக்கு நெருங்கின... சிநேகிதன். இராத்திரி ரெயிலை தவறவிட்டதால்... முகூர்த்தத்துக்கு வரமுடியாமே போச்சு...

    அப்படியா... ரெண்டு நாளைக்கு முந்தியே வந்திருக்க வேண்டியதுதானே... தம்பி...?

    ஆபீஸ்ல லீவு கிடைக்கலை... சார்...

    இராத்திரிக்கு இருந்து விருந்து சாப்பிட்டுத்தான் போகணும்.

    பேஷா...

    மேலே போனார்கள். ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிற உறவுக்காரர்களின் கூட்டம் பரவலாய் தெரிந்தது.

    எங்கடா... உன் பெண்டாட்டி...?

    இதோ வந்துட்டோம்.

    மாடி வராந்தாவுக்கு வந்து - எதிர்பட்ட முதல் அறைக்குள் நுழைந்தான் அழகிரி.

    நான்கைந்து பெண்கள் சூழ உட்கார்ந்திருந்த - மணப்பெண் தாரா நாணத்தோடு எழுந்து நின்றாள். அழகிரி சிரிப்போடு சொன்னான்.

    இதுதாண்டா... என் பிரியத்துக்குரிய பெண்டாட்டி...

    தாராவை ஏறிட்ட ராஜேந்திரன் அதிர்ந்தான்.

    அழகாய் - செண்பகப்பூ நிறத்தில் இருக்கும் அழகிரிக்கு இப்படியா ஒரு பெண் மனைவியாய் வாய்க்க வேண்டும்...?

    கறுப்பாய் - முன்வரிசை பற்கள் லேசாய் தூக்கிக் கொண்டு - சற்றே மேடான நெற்றியோடு - சதை பிடிப்பு இல்லாத உடம்பில் - ஏராளமான நகைகளைப் பூட்டிக் கொண்டு எண்ணெய் வழிகிற முகமாய்...

    வணக்கம்...

    வணக்கம்...

    அழகிரி உற்சாகமாய் சொன்னான். தாரா! இவன் என்னோட நெருங்கிய நண்பன். பேர் ராஜேந்திரன்... என்கூட ஒண்ணா படிச்சான். படிக்கிற காலத்திலேயே... ஒரு பெண்ணை காதல் பண்ணி திருமணமும் செஞ்சு... இப்ப ஒரு குழந்தைக்கு அப்பா...

    ராஜேந்திரன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவஸ்தையாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

    ‘இந்த கரிக்கட்டையை மனம் ஒப்பி எப்படி கல்யாணம் செய்து கொண்டான் அழகிரி?’

    அழகிரி ராஜேந்திரனின் தோளில் தட்டினான். என்னடா கிளம்பலாமா...? என் பெண்டாட்டி ரொம்பவும் வெட்கப்படறா...

    வ... வர்றேன் சிஸ்டர்... ராஜேந்திரன் மறுபடியும் கைகளை குவித்துவிட்டு வெளியே வந்தான்.

    வாடா... மொட்டை மாடிக்கு போயிடலாம்... ஒரு மணி நேரமா சிகரெட்டை தொடவே முடியலை...

    இருவரும் மொட்டை மாடிக்கு வந்தார்கள். அழகிரி சிகரெட் ஒன்றை உதட்டுக்கு கொடுத்துக் கொண்டே மவுனமாயிருக்கும் ராஜேந்திரனை ஏறிட்டான்.

    என்னடா... ஆள் என்னவோ மாதிரி ஆயிட்டே...?

    ஓ... ஒண்ணுமில்லையே...

    ஏண்டா உன்னோட மூஞ்சியைப் பத்தி எனக்குத் தெரியாது? டூத்பேஸ்ட் தீர்ந்து போன டியூப் மாதிரி ஆயிடுச்சு உன்னோட முகம்...

    அ... அழகிரி...

    ம்...

    எனக்கு அதிர்ச்சியா இருக்குடா...

    எதுக்கு அதிர்ச்சி...?

    நீ திருமணம் பண்ணிக்கிற விஷயத்தில் கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கலாம்...

    எதனால அப்படி சொல்றே...?

    தாரா உனக்கு ஏற்ற ஜோடி இல்லை...

    அழகிரி சிரித்தான். நீ நிறத்தையும் அழகையும் வைச்சு சொல்றேன்னு நினைக்கிறேன்! எனக்கு வர்ற பெண் அழகாய் இருக்கக் கூடாதுன்னு... புரோக்கர்கிட்ட சொல்லி நாலைஞ்சு பெண்களைப் பார்த்த பின்னாடிதான் இந்த தாராவை கல்யாணம் பண்ணிகிட்டேன்... கல்லூரி நாட்களில் இருந்தே என்னோட எண்ணங்களும், செயல்களும் வித்தியாசமானதுன்னு உனக்குத் தெரியும். அந்த வித்தியாசமான செயல்களில் இதுவும் ஒண்ணு... ஒவ்வொரு ஆணும் தனக்கு வரக்கூடிய பெண் அழகா இருக்கணும்ன்னு நினைச்சுட்டா... அப்புறம் தாரா மாதிரியான பெண்களுக்கு கல்யாணம் எப்படி ஆகும்...?

    ராஜேந்திரன் பெருமூச்சோடு தலையாட்டினான். நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் சரி... கல்யாண விஷயத்தில் நீ தப்பான முடிவை எடுத்துட்டே. இப்போதைக்கு இது ஒரு தியாகமா தெரியலாம்... ஆனா திருமணங்கிறது ஒரு நாளோடு முடிஞ்சு போயிடற விஷயமில்லை... வாழ வேண்டிய நாட்கள் நிறைய இருக்கு...

    சரி சுவாமிகளே! உங்களுடைய உபதேசத்திற்கு நன்றி!

    அழகிரி! நான் சீரியசா பேசிட்டிருக்கேன்...

    சரி... நானும் சீரியசாவே சொல்றேன்... அழகில்லாத தாராவை நான் கல்யாணம் பண்ணிகிட்டத்துக்காக - என்னிக்குமே வருத்தப்பட மாட்டேன். அவளும் நானும் சந்தோஷமா வாழ்ந்து காட்றோம்... தாராவோட கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராதபடிக்கு அவளை என்னால சந்தோஷமா வெச்சிட்டிருக்க முடியும்...

    உன்னால முடியாது...

    முடியும்ங்கிறேன்...

    முடியாது...

    என்ன பந்தயம்...?

    நான் எதுக்கும் தயார்...

    என்ன ரெண்டு பேருக்கும் சண்டை...?

    பின்பக்கம் குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள். அழகிரியின் அப்பா தனகோடியும், அம்மா ஜெகதாவும் சிரிப்போடு நின்றிருந்தார்கள்.

    ஐம்பது வயதை தொட்டிருந்த தனகோடி - சரிகை வேட்டியும் - போர்த்திக் கொண்ட மேல்துண்டிலும் இருந்தார். முன்மண்டையில் பலகீனமான நரை கிராப். நெற்றியில் பளிச்சென்று விபூதித் தீற்றல். வெள்ளி பிரேமிட்ட கண்ணாடி மூக்கு நுனியில் வசதியாய் உட்கார்ந்திருந்தது.

    ஒற்றை நாடி உடம்பில் நாற்பது வயதைத் தொட்டிருந்த ஜெகதா கனமான பட்டுப் புடவைக்குள், நெற்றியில் பெரிய சைஸ் குங்குமப் பொட்டோடு சினிமாக்களில் வருகிற அம்மா மாதிரி வசீகரம் காட்டினாள்.

    அழகிரி கையிலிருந்த சிகரெட்டை எரிந்து விட்டு அது ஒண்ணுமில்லேப்பா... சும்மா தமாசுக்கு..."

    நான் கேட்டுட்டுத்தாண்டா இருந்தேன்... லட்சணம் குறைவா இருக்கிற தாராவை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் நண்பன் ராஜேந்திரனுக்கு பிடிக்கலை. தாராவோடு நீ சந்தோஷமா குடும்பம் நடத்த முடியாதுன்னு சொல்றான். சரியா...?

    ராஜேந்திரன் குறுக்கிட்டான்.

    ச...சார்...அது வந்து...

    இதோ பார் ராஜேந்திரா... ஒரு பெண்ணுக்கு வேண்டியது அழகில்லை. குணம். நிறமில்லை. தரம். அழகைப் பார்த்து நாங்க பொண்ணு எடுக்கலை. குடும்பப் பெருமையைப் பார்த்துதான் பொண்ணு எடுத்தோம். ஒரு காலத்துல ‘ஓகோ’ன்னு செல்வச் செழிப்போடும் – ராஜா சர் பட்டத்தோடும் இருந்த குடும்பம் இது. தாராவோட அப்பா பாலசிங்கம் ஆறு குதிரை பூட்டின சாரட் வண்டியில்தான் வெளியே போவார்... குதிரைகளோட கழுத்துக்கு தங்கமணிகளை கோர்த்து போட்டவர்... பணம் கொட்டிக்கிடந்த காலத்திலேயே தப்பு வழிகளுக்குப் போகாதவர். அப்பேர்ப்பட்ட குடும்பத்துல... சம்பந்தம் பண்ணிக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கணும்... இன்னிக்கு பாலசிங்கத்துகிட்ட சொத்து இல்லை. ஆனா கவுரவம் இருக்கு. ஆஸ்தி இல்லை. ஆனா அந்தஸ்து இருக்கு... தாரா எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க கொடுத்து வெச்சிருக்கணும்...

    சாரி...சர்...இந்த விஷயமெல்லாம் தெரியாமே... ஏதேதோ பேசிட்டேன்...

    ஜெகதா புன்னகையோடு - ராஜேந்திரனை ஏறிட்டாள். "நீ எப்ப ஊர்ல இருந்து வந்தே தம்பி...?’

    இப்பத்தாம்மா...

    சாப்பிட்டியா...?

    இனிமேத்தான்...

    வா...வா...கீழே... இலை போட்டாச்சு...

    அழகிரி அவன் தோளைத் தட்டினான். ராஜேந்திரா! நீ போய் சாப்பிடு...

    நீ...

    எனக்கு எதுவுமே வேண்டாம். மத்தியானம் சாப்பிட்ட விருந்தே வயித்துல அசையாம உட்கார்ந்துட்டிருக்கு...! அம்மா இவனைக் கூட்டிட்டு போய் சாப்பிட வை...

    வாப்பா தம்பி...! ஜெகதா ராஜேந்திரனின் கையைப் பற்றி கீழே கூட்டிக் கொண்டு போனாள்.

    அவர்கள் மறைந்ததும்

    மொட்டை மாடியின் நிசப்தத்தில் மவுனமாய் தனகொடியும் -அழகிரியும் கபடமாய் புன்னகைத்தார்கள்.

    அழகிரி...

    என்னப்பா...?

    தாரா உடம்பில் இருக்கிற நகைகளை அம்மா சரி பார்த்துட்டா. மொத்தம் இருநூறு பவுன் தேறுமாம்... பாலசிங்கம் தான் சொன்ன மாதிரி... அவரோட பரம்பரை நகைகளையெல்லாம்... தன் பொண்ணுக்கு போட்டுட்டார்...

    அப்படீன்னா... இனி நம்ம திட்டத்தை அரங்கேற்றம் பண்ண வேண்டியதுதான். நாளைக்கு காலையில் தாராவை நம்ம ஊருக்கு... காரில் கூட்டிட்டு போகும் போது...

    தனகோடி குறுக்கிட்டார்.

    இங்கே எதையும் பேசாதே...! கைத்துப்பாக்கியை பெட்டியில் பத்திரமா வெச்சிருக்கியா...?

    தாரா உடம்புல பாயப் போகிற ஆறு தோட்டாக்களோடு, அது பத்திரமா என்கிட்டே இருக்கு...

    2

    இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பங்களாவின் முகப்பில் இருந்த ‘சிட் அவுட்’க்கு வந்து உட்கார்ந்தான் அழகிரி. பின்னாலேயே வெற்றிலைப் பாக்கு தட்டத்தோடு கொலுசு சப்திக்க தாரா வந்தாள். டீபாயின் மேல் தட்டை வைத்து விட்டு நகர முயன்றவளை தன் குரலால் நிறுத்தினான் அழகிரி.

    தாரா...

    ம்...

    இப்படி உட்கார்.

    வேண்டாம்... யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க... கழுத்துல தாலி விழுந்ததும் கணவன்கூட கொஞ்சப் போயிட்டான்னு பேசுவாங்க.

    யாரும் ஒண்ணும் பேச மாட்டாங்க, உட்காரு.

    தாரா வெட்கப்பட்டுக்கொண்டே, அழகிரிக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அவளுடைய அங்கங்களில் பொதிந்திருந்த நகைக் குவியல்களை கண் குளிர பார்த்துக் கொண்டே கேட்டான் அழகிரி.

    சாப்பிட்டியா?

    ம்...

    உனக்கு கறி, கோழி சாப்பிட்டு பழக்கமில்லைன்னு கேள்விப்பட்டேன். உண்மையா?

    ஆமா.

    இதுவரைக்கும் ஒரு தடவை கூட சாப்பிட்டதே இல்லையா?

    ஊகூம்...

    "என் வீட்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1