Thendral Varum Jannal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thendral Varum Jannal
Related ebooks
Thendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsThattungal Thirakkaathu Rating: 0 out of 5 stars0 ratingsNadunisi Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 5 out of 5 stars5/5Namruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Mudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Samaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5Puthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Paathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanden Kanne Rating: 4 out of 5 stars4/5Iraval Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Oru Patchainira Echarikkai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsUllaththaik Killaathey! Rating: 0 out of 5 stars0 ratingsKann Yethirey Oru Uyir Rating: 5 out of 5 stars5/5Ini Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Vinadigal Rating: 0 out of 5 stars0 ratingsRajesh Kumarin Sirantha Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThottavanai Vittathillai Rating: 0 out of 5 stars0 ratingsBrindha Private Limited Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Thendral Varum Jannal
0 ratings0 reviews
Book preview
Thendral Varum Jannal - Rajeshkumar
18
1
பாம்புகளில் சுமார் 2500 வகை இருந்தாலும் 200 வகையான பாம்புகள்தான் விஷமுள்ளவை. ஒரு மனிதனை பாம்பு கடிக்கும்போது சிறிய அளவு நஞ்சுதான் உள்ளே செலுத்தப்படுகிறது. பாம்பு கடித்து பலர் இறப்பதற்கு பயம்தான் முக்கிய காரணமே தவிர விஷமல்ல. ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக அவருக்கு என்னென்ன முதலுதவிகளை செய்ய வேண்டும்? அடுத்த அத்தியாயத்தில் பாருங்கள்.
பணக்காரத்தனத்தோடு நான்கு மாடிகளுக்கு வளர்ந்திருந்த அந்த பிரைவேட் கிளினிக்கின் தலைமை டாக்டர் நீரஜ் கார்சாவியைப் பொறுக்கிக் கொண்டு எழ முற்பட்டபோது - அவருடைய மேஜையின் மேல் அத்தனை நேரம் சாதுவாய் உட்கார்ந்திருந்த ஆரஞ்சு நிற டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.
ரிசீவரை எடுத்து, ஹலோ...
என்றார்.
டா... டாக்டர்... நா... நான் வசியாஸ்ரீ பேசறேன்...
நீரஜ் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே லேசான உற்சாகத்தோடு பேசினார்.
என்னம்மா! நல்லா இருக்கியா...? போன மாசம் வெயிட்டை அம்பது கிலோவா குறைச்சிட்டுப் போனே... அதை அப்படியே மெயின்ட்டெயின் பண்றியா... இல்லை மறுபடியும் சதை போட்டுட்டியா...? இப்போ நீ போன் பண்ணியிருப்பதைப் பார்த்தா வெயிட் போட்டுட்டேன்னு தான் நினைக்கிறேன்...
இ... இல்லை... டாக்டர்...
இல்லையா... அப்படீன்னா ரொம்ப சந்தோஷம். முந்தா நாள் தான் வி.சி.டியில் உன்னோட புதுப்படம் ‘அஞ்சாதே ஜீவா’ பார்த்தேன்... உன்னோட பர்பாமென்ஸ் ரியலி சூபர்ப்... பரவாயில்லை... கவர்ச்சி கதாநாயகியா அறிமுகமான நீ சமீப காலமா ‘எனக்கு நடிக்கவும் தெரியும்’ன்னு நிரூபிச்சுட்டு வர்றே...
டா... டாக்டர் எ... என்னைக் கொஞ்சம் பேச விடுங்க... ப்ளீஸ்...
அவள் குரல் கெஞ்சலாய் வெளிப்பட்ட போதுதான் அதில் இழையோடிக் கொண்டிருந்த பதட்டத்தையும் திணறலையும் தீரஜ் கவனித்தார்.
சற்றே நிதானித்தவர்...
சொல்லும்மா... என்ன விசயம்...? உன் குரல் ஒரு மாதிரி இருக்கே...?
டா... டாக்டர்... என்னோட உடம்புக்கு என்னவோ ஆயிடுச்சு... நீங்க உடனே இங்கே வரணும்...
என்னாச்சு... கொஞ்சம் விபரமா சொல்லும்மா...
உடம்பெல்லாம் திடீர்ன்னு புசுபுசுன்னு வீங்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணாடி முன்னாலே என்னை எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு இந்த ஒரு மணி நேரத்துக்குள்ளே மாறிப்போயிட்டேன்... ப்ளீஸ் நீங்க உடனே நேரில் வாங்க...
ஏதாவது அலர்ஜியா...? அல்லது அவுட்டோர் ஷூட்டிங்கில் பாய்சன் பைட் ஆயிருக்குமா...?
அதெல்லாம் இங்கே வந்து யோசனை பண்ணுங்க டாக்டர்... உடனே வந்து எனக்கு ட்ரீட்மென்ட் கொடுங்க! ப்ளீஸ்...
அவளுடைய அவசரத்தைப் புரிந்து கொண்டவராய்...
இன்னும் பத்து நிமிடத்தில் நான் அங்கே வர்றேன்... நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம்... அலர்ஜி அல்லது பாய்சன் பைட் ரெண்டில் ஏதோவொன்றுதான் இருக்கும்... அதுக்குத் தகுந்த மருந்தோடு வர்றேன்...
என்று சொல்லி ரிசீவரை வைத்தார்.
இன்ட்டர்காமை அழுத்தினார்.
மறுமுனையில் சற்றே கனமாய், ஹலோ...
கேட்டது.
சேகர்... வசியாஸ்ரீ வீட்டுக்குப் போகணும்... கிட்டோட காருக்கு வந்துடுங்க...
என்ன ப்ராப்ளம் டாக்டர்?
திடீர்ன்னு அவளுக்கு முகம், கை காலெல்லாம் வீங்கிக்க ஆரம்பிச்சிடுச்சாம். பயந்து போய் கூப்பிடுறா...
அலர்ஜி ஆகியிருக்குமா...?
அப்படித்தான் நினைக்கிறேன்... அல்லது டூயட்டுக்காக புல்வெளிகளிலும்... செடி கொடிகளுக்கிடையிலும் புரள்றது மாதிரி நடிக்கிறது நடிகைகளுடைய முக்கியமான டியூட்டி ஆச்சே... ஏதாவது விஷ பூச்சிகள் தீண்டியிருக்கலாம்... தன்னோட தோற்றத்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயந்து போயிருக்கா... நாம போய் முன்னாடி நின்னோம்ன்னா சைக்காலஜிக்கலா அவளுக்கு நிம்மதி ஏற்படும்...
நான் காருக்கு வந்துடறேன் டாக்டர்...
இன்ட்டர்காமை வைத்து விட்டு - அறையைக் கடந்து லிப்டில் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.
இதுவரை தன்னுடைய மருத்துவ வாழ்க்கையில் பார்த்திராத பயங்கர அனுபவத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பது தீரஜ்ஜுக்குத் தெரியாது.
உலர்ந்த மேகத்தின் நிறத்தில் இருந்த டாட்டா எஸ்டேட் அகலமான கிராதி கேட்டின் முன்னால் நின்று ‘பீம்ப்’ என்று ஹார்ன் விநியோகித்தது.
கூர்க்கா, கூண்டுக்குள் இருந்து ஓடி வந்து - கேட்டைத் திறந்து வைத்தான்.
கார் போர்டிகோவில் போய் அடங்கி நின்றதும் - உள்ளே இருந்து பட்டுச் சேலை சரசரக்க கோமதியம்மாள் இடது பக்கமிருந்து இறங்க,
பட்டு வேட்டியிலிருந்த கார்மேகம் டிரைவிங் இருக்கையை விட்டு விலகி வந்தார்.
போர்டிகோ படிகளை ஒட்டியிருந்த சுவரில் விரல் முனை அளவு சதுரத்துக்கு அழைப்பு மணி சுவிட்ச் இருந்தது.
கார்மேகம் அதை அழுத்தினார்.
உள்ளுக்குள் ஓசை சிதறிக் கொண்டிருக்க - கோமதியம்மாளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
நாம வருவோம்ன்னு சம்பந்தி வீட்டில் எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க...
நீங்க எப்பவும் இப்படித்தான் அடுத்தவங்களைத் தவிக்க விடுவீங்க... அட்லீஸ்ட் ஒரு போன் கூட பண்ணாம திடீர்ன்னு அவங்க முன்னால வந்து நிக்கிறது அவ்வளவு சரியா எனக்குப் படலை...
அதனால என்ன கோமதி... நாம இங்கே வருவோம்ன்னு முன்னமே பிளான் பண்ணியிருந்தா போன் பண்ணி சொல்லியிருக்கலாம். திடீர்ன்னு ஏற்பட்ட யோசனை தானே...
அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அந்த பங்களாவின் முகப்புக் கதவு திறந்தது.
எட்டிப்பார்த்த மருதாசலம் - பரபரப்புத் தொற்றிக் கொள்ள உற்சாக முகத்தோடு வரவேற்றார்.
அடடே... வாங்க வாங்க...
உள்ளே பார்த்துச் சத்தமாய் குரல் கொடுத்தார்.
அன்னபூரணி... அன்ன பூரணி...
சற்றே குள்ளமாய், பருமனான தோற்றத்தில் இருந்த அன்னபூரணி ஹாலுக்கு அப்பாலிருந்து வெளிப்பட்டாள்.
கார்மேகத்தையும் கோமதியம்மாளையும் பார்த்ததும் பரபரப்பு அவளையும் தொற்றிக் கொண்டது. சேலைத் தலைப்பைத் தோளில் போர்த்திக் கொண்டு உதடுகளில் புன்னகையை நிரப்பிக் கொண்டு வரவேற்றாள்.
வாங்க... உக்காருங்க... என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்...?
கோமதியம்மாள் சோபாவில் அமர்ந்து கொண்டே சொன்னாள்.
ஒரு போன் கூட பண்ணாம போறோமேன்னு சொல்லிக்கிட்டேதான் வந்தேன்...
மருதாசலம் சிரித்தார்.
இந்திரா நகர்ல இருக்கிற என்னோட பிரெண்ட் ஒருத்தருக்கு கல்யாணப் பத்திரிகை கொடுக்கப் போயிருந்தோம். அவர் வீடு மாத்தி இந்த ஏரியாவுக்கு வந்துட்டார்ன்னு அங்கே போனப்புறம் தான் தெரிஞ்சது... இவ்வளவு தூரம் வந்த பிறகு உங்க வீட்டுக்கு வராம போனா நல்லா இருக்காதேன்னு காரை இங்கே திருப்பிட்டேன்... அதனாலதான் போன் கூட பண்ண முடியலை...
மருதாசலம் சந்தோஷமாய்த் தலையை ஆட்டினார்.
நீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்... இன்னும் மூணு வாரத்தில் சம்பந்தி ஆகப் போகிறோம்... அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒரே குடும்பம் போலத் தானே... நமக்குள்ளே எதுக்கு அநாவசியமா பார்மாலிட்டி எல்லாம்...
அந்த உரிமையை இப்பவே எடுத்துக்கிட்டோம்.
கார்மேகம் சிரிக்க - அன்னபூரணி கேட்டாள்.
என்ன சாப்பிடறீங்க... டிபன் ஏதாவது பண்ணட்டுமா...?
அதெல்லாம் எதுவும் வேண்டாம். ஸ்ட்ராங்கா ஒரு தம்ளர் காபி கொடுத்தாப் போதும்... கல்யாண வேலை எல்லாம் எந்த அளவில் இருக்கு?
எல்லாமே பர்பெக்ட்டா நடந்திட்டிருக்கு. ரிலேட்டிவ் சர்கிள்ல பத்திரிகை வெச்சு முடிச்சாச்சு... பிரெண்ட்ஸ்களுக்கு மட்டும் தரவேண்டியிருக்கு...
இன்னும் மூணு வாரம் இருக்கே...
அப்படித்தான் இப்ப தோணும்... ஆனால் மூணு வாரம்ங்கறது மூணு நிமிடம் மாதிரிப் பஞ்சாப் பறந்திடும்...
கிச்சனை நோக்கிச் சென்ற அன்னபூரணி சிறிது நேரத்தில் காபி தம்ளர்களைத் தாங்கிய டிரேயைக் கையில் சுமந்தபடி திரும்பி வந்தாள்.
அவர்களிடம் பரிமாறுகிற போது கோமதியம்மாள் கேட்டாள்.
எங்கே என் வருங்கால மருமகளையே காணோம்...?
வாணி அவளோட பிரெண்ட்ஸ்களுக்குப் பத்திரிக்கைக் கொடுக்கறதுக்காக வெளியே போயிருக்கா...
அடடா... அன்னிக்கு நிச்சயதார்த்தத்தின் போது பார்த்தது... இப்போ அவளைப் பார்க்கலாம்ங்கற ஆசையோட தான் வந்தேன்...
மருதாசலம் புன்னகைத்தார்.
வாணி மத்தியானமே போயிட்டா... இப்போ திரும்பி வர்ற நேரம்தான்... ‘கல்யாணப் பொண்ணு நீ வெளியே போறதே தப்பு... அதனால இருட்டறதுக்கு முன்னால வீட்டுக்கு வந்துடு’ன்னு சொல்லித்தான் அனுப்பியிருக்கேன். அநேகமா ஒரு பத்து நிமிட நேரத்துக்குள்ளே வந்துடுவா...
கோமதியம்மாள் கார்மேகத்திடம் திரும்பினாள். என்னங்க... வந்தது வந்துட்டோம். ஒரு பத்து நிமிடம் இருந்து வாணியைப் பார்த்துட்டே போயிடலாம்.
கார்மேகம் சிரித்தார். தாராளமா இருந்து பார்த்துட்டே போயிடலாம். நாமதான் இன்னிக்கு போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் போயிட்டு வந்துட்டோமே... பத்து நிமிடம் என்ன, ரெண்டு மணி நேரமானாலும் சரி, இருந்து நம்ம மருமகளைப் பார்த்துட்டே போயிடலாம்.
கோமதியம்மாள் அன்னபூரணியிடம் கேட்டாள் - அழைப்பிதழ் கொடுக்க வாணி மட்டும் போயிருக்காளா... இல்லை கூட அவளோட தங்கை உஷாவும் போயிருக்காளா?
உஷாவுக்கு இப்ப செமஸ்டர் எக்ஸாம். எக்ஸாம் நாலைஞ்சு நாளில் முடிஞ்சுடும். அதுக்கப்புறம்தான் அவள் ஹாஸ்டலில் இருந்து வருவா. வாணி இப்போ தனியாத்தான் போயிருக்கா.
கார்லதானே?
-
ஆமா! பேசிட்டிருங்க... நான் சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன்.
அதெல்லாம் வேண்டாம் உட்காருங்க. அழைப்புக்கு போன இடத்தில் எல்லாம் காப்பி, கூல்ட்ரிங்க்ஸ்ன்னு சாப்பிட்டு வயிறு காஷ்மீர் மாநிலம் மாதிரி இருக்கு. கல்யாண நேரத்துல உடம்பை கவனமா பார்த்துக்கணும். இல்லேன்னா படுக்கைதான்...
எல்லோரும் சிரிக்க மருதாசலம் சொன்னார் -
வாணிக்கு பதினைஞ்சு பவுன்ல ஒரு ஒட்டியாணமெல்லாம் போடறீங்க. அதுக்குப் பதிலா வேற ஏதாவது பண்ணியிருக்கலாமே..?
கோமதியம்மாள் சொல்லிக் கொண்டிருந்த அந்த வினாடி -
கார் சத்தம் கேட்டது.
ரத்த நிற மாருதி கார் போர்டிகோவில் பிரவேசிப்பது ஹாலிலிருந்து பளிச்சென்று தெரிந்தது.
காரிலிருந்து இறங்கி உள்ளே வந்த வாணியைப் பார்த்து கார்மேகமும் கோமதியம்மாளும் பலத்த அதிர்ச்சிக்குள் விழுந்து ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
உள்ளே வந்த வாணி இருவரையும் பார்த்து ஒரு சில வினாடிகள் திடுக்கிட்டுப் பின் இயல்புக்கு வந்து புன்னகையோடு கை குவித்தாள். வெட்கம் கலந்த சிரிப்போடு வாங்க அத்தே! வாங்க மாமா...
என்றாள்.
அவர்கள் புன்னகைக்க மறந்தவர்களாய் இருண்ட முகங்களோடு வாணியின் அப்பா மருதாசலத்திடம் திரும்பினார்கள்.
இ... இ... இது... உங்க பொண்ணு வாணி தானே?
மருதாசலத்தின் நெற்றி வரிவரியாய் கோடு போட்டது. இது என்ன கேள்வி! அவள் என் பொண்ணு வாணி தான்... ஏதோ புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?
கார்மேகம் தீர்க்கமாய் வாணியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மறுபடியும் மருதாசலத்தை ஏறிட்டார்.
அன்னிக்கு நிச்சயதார்த்தத்தின் போது பார்த்த வாணிக்கும் இப்ப எங்க முன்னாடி நிக்கிற வாணிக்கும் அடையாளமே தெரியலையே... நிறைய வித்தியாசம் இருக்கே...
கார்மேகம் இப்படிச் சொன்னதும் வாணி சட்டென்று முகம் மாறி தலையைத் தாழ்த்திக் கொண்டு வேகமாய் உள்ளே போய் மறைந்தாள்.
மருதாசலம் அவஸ்தையான சிரிப்போடு கார்மேகத்திடம் திரும்பினார்.
சரியா சாப்பிடாமே கொஞ்சம் இளைச்சு போயிட்டா. கழுத்துல தாலி ஏறிட்டா உடம்புல பூரிப்பு வந்துடும். அப்போ சரியாயிடும்...
கார்மேகம் மறுத்தலாய் தலையாட்டினார். இல்ல மிஸ்டர் மருதாசலம்... இது இளைச்சுப்போன உடம்பு மாதிரி தெரியலை. ஏதோ அடையாளமே மாறிட்ட மாதிரி தெரியுது. அன்னிக்கு இந்த நிலைமையில் உங்கள் பெண்ணைப் பார்த்திருந்தான்னா என் பையன் கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா சம்மதிச்சிருக்க மாட்டான்...
மருதாசலத்தின் முகம் லேசாய் கோபமாகி சிவப்புச் சாயம் பூசிக் கொண்டது.
நீங்க பேசற பேச்சு சரியில்லைங்க கார்மேகம்! உடம்பு என்ன கல்லா மரமா... அப்படியே இருக்கிறதுக்கு? உடம்புன்னு இருந்தா ஏதாவது ஒண்ணு வரும், போகும். இன்னிக்கு ஒல்லியா இருக்கிறவங்க ஆறுமாசம் கழிச்சுப் பார்த்தா குண்டா தெரிவாங்க. அதே மாதிரி குண்டா இருக்கிறவங்களும் திடீர்ன்னு ஒரு நாளைக்கு இளைச்ச மாதிரி தெரிவாங்க... இதையெல்லாம் பெரிசா எடுத்துக்க முடியுமா என்ன?
அதுவரைக்கும் மவுனம் காத்த கோமதியம்மாள் இப்போது சீறினாள். "உங்க