Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vaanam Miga Arugil
En Vaanam Miga Arugil
En Vaanam Miga Arugil
Ebook127 pages28 minutes

En Vaanam Miga Arugil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465544
En Vaanam Miga Arugil

Read more from Rajeshkumar

Related to En Vaanam Miga Arugil

Related ebooks

Reviews for En Vaanam Miga Arugil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vaanam Miga Arugil - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    என் வானம் மிக அருகில் உன் பார்வையோ வெகு தொலைவில் ஒரு சேதி உன்னைத் தேடிவரும் நின்ற தேரொன்று ஓடிவரும்.

    - குறிஞ்சி

    அந்த பாசஞ்சர் ரயில் அல்லியூர் ரயில்வே ஸ்டேஷனில் நீராவி கக்கி நின்றபோது அதிகாலை ஐந்தே முக்கால் மணி. அவன் ஒருவன் மட்டுமே அந்த ஸ்டேஷனில் இறங்கினான், இளைஞன். முப்பது வயதிருக்கலாம். முகத்தின் பாதியை ட்ரிம் செய்யப்பட்ட தாடி குத்தகைக்கு எடுத்திருந்தது. இடது தோளில் ஒரு ஜோல்னா பை. வலது கையில் நிறம் மங்கிப்போன ஒரு சூட்கேஸ். சூட்கேஸின் லாக்கர் பிளேட்டில் 'சங்கர நாராயணன்' என்கிற பெயர் எழுதப்பட்டிருந்தது.

    ரயில், ‘வே' என்று கூவிவிட்டு அந்தச் சிறிய ஸ்டேஷனில் அதற்குமேல் நிற்பது அவமானம் என்று கருதி நகர்ந்ததும் அவனும் மணல் கொட்டியிருந்த பிளாட்பாரத்தில் நடந்து இவனிடம் டிக்கெட்டை வாங்குவதற்காகவே காத்திருந்த வயதான ஸ்டேஷன் மாஸ்டரை நோக்கிப் போனான். கிராமத்திற்கே உரிய குளிர் காற்று... அவசரமில்லாமல் வீசிக் கொண்டிருக்க அதில் நெற்பயிரின் மணம் எப்படியோ திருட்டுத்தனமாய் கலந்து விட்டிருந்தது. ரயிலடிக்கு கொஞ்சம் தள்ளியிருந்த டீக்கடையில் பாய்லரின் நெருப்பு 'கணகண'வென்று தெரிந்தது.

    கையை நீட்டிய ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அந்த சிறிய ரயில்வே ஸ்டேஷனினின்றும் வெளிப்பட்டான் அவன்.

    வண்டியிலிருந்து அவிழ்த்துவிட்டிருந்த காளையொன்று மணிச் சத்தத்தோடு வைக்கோலை அசை போட்டுக் கொண்டிருக்க வண்டிக்காரன் சிமெண்ட் பெஞ்சியில் மல்லாந்து படுத்து – வாயைப் பிரித்து தூங்கிக் கொண்டிருந்தான்.

    'டீ சாப்பிடலாம்' யோசித்து பனையோலைகளால் ஒரு டீ ஸ்டாலாய் மாறியிருந்த கடையை நோக்கிப் போனான்.

    'ஜோதிலட்சுமி டீ ஸ்டால்.' இவிடம் கொழா புட்டு, பொண்டா, பச்சி, இட்லி, தேசை கெடைக்கும் உரிமையாளர் சொடலமுத்து. குற்றுயிரான தமிழில் போர்டை படித்துக் கொண்டே பாய்லர்க்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த மரப் பெஞ்சில் போய் உட்கார்ந்தான்... அவன்.

    சொடலமுத்து தோளில் துண்டோடும், நெற்றியில் திரு நீறு பட்டையோடும் பாய்லர்க்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தார்.

    "என்ன வேணுங்க...'

    சக்கரை கம்மியா ஒரு டீ...

    நாட்டு சர்க்கரை டீயா? அஸ்கா டீயா?

    அஸ்கா டீ...

    வெறும் டீ போதுங்களா?

    போதும்

    கொழா புட்டு சூடா இருக்கு... சாப்ட்றீங்களா?

    வேண்டாம்... டீ போதும்

    சொடலமுத்து சற்றே ஏமாற்றமாய் கண்ணாடி டம்ளரை எடுத்து சுடுதண்ணீரில் கழுவி நுரை ததும்ப ஒரு டீயை அடித்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினான். கேட்டான்.

    மேக்கே போன ட்ரெய்ன்லதானே வந்தீங்க?

    ஆமா...

    வெளியூரா...?

    ஆமா...

    எந்த ஊரு...?

    வடநாட்டுப் பக்கம்

    இந்த கிராமத்துல யார் வீட்டுக்கு வந்தீங்க...?

    அவன் பதில் பேசாமல் டீயை உறிஞ்சிக் கொண்டிருக்க சொட்லமுத்து மறுபடியும் கேட்டார்.

    யார் வீட்டுக்கு வந்தீங்க...?

    அவசியம் உங்ககிட்டே சொல்லணுமா?

    இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாங்க...

    இஷ்டமில்லை... டீ எத்தினி காசு...?

    அம்பது...

    அவன் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். சொடலமுத்து மீதி சில்லறையைக் கொண்டுவந்து கொடுப்பதற்குள் அவன் டம்ளரில் இருந்த டீயை காலி செய்துவிட்டு தாடியில் சிந்திவிட்ட டீயை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டிருந்தான்.

    டீ எப்படீங்க இருந்தது...?

    மண்ணெண்ணெய் வாசம் இல்லைன்னா... நல்லாயிருந்திருக்கும்

    பாய்லரை பத்த வைக்கும்போது... மண்ணெண்ணெய் கைல பட்டுடுச்சி அதான்... லேசா... வீச்சம்...

    ஊருக்குள்ளே போறதுக்கு வண்டி ஏதாவது கிடைக்குமா?

    கிடைக்குமே! ஏற்பாடு பண்ணட்டுங்களா?

    ம்...

    "சொடலமுத்து உடனே திரும்பி சிமெண்ட் பெஞ்ச்சைப் பார்த்து குரல் கொடுத்தான்.

    டேய் வரதா...! பெஞ்சில் படுத்திருந்த உருவம் எழுந்து உட்கார்ந்தது. சாமி...!

    மேக்கே ரெயிலு போயாச்சு... பொளுதும் விடியப் போகுது. இன்னும் என்னடா... சோபன் ரூமுக்குள்ளாற போன மாப்பிளை கணக்கா தூக்கம்... எந்திரிச்சு வாடா... ஊருக்குள்ளார சாரு போகணுமாம்...

    தோ... வண்டியைக் கட்டிட்டேன்

    ராத்திரி சரக்கு சாப்பிட்டியாடா?

    இல்லீங்க சாமீ...

    புளுவாதே! கொஞ்ச நேரத்துல உன்னோட சகா சன்னாசி டீ குடிக்க இங்கே வருவான். அவன் கிட்டே கேட்டா... உன்னோட வண்டவாளம் தெரிஞ்சுடும்

    செத்து போன எண்ற ஆத்தா சத்தியமா குடிக்கல்லே சாமி. டூரிங்க் டாக்கீஸுல ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்குத்தான் போனேன்...

    "சரி... சரி... சட்டுபுட்டுன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1