Oru Maranathin Maranam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Maranathin Maranam
Related ebooks
Thazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratingsRaththamindri Oru Yuttham Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsKodu Thandathey! Rating: 4 out of 5 stars4/5Moochil Vazhum Pullankuzhalkal Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsPuthumai Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsDecember Iravukal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsNil... Kavani...Kaathiru! Rating: 2 out of 5 stars2/5Aadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsIni Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsYetho... Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Avargal Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaraikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsNeeya Naana? and Uyir Uthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThadayai Udai! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oru Maranathin Maranam
0 ratings0 reviews
Book preview
Oru Maranathin Maranam - Rajeshkumar
ராஜேஷ்குமார்
நம் உடம்புக்குள் ஓர் அதிசயம்
நாம் வாழும் இந்த உலகில் ‘ஏழு அதிசயங்கள்’ மட்டுமே இருப்பதாக சொல்லிக் கொண்டு காலம் காலமாய் அதைப் போற்றிக் கொண்டாடி வருகிறோம். ஆனால் நம் உடம்புக்குள் நூற்றுக்கணக்கான அதிசயங்கள் ஒளிந்து நின்றபடி நம்மை இயக்கிக் கொண்டிருப்பது யார்க்கும் தெரியாது. நம் உடம்பின் எந்த ஒரு உறுப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் இருக்கும் அதிசயங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாத்தின்ஆரம்பத்திலும் அந்த உறுப்புகளின் அதிசய வேலைத்திறன் என்ன என்பதைப் பார்க்கப் போகிறீர்கள்.
1
அமைச்சர் கொன்றைவேந்தன் மைக்குக்கு முன்பாய் நின்று தனது கரகரப்பான குரலில் தனக்கு முன்பாய் கூடியிருந்த சொற்பமான கும்பலைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார்:
கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அலைகடல் போல் திரண்டு இருக்கும் அனைவர்க்கும் வணக்கம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கின்ற நமது ஆட்சியைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அரண்டு மருண்டு போயிருக்கின்றன. நம்மிடம் குறை கண்டு பிடிக்க முடியாமல் மூலையிலே போய் முடங்கிக் கொண்டு விட்டன. நம் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ஊழலும் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும்போது இங்கே மட்டும் ஊழல் என்கிற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் ஒரு உன்னதமான ஆட்சியை மக்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது 24 மணி நேரமும் குடிநீர், 24 மணி நேரமும் மின்சாரம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அது பலிக்காத கனவு என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தபோது நாங்கள் அந்த ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் ஏற்றமிகு திட்டங்கள் பலவற்றைத் தீட்டினோம். அந்தத் திட்டங்களில் ஒன்றுதான் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு அற்புதமான திட்டம். இந்தத் திட்டம் வெளிநாடுகளில் தோற்றுப் போய்விட்ட நிலையில் நாம் இந்தத் திட்டத்தை ஒரு சவாலாக ஏற்று செயல்படுத்த உள்ளோம். அதனுடைய துவக்க விழாதான் இன்றைக்கு எனது தலைமையிலே நடைபெற உள்ளது.
மேடையின் ஓரத்தில் நின்றிருந்த அமைச்சரின் செயலாளர் மெள்ள குரல் கொடுத்தார்.
ஸார்...! பத்தரை மணிக்குள்ளே நல்ல நேரம் முடியுது. அதுக்குள்ளே நீங்க தொடங்கி வெச்சுட்டா பரவாயில்லை!
இதோ!
என்று சொன்ன அமைச்சர் உடனே பேச்சை முடித்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கினார். பத்திரிகை நிருபர்கள் காமிராவும் கையுமாய் சூழ்ந்தார்கள்.
குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கிற திட்டம் வெற்றி பெறாது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறாரே?
அவர் முதலமைச்சராய் இருந்த போது அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்து அவர் தோற்றுப் போனார். அந்தத் தோல்விக்குக் காரணம் அவர்க்குச் சரியான தொழில் நுட்பம் தெரியாததுதான். இன்றைக்குத் தொழில்நுட்பம் பன் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே இப்போதைக்கு இது சாத்தியமான ஒன்றுதான்....
அந்த தொழில் நுட்பம் என்ன?
சென்னையில் அன்றாடம் சேரும் குப்பைகளை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இனம் பிரித்து அவைகளை இரும்பு உருளைகளில் போட்டு எரித்து அதிலிருந்து வெளிப்படும் மீதேன் வாயுவில் இருந்து சில மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.
எவ்வளவு மெகாவாட்?
இப்போதைக்கு 200 மெகவாட். அடுத்த வருஷத்தக்குள் இது மூன்று மடங்காக உயரும்...!
இந்தத் திட்டத்துக்காக வாங்கப்பட்ட ஜெர்மன் நாட்டு இரும்பு உருளைகள் தரமற்றது என்றும், மின்துறை அமைச்சராக இருக்கும் நீங்கள் இந்த பேரத்தில் மிகப் பெரிய தொகை ஒன்றை லஞ்சமாய் பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறதே...?
சொன்னவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டே நூறு மீட்டர் தூரத்தில் இருந்த குப்பை மேட்டையும் அதன் அருகே நிறுவப்பட்டு இருந்த ராட்சச இரும்பு உருளைகளையும் நோக்கி மெள்ள நடை போட்டார். பாதுகாப்பு போலீஸார் சிலர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்து போனார்கள். அமைச்சர் தனக்கு பக்கத்தில் வந்து கொண்டிருந்த செயலாளரிடம் கேட்டார்:
துவக்க விழாவை நான் எப்படி ஆரம்பிச்சு வெக்கணும்? ரிப்பனை வெட்டியா?
இல்ல ஸார்.
பின்னே... கொடியை ஆட்டியா?
இல்ல ஸார்...
அப்புறம்...?
மின்சாரத்தை உற்பத்தி பண்ற யூனிட்டுக்கு வெளியே இருக்கிற ஒரு பட்டனை நீங்க ப்ரஸ் பண்ணனும் ஸார். அப்படி பண்ணினா பேனல் போர்டுல பச்சை விளக்கு எரியும். அந்த விளக்கு எரிஞ்சதுமே குப்பை மேட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஜே.சி.டி. பொக்லைன் ஒரு லோடு குப்பையை அள்ளி அந்த இரும்பு உருளைக்குள்ளே போடும். உருளைக்குள்ளே குப்பை எரிக்கப்படும் போது மின்சாரம் உற்பத்தியாறதுக்கு அடையாளமாய் அதே பேனல் போர்டுல சிவப்பு விளக்கு எரியும் ஸார். இப்ப நான் சொன்னது எல்லாமே ஒரு நிமிஷ நேரத்துக்குள்ளே நடந்து முடிஞ்சுடும் ஸார்...
அப்படீன்னா இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல இந்த ஃபங்ஷனிலிருந்து கிளம்பிடலாம்?
கிளம்பிடலாம் ஸார்
வேக வேகமாய் நடந்தார்கள். அமைச்சர் மூக்கை நிரடினார்.
என்னய்யா.. குப்பை இந்த நாறு நாறுது?
மூணுநாளா சேர்த்து வெச்ச குப்பை ஸார். இப்படித்தான் நாறும். செண்ட் ‘ஸ்ப்ரே’ கர்ச்சீப் வெச்சிருக்கேன்.. தரட்டுமா ஸார்?
குடுய்யா..!
செயலாளர் கொடுத்த கர்ச்சீப்பை வாங்கிக் கொண்ட அமைச்சர் மூக்கை நாசூக்காய் பொத்திக் கொண்டே நடந்தார். சில அடி தூரம் நடந்ததுமே மின்துறை தலைமை பொறியாளர் எதிர் கொண்டார்.
"இந்தப் பக்கமாய் வாங்க ஸார்.. கண்ணாடி கேபினுக்குள்ளே போயிடலாம்.
உள்ளே போனார்கள். பேனல் போர்டு ஒன்று சிக்கலான வயர் அமைப்புகளோடு தெரிந்தது. அதன் நடுவே கைப்பிடி ஒன்று தெரிய அதற்கு ஒரு சிறிய மாலை போட்டு சந்தனம் பூசியிருந்தார்கள். குங்கும பொட்டு வைத்திருந்தார்கள். ஒரு பட்டனைக் காட்டினார் தலைமைப் பொறியாளர்.
இதை மட்டும் நீங்க ப்ரஸ் பண்ணினால் போதும்!
அமைச்சர் தன் வலது கையின் கட்டை விரலால் பட்டனை அழுத்த, வெளியே குப்பை மேட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜே.டி.சி. பொக்லைன் ஒன்று உயிர் பெற்று குப்பை மேட்டை நோக்கி நகர்ந்தது. தனக்கு முன்புறம் இருந்த முள்கரண்டி போன்ற அமைப்பை, கொட்டி வைத்து இருந்த குப்பைக்குள் நுழைத்து உயரே தூக்கியது. காய்ந்து போன தாவரக் குப்பைகள் வழிய வழிய தெரிய அந்தக் குப்பைகளுக்கு நடுவே உயிரற்ற மனித உடல் ஒன்று உருக்குலைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.
உடம்புக்குள் ஓர் அதிசயம்
நமது வயிற்றுக்குள் இருக்கும் உறுப்புகளில் முதன்மையான உறுப்பு இரைப்பை. நாம் உயிர்வாழத் தேவையான உணவு இங்கேதான் கூழ் மாதிரி அரைக்கப்பட்டு அதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் கலந்து மூளையின் செயல் திறனுக்கு உதவி புரிகின்றது. நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ப நம்முடைய இரைப்பை தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது. உதாரணத்திற்கு நாம் சாப்பிடும் காலை உணவு இட்லியாய்