Neeya Naana? and Uyir Uthir Kaalam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Neeya Naana? and Uyir Uthir Kaalam
Related ebooks
Neeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Re... Re... Rating: 5 out of 5 stars5/5Kannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsDecember Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Aagave, Section 302 Padi Rating: 5 out of 5 stars5/5Pogap Pogath Theriyum and Ootha Nira Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Drogangal Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsChinna Thappu Periya Thappu Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsCalifornia Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsIni, Illai Ilaiyuthirkaalam... Rating: 0 out of 5 stars0 ratingsRajesh Kumarin Arputha Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavukkul Iruttu and Velvet Kanavugal! Rating: 5 out of 5 stars5/5Pennal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhala Idhu Kaadhala? Rating: 0 out of 5 stars0 ratingsUnakku Mattum Solvean Rating: 5 out of 5 stars5/5Ethirukal Thevai Rating: 5 out of 5 stars5/5...Endral Aval Rating: 0 out of 5 stars0 ratingsPaarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5Thottavanai Vittathillai Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Mutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Ellam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalargal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Neeya Naana? and Uyir Uthir Kaalam
0 ratings0 reviews
Book preview
Neeya Naana? and Uyir Uthir Kaalam - Rajeshkumar
10
1
"அமர்க்களம் - என்றாள் லீலா. கையில் தங்க நிறத்தில் டாலடித்த கல்யாணப் பத்திரிகையை பார்த்துக் கெண்டே, கண்களை விரித்தாள். கணவன் செண்பகராமனின் கன்னத்தை மெதுவாய் தட்டினாள்.
டாக்டர் தொழில் பார்த்தாலும்... உங்களுக்கு கூட இதெல்லாம் ரசனை இருக்கே...?"
செண்பகராமன் சிரித்தார். என்னை... என்னதான்... நினைச்சிகிட்டே... டாக்டர் தொழில் பார்த்தா எல்லாமே வறண்டுடுமா என்ன...? பத்து பதினைஞ்சு கடையேறி நானே செலக்ட் பண்ணின டிசைன் இது...! உனக்கும் எனக்கும் இந்த டிசைன் பிடிச்சிருக்கு... ஓ.கே...! ஆனா இது வாஹினிக்கு பிடிக்கணுமே?
அவளுக்கு இது நிச்சயமா பிடிக்கும்.
எப்படி சொல்றே...?
அவ என்னோட தங்கச்சியாச்சே... என்னோட டேஸ்ட் தானே அவளுக்கும் இருக்கும்...
ஹாஸ்டலுக்கு போய் காட்டிட்டு வரலாமா...?
நினைச்ச நேரத்துக்கு ஹாஸ்டலுக்கு போயிட முடியுமா...? போன் பண்ணி வார்டன்கிட்டே டைம் ஃபிக்ஸ் பண்ணுங்க...
நீதான் போன் பண்ணேன்...
நீங்க வரவர மகா சோம்பேறியாயிட்டீங்க...
சலித்துக் கொண்டே லீலா - ஹால் சுவரோரமாய் இருந்த டெலிபோனைத் தொட்டு - ரிஸீவரை எடுத்துக் கொண்டு டயலைச் சுழற்றிவிட்டு பேசினாள்.
கஸ்தூரிபாய் டீச்செர்ஸ் ட்ரைனிங் காலேஜ்?
ஆமா...
குட் ஐ ஸ்பீக் வித் மிஸ் வாஹினி...?
நீங்க யாரு...?
நான் அவளோட சிஸ்டர்...
டாக்டர் செண்பகராமனின் ஒய்ப்... மிஸஸ் லீலாவா?
ஆமாம்...
வாஹினி கிளாஸில் இருக்கா...! அவசர விஷயம் ஏதாவது இருக்கா...?
நோ... நோ பார்த்து கொஞ்சம் நேரம் பேசணும்... இன்னிக்கு ஈவினிங் ஒரு மணி நேரம் பர்மிஷன் கிடைக்குமா...?
விஸிட்டர்ஸ் டே சண்டேதான்... மத்த நாட்கள்ல நாங்க யாரையும் அலவ் பண்றதில்லை...
மேடம்! வாஹினிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கோம். கல்யாணம் ஏற்பாடுகளைப் பத்தி - அவகிட்ட பேசணும்...
மறுமுனையில் வார்டன் ஆச்சர்யப்பட்டாள்.
வாஹினிக்கு கல்யாணமா...?
ஆமா... மேடம்... வர்ற மாசம் இருபத்தியேழாம் தேதி முகூர்த்தம் வெச்சிருக்கோம்.
மாப்பிள்ளை யாரு...?
என் கணவரோட ஃப்ரெண்ட்... பேரு கைலாஷ் குமார் அவரும் ஒரு டாக்டர்தான்.
வாஹினி பி.எட்.கோர்ஸ் இன்னும் அஞ்சு மாசம் இருக்கே. அதுக்குள்ளே ஏன் கல்யாணத்தை முடிக்கறீங்க...?
மாப்பிள்ளையோட ஜாதகப்படி... வர்ற மாசக் கடைசிக்குள்ளே கல்யாணம் முடியணுமாம்...
அப்படீன்னா வாஹினியோட பி.எட்.கோர்ஸ்?
கல்யாணத்துக்கப்புறமும் தொடரும்...
காலேஜ் ரூல்ஸ் படி ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கணும்...
கல்யாணமானாலும்... அவ ஹாஸ்டலில் தங்கித்தான் படிப்பா...
சரி... சாயந்திரம் அஞ்சு மணியிலிருந்து... ஆறு மணிக்குள்ளே ஹாஸ்டலுக்கு வாங்க... வாஹினியோடு பேசிட்டுப் போகலாம்...
தாங்க்யூ... மேடம்.
லீலா ரிஸீவரை வைத்துவிட்டு - சேலைத் தலைப்பால் நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டாள். அந்த வார்டன் அம்மாவுக்கு ஹாஸ்டல் கட்டடம் பெரிய ராஷ்ட்ரபதி பவன்னு நினைப்பு. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறா...
அந்த அம்மா அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்கிறதுனால் தான் காலேஜ்க்கும். ஹாஸ்டலுக்கும் தமிழ்நாடு பூராவும் நல்ல மதிப்பு. வாஹினிக்கு அந்த காலேஜ் சீட் வாங்கறதுக்குள்ளே... என்ன பாடுபட்டுட்டேன்...
வாஹினிக்கு அந்த டீச்சர் வேலையில் அப்படி என்னதான் ஒரு இண்ட்ரஸ்ட்டோ...?
ஏன் டீச்சிங் ப்ரொபஷனலுக்கு என்ன குறைச்சலாம்...? டாக்டர் தொழில் மாதிரி அதுவும் ஒரு நோபிள் ப்ரொபஷன்தான்...
பி.எஸ்.ஸி. ஜூவாலஜியில் ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுத்து, பாஸ் பண்ணினதும்... மெடிக்கல் சீட்டுக்கு ட்ரை பண்ணுவான்னு நினைச்சேன். கடைசியில் பார்த்தா... டீச்சர் தொழில் பார்க்க ஆசையா இருக்கு... அதுக்குத் தான் படிக்கப் போறேன்னு சொல்லிட்டா... நீங்களும் அதுக்கு தலையை ஆட்டிக்கிட்டு - சீட் வாங்கி குடுத்துட்டீங்க...
இதோ பார் லீலா! வாஹினி உனக்கு எப்படி தங்கச்சியோ... அது மாதிரித்தான் எனக்கும். அவ எனக்கும் மச்சினிச்சி இல்லை. என்னோட ஃப்ரெண்ட். அப்பா, அம்மா இல்லாத அவளுக்கு நான்தான் காட்ஃபாதர். உங்கப்பா சாகும்போது என்கிட்டே என்ன சொன்னார் தெரியுமா...?
போதும்...
சலித்து கொண்டாள லீலா. போதும்... கேட்டு... கேட்டு... காது நரம்பெல்லாம் தளர்ந்து போச்சு. நீங்க போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. சாப்பிடலாம். எனக்கு ஆர்ப்பாட்டமான பசி. நீங்க ஹாஸ்பிடல் கான்டீனிலேயே எதையாவது முழுங்கிட்டு வந்திருப்பீங்க...
லீலா பொரிந்து கொண்டே டைனிங் டேபிளை நோக்கிப் போக - செண்பகராமன் - சர்ட் பட்டன்களைக் கழற்றிக் கொண்டே தன் அறைக்குள் நுழைய முயன்றார்.
டெலிபோன் அலறியது.
லீலா! யார்ன்னு பார்... நான் லுங்கி கட்டிகிட்டு வந்துடறேன்...
லீலா போய் ரிஸீவரை எடுத்தாள்.
ஹலோ...
நான் கைலாஷ் குமார்...
ஓ...! நீங்களா...? குட் ஆப்டர் நூன்...
குட் ஆப்டர் நூன்... செண்பகராமன் இருக்காரா?
"இருக்கார்...:
அவர் கூட பேசணும்.
ஒரு நிமிஷம்...
ரிஸீவரை மேஜையின்மேல் ஒருக்களித்து வைத்துவிட்டு - பக்கத்து அறைக்குள் எட்டிப்பார்த்து - லுங்கிக்குள் நுழைந்து கொண்டிருந்த கணவரிடம் சொன்னாள்.
என்னங்க... போன்ல உங்க ஃப்ரெண்ட்...
ஃப்ரெண்ட்ன்னா யாரு...?
மாப்பிள்ளை...
இந்நேரத்திற்கு எதுக்குப் போன் பண்றான்...?
போன் பண்ணக்கூட நேரம் காலம் இருக்கா...? போய் என்னான்னு கேளுங்க... லைன்ல காத்திட்டிருக்கார்...
லுங்கியை அவசர அவசரமாய் முடிந்து விட்டு வந்து ரிசிவரை கையில் எடுத்தான்
என்னடா கைலாஷ்...?
ப்ரீயா இருக்கியா...?
இப்பத்தான் ஹாஸ்பிடல்லயிருந்து வந்து லுங்கிக்கு மாறினேன். இப்ப கொட்டிக்கிறதுக்காக... டைனிங் டேபிளுக்கு போயிட்டிருக்கேன்...
சரி... சாப்ட்டுட்டு... என்னோட க்ளினிக்குக்கு வர முடியுமா...?
எதுக்கு...?
உன்கூட கொஞ்சம் பேசணும்...
என்ன விஷயம்...
நேர்ல வா... சொல்றேன்...
என்னடா பெரிய சஸ்பென்ஸ்...? ஒரு க்ளூ கொடேன்.
நேர்ல வா சொல்றேன்...
கைலாஷ் குமார் ரிஸீவரை மறுமுனையில் வைத்துவிட - செண்பகராமன் நெற்றியைக் கீறிக் கொண்டார். 'என்ன இவன்...
விஷயம் என்னான்னு சொல்லலாமே... பூடகமா பேசிட்டு ரிஸீவரை வெச்சுட்டான்...'
என்ன சொன்னார்...?
என் கூட பேசணுமாம்... சாப்பிட்டதும் க்ளீனிக்குக்கு வரச் சொல்றான்...
போய் பார்த்துட்டுத்தான் வாங்களேன்...
செண்பகராமன் அவசர அவசரமாய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு --- போர்டிகோவில் நின்றிருந்த காரை உசுப்பிக் கொண்டு பறந்து -- மந்தைவெளிக்குப் பக்கத்தில் இருந்த கைலாஷ் க்ளினிக்கிற்குள் வண்டியை நுழைத்து நிறுத்தினார்.
கைலாஷ் குமாரின் முகம் ஜன்னலில் சுரத்தில்லாமல் தெரிந்தது. வறண்ட புன்னகையோடு 'ஹலோ...' என்றது.
செண்பகராமன் - அறைக்குள் நுழைந்து கைலாஷ் குமாருக்கு எதிரே இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றார்.
என்ன மாப்பிள்ளை சார்... முகத்துல சந்தோஷத்தையே காணோம். ப்ராக்டீஸ் குறைஞ்சு போச்சா...?
மொதல்ல உட்கார்...
ம்... உட்கார்ந்தாச்சு...
கைலாஷ் குமார் கதவை சாத்திவிட்டு வந்தான்.
எனக்கொரு உண்மை தெரியணும்...
உண்மையா...? என்ன உண்மை...?
வாஹினியைப் பத்தின உண்மை...
அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியணும்...?
கேட்டா கோபப்பட மாட்டியே...?
கேளுடா... இடியட்... பெரிய ஆல்பர்ட் ஹிட்ச்ஹாக் சஸ்பென்ஸ் வெக்கிறான்.
வாஹினி யாரையாவது லவ் பண்ணிட்டிருக்காளா...?
...ப்பூ! இதைக் கேட்கத்தான் இவ்வளவு பீடிகை...? அவ அந்த மாதிரி பெண்ணில்லை... நோ லவ் அஃபேர்ஸ்... எனக்கும், லீலாவுக்கும் நல்லா தெரியும்.
இப்ப அவ லவ் அஃபேர்ஸ் இல்லாமே இருந்திருக்கலாம். ஆறுமாசத்துக்கு முந்தி...?
என்னடா... இவன்...? அவளுக்கு என்னிக்குமே அந்த அஃபேர்ஸ் இருந்தது இல்லை...
ஷ்யூர்...?
ஷ்யூரோ ஷ்யூர்... ஹண்ட்ரட் பர்சண்ட் ஷ்யூர்... நூறு ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி அழகா எழுதித் தரட்டுமா...?
நோ... செண்பகராமன்! அவளுக்கு லவ் அஃபேர்ஸ் இருந்திருக்கு.
எப்படி சொல்றே...?
ஆறு மாசத்துக்கு முந்தி...
முந்தி...
நுங்கம்பாக்கம் வேதா ஹாஸ்பிடல்ல...
வாஹினிக்கு டி அண்ட் ஸி நடந்திருக்கு... ரெண்டு மாசக் கருவைச் சுத்தமாக்கியிருக்காங்க...
கை...லா...ஷ்ஷ்ஷ்...
முகம் சிவக்க நாற்காலியினின்றும் விருட்டென்று எழுந்தார் செண்பகராமன்.
2
கஸ்தூரிபாய் -- ஆசிரியை பயிற்சிக் கல்லூரி விடுதி.
வேப்ப மரங்களுக்கு கீழே... போலீஸ் பைக் மௌனமாகி நின்றதும் - இறங்கி ஸ்டாண்ட் இட்டார்... இன்ஸ்பெக்டர் சிராஜ். மதியம் மணி 2.30.
வார்டன் இருந்த அறைக்குள் நுழைய - ஃபைல் பார்த்துக் கொண்டிருந்த ரோஸம்மா புன்னகைத்தாள்.
வாங்க... இன்ஸ்பெக்டர்...
வர்றதா போன் பண்ணியிருந்தேன்... தகவல் சொன்னாங்களா...?
சொன்னாங்க...! என்ன விஷயம்...?
ஸ்டூடண்ட் வாஹினியைப் பார்க்கணும்...
இன்ஸ்பெக்டர்... அந்தப் பெண்... ஏதோ அசட்டு துணிச்சலில் நேத்து ராத்திரி உங்களுக்கு போன் பண்ணி - பக்கத்து கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் நடக்கிற சில விஷயங்களைப் பத்தி சொல்லியிருக்கா... அதை பெரிசுபடுத்த வேண்டாம்...! ஏன்னா...?
சொல்லுங்க...
அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்காம். அவளோட அக்கா கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் போன் பண்ணினாங்க...
"ஸாரி