Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanna Vanna Drogangal
Vanna Vanna Drogangal
Vanna Vanna Drogangal
Ebook96 pages50 minutes

Vanna Vanna Drogangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100404450
Vanna Vanna Drogangal

Read more from Rajesh Kumar

Related to Vanna Vanna Drogangal

Related ebooks

Related categories

Reviews for Vanna Vanna Drogangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanna Vanna Drogangal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வண்ண வண்ண துரோகங்கள்

    Vanna Vanna Drogangal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    ரெஸ்டாரெண்ட்டின் அரையிருட்டு. கண்ணுக்குப் புலப்படாத ஸ்பீக்கர்களினின்றும் ஆவேசமான ட்ரம்ஸ் இசைக் கசிவு. மேஜைகளில் கொத்துக் கொத்தாய் நாகரீக ஜனங்கள். ட்ரேயோடு வெள்ளை உடையில் சர்வர்களின் நகரல்கள்.

    செவ்வக ஹாலின் வலது பக்க மூலையில் இந்த நாவலின் ஆரம்ப அத்தியாயக் கதாபாத்திரங்கள் ஸாண்ட்விச்சைக் கொறித்துக் கொண்டிருந்தார்கள். மேஜைக்கு மேலே மூன்றடி உயரத்தில் தொங்கிக் கொண்டு பலவீன வெளிச்சம் ஒன்றை அந்த மேஜைக்கு மட்டும் இறைத்துக் கொண்டிருந்த லஸ்தர் ஒளியில்-

    திலகா தெரிந்தாள்.

    ஸ்ரீதர் தெரிந்தான்.

    திலகா வெளிர்நீலப் புடவைக்குள் வெளிச்ச நிறத்தில் பொதிந்திருந்தாள். கறுப்பு அருவி மாதிரி ஒரிஜினல் தலைக்கேசம் கழுத்தின் பின் பக்கம் வழிந்தது. இரண்டு டார்ச் வெளிச்சமாய்க் கண்கள் மின்ன - சிரிக்கிறபோது ஒரு தீபாவளி உற்சாகம் உதட்டோரம் புரண்டது.

    எதிர் இருக்கை ஸ்ரீதர் –

    ஒரு ஹி-மேன் தனத்தை தன்னோடு அடக்கியிருந்தான். போன மாதம்தான் வயது இருபத்து நாலைத் தாண்டியிருந்தது. மீசை, ஹேர் ஸ்டைல், ட்ரெஸ் எல்லாவற்றிலுமே ஒரு பிரத்யேகத்துவம் பெற்றிருந்தான். திலகா என்றால் இந்த ஜென்மத்தோடு அடுத்த ஜென்ம உயிரையும் சேர்த்துத் தருவேன் என்றான்.

    ஸ்ரீதர்...

    - என்று அவள் உதட்டைப் பிளந்தபோது - நெருக்க வரிசையில் சுத்தமான பற்கள்.

    என்ன...?

    கல்யாணம்னதும் மவுனமாயிட்டீங்க...

    யோசிக்கிறேன்...

    என்ன யோசனை?

    நம்பர் ஒன், உங்கப்பா...

    நம்பர் ஒன், எங்கப்பாவா? புரியலை...

    அப்ஜக்ஷன் நம்பர் ஒன் உங்க அப்பா. நம்ம காதலுக்கு வரப் போகிற தடைகளை யோசிச்சுப் பார்க்கிறேன்...

    தடைகளை மட்டும் யோசித்துப் பார்த்தாப் போதுமா?

    அதை எப்படித் தகர்க்கறதுன்னும்தான் யோசிக்கணும்...

    எப்படி?

    நீயே சொல்லு. நம்ம காதலை உங்க வீட்ல சொல்றே... உங்க அப்பா பலமா ஆட்சேபிக்கிறார். நீ என்ன செய்வே?

    இவ்வளவுதானா நம்ம அதிர்ஷ்டம்னு மனசு உடைஞ்சு போய் ரெண்டு நாள் சாப்பிடாம அழுது மூக்கைச் சிந்திட்டு - மூணாம் நாள் அப்பா சொல்ற வேற எவனுக்காவது கழுத்தை நீட்டிடறது - அல்லது யாருக்கும் தெரியாம தூக்குக் கயிற்றில் கழுத்தை...

    ஏய்... திலகா...

    திலகா புன்னகைத்தாள்.

    முழுசும் சொல்றதுக்குள்ள அவசரமா? தூக்குக் கயிற்றில கழுத்தை நீட்டற சாதாரணப் பொண்ணா நான் இருக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்...

    ஸ்ரீதருக்கு மூச்சு வந்தது.

    அப்புறம்...

    எனக்கு நம்ம காதல்தான் முக்கியம். காதலை எதிர்க்கிற பேரண்ட்ஸை நான் எதிர்த்துட்டு வரத் தயார்...

    நீ பேசப் பேச எனக்கு சந்தோஷமா இருக்கு...

    சந்தோஷம் இருக்கட்டும். உங்க ஸைட்லருந்து வரக் கூடிய எதிர்ப்பு எது...?

    அண்ணன்...

    திலகா கேட்டாள்.

    நீங்க என்ன செய்யப் போறீங்க?

    அவரை எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கவும் விரும்பலை. அவருக்குப் பயந்துக்கிட்டு உன்னைக் கைவிடவும் விரும்பலை. விவேகத்தோட அவர் கிட்டே பேசி பெரியவங்க முன்னாடியே நம்ப கல்யாணத்தை நடக்க வைக்கணும்னு நினைக்கிறேன்...

    எப்படி?

    காபி ஆறுது, குடி. அவர்கிட்டே எப்படிக் காரியத்தைச் சாதிக்கறதுன்னு நிதானமா யோசிக்கலாம்...

    திலகா காபியை உதட்டில் வைத்துத் தொண்டைக்கு வார்த்துக் கொண்டே சொன்னாள்.

    எல்லா விஷயத்திலும் நிதானம் உதவாது ஸ்ரீதர். அப்புறம் அறுபதாம் கல்யாணத்துக்குத்தான் நான் கிடைப்பேன்...

    ஸ்ரீதர் யோசனை வட்டங்களுக்கிடையே அவளைப் பார்த்தான்.

    "திலகா... நம்ம மேரேஜ் காலாகாலத்தில் நடக்கறதுக்கு நான் பொறுப்பு! பட், மேரேஜுக்கு முன்னாடி எனக்காக நீ

    Enjoying the preview?
    Page 1 of 1