Yetho Nadakkirathu
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yetho Nadakkirathu
Related ebooks
Intha Rojavukku Niramillai and Uyirin Uyire! Rating: 0 out of 5 stars0 ratingsKili Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKili, Kili, Kizhi! and Sorkkathin Puthiya Mugavari! Rating: 0 out of 5 stars0 ratingsOru Thoomaiyaana Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsEttu Vanna Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 0 out of 5 stars0 ratingsTheerppu Rating: 0 out of 5 stars0 ratingsMeendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthaan Vilaiyaduven Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Ithazhum Sila Raththa Thuligalum Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kolaiyavathu Sei Kanney Rating: 0 out of 5 stars0 ratingsThanga Sorkkam Rating: 5 out of 5 stars5/5Vellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsVellikizhamai Vidiyumvelai Rating: 5 out of 5 stars5/5Thalaiyuthir Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsVengai Veliye Varuthu Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Paarijathangal Rating: 0 out of 5 stars0 ratingsAbaaya Noyali Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsKarpizhantha Carbon Copygal Rating: 5 out of 5 stars5/5Vidupattavai Viraivil Rating: 5 out of 5 stars5/5Any Time Murder! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Pathavi Pali! and Iruttil vaitha Kuri Rating: 0 out of 5 stars0 ratingsKeezhe Vizhatha Nizhal Rating: 5 out of 5 stars5/5Udaintha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paadiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsThadangalukku Varunthukirom Rating: 0 out of 5 stars0 ratingsThalaippu Seithi Rating: 5 out of 5 stars5/5Thoonkatha Kan Ondru Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Yetho Nadakkirathu
0 ratings0 reviews
Book preview
Yetho Nadakkirathu - Rajeshkumar
ராஜேஷ்குமார்
நோபல் பரிசு இந்த ஆண்டு அதாவது 2011 - ம் ஆண்டு மொத்தம் 13 பேர்க்கு வழங்கப்பட்டுள்ளது. பௌதிகம், இராசயனம், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் - இந்தத் துறைகளில் சாதனை புரிந்தவர்கள் பரிசு பெறும் நபர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்கள். பரிசுத்தொகை ஒவ்வொரு துறைக்கும் இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.7.5 கோடி. ஒரு துறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டால் தேர்வுக் குழுவினர் அறிவிக்கும் விகிதத்தில் அது பிரித்து வழங்கப்படும்.
1
அமிர்தவர்ஷிணி ‘ஜூபிடர் டி.வி.’ ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது காலை பதினோரு மணி. மாம்பழ வண்ணப் பட்டுப்புடவை, நெற்றியில் மின்னும் ஒரு பெரிய குங்குமப் பொட்டோடு காரினின்றும் இறங்கியவளுக்கு டி.வி.ஸ்டேஷன் எம்.டி. குகன் ஒரு பெரிய பொக்கேயை கையில் கொடுத்து சால்வையைப் போர்த்தினார்.
வெல்கம் மேடம்..!
ஸாரி மிஸ்டர் குகன்...! வீட்லயிருந்து சீக்கிரமாய்த்தான் புறப்பட்டேன். வர்ற வழியில் ட்ராஃபிக்.
நோ... ப்ராப்ளம் மேடம்.. நீங்க எங்க டி.வி ஸ்டேஷன் வர ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். வீ ஹானர்ட் பை யூ...
உள்ளே போலாமா?
ப்ளீஸ்..
குகன் அமிர்தவர்ஷிணியை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். ஸ்டேஷனின் வரவேற்பறையே அமிர்தவர்ஷிணிக்கு பிரம்மாண்டம் காட்டியது.
ஒரு சிறிய மைதானம் போன்ற ஹால். எல்லாத்திசைகளிலும் கண்ணாடி சுவர்கள். ஏ.ஸி.யின் குளிர். மெலிதான இசை.
அமிர்தவர்ஷிணி நடந்துகொண்டே கேட்டாள். இந்த ஜூபிடர் டி.வி ஆரம்பிச்சு எத்தனை வருஷம் இருக்கும் மிஸ்டர் குகன்?
மூணு வருஷம் மேடம்...!
இந்த மூணு வருஷகாலத்தில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நீங்கதான் முதலிடம் போலிருக்கு.
ஆமாம் மேடம்...!
பெரிய சாதனைதான்...! இந்த சாதனையை உங்களால எப்படி அடைய முடிஞ்சுது...?
ரொம்பவும் சிம்பிள் மேடம்...! பொதுவாய் டி.வி.யை ‘இடியட் பாக்ஸ்’ன்னு சொல்லுவாங்க... அதை நாங்க ‘விஸ்டம்’ பாக்ஸாய் மாத்தினோம். மத்த டி.வி. சானல்கள் சினிமாவுக்கும், சீரியல்களுக்கும் 75 சதவீதம் முக்கியத்துவம் குடுப்பாங்க. 25 சதவீதம் பொதுநலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பாங்க. ஆனா நாங்க பொது நலன் சார்ந்த விஷயங்களுக்கு 90 சதவீதம் ஒதுக்கி, வெறும் 10 சதவீதம் மட்டுமே சினிமாவுக்கும் சீரியல்களுக்கும் ஒதுக்கி இருக்கோம். இதன் காரணமாய்த்தான் மக்கள் எங்களுடைய ஜூபிடர் டி.வி.யை விரும்பிப் பார்க்கிறாங்க. நாங்க ஒளிபரப்பற எல்லா நிகழ்ச்சிகளும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நெம்பர் ‘ஒன்’னில் இருக்கு. மக்களுக்கு வேண்டியது சீரியல்கள் இல்லை. அவர்களைப் பாதிக்கிற சீரியஸான விஷயங்கள்தான்.
குட்... நல்ல கான்செப்ட்...! இதே மாதிரியான எண்ணம் மற்ற டி.வி. சானல்காரர்களுக்கும் வந்தா பரவாயில்லை. நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்ச நாளான ஆகஸ்ட் 15 - ம் தேதியும், காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியும் விடுமுறை நாட்களாய் இருக்கிற காரணத்தினால்தான் அதை மக்கள் மறக்காமே இருக்காங்க... இல்லேன்னா என்னிக்கோ அந்த தேதிகளை மக்கள் மறந்து போயிருப்பாங்க...
"யூ ஆர் கரெக்ட் மேடம்...! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டும்தான் இன்றைய இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று வரும். அதுக்கப்புறம் அது காணாமே போயிடும். நாடு நல்லாயிருந்தாத்தான் ஒவ்வொரு வீடும் நல்லாயிருக்கும் என்கிற உணர்வை இளைய சமுதாயத்துக்கு ஊட்ட வேண்டிய கடமை எங்களைப் போன்ற மீடியா பீப்பிளுக்கு நிறையவே உண்டு. சமீபத்தில் கூட புதுசா ஒரு நிகழ்ச்சியை ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். முழுக்க முழுக்க கல்லூரி மாணவர் மாணவியர்க்கான நிகழ்ச்சி. நிகழ்ச்சியோட தலைப்பு ‘எட்டாத தூரம் என்று எதுவும் இல்லை.’"
ஈஸிட்? தலைப்பு நல்லாயிருக்கு! என்னிக்கு டெலிகாஸ்ட்?
ஒவ்வொரு சண்டேயும் காலை பதினோரு மணிக்கு!
அவசியம் நான் பார்க்கிறேன்...!
இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். லிப்டில் பயணித்து மூன்றாவது மாடிக்கு வந்து அந்த பெரிய அறைக்குள் நுழைந்தார்கள். பெப்பர்மின்ட் வாசனையோடு ஏ.சி. குளிரில் இருந்தது அறை.
மேடம்! இதுதான் என்னோட பர்சனல் ரூம். ஒரு டென்மினிட்ஸ் இங்கே உட்கார்ந்து ‘ரெப்ரெஷ்’ பண்ணிட்டு ஒரு காப்பி சாப்பிட்டு போலாமா?
வேண்டாம் மிஸ்டர் குகன்! நான் காப்பி, டீ, கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடறதைவிட்டு ரொம்ப நாளாச்சு. நேரா சூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிடலாம்.
மேடம்! நிகழ்ச்சிக்கு போறதுக்கு முந்தி இந்த ‘டாக் ஷோ’ வை நடத்தற நீலவண்ணக் கண்ணன் உங்ககிட்டே ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்ன்னு சொன்னார்.
தாரளமாய் பேசலாம்.
ப்ளீஸ்.. உட்கார்ங்க மேடம்...
அமிர்தவர்ஷிணி உட்கார்ந்தாள்.
குகன் மேஜைமீது இருந்த இண்ட்டர்காம் ரிஸீவரை எடுத்துப் பேச - அடுத்த சில விநாடிகளில் அந்த இளைஞன் உள்ளே வந்தான். கறுப்பு நிற ஃபுல்சூட்டில் சிவப்பு டை அணிந்து ஒரு ஹீரோவுக்குரிய ஹேண்ட்ஸம் காட்டினான்.
வணக்கம் மேடம்...
வணக்கம்..
அவன் பவ்யமாய் நின்றபடி பேசினான். "மேடம்...! இந்த ‘குறையொன்றும் இல்லை!’ என்கிற இந்த டாக்-ஷோ நீங்க பார்த்து இருக்கீங்களா?"
ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அதுவும் ஒரு அஞ்சு நிமிஷம்தான். அதுக்கப்புறம் வேற ஒரு வேலை வந்துட்டதால தொடர்ச்சியாய் பார்க்க முடியலை. ஸாரி டு ஸே திஸ்...!
"பரவாயில்லை மேடம்...! இன்னிக்கு நீங்க இந்த ‘குறையொன்றும் இல்லை’ நிகழ்ச்சியின் சீஃப் கெஸ்ட். ஒரு பிரபலமான கல்லூரியில் சைக்காலஜி புரபசராய் ஒர்க் பண்ற நீங்க மனிதனின் உளவியல் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கீங்க.. அதுல எனக்குப் பிடித்த ஒரு புத்தகம் ‘தி டீப் சைலன்ஸ் ப்ளேஸ் இன் திஸ் வேர்ல்ட்.’ அந்தப் புத்தகத்தைப் படிச்ச பின்னாடிதான் எனக்கு இப்படியொரு ‘டாக் - ஷோ’ பண்ணனும்ன்னு தோணிச்சு. உடனே எம்.டி.கிட்டே சொன்னேன். அடுத்த விநாடியே அவர் ‘ஓ.கே’ சொல்லிட்டார். கடந்த ஒரு வருஷ காலமாய் இந்த டாக் - ஷோ நடத்தப்பட்டு வருது. இது 100-வது ஷோ. இந்த நூறாவது ஷோவுக்கு உங்களை சிறப்பு விருந்தினராய் அழைக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அந்த ஆசை இப்போ நிறைவேறியிருக்கு! மேடம்! இன்னும் கொஞ்ச நேரத்துல நாம் டாக் - ஷோ நடக்கிற அரங்கிற்குப் போகப் போறோம். அந்த அரங்கில் மொத்தம் நூறு பேர் இருக்காங்க. இதில் முப்பது பேர் பெண்கள். அந்த நூறு பேரையும் இரண்டு பிரிவாய் பிரிச்சிருக்கேன். இதில் ஒரு பிரிவு ‘ஒரு மனிதன் மன நோயாளியாய் மாறுவதற்குக் காரணம் அவனுக்குள் ஏற்படும் பாதிப்புகள்தான்’னு வாதாடப் போறாங்க. இன்னொரு பிரிவு ‘ஒரு மனிதன் மனநோயாளியாய் மாறுவதற்கு காரணம் அவனுக்குள் இருக்கும் மரபணுதான்’னு எதிர்த்து வாதாடப் போறாங்க. இந்த இரண்டு பிரிவோட வாதங்களையும் கேட்டு எது சரின்னு தீர்ப்பு சொல்ல வேண்டியது உங்க பொறுப்பு மேடம்."
அமிர்தவர்ஷிணி புன்முறுவலித்தாள். இதைத்தான் நீங்க பத்து நாளைக்கு முன்னாடியே போன்ல பேசும் போது சொல்லிட்டீங்களே?
நான் அன்னிக்கு சொல்லாத ஒரு விஷயமும் இன்னிக்கு இருக்கு மேடம்...
என்ன விஷயம்?
"அரங்கில் இருக்கிற அந்த 100 பேரில் பதினோரு பேர் போன வருஷம் மனநோயாளிகளாய் இருந்து இந்த வருஷம் குணமான