Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abaaya Noyali
Abaaya Noyali
Abaaya Noyali
Ebook158 pages46 minutes

Abaaya Noyali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Abaaya Noyali

Read more from Rajeshkumar

Related to Abaaya Noyali

Related ebooks

Related categories

Reviews for Abaaya Noyali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abaaya Noyali - Rajeshkumar

    25

    1

    ரத்த வகைகளில் RH க்ரூப் ஒரு பெண்ணுக்கு இருந்தால் அது அந்தப் பெண்ணுக்கு எந்த கெடுதலையும் செய்வது இல்லை. ஆனால் அந்தப் பெண் கருத்தரிக்கும் போதுதான் ஒரு விபரீதம் எட்டிப் பார்க்கிறது. தாயின் ரத்தம் RH பாஸிட்டீவாகவும், கருப்பையில் வளரும் குழந்தையின் ரத்தம் RH நெகட்டீவாகவும் இருந்தால் அது குழந்தையின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கி விடும். அது எது மாதிரியான ஆபத்து என்பதை 2-வது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    ஒரு பூ மலா்வது போல் அந்த புதன் கிழமையின் காலை நேரம் விடிந்து கொண்டிருந்தது. கடல் வண்ண காண்டஸா க்ளாசிக் பீளமேடு விமான நிலையத்தை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, பின் சீட்டில் உட்கார்ந்திருந்த விஜயமோகன், டிரைவரின் தோளைத் தொட்டார்.

    கிருஷ்ணன்...! ஃப்ளைட் எத்தனை மணிக்கு வரும்னு கேட்டியா...?

    கேட்டேன்யா...! ஃப்ளைட் லேட் கிடையாது. சரியான நேரத்தில் வந்துடும்ன்னு சொன்னாங்கய்யா...

    கார் மருத்துவக் கல்லூரியைக் கடந்து விர்ரென்று போயிற்று. காலை நேரக் குளிர்காற்று முகத்தில் மோதி ஐஸ் ஒத்தடம் கொடுத்தது. விஜயமோகன் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவி விசாலினியைத் திரும்பிப் பார்த்தார். விசா...! என்றார் மெல்லிய குரலில்.

    ம்...

    கார்ல ஏறினதிலிருந்து பேச்சையே காணோம்...?

    ஒரே டென்ஷனா இருக்குங்க...

    எதுக்கு டென்ஷன்...?

    ரெண்டு வருஷம் வெளிநாட்ல இருந்துட்டு வர்ற நம்ம மகன் பரணி இப்போ எப்படி இருப்பான்னு நினைக்கும்போதே மனசு படபடன்னு அடிச்சுக்குது. இந்த நிமிஷமே அவனைப் பார்க்கணும் போல் இருக்குங்க...

    விஜயமோகன் சிரித்தார். இதுதான் பெத்த மனசுங்கிறது. இப்போ மணி ஆறு. இன்னும் ஃப்ளைட் லேண்டாக சரியா ஒரு மணி நேரம் இருக்கு. அதுவரைக்கும் நீ டென்ஷன் படாமே அமைதியாய் இருக்கணும். டென்ஷன்பட்டா பீ.பி. ஏறிடும். வர்றப்ப மாத்திரை போட்டுக்கிட்டியா?

    இல்லீங்க... புறப்பட்டு வர்ற அவசரத்துல மறந்துட்டேன்...

    நீ என்னிக்குத்தான் மருந்து மாத்திரையை ஒழுங்கா சாப்பிட்டிருக்கே... விஜயமோகன் தன் மனைவியை சலித்துக் கொண்ட விநாடி, அவருடைய கோட் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் மெல்ல சிணுங்கி ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று டிஸ்ப்ளேயில் பார்த்துவிட்டு மனைவியைப் புன்னகையோடு பார்த்தார்.

    கூப்பிடறது யார் தெரியுமா...?

    யார்ங்க...?

    பரணிக்கு பொண்ணைக் கொடுக்கப் போற நம்ம சம்பந்தி சச்சிதானந்தம். -சொல்லிவிட்டு செல்ஃபோனை தன் காதில் வைத்தார் விஜயமோகன்.

    நமஸ்காரம் சம்பந்தி...

    நமஸ்காரம்...! என்ன, ஏர்போர்ட்டுக்குப் புறப்பட்டுட்டீங்களா...?

    போயிட்டிருக்கோம். கார் சிட்ராவை தாண்டிக்கிட்டு இருக்கு...! நீங்க வீட்லயிருந்து புறப்பட்டாச்சா...?

    மறுமுனையில் சச்சிதானந்தம் பலமாய் சிரித்தார். என்ன கேட்டீங்க... புறப்பட்டாச்சான்னா...? சரியாப் போச்சு...! நாங்க இப்போ ஏர்போர்ட் லௌன்ஞ்சிலிருந்து பேசிட்டிருக்கோம் சம்பந்தி... நானும் என்னோட பொண்ணும் அஞ்சரை மணிக்கே ஏர்போர்ட் வந்துட்டோம்...

    ஃப்ளைட் ஏழு மணிக்குத் தானே...? அஞ்சரை மணிக்கே ஏர்போர்ட்டுக்குப் போய் என்ன பிரயோஜனம்...?

    அது உங்களுக்குத் தெரியுது... எனக்குத் தெரியுது... என்னோட பொண்ணு ‘ஸ்ரேயா’வுக்குத் தெரியணுமே...? ராத்திரி முழுக்க அவ தூங்கலை சம்பந்தி. ‘பரணி... பரணி’ன்னு ஒரே பரணி புராணம்தான்...

    பக்கத்துல எம் மருமக இருக்காளா...?

    இருக்கா...

    செல்ஃபோனை அவ கையில கொடுங்க...

    இதோ...!

    அடுத்த இரண்டு விநாடிகளில் ஸ்ரேயாவின் குரல் கேட்டது.

    குட்மார்னிங் அங்கிள்...

    என்னம்மா இது...? ஏழு மணி ஃப்ளைட்டுக்கு அஞ்சரை மணிக்கேவா வந்துடறது...?

    என்ன பண்றது அங்கிள்...! என்னால வீட்டுக்குள்ளே உட்கார்ந்துட்டு இருக்க முடியலை. எனக்கு மட்டும் ரெண்டு இறக்கை இருந்திருந்தா மும்பை ஏர்போர்ட்டுக்கே பறந்து போயிருப்பேன்...

    நல்ல பொண்ணும்மா நீ...

    அங்கிள்...! ஒரு சின்ன கம்ப்ளைய்ண்ட்...

    சொல்லும்மா...

    உங்க சன்னுக்கு ஃபோன் பண்ணினா அளவா ரெண்டு நிமிஷம்தான் பேசறார். ஒரு சிரிப்பு கிடையாது. ரொமாண்டிக் கிடையாது. ஏதோ ஒரு பிஸினஸ்மேன் கிட்டே பேசற மாதிரி பேசறார்...

    பரணி... எப்பவுமே அப்படித்தாம்மா...! ஸ்கூல் டேஸிலேயும் சரி... காலேஜ் டேஸிலேயும் சரி... யார் கிட்டயும் சரியா பேச மாட்டான். அவனோட அம்மா கிட்டே மட்டும் கொஞ்சம் அரட்டையடிப்பான். அவ்வளவு தான்...! கல்யாணமான பின்னாடி நீதான் மாத்தணும்...

    மாத்தறேன் அங்கிள்...

    கார் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தது. அவ்வளவு காலை நேரத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்கள் கார் பார்க்கிங்கில் பனியில் நனைந்தபடி நின்றிருக்க, உள்ளே ரன்வேயில் ஒரு விமானம் புறப்படும் தறுவாயில் இருந்தது. லௌன்ஞ்சில் போடப்பட்டிருந்த எல்லா பாலிவினைல் நாற்காலிகளிலும் ஆட்கள் தெரிந்தார்கள். ஒரு அரசியல் தலைவரை எதிர்பார்த்து சால்வைகளோடும், மாலைகளோடும் கும்பல் ஒன்று காத்துக் கிடந்தது. ரிசப்ஷன் கௌன்டர்களில் ரெடிமேட் புன்னகைகளோடு பெண்கள் உதட்டுச் சாயம் அழியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    விஜயமோகனும் விசாலினியும் காரை விட்டு இறங்கி லௌன்ஞ்சுக்குள் நுழைய, ஸ்ரேயாவும் சச்சிதானந்தமும் எதிர்கொண்டார்கள். ஸ்ரேயா இருபத்து மூன்று வயதில்- பறித்த காரட்டின் செழுமையோடு வளப்பமாய் தெரிந்தாள். தேன் நிற விழிகள் அவளுடைய அழகுக்கு கூடுதல் மதிப்பெண்களை போட்டிருந்தது. ரோஸ் நிற பட்டுப்புடவை. மேட்ச்சாக அதே வண்ண ஜாக்கெட். தழைய தழையப் பின்னிய கூந்தலில் ஒரு பெரிய மல்லிகைப் பந்து இடம்பிடித்து இருந்தது. ஸ்டிக்கர் பொட்டுக்குப் பதிலாக குங்குமம் பிசிறு இல்லாமல் தெரிந்தது.

    விசாலினி வியப்போடு ஸ்ரேயாவின் தோளைப் பற்றிக் கொண்டாள். என்னம்மா... ஸ்ரேயா... நீ சுடிதாரில் இருப்பேன்னு பார்த்தா அம்சமா பட்டுப்புடவையில் வந்திருக்கே... நான் எதிர்பார்க்கவேயில்லை...

    ஸ்ரேயா வரிசை தப்பாத பல்வரிசையைக் காட்டி சிரித்தாள். "அத்தே...! ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க பிள்ளை எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1