Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Saththam Intha Neram
Enna Saththam Intha Neram
Enna Saththam Intha Neram
Ebook438 pages2 hours

Enna Saththam Intha Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Enna Saththam Intha Neram

Read more from Rajeshkumar

Related to Enna Saththam Intha Neram

Related ebooks

Related categories

Reviews for Enna Saththam Intha Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Saththam Intha Neram - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, வானத்தில் கொஞ்சம் தேய்ந்து போன நிலாவும் நிறைய நட்சத்திரங்களும் பூமியின் மேல் படிந்திருந்த இருட்டை கழுவ முயற்சித்து தோற்றுப் போயிருந்தன. பெசன்ட் நகரின் மையப்பகுதியில் இருந்த ஆதர்ஷ் அவென்யூவில் ஏழாவது தெருவின் கடைசியில் பங்களா ஒன்று மரங்களுக்கு நடுவில் தெரிய மாடியின் படுக்கையறையில் திடும் என்று விழித்துக் கொண்ட செல்போன் ஒன்று நிசப்தத்தை உரசி ராவியது.

    நல்ல தூக்கத்தில் இருந்த சச்சிதானந்தம் உறக்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். தன் தலைமாட்டில் இருந்த செல்போனை எடுத்து யார் என்று பார்த்தார். தூக்கக் கலக்கத்தில் எண் சரியாய் பார்வைக்கு புலப்படாமல் மங்கலாய் தெரிந்தது. 'இந்த நடுநிசியில் யார் அழைப்பது...?' யோசித்துக் கொண்டே செல்போனை இடது காதுக்கு ஒற்றினார். மெல்ல குரல் கொடுத்தார்.

    யாரு?

    ஒரு பெண் குரல் மறு முனையிலிருந்து பதட்டமாய் கேட்டது.

    பேசறது யாரு... மிஸ்டர் சச்சிதானந்தமா?

    ஆமா...! நீங்க யாரு...

    ஸார்! நான் கோமாதா இன்ஜினியரிங் காலேஜோட பெண்கள் ஹாஸ்டல் விடுதியோட வார்டன் கோகிலம் பேசறேன்... நீங்க உங்க மகள் மதுபாலாவை ஹாஸ்டலில் பார்க்க வரும் போது ரெண்டு தடவை உங்களை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா...?

    நல்லாவே ஞாபகம் இருக்கு...! இந்த அகால வேளையில் போன்ல என்னை காண்டாக்ட் பண்ணியிருக்கீங்க... என்ன விஷயம்?

    ஸார்! நான் சொல்லப் போறதைக் கேட்டு பதட்டப்பட்டு விடாதீங்க... உங்க பொண்ணு மதுபாலா...!

    சச்சிதானந்தம் நடு முதுகுத்தண்டில் உறைந்தார்.

    எ...எ... எம் பொண்ணுக்கு என்ன...?

    ப்ளீஸ்... பதட்டப்படாம விஷயத்தை கேளுங்க. உங்க பொண்ணு மதுபாலாவுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலை. ஒரு மணி நேரத்துக்கு முந்தி தூக்க மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்காங்க.

    அ...அ...அய்யோ...

    பதறாதீங்க ஸார். நல்லவேளையா அவளோட ரூம் மேட் பார்த்துட்டதால சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டோம். டாக்டர்கள் உடனடியாக மதுபாலாவோட வயிற்றை சுத்தம் பண்ணி அவளோட உயிரை காப்பாத்திட்டாங்க. பட் அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியலை...

    நான் உடனே புறப்பட்டு வர்றேன். எந்த ஆஸ்பிடல்.

    தாம்பரம் ஜேம்ஸ் ஆஸ்பிடல். இந்த ராத்திரி நேரத்தில் நீங்க புறப்பட்டு வரவேண்டாம். நாளைக்கு காலை ஆறு மணிக்கு மேலே புறப்பட்டு வாங்க... இப்போதைக்கு வரணும்னு அவசியம் இல்லை. மதுபாலாவை பார்த்துக்க நாங்க இருக்கோம்...

    இல்லை... இனிமே என்னால தூங்க முடியாது. நான் புறப்பட்டு வர்றேன்...

    இட்ஸ் ஓகே. புறப்பட்டு வாங்க. தாம்பரம் தாண்டி படப்பைக்கு போகிற வழியில் அஞ்சாவது கிலோ மீட்டரில் அந்த ஜேம்ஸ் ஆஸ்பிடல் இருக்கு... காஸிவாலிடி வார்டில் நானும் மதுபாலாவோட ரூம் மேட் சந்திராவும் வெயிட் பண்ணிட்டிருக்கோம்...

    இதோ புறப்பட்டேன்... பை... த... பை...

    சொல்லுங்க சார்...

    மதுபாலா தற்கொலை பண்ணிக்க என்ன காரணம்?

    அவளோட ரூம் மேட் சந்திரா ஒரு காரணம் சொல்றா?

    என்ன காரணம்?

    உங்க மனைவி போன வருஷம் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனதில் இருந்தே மதுபாலா ஒரு வகையான விரக்தி மனப்பான்மையால் இருந்ததாகவும் யார் கிட்டேயும் சரியாய் பேசாம ரிசர்வ்ட் டைப்பாய் இருந்ததாகவும் சந்திரா சொல்றா...

    அப்படியா...

    ஏன்... உங்களால அவ அப்படி இருந்ததை கண்டுபிடிக்க முடியலையா?

    முடியலை...

    சரி... நீங்க புறப்பட்டு வாங்க... நீங்க வந்து ஆஸ்பிடல் சேர்றதுக்குள்ளே மதுபாலாவுக்கும் மயக்கம் தெளிஞ்சிருக்கும். காரணத்தை அவகிட்டயே கேட்டுக்கலாம்.

    அப்புறம்...! குரலை இழுத்தார் சச்சிதானந்தம்.

    சொல்லுங்க ஸார்...!

    விஷயத்தை போலீசுக்கு இன்பார்ம் பண்ணலையே?

    ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்கள் போலீசுக்கு இன்பார்ம் பண்ணிடறது பெட்டர்னு சொல்றாங்க...

    ப்ளீஸ்... போலீசெல்லாம் வேண்டாம். நாளைக்கு கல்யாணம் காட்சின்னு வாழ்க்கை நடத்த வேண்டிய பொண்ணு... நான் டாக்டர்கள்கிட்டே நேரிடையாய் பேசிக்கிறேன். அவசரப்பட வேண்டாம்.

    ஓகே... நீங்க உடனடியாய் புறப்பட்டு வாங்க. டாக்டர்கள்கிட்டே பேசி ஒரு முடிவு எடுப்போம். நீங்க டென்ஷன் இல்லாம காரை மெதுவாய் ஓட்டிக்கிட்டு வாங்க.

    மறுமுனையில் செல்போன் அணைந்து போக, சச்சிதானந்தம் செல்போனை அணைத்து விட்டு அந்த ஏசி அறையிலும் வியர்த்துப் போன முகமாய் எழுந்தார். அணிந்து இருந்த நைட் கவுனை உருவிவிட்டு வேறு ஒரு உடைக்கு பதட்டமாய் மாறினார். கம்ப்யூட்டர் பக்கத்தில் இருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டார்.

    மாடிப்படிகளில் வேகமாய் இறங்கி ஹாலுக்கு வந்து வாசல் கதவின் உட்பக்கம் பூட்டை திறந்து கொண்டு கார் நின்றிருந்த போர்டிகோவுக்கு வந்தார்.

    மெலிதான போர்டிகோ வெளிச்சத்தில் நீலநிற காண்டஸா மினுமினுப்பாய் நின்று கொண்டிருந்தது. காம்பவுண்ட் கேட்டின் பூட்டுக்கு விடுதலை கொடுத்து, அதன் கதவுகளை விரிய ஏற்று திறந்து வைத்துவிட்டு காரை நோக்கி வேகமாய் வந்தவர் சட்டென்று சில விநாடிகள் யோசனையில் நின்றார். 'நாய் ரோஜர் எங்கே?' 'ராத்திரி நேரங்களில் அவிழ்த்து விடப்பட்டு இருக்கும் ரோஜர் இந்நேரம் என்னைப் பார்த்ததும் எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாவி இருக்க வேண்டும்.'

    சச்சிதானந்தம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரல் கொடுத்தார்.

    ரோஜர்!

    பதிலுக்கு அதன் குரைப்பு சத்தம் கேட்கவில்லை. நிசப்தம்.

    ரோஜர்! மறுபடியும் குரல் கொடுத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தார். பார்வை இடது பக்கமாய் திரும்பி ஒரு குரோட்டன்ஸ் தொட்டிக்கு பின்னால் பார்த்தபோது உறைந்தார். போர்டிகோவின் மெலிதான வெளிச்சத்தில் -

    நாய் ரோஜரின் உடல் இரண்டாய் கிழிக்கப்பட்டு ரத்தம் கொட்டி இறந்து கிடந்தது. பக்கத்திலேயே ரத்தம் தோய்ந்த மண்வெட்டி.

    கோவையின் ஒரு வெயில்கால மாலைவேளை. வானம் அழகு மேகங்களை சுமந்து கொண்டு மழை பெய்யலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன்யாவும் இளங்கோவும் பொட்டனிக்கல் கார்டன் பெஞ்சில் பக்கம் பக்கமாக உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அழகான காதல் ஜோடி.

    இளங்கோ...!

    ம்...!

    என்னோட வாழ்க்கையில் எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது நடக்கப் போறதை நினைக்க வெட்கமாகவும் கவலையாகவும் இருக்கு...!

    நீ என்ன சொல்றே...

    கடைசியில் நாமும் மற்ற காதலர்களைப் போலவே ஊரைவிட்டு ஓடிப்போய் திருட்டுத்தனமாய் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்...

    அந்த இளங்கோ தன்னுடைய சுருண்ட கிராப்பை இரண்டு கைகளாலும் கோதிவிட்டுக் கொண்டு சிரித்தான்.

    இதோ பார் தன்யா... இந்த உலகத்திலேயே எதிர்ப்பே இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்த ஒரே ஒரு காதல் ஜோடி ஆதாம் ஏவாள்தான். அதுக்குப் பின்னாடி வந்த எல்லா காதல் ஜோடிகளுக்கும் சோதனைதான். ஜாதி, மதம், பணம் இந்த மூணு வார்த்தைகளும் என்னிக்கு மனிதனால் உற்பத்தி செய்யப்பட்டதோ அந்த தினத்திலிருந்து காதல் என்கிற வார்த்தை ஒரு கெட்டவார்த்தையாய் மாறிடுச்சு... எல்லாக் காதல்களுமே ஏதாவது ஒரு தடையைத் தாண்டித்தான் ஜெயிக்க வேண்டியிருக்கு...

    இளங்கோ...!

    ம்...

    நான் ஒண்ணு சொன்னா நீ 'நோ'ன்னு சொல்லக் கூடாது. சொல்லட்டுமா?

    நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும்.

    சொல்லுப் பார்க்கலாம்.

    நீ உன்னோட அப்பாக்கிட்டே நம்ம காதலைப்பத்தி எடுத்துச் சொல்லி எப்படியாவது சம்மதம் வாங்கிடலாம்னு நினைக்கிறே?

    அதேதான்...

    இளங்கோ சிரித்தான்.

    ஏன் சிரிக்கிறே...

    சிரிக்காம... என்ன பண்றது... தன்யா... உன்னோட அப்பா ரகுபதி செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ். உன்னோட அம்மா வேதா இன்டஸ்ரியலிஸ்ட். அவங்களுக்கு நீ ஒரே பொண்ணு. என்னை எடுத்துக்க, நான் பிறந்து என்னோட முதல் அழுகையை ஆரம்பிக்கும் போதே அம்மா உயிரோடு இல்லை. அப்பாதான் என்னை வளர்த்தார். படிக்க வெச்சார். எம்பிஏ படிப்பை முடிச்சு ரிசல்ட் வரும்போது அப்பா ஒரு ரோடு ஆக்ஸிடென்டில் மரணம். எப்படியோ என்னோட வயித்துப்பாட்டை கவனிக்க 25 ஆயிரம் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்ததால் ஓரளவு சந்தோஷமாய் இருக்கேன். என்னோட வாழ்க்கையில் கிடைச்ச ஒரே சந்தோஷம் நீதான். அந்த சந்தோஷத்தை என்னோடு தக்க வெச்சுக்கத்தான் நான் விரும்பறேன். இழக்க விரும்பல... நீ நம்ம காதலை வீட்ல சொன்ன அடுத்த நிமிஷமே உனக்கு ஹவுஸ் அரெஸ்ட்தான்...

    ஒருவேளை என்னோட அப்பாவும் அம்மாவும் நம்ம காதலுக்கு பச்சைக்கொடி காட்டிட்டா...

    புலி புல்லைத் தின்னும். மாடு மானை அடிச்சு சாப்பிடும்.

    ஏன் எதிர்மறையாவே பேசிட்டிருக்கே...

    நான் எதிர்மறையாய் பேசலை தன்யா. நம்ம காதல் விஷயம் உன்னோட வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன நடக்குமோ அதைத்தான் சொல்லிட்டிருக்கேன்...

    எனக்கென்னமோ ஒரு சின்ன நப்பாசை...

    சரி... தன்யா... உன்னோட நப்பாசையை ஒரு ரிஸ்காவே எடுத்துப் பண்ணலாம். நீ இன்னிக்கு ராத்திரியிலே நம்ம காதலை உங்க வீட்ல டிக்ளேர் பண்ணு. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

    இளங்கோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன்யாவின் செல்போன் அவளுடைய கைப்பையில் இருந்து மெல்லச் சிணுங்கியது.

    எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். லேசாய் முகம் வெளிறினாள். அவளுடைய முக மாற்றத்தைக் கவனித்துவிட்டு இளங்கோ கேட்டான்.

    யார் கூப்பிடறாங்க...

    அப்பா...

    பேச வேண்டியதுதானே... தன்யா செல்போனை உயிர்ப்பித்து மெல்லக் குரல் கொடுத்தாள்.

    அப்பா...

    தன்யா...! நீ இப்போ எங்கே இருக்கேம்மா...?

    ஆர்.எஸ்.புரத்துல் ஷாப்பிங் பண்ணிட்டிருக்கேன். ஏம்பா என்ன விஷயம்...?

    தன்யா... இன்னிக்கு கோர்ட்ல ஜட்ஜ் ஒருத்தருக்கு பிரிவு உபச்சார விழா. விழாவை முடிச்சுட்டு கார்ல ஏற வந்தா டிரைவர் கார்ல ஏதோ பிராப்ளம்னு சொல்லி பானெட்டை திறந்து வெச்சுக்கிட்டு நோண்டிக்கிட்டு இருக்கான். எப்படியும் அரைமணி நேரமாயிடும் போலிருக்கு. நீ வந்து என்னை பிக்-அப் பண்ணிக்கிறீயா...?

    வ...வ... வர்றேன்பா.

    மெதுவா வாம்மா... நான் கோர்ட் சேம்பர்ல இருக்கிற லைப்ரரியில் இருக்கேன்.

    சரிப்பா... செல்போனை அணைத்து விட்டு இளங்கோவை ஏறிட்டாள். விவரத்தை சொன்னாள்.

    இளங்கோவின் உதட்டில் ஒரு புன்னகை பரவியது.

    பார்த்தியா தன்யா... நீ உன்னோட வீட்ல நம்ம காதலை டிக்ளேர் பண்ணலாம்னு நினைக்கும்போதே உன்னோட அப்பாவுக்கு மூக்கு வேர்த்து லைன்ல வந்து உடனடியாய் நம்மை பிரிச்சுட்டார். இனி, நேர்ல சொன்னா என்னாகும்னு யோசனை பண்ணு...

    தன்யாவின் உதட்டில் இப்போது ஒரு புன்னகை பிறந்தது.

    நீ சொல்றதுதான் சரி இளங்கோ. நம்ம விஷயம் என்னோட வீட்டுக்குத் தெரிய வேண்டாம். நாம் ஏற்கெனவே போட்ட திட்டப்படி நாளைக்கு காலை ஆறு மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோயிலில் நம்ம கல்யாணம் முடிஞ்ச கையோடு என்னோட அப்பாவுக்கு போன் பண்ணி கல்யாணம் முடிஞ்சிட்ட விவரத்தை சொல்லுவோம். அப்ப தெரிஞ்சுடும், அவர் எரிமலையா... இல்லை பனிமலையான்னு...! சொல்லிக் கொண்டே தன்யா புறப்படத் தயாரானாள்.

    இளங்கோ கூப்பிட்டான்.

    தன்யா...

    ம்...

    நாளைக்குக் காலையில் சரியா ஆறு மணிக்கெல்லாம் நீ ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருக்கணும்...

    இருப்பேன். நீ கவலைப்படாதே இளங்கோ. என்னோட அம்மாவும் அப்பாவும் வழக்கம்போல அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு 'வாக்கிங்’ போயிடுவாங்க. அவங்க அப்படி கிளம்பிப் போனதும், நான் இப்படி கிளம்பி வந்துடுறேன்.

    தன்யா இளங்கோவுக்கு கையசைத்து விட்டு கார்டனை விட்டு வெளியே வந்து ஃபோர்வீலர் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தன்னுடைய மாருதிஜென் காரை நெருங்கினாள். உடம்பின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் - அதிர்ந்தாள்.

    எங்கோ பார்த்தபடி காரில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி நின்றிருந்தார் அவளுடைய அப்பா ரகுபதி.

    2

    கார்க்கு சாய்ந்தபடி நின்றிருந்த தன்னுடைய அப்பா ரகுபதியைப் பார்த்ததும் சர்வநாடியும் ஒடுங்கிப் போனவளாய் தன்யா அப்படியே ஆணியடித்தது போல். நின்றாள். இதயத்துடிப்பு உச்சத்தில் இருந்தது.

    என்னம்மா... ஷாப்பிங் முடிச்சாச்சா?

    அ...அ... அப்பா... அது... வந்து...

    என்ன பொய் சொல்லி அப்பாவை கன்வின்ஸ் பண்ணலாம்னு யோசனை பண்ண வேண்டாம்மா... மொதல்ல கார்ல வந்து ஏறு...

    அ...அ...அப்பா.

    கார்ல வந்து ஏறும்மா. வீடு போய் சேர்ற வரைக்கும் டயம் இருக்கு... பேசிக்கிட்டே போகலாம்... ரகுபதி சொல்லிவிட்டு காரின் டிரைவிங் சீட்டில் போய் உட்கார்ந்து கொள்ள தன்யா கார்டனை திரும்பி பார்த்தாள்.

    இளங்கோ பார்வைக்கு கிடைக்கவில்லை. தன்னுடைய டூ வீலரை எடுப்பதற்காக கார்டனின் அடுத்த பக்கத்துக்குப் போயிருக்கலாம்.

    ரகுபதி குரல் கொடுத்தார்.

    வாம்மா... வந்து கார்ல ஏறு... அந்தப் பையன் புறப்பட்டு போயிருப்பான்.

    தன்யா நெற்றியில் மினுமினுக்கும் வியர்வையோடு காரில் ஏறி உட்கார்ந்தாள். கார் நகர்ந்து சாலைக்கு வந்து வேகத்தை கூட்டிக் கொண்டது. சாலையின் இரண்டு பக்கமும் இருந்து விவசாய பல்கலைக் கழக கட்டடங்கள் பார்வைக்கு கிடைத்து, உடனே மறைந்தன.

    கார் லாலி ரோட்டை தொடும்வரை மவுனம் காத்த ரகுபதி பின் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

    யாரம்மா அந்தப் பையன்?

    தன்யா காய்ந்து போன உதடுகளோடு பேரு... இளங்கோ... என்றாள்.

    நல்ல பேர்... என்ன படிச்சிருக்கான்?

    எம்.பி.ஏ.

    பரவாயில்லையே... வேலை...

    ஒன் ஸ்டெப் பார்வேர்ட் என்கிற ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் புரோகிராம் எக்ஸிக்யூட்டிவாக வேலை பார்க்கிறார்.

    குட்... சாலரி... ஒரு அம்பதாயிரம் இருக்குமா?

    இருபத்தஞ்சாயிரம்...

    சம்பளம் கொஞ்சம் குறைச்சல்தான்... இட்ஸ் ஓகே... போகப் போக சம்பளம் இன்கிரீஸ் ஆக வாய்ப்பு இருக்கு... அப்புறம் இளங்கோ அப்பா என்ன பண்றார்...

    அ...அ... அவர் உயிரோடு இல்லை... ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு சாலை விபத்தில் இறந்துட்டார்...

    அடடே... ஹைலி பேதடிக்... அப்படீன்னா இளங்கோவுக்கு அம்மா மட்டும்தான்.

    அம்மாவும் இல்லை... இளங்கோ பிறந்ததும் அவங்க அம்மா இறந்துட்டாங்க...

    மை குட்னஸ்... அப்படீன்னா இளங்கோ யாரும் இல்லாத அனாதை...

    அப்பா... இளங்கோவை அப்படிச் சொல்லாதீங்க... அவர் ஒண்ணும் அனாதை கிடையாது...

    ஸாரிம்மா... நீ அவனுக்கு உறவாகப் போறதை மறந்திட்டேன்...

    காருக்குள் ஒரு முப்பது வினாடிகள் வேண்டாத மவுனம் நீடித்தது. தன்யா அதைக் கலைத்தாள்.

    அப்பா...

    சொல்லும்மா...

    அவர் ரொம்பவும் நல்லவர்.

    குபதி சிரித்தார்.

    அது என்னம்மா காதலிக்கிற எல்லாப் பெண்களும் பெத்தவங்ககிட்டே இதே டயலாக்கை சொல்றீங்க. நீ காதலிக்கிற அந்த இளங்கோ நல்லவன்... நான் கெட்டவனா...?

    அய்யோ... அப்பா... நான் அப்படி சொல்ல வரலை... என்னோட வாழ்க்கையில் காதல் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னுதான் இருந்தேன். ஆனா...

    விதி யாரை விட்டது.

    "அப்பா என்னைக் கண்டபடி திட்டிடுங்க. ஆனா, இப்படி கிண்டல் பண்ணாதீங்க...'

    கார் இப்போது திவான் பகதூர் ரோட்டுக்குள் நுழைந்தது. ரகுபதி மகளை பார்த்து சிரித்தார்.

    நான் கிண்டல் பண்ணலைம்மா... பிராக்டிக்கலாய் பேசிட்டு இருக்கேன்... பொதுவா நான் காதல் என்ற வார்த்தைக்கு எதிரி கிடையாது. அதேபோல், சினிமாவில் வர்ற மாதிரி 'வில்லன்’ அப்பாவும் கிடையாது. நான் இப்ப உன்கிட்டே பிராக்டிக்கலாய் பேசிட்டு இருக்கேன்... ஒரு பிரச்சனையை எமோஷனலாய் டீல் பண்ணக்கூடாது. நான் ஒரு ஜட்ஜ். ஒரு பக்க நியாயத்தை மட்டுமே கேட்டு நான் தீர்ப்பு வழங்கக்கூடாது. நீ ஒரு பையனை விரும்பறே... நீ ஒண்ணும் சின்னப் பொண்ணு கிடையாது. நம்முடைய இந்திய நாட்டின் ஜனநாயக விதிகளின்படி ஒரு ஆணுக்கும் சரி, ஒரு பொண்ணுக்கும் சரி வயது பதினெட்டு ஆனாலே எல்லா உரிமைகளும் வந்துடும், காதலிக்கிற உரிமை உள்பட. அது மட்டுமில்லை , பெத்த அம்மாவையும் அப்பாவையும் ஒரு தூசி மாதிரி நினைச்சுட்டு ஒரே ராத்திரியில் ஓடிப்போய், ஏதாவது ஒரு கோயிலில் திருட்டுத்தனமாய் கல்யாணமும் பண்ணிக்கலாம்...

    அ...அப்பா... கத்தினாள் தன்யா.

    பார்த்தியாம்மா... இப்போ கோபப்பட்டது நான் இல்லை, நீதான்...

    அப்பா... நான் உங்ககிட்டே மனசு திறந்து பேசட்டுமா...

    பேசும்மா...

    என்னோட காதல் விவகாரம் வெளியுலகத்துக்கு இது வரைக்கும் தெரியாம இருந்தது, உங்களுக்கு சொன்னது யாரு...

    வேற யாரு... அந்த பொட்டானிக்கல் கார்டன் வாட்சுமேன் சுப்பையன்தான். எனக்கு போன் பண்ணி சொன்னான். போன வாரமும் உங்களை பார்த்ததாக சொன்னான். அந்த சுப்பையன்தான் இதுக்கு முன்னாடி கோர்ட் காம்பவுண்டுக்கு வாட்சுமேனாய் இருந்தவன். என் பேர்ல தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் இருந்ததுனாலே நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை கூண்டுல ஏறிடக்கூடாதுங்கற பயத்துல எனக்குப் போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டான். அவர் அப்படி சொன்னது தப்புனு நினைக்கிறாயாமா...?

    நான் அப்படி நினைக்கலேப்பா... என்னைக்காவது ஒரு நாள் தெரிய வேண்டிய விஷயம்தான். நீங்க இப்போ ஓப்பனா சொல்லுங்கப்பா... என்னோட காதலுக்கு உங்க ஆதரவு உண்டா... இல்லையா... ரகுபதி மவுனமாய் கார் ஓட்டிக் கொண்டிருந்தார்.

    என்னப்பா... பேசாம வர்றீங்க...?

    எனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம் குடும்மா... பதில் சொல்றேன்...

    தன்யா தன்னுடைய அப்பாவை வியப்பாய் பார்த்தாள். இந்த இரண்டு நிமிஷத்துக்குள் அவரால் என்ன யோசித்து சொல்லிவிட முடியும்? கார் இப்போது திவான் பகதூர் ரோட்டை முடித்துக் கொண்டு பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பக்கத்தில் இருந்த பிருந்தா லே-அவுட்டுக்குள் நுழைந்தது. லே-அவுட் முழுவதும் பெரிய பெரிய பங்களாக்கள் கண்களை இதமாய் வருடுகிற பெயின்ட் பூச்சோடு வர தன்யா கேட்டாள்.

    அப்பா... நம்ம வீட்டுக்கு போகாம, இந்த ஏரியாவுக்கு ஏன் வந்தீங்க...

    Enjoying the preview?
    Page 1 of 1