Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Olivillai Maraivillai
Olivillai Maraivillai
Olivillai Maraivillai
Ebook98 pages54 minutes

Olivillai Maraivillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Olivillai Maraivillai

Read more from Rajeshkumar

Related to Olivillai Maraivillai

Related ebooks

Related categories

Reviews for Olivillai Maraivillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Olivillai Maraivillai - Rajeshkumar

    19

    1

    வீடியோவில் படம் முடிந்தபோது தீபக்கின் கையிலிருந்த விஸ்கி டம்ளரும் காலியாகியிருக்க - எதிரே உட்கார்ந்திருந்த ஆல்பர்ட் சிரித்தான். உதடு பிரியாத நமட்டுச் சிரிப்பு.

    தீபக் காலி டம்ளரை டொக்கென்று கீழே வைத்தபடி வாய் கோணிக் கொள்ளக் கேட்டான்.

    என்னடா சிரிக்கிறே?

    வீடியோவில... படத்தைப் பார்த்தியாடா தீபக்? அதுல வர்ற கதாநாயகன் எத்தனையோ முன்னேற்பாடுகளைப் பண்ணியும் போலீஸ்ல மாட்டிக்காமே இருக்கிறதற்காக நிறைய அலிபியை க்ரியேட் பண்ணியும் கடைசியில ஒரு சின்னத் தப்புல போலீஸ்ல மாட்டிக்கிட்டான். பாவம்... நினைச்சா சிரிப்பாவும் இருக்கு. பரிதாபமாவும் இருக்கு.

    தீபக் டீபாயின் மேலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து சிகரெட் ஒன்றை உருவி உதட்டுக்குக் கொடுத்தான். லைட்டரைத் தேடினான். தேடிக் கொண்டே சொன்னான்.

    எந்தக் காரியத்தை வேணுமின்னாலும் தப்பில்லாமே பண்ணலாம். ஆனா கொலையை மட்டும் தப்பில்லாமே பண்ணமுடியாது. எவ்வளவு ஜாக்கிரதையா கம்ப்யூட்டர் மூளையோடு ஒரு கொலையைப் பண்ணினாலும் - ஒரு சின்ன விஷயத்துல இடறி போலீஸ் கையில மாட்டிக்க வேண்டியதுதான்...

    நோ! ஆல்பர்ட் கையை ஆட்டி மறுத்தான்.

    தீபக்! எதையுமே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சு... நிதானமா பிளான் போட்டு மர்டர் பண்ணினா நிச்சயம் போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிடலாம். ஒரு கொலையைப் பண்ண யோசிக்கும் போதே இந்திய அரசாங்கத்தோட நிதானம் வேணும்... எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் ஸ்திரமா இருக்கணும். எல்லாமே திட்டம் போட்டுப் பண்ணினா போலீஸை ஈஸியா ஏமாத்திடலாம். கொலையும் ஒரு கலை...

    தீபக் மெலிதாய்ச் சிரித்தான். நிதானமான குரலில் கேட்டான்.

    உன்னால ஒரு கொலையைப் பண்ணிட்டு போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவ முடியுமாடா ஆல்பர்ட்?

    எனக்கு யாரையும் கொலை பண்ண வேண்டிய அவசியம் இல்லையே...

    அவசியத்தை ஏற்படுத்திக்கிட்டு ஒரு கொலையைப் பண்ணு. போலீஸ் கண்ணுல நீ மண்ணைத் தூவி அவங்க கேஸ் ஃபைலை மூடி வெச்சுட்டாங்கன்னா நீ கேக்கிற பணம் தர்றேன்.

    எவ்வளவு தருவே?

    நீ எவ்வளவு கேட்டாலும்.

    ஒரு லட்சம்.

    தர்றேன்.

    டேய் குடிகாரா... உன்னோட பேச்சை நம்ப முடியாது.

    இல்லடா... நிஜமாத்தான் சொல்றேன். நீ மட்டும் போலீஸ்ல மாட்டாமே ஒரு கொலையைப் பண்ணிக் காமி. நான் ஒரு லட்சம் ரூபா தர்றேன்...

    மேற்கண்ட உரையாடல் - மழை பெய்து கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையின் ராத்திரி வேளையில் நடந்தது.

    (இடம்: மூணாறில் தீபக் எஸ்டேட்)

    தீபக்கும் ஆல்பர்ட்டும் சம வயது. அதாவது இருபத்தைந்து வயது. தீபக் பணக்கார ஜாதி. அப்பா சுரேந்திரநாத் விட்டு விட்டுப் போன நிறையச் சொத்துக்கு வாரிசு. அம்மா சின்ன வயசிலேயே மைனஸ். தீபக்கிற்குப் படிப்பு வரவில்லை. காலேஜ் வாசலைத் தொடுவதற்குள் திணறிப் போனான். தூரத்து மாமா சொந்தத்தில் ஒருவர் எஸ்டேட் விவகாரங்களையெல்லாம் துப்புரவாய்க் கவனித்துக் கொள்ள, இவன் ஷிவாஸ் ரீகல் விஸ்கியைச் சப்பிக் கொண்டு - பெண்களை வாடகைக்குக் கூட்டி வந்து – தற்காலிக இல்லறம் நடத்திக் கொண்டிருந்தான். உள்ளூர்ப் பெண்கள் அலுத்துப் போனால் ஒரு சேஞ்சுக்காக ஆல்பர்ட்டோடு மெட்ராஸ் வந்து தனக்குப் பிரியமான நடிகைகளை ரொம்பவும் காஸ்ட்லியாய்த் தொட்டுப் போவான். என்றைக்குமே கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானமாய் முடிவு செய்திருக்கும் தீபக்கிற்கு அவன் ஒரு மாதிரி என்று தெரிந்தும் - நிறையப் பேர் பெண் கொடுக்க முன் வந்தார்கள்.

    இனி ஆல்பர்ட்.

    கழுத்தில் சிலுவை டாலரைப் போட்டுக் கொண்டே தீபக் செய்கிற பாவ காரியங்களில் பங்கு கொள்கிறவன். சில பல இடங்களில் சந்திக்கும் மேரியையும், ஸ்டெல்லாவையும், ரோஸ்லீனாவையும் பார்வையால் மெல்லுபவன். ஏழை வர்க்கம். இவனுக்கும் படிப்பு ஏறவில்லை. அப்பா டானியேல் ஆனவரைக்கும் சொல்லிப்பார்த்துவிட்டு அடங்கிப் போனவர். வேலைக்குப் போகப் பிடிக்காமல் தீபக்கிடம் ஒட்டிக் கொண்டு - அவன் சாப்பிடுகிற வஸ்துக்களை இவனும் சாப்பிட்டுப் புஷ்டியாய் வளர்ந்திருப்பவன். கோணல் கிராப், பட்டையாய் மீசை, சிறிய கண்கள், சிகரெட் புகை உதடுகள். தெற்றுப்பல் ஒட்டிக் கொண்ட பல் வரிசை.

    என்னடா... யோசிக்கிறே... கொலை பண்றியா?

    நான் போலீஸ்ல மாட்டிக்காம இருந்தா லட்சம் தருவியா?

    அதான் தர்றேன்னு சொல்லிட்டேனே? என்மேல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா பிளாங்க் செக் தரட்டுமா...?

    "வேண்டாம். நம்பறேன்! கொலையை எங்கே வச்சு பண்றது? யாரைப் பண்றது...?

    மர்டர் இதே மூணார்ல நடக்கணும்... கொலை செய்யப் படற நபர் உனக்கும் எனக்கும் அறிமுகமானவரா இருக்கணும்.

    "எனக்கு ரெண்டு நாள்

    Enjoying the preview?
    Page 1 of 1