Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivappu Vatathukkul Sinthuja
Sivappu Vatathukkul Sinthuja
Sivappu Vatathukkul Sinthuja
Ebook146 pages43 minutes

Sivappu Vatathukkul Sinthuja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sivappu Vatathukkul Sinthuja

Read more from Rajeshkumar

Related to Sivappu Vatathukkul Sinthuja

Related ebooks

Related categories

Reviews for Sivappu Vatathukkul Sinthuja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivappu Vatathukkul Sinthuja - Rajeshkumar

    18

    1

    சுபாஷ் தன் பாக்கெட்டில் கங்காரு குட்டியாய் இடம் பிடித்து இருந்த செல்போன் எப்போது முனகும் என்று காத்திருந்தான். அவனுடைய மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்ச் ராத்திரி மணி பத்தரையைக் காட்டியது. ‘நர்ஸ் பல்லவி சரியாய் பத்தே கால் மணிக்கு போன் பண்ணுவதாக சொல்லியிருந்தாளே!... ஏன் பண்ணவில்லை?’

    ‘ஒருவேளை மறந்துவிட்டாளோ...?’

    ‘எப்படி மறப்பாள்... கையை நீட்டி அட்வான்ஸாய் ஐயாயிரம் ரூபாய் வாங்கியிருக்காளே...!’

    ‘பார்க்கலாம்... இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்க்கலாம்... பல்லவியிடமிருந்து போன் வரவில்லையென்றால் நேராய் ஹாஸ்பிட்டலுக்கே போய்விட வேண்டியதுதான்...!’

    சுபாஷ் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒரு ‘மியூசிக் நோட்’டை உற்பத்தி செய்து கூப்பிட்டது.

    பதட்டமாய் எடுத்து இடது காதுக்கு அப்பினான்.

    ஹலோ சுபாஷ்... ஒரு ஆண் குரல்.

    சுபாஷுக்கு அந்தக் குரல் அடையாளம் தெரிந்தது. தமிழ்நாடு ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் செக்ரட்டரி ஆதித்தன்.

    சொல்லுங்க ஆதித்தன் ஸார்...!

    சுபாஷ்! இப்ப நீ எங்கேயிருக்கே...?

    வீட்லதான்...!

    உனக்கு ஒரு ஹாட் நியூஸ்...

    என்ன ஸார்...?

    நடிகை நர்த்தனா தன்னோட மூணாவது கணவரையும் விவகாரத்து பண்ணிட்டு ஒரு ஆந்திர தொழில் அதிபரை கல்யாணம் பண்ணிக்கப்போறா... நாளைக்குக் காலையில் திருப்பதியில் கல்யாணம். விஷயம் வெளியே யார்க்கும் தெரியாது. எந்தப் பத்திரிக்கை நிருபர்க்கும் நான் போன் பண்ணி சொல்லலை. உனக்குத்தான் போன் பண்ணி பேசிட்டிருக்கேன்... நீ ரிப்போர்ட்டரா வேலை பார்க்கிற பத்திரிகையில மட்டும் நாளைக்குக் காலையில இந்த நடிகை நர்த்தனா கல்யாண செய்தி வந்தால் பத்திரிகைக்கு அது ஒரு பெரிய பூஸ்டாக இருக்கும்...

    ஸாரி... ஸார்...

    எதுக்கு ஸாரி...?

    இப்ப நான் வேலை பார்த்துக்கிட்டிருக்கிற ‘கொட்டு முரசே!’ பத்திரிகையின் நிர்வாகம் வேற ஒருத்தரின் கைக்குப் போயிடுச்சு. அவங்க கேரளா பீப்பிள். நடிகை மேட்டர்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்காங்க... பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக்கூடிய வகையில் செய்திகள் அமையணும்ன்னு சொல்லியிருக்காங்க... கடந்த ஒரு மாத காலமா அது மாதிரியான செய்திகளைத்தான் சேகரம் பண்ணிட்டிருக்கேன். இப்பக்கூட அது மாதிரியான செய்திக்காகத்தான் ஒரு டெலிபோன் காலை எதிர்பார்த்துட்டிருக்கேன்...!

    அப்படின்னா இந்த நடிகை நர்த்தனா நாலாவது தடவையா திருப்பதியில் கல்யாணம் பண்ணிக்கப்போற நியூஸ் வேண்டாமா?

    வேண்டாம்...

    வேற பத்திரிகைக்கு கொடுத்துடலாமா?

    தாராளமா...!

    அப்புறம் வருத்தப்படக்கூடாது...!

    இதுல வருத்தப்பட ஒண்ணுமில்லை... நடிகைகளின் கல்யாணங்களையும் தற்கொலைகளையும் ஹைலைட் பண்ண எங்க பத்திரிகையின் எம்.டி. விரும்பமாட்டார்...

    ஓ.கே... சுபாஷ்...! கூடிய சீக்கிரம் வேற ஒரு பத்திரிகையில் நீ வேலை பார்க்க வேண்டி வரலாம்...

    நோ... ஸார்... இந்த புதிய நிர்வாகத்தின் பாலிஸி எனக்குப் பிடிச்சிருக்கு. இவங்களோட மலையாள பத்திரிகையான ‘ஈ கேரளா’வில் ஒரு சினிமா நியூஸோ... ஒரு நடிகர் நடிகையின் போட்டோவோ இதுவரைக்கும் வந்ததே கிடையாது. ஆனா அந்த பத்திரிகைதான் இன்னிக்கு சர்க்குலேஷனில் நம்பர் ஒன்.

    இது தமிழ்நாடு...! ஒரு நடிகை தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போனதுக்காக மூன்று இளைஞர்கள் விஷம் குடித்து உடன்கட்டை ஏறியிருக்காங்க... இந்த தியாகம் தமிழ்நாட்டுக்காரனைத் தவிர வேற யார்க்கு வரும்...!

    தமிழ்நாட்டு மக்களை மாத்திடலாம்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு...

    பெஸ்ட் ஆஃப் லக்... சுபாஷ்... செக்ரட்டரி ஆதித்தன் ரிஸீவரை வைத்துவிட சுபாஷ் செல்போனை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு மணிக்கட்டில் நேரம் பார்த்தான். நேரம் 10.41.

    ‘இனி இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை... நர்ஸ் பல்லவியை நேரிடையாய்ப் போய்ப் பார்த்துவிட வேண்டியதுதான்...!’

    சுபாஷ் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்து வாசலில் இரும்புக் குதிரை மாதிரி நின்றிருந்த தன் பைக்கை நெருங்கினான். பக்கத்து வீட்டு வாசலில் காற்றுக்காக நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்த வீட்டுக்கார அம்மாள் குரல் கொடுத்தாள்.

    சுபாஷ் தம்பி...

    ம்...

    இந்த மாச வாடகை எப்ப கிடைக்கும்?

    இன்னும் ரெண்டு நாள்ல...

    லேட் பண்ணிடாதீங்க தம்பி... தண்ணி வரி, வீட்டு வரி ரெண்டையும் இந்த வாரத்துக்குள்ளே கட்டணும்ன்னு நோட்டீஸ் வந்திருக்கு...

    வீட்டுக்கார அம்மாள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே பைக் உதைபட்டு புகை தள்ளியது. சுபாஷ் பைக்கில் பரவி ராக்கெட் மாதிரி கிளம்பி குறுகிய தெருவைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தான். போக்குவரத்து அறவே ஓய்ந்து போயிருக்க, சிக்னல் விளக்குகளில் மஞ்சள் மட்டும் மாறி மாறி அணைந்து எரிந்து ‘பார்த்து போகவும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தது.

    சுபாஷ் மெயின் ரோட்டை முழுமையாய்க் கடந்து அந்த வளைவில் திரும்பியபோது சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் கூப்பிட்டது. பைக்கை ஓரம் கட்டி நிறுத்திய சுபாஷ் செல்போனை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ...

    ரிப்போர்ட்டர் சுபாஷா...? பெண் குரல்.

    ஆமா...!

    ஸார்... நான் நர்ஸ் பல்லவி...

    உன்னோட போனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...

    "ஸாரி... ஸார்... சீஃப் டாக்டர் இப்பத்தான் வீட்டுக்குப் புறப்பட்டு போனார். நான் உடனே ஹாஸ்பிட்டலைப் விட்டு வெளியே வந்து ஒரு ரூபாய் காயின் போட்டுப் பேசற டெலிபோன்

    Enjoying the preview?
    Page 1 of 1