Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennal Mudiyum
Pennal Mudiyum
Pennal Mudiyum
Ebook226 pages2 hours

Pennal Mudiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402137
Pennal Mudiyum

Read more from Rajesh Kumar

Related to Pennal Mudiyum

Related ebooks

Reviews for Pennal Mudiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennal Mudiyum - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    பெண்ணால் முடியும்

    Pennal Mudiyum

    Author :

    அனுராதா ரமணன்.

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    பெண்ணால் முடியும்

    பிரியமான வாசகர்களுக்கு, வணக்கம்.

    நலம், நலம் தானே.

    உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த பெண்ணால் முடியம் கற்பனைச் சரக்கில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

    ‘பெண்ணால் முடியும்’ என்கிற தலைப்பே கொஞ்சம் அகம்பாவமாக, அகந்தையாகத் தொனிக்கிறதோ… எனக்குத் தெரிந்த வரையில், நிறையப் பெண்கள், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, மெளனமாய் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்வது, பலரது சாதனைகள் வெளியே வருவதில்லை.

    இத்தொடர் தமிழ்ச் சுடர்’ என்கிற தினப் பத்திரிகையில் ஒவ்வொரு வெள்ளியும் பிரசுரமானது. அப்பத்திரிகையின் செய்தித் துறை தலைவர் திரு.ஆர்.நூருல்லா அவர்கள் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டபோது, தங்கள் பத்திரிகைக்கு ஒரு தொடர்கதை வேண்டும் என்றுதான் கேட்டார். அந்தச் சமயத்தில் அடுக்கடுக்காய் பல பெண்கள் சந்தித்த சோதனைகளையும், அவர்கள் போராடி வென்ற சாதனைகளையும் நான் தொகுத்துக் கொண்டிருந்தேன். மனசு முழுக்க ஒருவித பிரமிப்பும், திகைப்பும். அடேங்கப்பா... என்னமாய் துயரக் கடலில் நீந்திக் கரை சேர்ந்திருக்கிறார்கள் என்கிற மலைப்புமாகவே இருந்தது. இதை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு தொடர்கதை எழுதுவதாவது… உண்மைச் சம்பவங்களே நம்ப முடியாத வகையில் இருக்கும் போது…

    நான், திரு. நூருல்லாவிடம் கேட்க, அவர் தனது பத்திரிகை ஆசிரியர் டாக்டர் திரு. உஸ்மான் ஃபயாஸ் அவர்களையும், பப்ளிஷர் திரு. உஸ்மான் ஃபாஹீத் அவர்களையும் அனுமதி கேட்க, அவர்கள் என்ன தலைப்பு என்று கேட்க நூருல்லா, ஏற்கனவே நான் சொன்ன ‘பெண்ணால் முடியும்’ என்கிற தலைப்பைச் சொல்லியிருக்கிறார். உடனே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்கள். இவர்களுக்கு என் முதல் நன்றி.

    ‘பெண்ணால் முடியும்’ முதல் அத்தியாயம் வெளிவந்த அன்றுதான் நமது நாட்டுக்கு பெண் ஜனாதிபதியாக திருமதி பிரதிபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

    ‘பெண்ணால் முடியும்’ என்றால் ‘ஆணால் முடியாதா’ என்று யாரும் புஜம் தட்டிச் சண்டைக்கு வரக் கூடாது. ஆணாலும் முடியும். இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புகளும், எங்கேயும் போய் வரக் கூடிய சுதந்திரமும் அதிகம். பெண் கிடைத்த கொஞ்சம் சலுகைகளை வைத்துக் கொண்டு, முட்டி மோதி, முன்னுக்கு வருகிறாள். தவிர, அவளுக்கு கணவன், குழந்தைகள், குடும்பம் இவைகளை மீறி செயல்படுவது கடினம்.

    ‘எங்கே, என்னால் எதுவும் முடியாதோ... மரணம் ஒன்றுதான் புகலோ’ என ஏங்கி நிற்கும், தேம்பி நிற்கும் சகோதரிகளை அணைத்து, ‘உன்னாலும் முடியும், இதைப் படித்துப் பார்’ என ஊக்கப்படுத்தவே நான் இதை எழுதியுள்ளேன். இதை ஊன்றிப் படித்தால் தெரியும். கணவனை இழந்து நிர்க்கதியாய் நின்ற வேண்டாமணி என்கிற அடித்தட்டு பெண்ணிலிருந்து, மேல் மட்டத்தைச் சேர்ந்த டாக்டர் இந்து வரையில் எல்லாரும் வாழ்க்கையில் போராடித்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

    இதில் சில இடங்களில் ஆண்களின் நடவடிக்கைகளையும், பொறுப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இது ஒட்டுமொத்த ஆண்களையும் சாடும் நோக்கமல்ல. பிற பெண்களை தாயாய், சகோதரிகளாய் நினைக்கிற பல ஆண்களும் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரியும் இது தங்களைப் பற்றி இல்லை என்பது.

    மறுபடியும் சொல்கிறேன். இது பொழுதுபோக்குக்காக மட்டும் படிப்பதற்கு அல்ல. படித்து, வாழ்க்கையில் துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் நம் சகோதரிகள் நடைபோட ஓர் கையேடு. இத்தொடர் தமிழ்ச் சுடரில் வெளியான போது பல பெண் வாசகிகள் மட்டுமல்லாது ஆண் வாசகர்களும், ஏன்… குடும்பம் குடும்பமாக என்னிடம் தொலைபேசியிலேயே அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களானார்கள்.

    இப்புத்தகத்தை வெளியிட்ட தங்கத்தாமரை பதிப்பகம் சுபா அவர்களுக்கும், வடிவமைத்துக் கொடுத்த திரு.கணேஷ் அவர்களுக்கும் மற்றும் உள் ஒவியங்கள் வரைந்த திரு.செந்தமிழ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி. இப்படிக்கு,

    அன்புடன்,

    அனுராதா ரமணன்

    1

    அன்பிற்குரிய வாசகிகளுக்கு ஏன் வாசகர்களுக்கும் கூட(!) வணக்கம்.

    இந்தப் பகுதி பெண்களுக்கானது தான். (இப்படி பெண்களுக்கு மட்டும் தான் என அறிவிக்கும் கட்டுரைகளை ஆண்களும் நிச்சயம் படிப்பார்கள் என்கிற காரணத்தினால்தான் - வாசகர்களுக்கும் ஒரு வணக்கம்.)

    அதென்ன பெண்ணால் முடியும்கறே.

    -இது திருச்சி பாலக்கரை பத்மாவின் கேள்வி.

    பெண்களாகிய நம்மால், எதையும் சாதிக்க முடியும்னு சொல்றேன்.பத்மா...

    இந்தா, சின்னஞ்சிறுசுகளுக்கு வேணுமானா நீ சொல்றது சரியா இருக்கலாம். என்னைப் போல எழுபது வயசுக்கு, வியாதியோட, ஒவ்வொரு மகனும் மருமகளும் ‘எனக்கு வேண்டாம் பூசணிக்கா’ என்று தூக்கிப் போட்டுப் பிடிக்கிறாங்களே... என்னை மாதிரி காலா வதியாயிட்ட கேஸூகளுக்கெல்லாம் நீ என்ன சொல்லப் போறே... பெரீசா?

    "உங்களுக்கும் சொல்கிறேன். எழுபதெல்லாம் ஒரு வயதோடு சேர்த்தியா... வெளிநாடுகளில் ஐம்பது வயதில்தான் ஒவ்வொருத்தியும் வாழவே ஆரம்பிக்கிறாள்… நம்மால் முடியாதா கங்காம்மா… இப்பொழுது உங்களுக்கு என்ன குறைச்சல்… வியாதி வியாதி என்றால் என்ன பெரிய வியாதி... சர்க்கரையும், ரத்தக் கொதிப்பும் ஒரு வியாதியோடு சேர்த்தியா… சொன்னால் கோபிக்கக் கூடாது. நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு… உப்பு உறைப்பாய் நாக்குக்கு வேண்டியிருக்கிற வரைக்கும் நீங்கள் இப்படித்தான் புலம்பிக் கொண்டே படுத்திருக்க . வேண்டும். உங்கள் பிள்ளைகளும், மருமகள்களும் பந்தாடிக் கொண்டே இருப்பார்கள்…’

    இப்ப என்னைய என்னப் பண்ணச் சொல்றே?

    இதுவும் கங்காம்மாதான்.

    முதல்லே இதைப் படிக்க ஆரம்பிங்க. இதுதான் ஆரம்பம். இன்னும் நமக்குள்ள எத்தனையோ இருக்கு. ஒவ்வொரு வாரமும் படிங்க... ‘அடடா ஒரு பொம்பிளையாலே இத்தனையெல்லாம் சாதிக்க முடியுமா’ன்னு பிரமிச்சுப் போயிடுவீங்க...

    இந்தப் பகுதியில எந்த மாதிரியானப் பெண்களுக்கான விஷயங்கன்னு... சும்மா ஒரு ‘சாம்பிள்’ காட்டினிங்கன்னா... போதும்…

    இது வேறு யாருமில்லை. சேலத்தில் இருக்கும் சாந்தி என் பிரிய வாசகி, எங்கே போய், என்ன வாங்குவதாக இருந்தாலும் ‘சாம்பிள்’ பார்த்து விட்டுத்தான் வாங்குவாள். ‘சாம்பிள் சாந்தி’ என்றுதான் கூப்பிடுவேன். கோபித்துக் கொள்ளவே மாட்டாள். அதுவே ஒரு நல்ல விஷயம் இல்லையா?

    உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ... பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விடவும் சூப்பர் ஸ்டிராங்காக இருப்பது பெண் குழந்தைகள்தான்!

    எதையும் தாங்கும் அல்லது எதையும் எதிர்க்கும் சக்தி பெண் சிசுக்களுக்கு இறைவன் கொடுத்த வரம்!

    சும்மாவாவது, உங்கள் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுப் பாருங்களேன்…

    பிள்ளை பெற்றவள், சுமார் நாற்பது, ஐம்பது நாட்கள் வரையில் கடும் பத்தியம் இருக்க வேண்டும்… எப்பொழுது தெரியுமா… பிறந்த குழந்தை ஆண் என்றால்!

    இதுவே பெண் குழந்தைகள் என்றால், சுமார் இருபத்தியொரு நாள்… வாயைக் கட்டினால் போதும்...

    ஏனாம்? பெண் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலில் உள்ள தேவையில்லாதவை எல்லாம் சேர்ந்தால், மப்பு, மாந்தம், கணைச்சுரம் இதெல்லாம் வராதா.. அல்லது வந்தாலும் பரவாயில்லை... பெண் குழந்தைதானே... செத்து ஒழியட்டும் என்கிற நினைப்பா…

    இப்படியெல்லாம் எரிச்சலைடைகிறீர்கள்தானே? அதுதான் இல்லை. ஆண் குழந்தையை விடவும் பெண் குழந்தை எதையும் ஜீரணிக்கக் கூடிய சக்தியுடையது…

    அது மட்டுமில்லை. ஆண் குழந்தையை அதிகம் அழ விடக் கூடாது என்பார்கள். அது, அடி வயிற்றில் நரம்புகளைப் பிடித்து இழுத்தால் விதைகள் வீங்கி விடும்… அல்லது உள்ளே போய் பிரச்னையாகும்.

    பெண் குழந்தை தாராளமாய் எட்டு கட்டை சுருதியில் "வறாட் வறாட்டென அழலாம்…

    ஆண் குழந்தைகள் திக்கித் திணறிப் பேச மூன்று வருடம் ஆகும்… ஆனால் பெண் மழலைகள் ஒரு வயது முடிவதற்குள்ளேயே, உன்னை நேக்குப் பிடிக்கலே போ!’ என்று ‘பளிச்’செனக் கூறும்.

    அட, இதையெல்லாம் விடுங்கள்... பத்து மாதம் மூன்றரை கிலோ வரையில் வயிற்றில் பிள்ளைச் சுமையைச் சுமந்து, வலிபட்டு, அது சுகப் பிரசவமோ அல்லது ஆயுதக் கேஸ்ஸோ, எதுவானாலும் பிரசவித்து, முப்பதே நாளில் வீட்டு பாரங்களைச் சுமந்து, கணவனுக்கும், மற்றவர்களுக்குமாய் சமைத்து, மறுபடியும் கணவனுடன் படுத்து…

    இடைவிடாத வேலைகள்… அலுப்பு மிகுந்தாலும் அவள்தான் செய்ய வேண்டும். புருஷன் அடித்தாலும், அணைத்தாலும், அத்தனைக்கும் பொறுப்பு அவள்தான் ஏற்க வேண்டும். அப்படியே அவன், இன்னொருத்தியுடன் போனாலும், அவன் கொடுத்த குடும்பச் சுமையை அவள் தான் தாங்க வேண்டும். புருஷன் படுத்த படுக்கையாகி, ஒரு நாள் இவளை நிர்க்கதியாக விட்டு விட்டுப் போனாலும்… அழுது, புரண்டு, உருண்டு, எழுந்து உட்கார்ந்து, புடவை முந்தானையினால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, கலைந்து பறக்கும் கூந்தலை ஒதுக்கிக் கொண்டு, சேலையைச் சரி செய்து, கையில் டிபன் டப்பாவைத் தூக்கிக் கொண்டு அவள்தான்…

    புருஷன் இறந்து இருபது நாட்களாவதற்குள்ளாகவே வேலைக்குப் புறப்பட்ட ஒரு பெண்ணை நான் அறிவேன்.

    ‘இன்னும் பத்துப் பதினைஞ்சு நாள் லீவு எடுத்ருக்கலாமே..."

    நான் கேட்டேன். அவள் அந்த நேரத்திலும் விரக்தியுடன் சிரித்தாள்.

    போன புருஷனை மீட்டுக் கொண்டு வர்றதுக்கு நான் ஒண்ணும் அந்த கால சத்யவான் பொண்டாட்டி சாவித்திரியில்லே… ஆனா, லீவு போட்டா, கையை விட்டு உள்ள வேலையும் போயிடும். இல்லே. அதுவும் போனா… பிள்ளைங்க சோத்துக்கு என்ன வழி...

    இப்படிச் சொன்னவள், கூடவே இன்னொன்றையும் சொன்னாள்.

    இது கூடப் பரவாயில்லீங்க. வீட்டுக்காரர் செத்துப் போயிட்டாலும், எப்படியோ துக்கத்தை மனசுக்குள்ளப் போட்டுப் புதைச்சிட்டு வேலைக்கு வந்துடலாம்… ஆனா.. ஆனா… பஸ்லே, மாடு மாதிரி மேலே மோதி, பொம்பிளைங்களைச் சீண்டறவங்களோட வக்ர புத்திய நினைக்கறப்பத்தான் வயிறு கொதிக்குது. நான் என்ன, ‘என் புருஷன் செத்து இன்னும் இருபது நாள் கூட ஆகல்லேடா... முண்டம். மேல மோதாதே... இப்படிக்கு புது . விதவை’யின்னு போர்டா எழுதி மாட்டிக்க முடியும்…

    உதடு துடிக்க, கண்கள் சிவக்க, அந்த முப்பது வயசுப் பெண் என்னைப் பார்த்துக் கேட்ட போது…

    என்னைத் தூக்கி நெருப்பில் போட்ட மாதிரி இருந்தது. ‘சட்டென ஒரு வாரம் முன்பு, மருத்துவமனையில் உடம்பெல்லாம் குழாய் செருகிக் கொண்டு படுத்திருந்த மனிதன் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தான்.

    மொடாக் குடியன்… குடிக்கறதுக்கு எதுடா சாக்குன்னு காத்துட்டிருப்பான். சந்தேகப்பட்டே, பெண்டாட்டிய அடிச்சு உதைச்சு, அவ அடி தாளாமலேயே கண்ணை மூடிட்டா. இப்ப,அவளை நினைச்சு நினைச்சே குடிச்சு, கும்பி வெந்துக் கிடக்கான்…

    தினமும் குடியில் மிதக்க ஏதாவது ஒரு காரணத்தைத் தேடும் ஆண்களால் செய்ய முடியாதது…

    பெண்ணால் முடியும்!

    2

    ‘பிறந்தாலும் பொம்பிளையாப் பிறக்கக் கூடாது…’ இப்படியொரு சினிமாப் பாடலே உண்டு.

    ஆனால், மறுபிறவி என ஒன்றிருந்தால், அப்பொழுதும் நான் பெண்ணாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்.

    இதை ஒரு நிகழ்ச்சியில் சொன்ன போது, ‘வெடுக்’கென ஒரு சகோதரி எழுந்து சொன்னாள்.

    ஆமா... நீங்க சொல்லுவிங்க. கிராமத்துலப் பொறந்து, கிராமத்துலேயே வாழ்க்கைப்பட்டு, மாட்டுக் கொட்டாயையும், சாணி அள்ளறதையும் தவிர வேறு எதையுமே பார்க்காதப் பொம்பிளைங்க... குடிகாரப் புருஷன் கிட்ட அடிபட்டு வரிசையா வருஷத்துக்கு ஒண்ணு பெத்துப் போட்டு, அதுலேயும் பொட்டப் புள்ளையா இருந்தா, தன் கையாலேயே அதோடக் கதைய முடிச்சு, முப்பத்தஞ்சு வயசுக்குள்ளயே தாலி அறுத்தாத் தெரியும்…

    ஏதோ ஆவேசம் வந்தவள் போலப் பேசினாள் அவள். கூட்டத்தினரும், விழா ஏற்பாடு செய்திருந்தவர்களும் திகைத்துப் போனார்கள். சங்கடத்தில் நெளிந்தார்கள்.

    பேசுவதைப் பேசி விட்டாளே தவிர, அவளும் சுய பச்சாதாபத்தில் விம்மி அழுதாள்.

    அவ… நெசவு நெய்யற பொம்பிளை. சமீபத்துலதான் அவ அக்கா புருஷன் இறந்து போனார். அஞ்சாறு குழந்தைங்க. அதான் ஏதோ உணர்ச்சி மேலிட்டு…

    விழா அமைப்பாளர், அவள் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டாற் போல, என்னிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசினார். விழா முடிந்து, கூட்டம் கலைந்த பின்பும் அந்தப் பெண் என்னைப் பார்த்து விட்டுப் போக வேண்டும் என்று அழிச்சாட்டியமாய் நின்றாள்.

    அதெல்லாம் முடியாது. உன்னைப் பேச விட்டா ரகளையாயிடும். ஏற்கனவே அந்த அம்மா உன் மேலக் கோபமா இருக்காங்க...

    விழா அமைப்பாளர்,

    Enjoying the preview?
    Page 1 of 1