Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kankal Solkindra Kavithai
Kankal Solkindra Kavithai
Kankal Solkindra Kavithai
Ebook107 pages59 minutes

Kankal Solkindra Kavithai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851638
Kankal Solkindra Kavithai

Read more from Ga Prabha

Related to Kankal Solkindra Kavithai

Related ebooks

Reviews for Kankal Solkindra Kavithai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kankal Solkindra Kavithai - GA Prabha

    http://www.pustaka.co.in

    கண்கள் சொல்கின்ற கவிதை

    Kankal Solkindra Kavithai

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    கணகணவென்ற மணியோசையில் விழிப்பு வந்து விட்டது. சாம்பிராணி, ஊதுவத்தி மணம் கலவையாய் நாசியை நிறைத்து மனதுக்குள் இனிய உணர்வை நிரப்பியது.

    தெரு விளக்கின் ஒளி கீற்றாக உள்ளே நுழைந்து இருளை விரட்டியது.மழையின் ஜில்லிப்பு, அறை முழுவதும் பரவி, சின்னச்சின்ன மழைத்துளிகள் ஜன்னல் கம்பியில் மின்னியது.

    சத்யன் மூச்சுக் காற்றை இழுத்து, நாசி முழுவதும் நிரப்பி, நெஞ்சுக் கூட்டுக்குள் அனுப்பினான்.கதகதப்பான ஆக்ஸிஜன் நுரையீரல் முழுவதும் நிரம்பியது.

    ஓம்…. ஓம்…. ஓம்….

    தாள லயத்தோடு ஓம் சொல்லச் சொல்ல புத்துணர்ச்சி பரவியது.

    கண்மூடியபடி கிடந்தான் சத்யன். இன்று கடை மெதுவாகத் திறக்கலாம். அவசரமில்லை, சரஸ்வதி பூஜை செய்வதற்கு மட்டும் கடை திறந்தால் போதும்.மதியம் ஊழியர்களுக்கு அங்கு சாப்பாடு. சத்யனின் குடும்பமும் அங்குதான் சாப்பிடும்.

    முன்னாடி ஷோரூம். பின்னாடி சர்வீஸ் ஸ்டேஷன். ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று மொத்தம் ஐம்பது பேருக்கு இலை போட்டு வடை பாயாசத்தோடு சாப்பாடு. தனியாக ஆள் போட்டு சமையல் நடக்கும்.

    அந்த விஷயத்தில் தாத்தா விழிப்போடு இருப்பார்.

    எல்லோரும் சாப்பிட்டாகி விட்டது என்று தெரிந்த பிறகுதான் தன் குடும்பத்தோடு சாப்பிட அமர்வார்கள். தனித்தனியாக விசாரிப்பார். தான் முதலில் ருசி பார்த்து. உப்பு காரம் சரி என்ற பிறகுதான் இலை போடவே அனுமதிப்பார்.

    சத்யனின் மனைவி தேவி, தங்கைகள் நித்யா, சுபா, சத்யனின் இரண்டரை வயது மகன் சுரேஷ் என்று ஆளுக்கு அள்ளி, அள்ளி பரிமாற குதூகலமும், சிலிர்ப்பும், சிரிப்புமாய் நாள் கடந்து போகும்.

    தாத்தா இறுக்கம் தளர்ந்து இருப்பதும் அந்த நாளில்தான். அப்பா, அம்மா, பாட்டி மூன்று பேரும் ஒரு கார் விபத்தில் இறந்து போன துக்கத்தை தாங்கி, குடும்பத்தை தூக்கி நிறுத்தியது அவர்தான். சத்யனை ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் படிக்க வைத்து. தேவியை திருமணம் செய்து வைத்தார்.சுரேஷ் பிறந்ததும் டூவீலர் ஷோரூம், சர்வீஸ் ஸ்டேஷன் ஆரம்பித்தது. அக்கவுண்ட் தேவி கவனிக்கிறாள். ஷோரூம் தாத்தா கவனிப்பில். சர்வீஸ் ஸ்டேஷன் சத்யன் கவனிப்பில்.

    தங்கைகளுக்கு தாயில்லாத குறையை தேவி தீர்த்து வைக்கிறாள். இனிய சுபாவம், மலர்ந்த முகம், கனிவான பேச்சு என்று தேவி அன்னையாக இருக்கிறாள்.

    வீடு கோவிலாக இருக்கிறது.

    "ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்,

    ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்"

    -மனது பாடியது.

    எழுந்துக்கலையா கதவு திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள் தேவி.தாத்தா ரெடி

    காஃபி தந்தால் மட்டுமே திருப்பள்ளி எழுச்சி

    ஃபில்டர் காஃபி போடலை. இன்ஸ்டன்ட் தரட்டுமா?

    உன் கையால எது தந்தாலும் ஓ.கே

    அப்ப சரி. பாகற்காய் ஜீஸ் இருக்கு, வந்து குடிங்க

    வந்தேன். தேவியின் உத்தரவு–சத்யன் குதித்து இறங்கினான். அவசரமாய் குளித்து ஹாலுக்கு வருகையில் சுட்டிப் பையன் சுரேஷ் கூட குளித்து புது மலராய் கையில் பெரிய பிளாஸ்டிக் கிண்ணத்துடன் நின்றிருந்தான்.

    எதுக்குடா இவ்வளவு பெரிய கிண்ணம்?

    பெச்சாதத்துக்கு

    பிரசாதம் துளியூண்டுதான் தருவாங்க.

    ஷ்- தாத்தா மிரட்டினார்.

    பேப்பர் வந்தாச்சா நித்யா?

    அண்ணா, இன்னைக்கு சரஸ்வதி பூஜை. படிக்கக்கூடாது

    உனக்கு டியூஷன்ல டெஸ்ட் இருக்கே

    போக மாட்டேனே. சாமி கோச்சுக்கும்

    போகலைன்னா தாத்தா கோச்சுக்குவார்

    இன்னைக்கு தாத்தா எதுக்குமே கோச்சுக்க மாட்டார் என்ற சுபாவை சின்ன புன்னகையோடு ஆமோதித்தார் தாத்தா.

    தேவி பிரசாதங்களை கொண்டுபோய் கோவிலில் வைத்தாள். அந்த காப்பவுண்ட் தெருக்குத்து வீடு என்பதால் வாசலில் ஒரு பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்திருந்தார்கள். எல்லா விசேஷ பூஜைகளும் அங்குதான் நடக்கும். காம்பவுண்டடில் உள்ள நாலு வீடுகளும் தத்தம் வீட்டு பிரசாதங்களுடன் கூடியிருந்தது. தாத்தாதான் பூஜை செய்தார்.தீபாராதனை காட்டி, நைவேத்தியம் ஆன கையுடன், மேல் வீட்டு மாலதி விநியோகம் செய்ய, பிரசாதம் வாங்க, அக்கம் பக்கம் வீடுகளும் வந்து நின்றது.

    லேட்டாயிருச்சிங்க – காம்பவுண்டில் வேலை செய்யும் தாயம்மா அவசரமாய் ஓடி வந்தாள்.

    நேத்து எங்க காணும் உன்னை தேவி.

    எம் மவளுக்கு பிரசவம்மா

    வெரிகுட். என்ன குழுந்தை?

    ஆம்பிளை புள்ளைங்கம்மா – முகம் முழுவதும் சிரிப்பு.

    இதான் தலப்பிரசவமா தாயம்மா – நித்யா.

    ஆமாங்கண்ணு

    அப்போ உன் பேரனுக்கு அஜீத்னு பேர் வை

    நித்யா – தாத்தா அதட்டினார். உள்ள போய் பணம் எடுத்துட்டு வா

    எவ்வளவு தாத்தா

    ஐநூறு

    நித்யா ஓடிப்போய் எடுத்துக் கொண்டு வந்து தந்தாள்.

    இந்தா தாயம்மா – தாத்தா அவளிடம் நீட்டினார். நன்றிங்க நெகிழ்வோடு வாங்கிக் கொண்டாள்.

    எதுக்கு தாத்தா பணம் தந்தீங்க? – சத்யன்

    "பிரசவம் சத்யன்.

    Enjoying the preview?
    Page 1 of 1