Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vennilavu Deepangal
Vennilavu Deepangal
Vennilavu Deepangal
Ebook101 pages1 hour

Vennilavu Deepangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101003953
Vennilavu Deepangal

Read more from Ga Prabha

Related to Vennilavu Deepangal

Related ebooks

Reviews for Vennilavu Deepangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vennilavu Deepangal - GA Prabha

    http://www.pustaka.co.in

    வெண்ணிலவு தீபங்கள்

    Vennilavu Deepangal

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நீங்கள் விரும்பும் எதையும் பெறலாம். நம்பிக்கையோடு பொறுமை இருந்தால்.

    நிலவுக்கு கீழ் சின்னதாக ஒரு நட்சத்திரம் சுடர் விட்டது. பளீர் என்று மின்னியது.

    ஜன்னலுக்கு நேர் வெளியே வட்ட வடிவ பெளர்ணமி நிலவும் கீழே சின்னதாக, ஒரு நட்சத்திரமும் மின்னியது. எப்போதும் விழிக்கும் போது பார்க்கும் நட்சத்திரங்கள் நிவவு தான். ஆனால் பார்க்கும் போதெல்லாம் புதிதாக, மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொண்டு வருகிறது.

    நிலவைப் பார்க்கும் போது தன் குடும்பத்தை பார்ப்பது போல் இருக்கிறது. நிலவுதான் பாட்டி. அதன் ஒளியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் போல் தான் நாங்களும்.

    தன் வீடு போல் நட்சத்திர குடும்பம்.

    அழகான பால்வீதி பந்தங்கள்.

    சின்னபுன் முறுவல் பூத்தது உதட்டில். நந்தனா நிலவைப் பார்த்தபடி படுத்திருந்தாள். மனதிற்குள் இனிமையை பரவச் செய்தபடி ரசிப்புடன் லயித்து விழித்திருந்தாள்.

    காபி டிகாஷன் வாசனை.

    மணி நாலரை. எதிர் டீக்கடையில் மணக்க, மணக்க டிகாஷன் தயாராகிறது. அஞ்சுமணிக்கு பால் வரும். அஞ்சரைக்கு முதல் காபி குடிக்க தாத்தா போய்விடுவார்.

    நாயர் கடை காபி குடிச்சாத்தான் அந்த பொழுதே உற்சாகமாக இருக்கிறது தாத்தா லயிப்பார்.

    நாயர் கடை டீ தான் ஜோரா இருக்கும். இங்க காபி வாசம்னா ஆளைத் தூக்குது - மாமா மணிவாசகம்.

    என்றாலும் ஆறுமணிக்கு அடுத்த டோஸ் காபி பாட்டி கையால் எல்லோருக்கும் கிடைக்கும்.

    வழக்கமாய் அஞ்சு மணிதான் விழிக்கும் நேரம். இன்று நாலரைக்கு விழிப்பு வந்து விட்டது. விழிப்பு கூட இல்லை. தூங்கினால் தானே விழிக்க.

    இன்று மாலை கச்சேரி என்று நினைக்கையில் தூக்கம் போய்விட்டது. மனம் முழுக்க ஒரு பரபரப்பு. ஆவல், உற்சாகம் முதல் கச்சேரி பெரிய சபா என்று இல்லை. மாமாவின் நண்பர் இல்ல விசேஷம். அதில் பாடப் போகிறாள்.

    முதல் நிகழ்ச்சி என்பதால் பரபரப்பு. தவிப்பு

    நந்தனா மூச்சை ஆழமாக இழுத்து விட்டாள். முப்பது முறை அதை செய்தபின் மனசு சிறிது ரிலாக்ஸ் ஆனது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினாள். நின்று கிழக்கு நோக்கி 'நன்றி' என்று கூறினாள்.

    இதுவும் மாமா சொல்லித் தந்ததுதான்.

    அம்மாடி நமக்கு இந்தப் பிரபஞ்சம் பல நல்ல விஷயங்களை அள்ளித் தந்திருக்கிறது. இது பற்றி நீ நன்றியோடு சிந்திக்க துவங்கினா மேலும் நன்றி சொல்றதுக்கான பல விஷயங்கள் உனக்கு கிடைக்கும். என்றவர் சின்ன பவழப் பிள்ளையார் ஒன்றைத் தந்திருந்தார்

    ஒவ்வொரு முறை இதை பார்க்க நேரும் போதெல்லாம் நீ நன்றின்னு சொல்லப் பழகு நந்தனா - என்றிருந்தார்.

    ஒரு வருடமாகப் பழகி வருகிறாள்.

    நன்றி சொல்ல பல விஷயங்கள் நடந்து விட்டது. முக்கியமா எனது பி.எஸ்ஸி முதல் வகுப்பில் பாஸ் செய்தது. இசைத்திறமையை வளர்த்துக் கொள்ள சென்னைக்கே வந்தது. அவள் விரும்பிய பாடகியிடமே, இசை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வீட்டிற்கு அருகிலேயே எம்.சி.ஏ. படிக்க கல்லூரியில் இடம் கிடைத்தது. எல்லாவற்றையும் விட இவ்வளவு அருமையான ஒரு மாமா கிடைத்தது.

    பெற்றோர்கள் இருந்தால் கூட இந்த அளவு அருமையாக வளர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எந்தக் குறையும் இல்லை.

    குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா

    மனம் நன்றியோடு பாடியது.

    மீண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி கூறிவிட்டு ஹாலுக்கு வந்தாள். பழைய காலத்து வீடு குறுக்கே மரச் சட்டங்கள் கொடுத்து, கான்கிரீட் பலகையில் கூரை. சின்னச் சின்னதாக ரூம். தனக்கு மாமா பெண் நளினிக்கு, மாமா, அத்தை பையன் பரத்துக்கு என்று தனித் தனி ரூம். கிராமங்களில் மூணுகட்டு வீடு என்பது போல் இருந்தது. மரப்படி மேலே ஏறினால் மொட்டை மாடி. முன்புறம் வரவேற்பு அறை. வாசல் பார்த்த பூஜை அறை, இரண்டு பக்கமும் திண்ணை வைத்த வீடு. எதிர்சாலையில் டீக்கடை, பழக்கடைகள், சிறிது தூரம் சென்றால், பஸ் நிறுத்தம்.

    மாமாவின் நண்பரின் வீடு. நண்பர் ஐந்து வருட ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் செல்லும் நேரத்தில் தான் மாமா சென்னை வர முடிவு செய்தது.

    வீட்டை எப்படி வாடகைக்கு விடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். தாத்தாவோட வீடு. நீ வந்து இருந்தா சந்தோஷம் மணி. பெயிண்ட் அடிச்சி, மராமத்து வேலை பண்ணிக்க, வீட்டுவரி, தண்ணீவரி கட்டிரு. வாடகை வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    இதற்கும் ஒரு ‘நன்றி’

    நந்தனா. ஹால் தாண்டி,

    Enjoying the preview?
    Page 1 of 1