Mudhal Kaadhal
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsArali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsMegathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mudhal Kaadhal
Related ebooks
Imsaigal Rating: 0 out of 5 stars0 ratingsIndha Ithazhil Arambamagirathu Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Kaalathu Salanangal Rating: 3 out of 5 stars3/5Velvet Manasu Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Kidaikkuma Anbu? Rating: 5 out of 5 stars5/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsIvarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKaathodu Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Sonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsIvale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Veliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Amma Rating: 5 out of 5 stars5/5Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannaana Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsKoottukkulle Sila Kaalam... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Paravai Koondukkulle Rating: 0 out of 5 stars0 ratingsIthazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Piriva Rating: 0 out of 5 stars0 ratingsSandhippu Thodarum Rating: 0 out of 5 stars0 ratingsKaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Vaangiya Kanavan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mudhal Kaadhal
1 rating0 reviews
Book preview
Mudhal Kaadhal - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
முதல் காதல்
Mudhal Kaadhal
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
முன்னுரை
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம், எழுத்துக்கள் எல்லாம் மதிப்பு வாய்ந்த நவமணிகள். அதன் தகுதியும், உயர்வும், எல்லோருக்கும் சுலபமாய் தெரிந்து விடாது. அந்த மகனிகளின் எடை அதன் தொன்மை, எத்தனைமுகப்பட்டை, தோஷம், புள்ளி! ஏதேனும் இருக்கிறதா என்பதையெல்லாம் 'ஜெம்மாவிஸ்ட்’ எனும் மிகச் சிறந்த ஆய்வாளர்களுக்கே தெரியும். சாதாரணமாய் நாம் பார்க்கும்போது - பட்டை தீட்டிய கண்ணாடிக் கல்லைக் கூட வைரம் என்று எண்ணி பிரமிப்போம். நல்ல வைரத்தை கூழாங்கல் என தூக்கி எறிவாம்.
முதல் காதலில் வரும் ஹரி கூட மிகத் தேர்ந்த நிபுணன்தான். அவனுக்குக் கிடைத்த வைரம் தப்பித் தவறி தோட்டிக்குப்பத்தில் இருந்து கிடைத்தது. அவனைத் தவிர வேறு யாரும் - வேறு யாரும் என்றால் அவனை விடவும், நிபுணத்துவரான அவனது அப்பாவுக்குக் கூட அந்த வைரத்தின் மகிமை தெரியவில்லை.
இந்த வைரம் சங்கீத வைரம், சரஸ்வதி தேவி ஏதோ ஒரு சாபத்தினால் குப்பத்தில் பிறந்து விட்டாற் போல, சின்னி என்கிற இந்த ராகதேவதை அசுத்தங்களை கழுவும் தோட்டிப் பெண்ணாக அவதரித்து விட்டாள். அது அவன் செய்த தவறா? இல்லை. இல்லை. நான் முன்பே சொன்னது போல் - ஏதோ ஒரு சாபத்தினால், கலைமகள் இந்தக் கோவத்தில் பிறந்து விட்டாள். அவ்வளவுதான்.
தோட்டிப் பொண்ணுக்கும் பாட்டு வரும். ஆனா அவ அந்த சங்கீதத்தை முழுமையா கத்துக்கிட்டு பாட முடியுமா என்பதுதான் கதை
என்றேன்.
ஆசிரியர் திரு. விக்ரமன் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியே ஆகவேண்டும். மூத்த தலைமுறை எழுத்தாளரும், சிறந்த இலக்கியவாதியுமான இவர் புதுமைகளில் பல உண்மைகளை இளம் எழுத்தாளர்கள் எழுதும்போது மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்பார்.
எதற்காக இந்த ஜாதிக் குழப்பம் எல்லாம். ஏதோ ஒரு சதை, யாரையும் புண்படுத்தாமல் - கொஞ்சம் காதல், கொஞ்சம் கண்ணீர் சேர்த்து எழுதிவிட்டுப் போங்கள்
என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் அமோக வரவேற்பைக் கொடுத்தார்.
சங்கீதத்தில் எப்படி. ஸ்ருதி அவசியமோ அதுபோல் ஒரு தொடர்கதைக்கு நல்ல ஒரு ஓவியரும் அவசியம்.
ஆம்.... இந்த ஸ்ருதி கடைசி வரையில் மிக அழகாக, உருக்கமாக அமைந்திருந்ததினால், வாசகர்களுக்கு இந்தக் கதை ஒரு நல்ல கச்சேரியைக் கேட்ட சுகானுபவத்தை அளித்தது. ஏகப்பட்ட பாராட்டுக் கடிதங்கள். எத்தனையோ வித்வான்கள் எனக்கு இக்கதையில் வரும் சங்கீத சம்பாஷணைகளுக்கு ஆனந்தமாய் கைகொடுத்து உதவினார்கள்.
நமது தேசத்தில் காலம் காலமாய் ஜாதிச் சண்னடகளும், மதக் கலவரங்களும் இருந்தாலும், கலைஞர்களிடையே இது போன்ற அவஸ்தைகள் எதுவும் கிடையாது. பார்க்கப்போனால் நல்ல சுவைகள் இருக்கும் இடத்தில் கடவுள் வசிக்கிறார். அந்தக் கலையின் மூலம் கடவுளைக் காணும் பேறுபெற்றவனுக்கு மற்ற ஆத்மாக்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகளாகவே தெரிகின்றன.
எங்கெல்லாம் கலவரம் நடக்கிறதோ அங்கெல்லாம் கூட்டம் கூட்டமாக சங்கீத வித்வான்களும், பரதக் கலைஞர்களும் போய் தங்களது கலைகளைப் பரப்ப வேண்டும். உயர்மட்டத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குத்தான் இது போன்று சிலவித சுவைகள் வரும் என்கிற கோட்பாடு மாறி, திறமை இருக்கும் குழந்தைகளுக்கு செலவின்றி கற்றுக் கொடுக்க கலைஞர்கள் முன்வர வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளமான ஜாதிப்பிரச்சினையை இசையில் நனைத்து கொடுக்கும் போது சற்று பயந்தேன். பின் விளைவு எப்படி இருக்குமோ என்.... ஆனால் உண்மையில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நாம் நினைப்பது போல அவ்வளவு கொடுமையானவர்கள் அல்ல. அவர்களுக்கும் மனிதாபி மானம் இருக்கிறது என்பதை தங்களின் பாராட்டுக்களின் மூலம் தெரிவித்தபோது - என் கண்கள் கசிந்தது.
இதன் முதல் பதிப்பு அருணோதயம் பதிப்பகத்தில் வெளிவந்தது. இப்பொழுது இரண்டாம் பதிப்பாக பூம்புகார் பதிப்பகத்தினர் மிக விரும்பி இக்கதையை அழகிய நால்வடிவமாக்கி உங்கள் முன் வைத்துள்ளனர்.
மறுபடியும் மணியம் செல்வம் தனது தூரிகையினால் என் எண்ணங்களுக்கு அர்பணம் சேர்த்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
இப்படிக்கு
அன்புடன்
அனுராதா ரமணன்
1
'இவளை முதல் முதலில் எப்போது பார்த்தோம்'?
ஹரி, தனக்குள் கேட்டுக் கொள்கிறான். எப்பொழுது?
கிட்டத்தட்ட பதினேழு வருஷங்கள் இருக்குமா, அதற்கு மேலேயே இருக்கும். அப்பொழுது அவனுக்குப் பத்து வயசு, அவளுக்கு?
ஏழோ எட்டோ, அதற்கு மேல் இருக்காது.
இந்தாடா, கொல்லைக் கதவை யாரோ தட்டறா, தோட்டிச்சியா இருக்கும், போய்க் கதவைத் திற.
அம்மா உள்ளிருந்தபடியே கத்தினாள். ஹரி கையிலிருந்த தம்பூராவை வைத்துவிட்டுப் புழக்கடைப்பக்கம் போனான்.
இரண்டு கட்டுகள் தாண்டிப் புழக்கடை. தஞ்சாவூர் பாணி வீடுகளுக்கே உரிய கிணற்றடியும், பின்னால் கையகலத்தோட்டமும், கொல்லைக் கோடியில், ஏதோ நீண்டத்தகாத இடம் போல், குட்டிச் சுவர் மறைப்பில் இருக்கும் கழிவிடமும், அதைச் சுத்தம் செய்பவர்கள் வருவதற்காகவே இரண்டடி மூன்றடி உயரமுள்ள புழக்கடை வாசலும்....
அப்பொழுது ஹரியின் அப்பா, கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். சாதாரணமாய்க் கூப்பிடு தூரத்திலுள்ள ஆற்றிற்குப் போய்த்தான் அவர் குளிப்பது வழக்கம். கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு அசுரசாதகம் செய்வார். ஆனால், ஐப்பசி, கார்த்திக்க மாதங்களிலும், ஆடி மாதத்திலும் ஆற்றின் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூட மாட்டார். வெள்ளத்தைக் கண்டால் பயம். அந்தச் சமயங்களில் எல்லாம் கிணற்றடிக் குளியல்தான்.
என்னடா, தம்பூராவைத் துடைச்சியா?
சாவங்சார்த்தாலே எழுந்து ரெண்டு மணி நேரம் சாதகம் பண்றதுதானே.
"பாடினேம்பா'
போறாதுடா, இன்னும் அடதாள வர்ணத்துவ பல்டி. அடிக்கிறே, அட தாள வர்ணம் ஒழுங்கா வந்தாத்தான் மேலே போகலாம்.
………….
சரி எதுக்கு இங்கே வந்து நிற்கறே?
கொல்லைக் கதவைத் திறக்கணும்.
வந்துட்டாளா! கரெக்டா நான் குளிக்கிற நேரத்துல வந்துடறாடா. சித்த இருக்கச் சொல்லு. நான் குளிச்சிட்டு ஜபம் பண்ணிட்டுப் போயிடறேன்.
அப்பா, ஈர உடம்பை அவசர அவசரமாகத் துடைத்தபடி திருநீற்றைத் தண்ணீரில் குழைத்துப் பூசிக் கொண்டார்.
கதவு மறுபடியும் தட்டப்படும் ஓசை.
இரு அப்பா குளிக்கிறார்....
"ஹரி, புழக்கடைப் பக்கம் இரைந்து குரல் கொடுத்து விட்டு, அங்கே துணி துவைப்பதற்காகப் போட்டிருந்த கடப்பைக் கல்லின் மீது உட்கார்ந்தான், காலடியில் ஈரம் காசியாய்க் குத்திற்று. மழைக் காலச் சில்லிப்பில் குரல் கட்டுப் பிரியாமல் 'கரபுர' வென்றது.
கிணற்றுச் சகடையில் கட்டியிருந்த செப்புக் குடத்தை காபிழ்த்து போட்டுக் கொண்டு விரல்களால் தாளம் போட்டான் ஹரி. உதட்டுக்குள் முதல் நாள் மாலை அப்பா பாடிய ஸ்ரீராக தீட்சிதர் கிருதியை முனகினான்.
வாயை விட்டு பாடுடா. பாடப் பாட ராகம் மூட உதட ரோகம்.
அப்பா மூக்கைப் பிடித்தபடி ஜபத்தி வாழ்ந்தவர், சிம்மமெனக் கர்ஜிக்க, அவன் சத்தமாய்ப் பாடினான்.
ஸ்ரீ அபயாம்பா நின்னு சிந்திஞ்சுனு வாரிகி....
பேஷ், பேஷ்
அப்பா மூடிய கண்களைத் திறக்காமல், மகனின் சாரீர வளத்தைப் பாராட்டியபடியே ஜபத்திலாழ்ந்தார். சற்று நேரத்தில் அவர் பஞ்ச பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நப்ட்புரம் நகர்ந்தார்.
உம், இப்ப திறந்துவிடுடா.
அவர் சொல்லிய போது, அவன் சரணத்துக்கு வந்து விட்டிருந்தான். பாட்டை முடித்ததும், குரல் அடங்க மறுத்து, உதடுகள் அபயாம்பாளைப் பிரிய மனசில்லாமல், திரும்பத் திரும்பப் பல்லவியிலேயே புரன.
படக்
அவன் கதவைத் திறந்து விட்டதும், அந்தச் சிறிய வாசற்படியை விடவும் சிறியவளான அவள், துடைப்பமும் கையுமாக நின்று கொண்டிருந்தாள்.
இவள் தினமும் வருபவன் இல்லை . தினமும் வருபவள் பெரியவள். தலையில் ஒரு பானையும், வயிற்றில் ஒரு பானையுமாக வருவாள். அவள் வயிற்றைப் பார்க்கும் போதெல்லாம் ஹரிக்கு பயமாக இருக்கும்.
'இது என்ன இத்தனைப் பெரிசா இருக்கு?’
அவள் நிறைமாசமாக இருந்தது தெரியாமல், சிறு வயசில், இந்த வயிற்றைப் பற்றி யோசித்து, யோசித்து மண்டையைக் குழப்பிக் கொண்டதை, இப்பொழுது நினைக்கையில் சிரிப்புத் தான் வருகிறது அவனுக்கு.
அவ வரலையா. நீ. யாரு?
அம்மாவுக்கு குழந்தை பொறந்திருக்கு, என்னைக் கழுவிவிட்டு வரச்சொன்னது.
அவள், தன் கையிலிருந்த அலுமினியத் தூக்கை அருகிலிருந்த பவழமல்லிகை மரத்தடியில் வைத்து விட்டு, தலையிலிருந்த பானையைத் தரையில் வைக்க.
ஹரி, கிணற்றிலிருந்து தண்ணீரை இழுத்து, அவளது பானையில் படாமல், தனது செப்புக் குடத்தை உயர்த்திய வாக்கில் தண்ணீரைக் கொட்டியபடி அவளையே பார்த்தான்.
உதடுகள், தன் பாட்டுக்கு ஸ்ரீ அபயாம்பானைச் சுற்றிச் சுற்றி வந்தன.
'எத்தனூண்டு இருக்கா இவ.... எப்படி இந்த வேலையெல்லாம் செய்யறா?'
இதுதான் இவளைப் பார்த்தவுடன் தோன்றிய நினைப்பு.
அவள் கழிவறையைச் சுத்தம் செய்து விட்டுக் சாம்பியதும், புழக்கடைக் கதவைத் தாழிட்டுக் கொள்வதற்காகக் காத்து நின்றான் அவன்.
அவளோ, தன் வேலை முடிந்த பின்னும் தலையைச் சொறிந்து கொண்டு அங்கேயே நின்றாள்.
என்ன?
அம்மா பழயது போடுவாங்க.
பவழமல்லி மரத்தடியில் இருந்த அலுமினியத் தூக்கைக் கையில் எடுத்தபடி புன்னகை செய்தாள் அவள்.
பாவாடை நிறமே தெரியாமல் ஒரே கந்தலாகவும், சட்டையென்று இல்லாமல், எந்தச் சிறுவனுடைய யூனிபாரக் நாக்கிச் சட்டையோ-பொத்தான் சரிவர மாட்டப்படாமலும், செம்பட்டைப் பறந்த காடு போன்ற கூந்தலுமாய் அவள் இருந்தாலும் முகம் மட்டும் 'பளிச்' சென்று இருந்தது. மேனி நல்ல கறுப்பு, கண்கள் பெரிய கருநாவல் பழம் போல, குனிந்து, சற்று தடித்த உதடுகள். மூக்கில் மட்டும் சிவப்புக் கல் வைத்த வெள்ளி மூக்குத்தி.
ஹரி, ஒரு கணம் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டு உள்ளே ஓடினான்.
அம்மா, அவளுக்குச் சாதம் வேணுமாம்.
எவளுக்கு?
அதுதான் புழக்கடைல நிக்கறாளே அவளுக்கு....
கொஞ்சம் முன்னாடி வரமாட்டாளோ? நான் குளிச்சாச்சு. பழயதைத் தொட மாட்டேன். யாரும் வந்திருக்கா அம்மாவா பொண்ணா?
பொண்ணு
"அம்மாவானாலும் போயிட்டு அப்புறம் வரேன்னு சொல்லுவா. இவ