Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koottukkulle Sila Kaalam...
Koottukkulle Sila Kaalam...
Koottukkulle Sila Kaalam...
Ebook88 pages40 minutes

Koottukkulle Sila Kaalam...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவல், எனது வாசகர்களிடையே மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது... 'இப்படியொரு முடிவை நீங்கள் கொடுக்கலாம்' - என்று எழுதித் தள்ளியவர்கள் ஏராளம். அதே போல - 'இதுதான் முடிவு... நந்தினியைக் காப்பாத்தினீங்க...' இப்படி சிலரும் எழுதினார்கள்... குடிகாரக் கணவனைத் திருத்த முயற்சிக்கலாம்... அவனோடுப் போராடலாம். பட்டினி கிடக்கலாம். ஆனால், இதுவே தொடர்கதையாகும் போது... எந்தப் பெண்ணுக்குள்ளும் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றத்தான் செய்யும்... செயல் படுத்துகிறார்களோ-இல்லையோ. அது வேறு விஷயம்… இக்கதையின் நாயகி நந்தினி கூட நிஜமானப் பாத்திரம்தான். என்னிடமே சொல்லி அழுதிருக்கிறாள்... "எங்க அம்மா, வாழா வெட்டியா என்னை வீட்டுல வச்சுக்க மாட்டேங்கறா... அடுத்த தங்கையோடக் கல்யாணம் இதனாலத் தடைபடுமாம்... விதவையா வந்தாத்தான் ஏத்துப்பாங்க போல இருக்கு... கடவுளே... சீக்கிரமா என் தாலிய உன் உண்டியல்லே கொண்டு வந்துப் போடும்படி செய்யின்னு...” மேற்கொண்டு எதுவும் பேச முடியாதவளாய் அவள் விசும்பிய விசும்பல்... இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது... தயவு செய்து, இதைப் படிக்கும் சகோதரர்கள்- இது போன்றதொரு துர்பாக்கிய முடிவுக்கு, தங்கள் வீட்டுப் பெண்கள் தள்ளப்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும்... என் எழுத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய மரியாதையாகக் கருதுவேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003046
Koottukkulle Sila Kaalam...

Read more from Anuradha Ramanan

Related to Koottukkulle Sila Kaalam...

Related ebooks

Reviews for Koottukkulle Sila Kaalam...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koottukkulle Sila Kaalam... - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    கூட்டுக்குள்ளே சில காலம்...

    Koottukkulle Sila Kaalam…

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    'கூட்டுக்குள்ளே சில காலம்...' இந்த நாவல், எனது வாசகர்களிடையே மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது...

    'இப்படியொரு முடிவை நீங்கள் கொடுக்கலாம்' - என்று எழுதித் தள்ளியவர்கள் ஏராளம். அதே போல - 'இதுதான் முடிவு... நந்தினியைக் காப்பாத்தினீங்க...' இப்படி சிலரும் எழுதினார்கள்...

    குடிகாரக் கணவனைத் திருத்த முயற்சிக்கலாம்... அவனோடுப் போராடலாம். பட்டினி கிடக்கலாம். ஆனால், இதுவே தொடர்கதையாகும் போது... எந்தப் பெண்ணுக்குள்ளும் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றத்தான் செய்யும்... செயல் படுத்துகிறார்களோ-இல்லையோ. அது வேறு விஷயம்…

    இக்கதையின் நாயகி நந்தினி கூட நிஜமானப் பாத்திரம்தான். என்னிடமே சொல்லி அழுதிருக்கிறாள்...

    எங்க அம்மா, வாழா வெட்டியா என்னை வீட்டுல வச்சுக்க மாட்டேங்கறா... அடுத்த தங்கையோடக் கல்யாணம் இதனாலத் தடைபடுமாம்... விதவையா வந்தாத்தான் ஏத்துப்பாங்க போல இருக்கு... கடவுளே... சீக்கிரமா என் தாலிய உன் உண்டியல்லே கொண்டு வந்துப் போடும்படி செய்யின்னு...

    மேற்கொண்டு எதுவும் பேச முடியாதவளாய் அவள் விசும்பிய விசும்பல்... இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது... தயவு செய்து, இதைப் படிக்கும் சகோதரர்கள்- இது போன்றதொரு துர்பாக்கிய முடிவுக்கு, தங்கள் வீட்டுப் பெண்கள் தள்ளப்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும்...

    என் எழுத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய மரியாதையாகக் கருதுவேன்.

    இப்படிக்கு அன்புடன்,

    அனுராதா ரமணன்

    ***

    1

    நந்தினி, தனது போர்ஷன் கதவைத் திறந்து கொண்டு, அந்த பிரும்மாண்டமான வீட்டின் கூடத்தில் வந்து நிற்கும் போது-இரவு மணி ஒன்றோ, இரண்டோ...

    கூடத்தில் விதவிதமான சோபாக்களையும், ஊஞ்சலையும் தவிர-வேறு ஈ காக்கையில்லை.

    'எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்...'

    அப்பொழுதுதான், அன்று காலையில் அவளது மாமியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.

    இந்த வீட்டுல, கல்யாணம் ஆனவுடனேயே-அவங்க அவங்களை தனியா வச்சிடறதுதான் பழக்கம். சேர்ந்து இருக்கறது எல்லாம், உங்க மாமனாருக்குப் பிடிக்காது. நாலு பிள்ளைகளுக்கும் இதே வீட்டுலேயே நாலு போர்ஷன்... சும்மாவா, அந்தக்காலத்துலேயே திட்டம் போட்டு கட்டின வீடு... கட்டிடம் மாத்திரம் அஞ்சு கிரவுண்டுக்குக் குறையாம... உனக்கான போர்ஷன் இதோ- இந்த இடதுகைப்பக்கம். பெரியவங்க ரெண்டு பேரும் மாடியில... மூணாவது பிள்ளை-உங்க போர்ஷனுக்கு எதிர்த்த மாதிரி... நானும், உங்க மாமனாரும், இதோ- இந்த பின் பக்க போர்ஷன்லே... ஹால் எல்லாருக்கும் பொது...

    புது மணத் தம்பதிகளை ஆரத்தி சுற்றி, வரவேற்று, சுற்றிய ஆரத்தியை வாசலில் கொட்டிய அதே வேகத்தில் மரகதம் சொன்ன வார்த்தைகள்...

    நந்தினி வீட்டைச் சேர்ந்தவர்கள், அந்த வீட்டின் செழுமையையும், அலங்காரத்தையும் பார்த்துப் பார்த்து பிரமித்தனர்.

    அன்று காலை-எல்லோருக்குமே பொது வீட்டில்தான் சாப்பாடு....

    'பொது வீடு'-என்பது, அந்த பெரிய ஹாலும், அதை ஒட்டிய பெரிய சாப்பாட்டுக் கூடமும், அந்தக் கூடத்தைத் தாண்டிப் போனால் தென்படும் விசாலமான சமையற்கட்டும், சாமான் வைக்கும் அறையும்தான்...

    சமையற்காரன், நாலு எடுபிடி ஆட்களை வைத்துக் கொண்டு சமைத்துப் போட்டான்... சம்பந்தி விருந்து கிட்டத்தட்ட ஒரு கல்யாணம் போல அமர்க்களப்பட்டது...

    நடுப்பகலிலேயே ஒவ்வொருவராய் விடை பெற... மீதியிருந்தவர்கள் மாலை சிற்றுண்டியையும் ஒரு கை பார்த்துவிட்டு நகர...

    ராத்திரியும் எல்லாரும் சேர்ந்தே சாப்பிட்டுடலாம்... நாளையிலேருந்து அவங்க அவங்க வீட்டுல சமைச்சுக்கட்டும்.

    ராஜரத்னம்-அவர்தான் இந்த வீட்டுத் தலைவர் - நந்தினியின் மாமனார் சொல்லி விட்டார்....

    சரியாய் இரவு எட்டரை மணிக்கு சாப்பாடு... ஒன்பது மணி சுமாருக்கு-நந்தினியின் கணவன் குமார் ஜரிகை வேட்டியைக் களைந்து, புது பேண்ட் ஷர்ட்டை மாட்டிக்கொண்டு, கலைந்து கிடந்த கிராப்பை சீவியபடி, மனைவியிடம் சொன்னான்.

    வாசற்கதவை சாத்திக்கோ நந்தினி. நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன்...

    அவள், மை தீட்டிய விழிகளை அகல விரித்தாள்.

    இத்தனை நேரத்துக்கு மேலேயா...

    "உம்... பிஸினஸ் விஷயமா, அவசரமா ஒருத்தரை மீட்பண்ணியாகணும்.... அப்பாதான், உடனே போய்

    Enjoying the preview?
    Page 1 of 1