Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhaikaala Malligaigal
Mazhaikaala Malligaigal
Mazhaikaala Malligaigal
Ebook226 pages1 hour

Mazhaikaala Malligaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மழைக்கால மல்லிகைகள் நாவலில் வரும் கல்யாணி, சந்திரா இவர்களும் இதற்கு உதாரணம். அனும்மாவுக்கு இசையிலும், நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு. இசை, நாட்டியம் சம்பந்தப்பட்ட கதையென்றால் கேட்கவே வேண்டாம். அது ஸ்பெஷல் கதையாகவே அமைந்துவிடும். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காட்சிக்குத் தகுந்தபடி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் பாடல் வரிகள், நாட்டுப் பாடல்கள் எனப் பொருத்தமாக உபயோகித்திருப்பது இந்தக் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது.

சிறிது நேரமே வந்தாலும் நம் மனதில் இடம் பிடிக்கும் முகுந்தன், மற்றும் கனகசபை, ரங்கமணி, சுந்தரம் போன்ற விதவிதமான கேரக்டர்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, அலுப்பு தட்டாமல் கதையை கொண்டு செல்லும் நேர்த்தி.

Languageதமிழ்
Release dateNov 19, 2022
ISBN6580110009128
Mazhaikaala Malligaigal

Read more from Anuradha Ramanan

Related to Mazhaikaala Malligaigal

Related ebooks

Reviews for Mazhaikaala Malligaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhaikaala Malligaigal - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மழைக்கால மல்லிகைகள்

    Mazhaikaala Malligaigal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனுராதா ரமணனின் கதைகளை, அவருடைய முத்து முத்தான கையெழுத்தில், அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான்...

    முன்னுரை எழுதுவதற்காக, மீண்டும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி...

    அனும்மாவின் கதைகளைப் படிப்பவர்களுக்கு அந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை நெருக்கமாக பார்த்ததுபோல, பழகியதுபோல ஓர் உணர்வு வரும்... இதைப் பல வாசகர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

    அனும்மாவிற்கு சந்திரா என்றொரு சிநேகிதி... அவள் அழகைப் பற்றி, அவள் புத்திசாலித்தனத்தைப் பற்றி பெருமையுடன் பேசும் அதே சமயம் அவளின் குலத்தொழிலைப் பற்றி கூறும்போது வருத்தப்படுவார்...

    அனும்மாவின் சிநேகிதிகள் ஒரு சிலரைத் தவிர எல்லோரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நான் சந்திக்காத பலரில் சந்திக்க ஆசைப்பட்டது இந்த சந்திராவைத்தான். இந்த சந்திரா பல கதைகளுக்கு அனும்மாவுக்கு விதையாக இருந்திருக்கிறாள்.

    மழைக்கால மல்லிகைகள் நாவலில் வரும் கல்யாணி, சந்திரா இவர்களும் இதற்கு உதாரணம்.

    அனும்மாவுக்கு இசையிலும், நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு. இசை, நாட்டியம் சம்பந்தப்பட்ட கதையென்றால் கேட்கவே வேண்டாம். அது ஸ்பெஷல் கதையாகவே அமைந்துவிடும்.

    ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காட்சிக்குத் தகுந்தபடி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் பாடல் வரிகள், நாட்டுப் பாடல்கள் எனப் பொருத்தமாக உபயோகித்திருப்பது இந்தக் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது.

    கோபி, சந்திரா, மீரா இவர்களின் முக்கோணக் காதல்...

    புடவையைவிட ஒசத்தியான புருஷனையே நீ என்னைக் கேட்காம செலக்ட் பண்ணியிருக்கே. உனக்குத் தெரியாதா? என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் தேவநாதனின் ஆதங்கம்...

    சிறிது நேரமே வந்தாலும் நம் மனதில் இடம் பிடிக்கும் முகுந்தன், மற்றும் கனகசபை, ரங்கமணி, சுந்தரம் போன்ற விதவிதமான கேரக்டர்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, அலுப்பு தட்டாமல் கதையை கொண்டு செல்லும் நேர்த்தி.

    விக்கிரகமில்லாத கோவிலுக்கு விக்கிரகத்தை வைத்தால் புண்ணியம். மூன்று கால பூஜையோடு ஆராதனை நடந்து கொண்டிருக்கும் கோவிலில் இருக்கிற விக்கிரகத்தை பெயர்த்தெறிந்துவிட்டு இன்னொன்றைக் கொண்டுவந்து நிறுத்துவது பாவமில்லையோ?

    அட, திருட்டு நிலாவே... எந்த மேகத்துக்கு அஞ்சி, நீ என் வயிற்றுக்குள் வந்து ஒளிந்து கொண்டாய்?

    ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. என் வாழ்க்கையில் இந்த அர்த்தம் உன்னதமானது...

    இதுபோன்ற உயிரோட்டமான வரிகள் அந்தந்தக் கதாபாத்திரத்துக்குச் சிறப்பு சேர்க்கின்றன.

    அனும்மாவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோரும் நமக்குப் பரிச்சயமான மனிதர்கள்தான்...

    மனித உறவுகளை, அவர்களின் போராட்டங்களை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று பல நேரங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்...

    வெகுநாட்களுக்குப் பிறகு திரும்பப் படிக்கும்போது 30 வருடங்களுக்கு முன்னால் அனும்மாவுடன் சேர்ந்து ஒரு நடைப்பயணம் போய் வந்த சிலிர்ப்பான திருப்தி கிடைத்தது.

    அன்புடன்

    ஜெயந்தி சுரேஷ்

    1

    ஆருக்கும் அடங்காத நீலி

    பொன்னம்பலத்தாடும் காளி...

    பரமநாதன் தனை பாதியாய் மாற்றினாள்

    பரந்தாமன் முகமதில் பல் விளங்கேற்றினாள்...

    ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

    பளிங்குக் கூடத்தில் இரு ஜோடி ரோஜாப்பூப் பாதங்கள் சுற்றி சுழன்று ஆட...

    ஊஞ்சலில் அமர்ந்து, பாத லயத்துக்குத் தகுந்தாற்போல, கைகளைக் கொட்டித் தாளம் போடுகிறார் தேவநாதன்.

    ஊம்ஹும்... மீரா கால்லே வேகம் இருக்கற அளவுக்கு, முகத்துல பாவம் போதாது, எங்கே இன்னொரு தரம்.

    இரண்டு ஜோடிப் பாதங்களில் ஒரு ஜோடி சற்று ஒதுங்கி நிற்கிறது.

    இன்னொரு ஜோடிப் பாதங்களுக்குரியவள், முன் பாடிய வரிகளுக்கு ஏற்ப, மறுபடியும் அபிநயம் பிடிக்கிறாள்.

    ‘காரணம் கேட்டு வாடி... சகியே

    காதலன் சிதம்பர நாதன்

    இன்றும் வராத.’

    தேவநாதன், வலது கையை உயர்த்தி கொஞ்சம் நிறுத்தும்படி சாடை காட்டுகிறார்.

    முகத்துல ஒரு ஏக்கம் இருக்கணும் மீரா... புருஷன் இன்னும் வீட்டுக்கு வரல்லே... பெண்டாட்டி மனசுல என்னென்ன சங்கடம் இருக்கும்... நேத்துக்கு நாம் சரியா முகம் கொடுத்துப் பேசலையோ... உபசரிக்கறதுல ஏதாவது குறை வச்சிட்டோமோ... இப்படி எத்தனை வேதனை இந்தப் பாட்ட பாடுறவ, சிவபெருமானைத் தன்னோட காதலனா நினைச்சுப் பாடறா. கல்லாலேயும் வில்லாலேயும் கட்டி வச்சு அடிச்சேனா... இல்ல, கண்ணப்ப நாயினார்போல எட்டிதான் உதைச்சேனா... நான் எந்த குற்றமும் செய்யலையே... அப்படியிருக்க என் காதலன் ஏன் இன்னும் வரல்லே!...ன்னு தோழிகிட்ட கேட்கறா...

    மீரா - பதினெட்டு வயசு இளம் கொடி, தரையைப் பார்த்து மெள்ள நகைக்கிறது...

    ஒரு ஓரமாய் நின்ற இன்னொரு கொடியும் நகைக்கிறதுதான்... ஆனால் அந்தச் சிரிப்பில் கொஞ்சம் குறும்பு கலந்திருக்கிறது…

    அடிக்கடி தேவநாதனின் முதுகுக்குப் பின்னால் அமர்ந்து சந்தனக் கல்லில் சந்தனமிழைக்கும் வாலிபனின் பக்கம், அவளது பார்வை சென்று, சென்று மீள்கிறது.

    ‘ஏய்... உன்னைத்தானே... கோபி... பாவி... சந்தனக் கல்லுலே அப்படி என்னதான் இருக்கு... என்னைக் கொஞ்சம் நிமிர்ந்துதான் பாரேன்...’

    எங்கே... அந்த இளைஞன், சந்தன கல்லோடு ஐக்கியமாகி விட்டானே...

    சந்திரா...

    அம்மா சந்திரா...

    தேவநாதன் ஒதுங்கி நிற்கும் இவளைப் பார்க்க, இவள் திடுக்கிட்டு சுய உணர்வு பெறுகிறாள்...

    சார்...

    இதே பதத்துக்கு நீ கொஞ்சம் ஆடிக் காட்டும்மா...

    சந்திரா அவரெதிரில் வந்து நிற்கிறாள். அவர் பின்னால் அமர்ந்திருந்த கோபி, இவள் கண்களுக்குத் தெரியவில்லை.

    "பூரண தயவுள்ள

    பொன்னம்பலத் துரையெனை

    பொறுமையை சோதிக்க

    மறைமுகமான தன்

    காரணம் கேட்டு வாடி..."

    கோபி அரைத்துக் கொண்டிருந்த சந்தனக் குழம்பெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பதுமையானாற்போல சந்திரா...

    அடடா... அது என்ன விழி வீச்சு, உதட்டுச் சுழிப்பில் லேசாய் எட்டிப் பார்க்கும் பொய் கோபம்… வளைந்த புருவத்தில் பொதிந்திருக்கும் ஏக்கம். தோழியிடம் தன் நிலைமையைச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்கிற வெட்கம்.

    அவள் பார்வையால் கோபி இருக்குமிடத்தை வருடியபடி ஆடுகிறாள். மீரா, முகவாயில் கைவைத்து சினேகிதியின் ஆட்டத்தில் பிரமித்து நிற்கிறாள்.

    தேவநாதனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவிழ்ந்த குடுமியை, மறுபடியும் உதறிக் கட்டிக்கொண்டு பலமாய் தாளம் போடுகிறார்.

    அற்புதமா ஆடிட்டே குழந்தை...

    அவர் சொல்லி முடிக்கும் முன்பே சமையலறையிலிருந்து இரட்டை நாடியாக உடம்பை அசைக்க மாட்டாமல் அசைத்துக்கொண்டு தேவநாதனின் மனைவி பூஷணம் வெளியே வருகிறாள்...

    முகத்தில் கடுகு பொரிகிறது.

    இவ ஆடினான்னா அது அந்த ரத்தத்துக்கே உரிய ஆட்டம் புலிக்கு பொறந்தது பூனையாகுமா... சந்திரா யாரு பெத்த பொண்ணு...! இன்னிக்கும் இவங்க அம்மா, ஒரு அடவு புடிச்சாங்கன்னா பல்லுபோன கிழம்கூட ஓடி வருமே... இவ ஆடறதுக்கு கேட்பானேன்.

    சந்திரவின் முகம் ‘சட்’டென வாடினாலும் தனது வழக்கமான புன்னகையினால் சமாளித்துக் கொள்கிறாள்.

    வாடி... நாம மாடிக்கு போகலாம்...

    மீரா, அவளை மெள்ள அந்த இடத்தை விட்டு நகர்த்தும் முயற்சியில் ஈடுபடுகிறாள்.

    பூஷணம் இப்போதைக்கு ஓய மாட்டாள் என்பது அவளுக்குத் தெரியும்.

    தன்னைப் பெற்ற தாயைப் பற்றி ஒருத்திக்குத் தெரியாதா என்ன?

    தேவநாதன் மிருதுவாகச் சொல்கிறார்:

    சந்திரா-கல்யாணி பெத்த பொண்ணுன்னா மீரா, பரம்பரை பரம்பரையா நாட்டியத்தையும், சங்கீதத்தையும் இரு கண்களா நினைக்கற என் வம்சத்துல வந்தவ பூஷணம் அதை மறந்துட்டுப் பேசறியே...

    பூஷணம் ‘ணக்’கென முகத்தைத் தோளில் இடித்துக் கொள்கிறாள்.

    ஆளழகன்... ஆனா துப்பட்டிக்காரன்னு எங்க அம்மா சொல்லுவாங்க... அது மாதிரி சங்கீத சிகாமணி, நாட்டியக்கலா சக்ரவர்த்தியின்னு பேருதான் இருக்கு கை நிறைய என்னிக்கு காசைப் பார்த்திருக்கிங்க...

    கோபி? சின்ன முறுவலுடன் பூஷணத்தையும் தேவநாதனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் தன் வேலையில் ஈடுபடுகிறான்.

    பூஷணம், அதற்கும் இடைஞ்சலாகக் குறுக்கிடுகிறாள்.

    ஏண்டாப்பா... சந்தனக் கல்லை, இன்னிக்குள்ளே அரைச்சே தேய்ச்சிடறதா உத்தேசமா... எழுந்திரு, நல்ல வேலைக் கொடுத்தாரு உங்க மாமா உனக்கு...

    இந்தா... உன் கோவம் எதுவானாலும் என்கிட்ட காட்டு... அவன் பச்சை பிள்ளை... அவனை ஏன் கரிக்கிறே...?

    ஆமா... பச்சைபிள்ளை. பல்லைத்தட்டி தொட்டில்லே போட்டு ஆட்டுங்க... காலையில... இட்லியும் சட்னியுமா, உங்கள் கூடத்தானே இவனையும் உட்கார வச்சுப்போட்டேன்...

    அதுக்கென்ன இப்ப...

    தேவநாதனின் குரலிலும் கடுப்பு ஏறுகிறது.

    நீங்க பாடம் படிக்க வர சீடப் பிள்ளைங்ககிட்ட எல்லாம் வறட்டுத் தவளை மாதிரி கத்தினதுலேயே தின்ன நாலு இட்லியும், குடல்சுவத்தோட சுவரா கரைஞ்சு போயிருக்கும்... என் மக மீரா... பதினெட்டு வயசுக்கு ஒரு பொண்ணு ரெண்டு இட்லிதான் திம்பாளா... இவன் ஆறு இட்லி தின்னுட்டு, உட்கார்ந்து சந்தனமரைக்கிறான்.

    தேவநாதன் சிரிக்கிறார்...

    மீரா அதுக்கு மேல தின்னா, அவளாலே ஆட முடியாதுடி... கசிர் வாங்கும்... குனிஞ்சு தரையத் தொட முடியாது...

    அதுக்காக... பட்டினி போட்டு பட்டினி போட்டு கருவேப்பிலைக் கொழுந்து மாதிரி இருக்கற ஒரே மகளை எலும்புக்கூடா ஆக்கப் போறீங்களா... இது உங்களுக்கே நல்லா இருக்கா...

    நிறைய போடு... அவ சரீரத்தையும் உனக்கு ஜோடியா ஆக்கிடு... அப்புறம் இவ சபையில் வந்து நிற்கமுடியாது... ‘அவ பொண்ணை மேடை ஏத்திட்டீங்க... இவ பொண்ணுக்கு தில்லானா வந்துட்டீங்க’ன்னு என்னைக் குத்தம் சொல்லாதே உரலுக்குப் புடவை கட்டினா மாதிரி அவ மேடையில வந்து நின்னா, நான் தலையில துணியப் போட்டுட்டு ஓடியே போயிடுவேன்...

    அப்ப என்னை உரலுங்கறீங்க... அப்படித்தானே...?

    சேச்சே! மூளை மாத்திரம் உனக்கு உலக்கைக் கொழுந்தும்பேன், அவ்வளவுதான்...

    தேவநாதன் இதைச் சொல்லும்போது சிரிக்கவில்லை. ஆனால் கோபிக்கு சிரிப்பு பொங்கிப் பொங்கி வருகிறது; அவனைப் பார்த்துதான் புன்னகைக்கிறார் அவர்.

    இந்தா சிரிக்காதே உன் கதைதான் சிரிப்பா சிரிக்குதே இதுல கேலிச் சிரிப்பு வேறயாக்கும்.

    இங்கே பாரு பூஷணம்... என்னயிருந்தாலும் அவன் என் அக்கா மகன். உனக்கு நாத்தனார் பிள்ளை... மரியாதை கொடுக்காட்டியும் வார்த்தைய சிதறவிடாதே.

    பெரீய்ய நாத்தனாரு... சொத்து சுகம் எதுவுமில்லாம, கட்டின துணியோட வந்ததுமில்லாம சோத்துக்கு பாரமா ஒரு பிள்ளைய வேற நம்ம தலையிலக் கட்டிட்டுப் போனவ நாத்தனாரில்லே... நாத்தமெடுத்த நாரு...

    கோபி, தன் கையிலுள்ள சந்தனத்தையே பார்த்தபடி விறைந்து நிற்கிறான்...

    ஆ... வார்த்தைகள்... சிலருடைய

    Enjoying the preview?
    Page 1 of 1