Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raasi
Raasi
Raasi
Ebook266 pages2 hours

Raasi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சமூகக் கண்ணோட்டத்துடன் ஒரு நாவல் எழுதும் படி அமரர் எஸ்.ஏ.பி. பணித்ததற்கேற்ப இந்த நாவலை எழுதினேன். கோத்திரப் பிரசினையை எடுத்துக் கொள்ளும்படி சொன்னவரும் அவர்தான். கோத்திரம் என்பது இந்துக்களில் சில வகுப்பினரிடையே மட்டும் இருந்து வருகிற விஷயம். அதுகூடப் பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. சில குழப்பங்களுடனும் தடுமாற்றங்களுடனும் நான் எழுதி முடித்த தொடர்கதை இது.
எனினும் காதலும் இளமையும் இந்தக் கதையில் நயமாகவும் சுவையாகவும் வந்திருக்கிறதென்று பல வாசகர்கள் பாராட்டினார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது சமீப காலத்துப் புரட்சிக் கருத்து. இந்தியில் ஒரு திரைப்படம் கூட அண்மையில் வெளிவந்திருக்கிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் அப்படி எழுதியிருப்பதை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.
கதைக்கு நிச்சயமான ஒரு முடிவைத் தராமல் இரண்டும் கெட்டானாக விட்டிருக்கிறேன் என்று சில வாசகர்கள் அப்போது தெரிவித்தார்கள். இருக்கலாம். டாஃபன் டு மாரியர் என்ற பிரபல நாவலாசிரியரின் சில நாவல்கள் அப்படி முடிந்திருக்கும். கதையின் முடிவை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டிருப்பார். அவருடைய படைப்புக்களினால் ஏற்பட்ட தாக்கம் என்னை ஓரளவு பாதித்திருந்த கட்டம் அது. அதனால்‘ராசி’யின் முடிவும் அப்படி அமைந்திருக்கக் கூடும்.
ரா.கி. ரங்கராஜன்
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580126705437
Raasi

Read more from Ra. Ki. Rangarajan

Related to Raasi

Related ebooks

Reviews for Raasi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raasi - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    ராசி

    Raasi

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    முன்னுரை

    சமூகக் கண்ணோட்டத்துடன் ஒரு நாவல் எழுதும் படி அமரர் எஸ்.ஏ.பி. பணித்ததற்கேற்ப இந்த நாவலை எழுதினேன். கோத்திரப் பிரசினையை எடுத்துக் கொள்ளும்படி சொன்னவரும் அவர்தான். கோத்திரம் என்பது இந்துக்களில் சில வகுப்பினரிடையே மட்டும் இருந்து வருகிற விஷயம். அதுகூடப் பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. சில குழப்பங்களுடனும் தடுமாற்றங்களுடனும் நான் எழுதி முடித்த தொடர்கதை இது.

    எனினும் காதலும் இளமையும் இந்தக் கதையில் நயமாகவும் சுவையாகவும் வந்திருக்கிறதென்று பல வாசகர்கள் பாராட்டினார்கள்.

    திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது சமீப காலத்துப் புரட்சிக் கருத்து. இந்தியில் ஒரு திரைப்படம் கூட அண்மையில் வெளிவந்திருக்கிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் அப்படி எழுதியிருப்பதை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.

    கதைக்கு நிச்சயமான ஒரு முடிவைத் தராமல் இரண்டும் கெட்டானாக விட்டிருக்கிறேன் என்று சில வாசகர்கள் அப்போது தெரிவித்தார்கள். இருக்கலாம். டாஃபன் டு மாரியர் என்ற பிரபல நாவலாசிரியரின் சில நாவல்கள் அப்படி முடிந்திருக்கும். கதையின் முடிவை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டிருப்பார். அவருடைய படைப்புக்களினால் ஏற்பட்ட தாக்கம் என்னை ஓரளவு பாதித்திருந்த கட்டம் அது. அதனால்‘ராசி’யின் முடிவும் அப்படி அமைந்திருக்கக் கூடும்.

    ரா.கி. ரங்கராஜன்

    1

    ஆக்ஸிடெண்டுக்கு ஒரு ஸீயா, ரெண்டு ஸீயா சித்தி? என்று பாட நோட்டை எடுத்து வந்து கேட்டாள் மாலு.

    ஆபீசிலிருந்து எடுத்து வந்த ஃபைல்களை இப்போது பிரிக்கலாமா இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பிரிக்கலாமா என்று யோசனை செய்துகொண்டிருந்த சியாமா அவளைத் திரும்பி நோக்கினாள். மேஜை மீதிருந்த விளக்குக் குல்லா போட்டிருந்ததால் அதன் வெளிச்சம் மாலுவின் கழுத்துக்குக் கீழே குறுக்காகக் கோடு கிழித்த மாதிரி விழுந்திருந்தது. அந்தப் பத்து வயதுச் சிறுமியின் முகத்தில் ஒளி படவில்லையாயினும் அவள் நல்ல சிவப்பாகையால் பளீரென்று தெரிந்தது. அந்த வெளிச்சத்தின் சர்க்கஸைச் சியாமா ரசித்தாள்.‘கழுதை! வளர்ந்தால் ஊரைச் சாப்பிட்டு விடுவாள் அழகில்!’

    சொல்லு சித்தி, ஒரு ஸீயா ரெண்டு ஸீயா?

    முதல்லே சித்தின்னு கூப்பிட்டதுக்குப் பத்துத் தோப்புக்கரணம் போடு. இருந்திருந்து எனக்கு இருபது வயது ஆகல்லே. சித்தி சித்தின்னு சொல்லி என்னைக் கிழவியாக்காதே, அக்கான்னு கூப்பிடுன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்? ஊம்?

    ஸாரி சித்—அக்கா என்று மாலு கன்னத்தில் போட்டுக்கொண்ட போது, அதைக் கேட்டுப் பின்புறத்துச் சமையலறையில் கடகடவென்று சப்பாத்தி இட்டுக் கொண்டிருந்த அக்கா ரங்கம்மாவும் முன்புறத்து அறையில் கொசு ஆயின்ட்மென்ட்டைக் காலுக்கும் கைக்கும் தடவிக் கொண்டிருந்த மாமா வெங்கடேசுவரனும் ஒரே சமயத்தில் சிரிப்பது கேட்டது.‘நினைவு தெரிந்த நாளாய் அக்காவின் கணவனை மாமா என்று தானே நாம் கூப்பிட்டுக் கொண்டு வருகிறோம்’ என்று எண்ணிக்கொண்டாள் சியாமா. ஆனால் வெங்கடேசுவரன் ஒரு தடவை கூட ஆட்சேபித்த தில்லை. தாத்தா என்று அவள் கூப்பிட்டு வந்திருந்தால் கூட அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். சியாமா அவருக்குக் கடைசி மைத்துனியல்ல. முதல் மகள்.

    ரெண்டு ஸீ, மாலு என்றாள் சியாமா.இரு, நோட்டை இப்படி வைச்சுட்டு, அந்த வார்த்தையை எழுது பார்க்கலாம். எழுதினாத்தான் ஞாபகம் வரும். பென்ஸில் எங்கே?

    நான் பென்ஸில் வைச்சுக்கிறதில்லே, அக்கா. எல்லாம் பேனாதான்.

    ஏன்?

    பென்ஸில்னா சீவணும். சீவணும்னா பிளேட் வேணும். பிளேட் வைச்சிட்டிருந்தால் விரல்லே வெட்டி ரத்தம் கொட்டுது. பயமாயிருக்கு.

    சியாமா தலையை அசைத்தாள்.சே சே! இந்த வயசிலேயே நீ வெட்டுக் காயம், ரத்தம் இதுக்கெல்லாம் பயந்தாயோ, பின்னாலே அவ்வளவுதான். நல்லா ஜான்ஸி ராணி மாதிரி உலகமே டோன்ட் கேர்னு இருக்க வேணாம்? என்ன?

    மாலு தலையை ஆட்டினாள் புரிந்த மாதிரி.

    சரி. எழுது.

    மாலு, தன் வழக்கப்படி நாக்கு நுனியைத் துருத்திக்கொண்டு,‘ஏ- ஸீ - ஸீ என்று எழுதத் தொடங்கினாள்.

    ஸீயா இது? இ மாதிரி இருக்கு. இப்படிக் கொடு பேனாவை. என்று சியாமா அவளிடமிருந்து நோட்டையும் பேனாவையும் வாங்கிக்கொண்டு, எழுதிக் காட்ட முயன்றாள். ஆனால்‘ஏ’க்கு மேல் எழுத முடியவில்லை.

    ஏண்டி மாலு, இந்த வீட்டில் நான் ஒருத்தி திக்கித் திக்கிப் பேசுவது போறாதா? பேனா கூடத் திக்கணுமா? என்று சிரித்தாள்.

    நீ எங்கே சித்

    ஊம்!

    நீ எங்கே அக்கா திக்குறே? எப்பவாச்சும் ஒரு வாட்டி திக்குது. அப்ப உனக்கு அது எத்தனை அழகா இருக்கு தெரியுமா?

    ஐஸ்! ஐஸ்? என்றாள் சியாமா. ஆனால் மாலு சொன்னது உண்மைதான் என்று அவளுக்குத் தெரியும். எப்போது திக்கும், எப்போது திக்காது என்று அவளாலேயே சொல்ல முடியாது. எப்போதாவது ஒருமுறை எதிர்பாராதபடி திக்கிவிடும். அது அவளுக்கு ஒரு தனிக் கவர்ச்சி தருகிறது என்று அவள் சினேகிதிகள் சொல்லுவதுண்டு. பி.யூ.ஸி.யில் படித்துக் கொண்டிருந்த போது, ஒருத்தி,சியாம், உண்மையைச் சொல்லிடு. உனக்கு அழகா இருக்கு என்கிறதுக்காகத்தானே நடுநடுவே திக்கற மாதிரி பாசாங்கு செய்யறே? என்று கூடக் கேட்டிருக்கிறாள்...

    தடக் தடக்கென்று மின்சார ரயில் விரைந்து மறையும் ஓசை கேட்டது. இரண்டு தெரு தாண்டினால் மாம்பலம் ஸ்டேஷன். ஆகவே நாள் பூரா இந்தப் பின்னணி ஒலித்துக் கொண்டேயிருக்கும். இப்போது போவது டபிள் யூனிட்டோ? தடக் தடக் அதிக நேரம் கேட்கிறதே?

    பைல் கட்டில் மேலிருந்த நாடாவை அவிழ்ப்பதற்காகத் திரும்பினாள் சியாமா.

    மரப் பீரோவின் மேல் பகுதியில் இருந்த கண்ணாடியில் அவள் வட்ட முகமும் சுருட்டைக் கூந்தலும் மங்கலாகப் பிரதிபலித்தன. கழுத்தை ஒரு வெட்டு வெட்டி உதட்டைச் சுழித்தாள். பிரதிபிம்பமும் அப்படியே செய்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒரு முறைப்பு முறைத்து விட்டுப் பைலைப் பிரித்தாள்.

    ‘பத்திரம், பத்திரம்’என்று ஹெட் கிளார்க் வேதாசலம் அன்று மாலை தன் பெண்பிள்ளைக் குரலில் எச்சரித்தது அவள் காதில் ஒலித்தது. கமர்ஷியல் டாக்ஸ் துறையில் சியாமா ஜூனியர் அஸிஸ்டென்ட்டாக - இளநிலை எழுத்தராக இருந்தாள்.டி. ஸீ.டி.ஓ. ரொம்பக் கண்டிச்சு சொல்லியிருக்கார், ஃபைல்களை வீட்டுக்கு எடுத்துப் போகக் கூடாதுன்னு. இந்த டைப்பிஸ்ட் - கடன்காரன் வந்திருந்தான்னா உன்கிட்டே கொடுக்கவே மாட்டேன். எல்லாத்திலேயும் ஆர்டர் பாஸ் பண்ணியாச்சு. கார்பன் வைச்சு, கையாலேயே காப்பி எடுத்திடு. காலையிலே வர்றப்போ கொண்டு வந்திடு மறக்காமே என்பது வேதாசலத்தின் எச்சரிக்கை...

    ‘ஆபீசுக்குப் போனால் அங்கேயும் ஒரு பயந்தாங்கொள்ளி!’என்று நினைத்துக் கொண்டே முதல் பைலில் நகல் எடுக்க ஆரம்பித்தாள். மவுண்ட் ரோடில் ஒரு பகுதி அவளுடைய அஸ்ஸெஸ்மென்ட் சர்க்கிள். பெரும்பாலும் பெரிய பெரிய ஜெனரல் ஷாப்கள் தான். ஒவ்வொரு பைலும் ஒவ்வொரு ஷாப்பைப் பற்றியது. அவர்கள் கொடுத்துள்ள மாதாந்தர ரிடர்ன், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரித்தொகை, அது பற்றிய நோட்டீஸ், ஷாப்காரரின் ஆட்சேபம், கெஞ்சல், மறுபரிசீலனை, குறிப்பு, இறுதியான ஆர்டர் - இப்படி அதனதன் சரித்திரம் அதனதன் பைலில்...

    இந்தாம்மா சியாமா. கொசுத் தடுப்பு ட்யூப்பை அவள் மேஜைமீது கொண்டுவந்து வைத்தார் வெங்கடேசுவரன். தான் தடவிக் கொண்டிருந்த ஆயின்ட்மென்ட்டின் நெடி அவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று சற்று எட்டவே நின்றார். கொஞ்சம்தான் இருக்கு. நல்லா அழுத்தி எடுத்து, காலிலே தடவிக்கொள். கொலைக் கொசு!

    தாங்ஸ், மாமா.

    ஃபைல் பார்க்கிறாயாக்கும்?

    ஆமாம் மாமா.

    நிறைய எடுத்து வந்திருக்கியே?

    ஃபைலை மூடிவிட்டுப் புன்னகையுடன் நாற்காலியை அவர் பக்கமாகத் திருப்பிக்கொண்டாள் சியாமா.மாமா, என்னவோ சொல்லணும்னு நினைக்கிறீங்க. அவுட் வித் இட். அப்புறமா ஃபைலைப் பார்த்துக்கிறேன்.

    வேண்டாம்மா. சொல்றதுக்கு முன்னேயே உனக்குக் கோபம் வர்றதே?

    கோபமா? உங்க மேலேயா?சொல்கையில் சியாமாவுக்குக் குரல் தழதழத்தது.

    ‘எத்தனையோ பேருக்கு உறவினர்கள் இருக்கி றார்கள். ஆனால் எங்க வெங்கடேசுவர மாமா மாதிரி யாருக்குக் கிடைக்கும்?’என்று எண்ணிக்கொண்டாள் அவள்.

    பத்து வருடத்துக்கு முந்தி...

    சியாமாவின் அப்பா இறந்து போய் அன்று பத்து நாளாகிறது. அம்மாவுடன் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தார். முகூர்த்தத்துக்கு இருந்தார், சாப்பாடும் சாப்பிட்டார். திரும்பினார் வீட்டுக்குள் நுழையும்போது மார்பை வலிக்கிற மாதிரி இருக்கிறதே என்று சொல்லி விட்டு ஈஸிசேரில் சாய்ந்தவர்தான், எழவில்லை.

    பத்து நாள் காரியங்களும் முடிந்து... புறப்பாடுகள்...

    சியாமாவுக்கு மூன்று அக்கா. மூன்று பேரும் கல்யாணமானவர்கள். சகோதரர் கிடையாது. ரங்கம்மா அக்காதான் மூத்தவள். எல்லா அக்காக்களும் எல்லா மாப்பிள்ளைகளும் வந்திருந்தார்கள். அன்று ஒவ்வொருவராக ஊர் திரும்ப ஏற்பாடு நடக்கிறது... ஏன் பேச்சுக் குரலே இல்லை?... மௌனமாய் லக்கேஜ்கள் கட்டினார்கள்:

    மௌனமாய் டாக்ஸி அழைத்து வந்தார்கள். அந்த நிசப்தத்துக்குக் காரணம்? புரியவில்லையா என்ன?

    விதவை அம்மாவுக்கும் கடைசித் தங்கை சியாமாவுக்கும் இனி வழி என்ன என்பதுதான். ஒரு சாதாரண வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த அப்பா, மூன்று பெண்களுக்குக் கல்யாணம் செய்து தந்ததே பெரிய காரியம். இனிமேல்? இவர்களை யார் அழைத்துச்சென்று சம்ரட்சிப்பது? யாருக்குக் கட்டுப்படியாகும்?

    மழையாகக் கொட்டாமல் கறுத்துத் தொங்கியபடி இருக்கும் மேகம்போல் அந்தப் பிரசினைதான் வீடெங்கும் வியாபித்திருந்தது.

    உடம்பைப் பார்த்துக் கோம்மா... ஐய, எதுக்கம்மா இத்தனை முருங்கைக்காயும் வாழைக்காயும்... சியாமி, அம்மாவைப் படுத்தக் கூடாது... சார், டாக்ஸி வெட்டியா காத்திட்டிருக்குது, சார். - இப்படி, மையத்தை விட்டு விட்டு ஓரத்தையே கிள்ளுகின்ற உரையாடல்கள்...

    எல்லார் மனத்திலும் இருப்பதை உணர்ந்து, அதை உடைத்துவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் போல, வெங்கடேசுவரன் பகிரங்கமாகவே அறிவித்தார்.அம்மா, நான் விழுப்புரம் வேலையை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த மாசம் இங்கே வந்து வேறு வேலை தேடிக்கிறேன்; எங்களோடு நீங்களும் சியாமாவும் இருந்துக்கலாம் என்று.

    ரங்கம்மா அக்கா கூட,இருக்கிற வேலையை விட்டு விட்டு இங்கே வருவானேன்? இவர்களை அங்கே அழைத்துக் கொண்டால் போச்சு என்றாள்.

    வேண்டாம் ரங்கா, வேறு வழியில்லாமல் பெண் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டாள் என்ற இளப்பம் உன் அம்மாவுக்கு வரக்கூடாது. அவர்கள் வீட்டில் நாம் இருக்கிற மாதிரி உலகத்துக்குக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார் அவர். ஆசிரியர் வேலை ராஜினாமா... நூறு ரூபாய் குறைவான சம்பளம்... சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் புதிய உத்தியோகம்... பிறகு அம்மா இறந்து போனாள். சொந்தப் பிள்ளை மாதிரி எல்லாம் செய்தார்...

    இப்படிப்பட்ட மாமா மீது சியாமாவுக்குக் கோபம் வருமா?...

    சப்பாத்தியும் சட்டினியும் தட்டில் வைத்து எடுத்துவந்தாள் ரங்கம்மா, மேஜை மீதிருந்த பைல்களை ஓரமாய் நகர்த்திவிட்டு, தட்டை மேஜைமீது வைத்தாள்.‘நீங்கள் போங்கள். நான் பேசிக்கொள்கிறேன்’என்று கணவரிடம் ஜாடை காட்டி அனுப்பினாள்.அந்தத் திருவள்ளூர் வரன் தகைந்து வரும் போல் இருக்கிறது, சியாமா. நீ ஒண்ணும் பிடிகொடுத்துப் பதில் சொல்லக் காணோமேன்னு...

    பார்த்துக்கலாமே அக்கா? முன்னேகூட இப்படி ஒண்ணு ரொம்ப ரொம்பக் கிட்ட வந்து, பிறகு வேறே பெரிய வரன் கிடைச்சவுடன் நம்மைக் கைகழுவிட்டுப் போயிடலையா...

    இது கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டிய சமாசாரம் என்று ரங்கம்மாவுக்குத் தோன்றியது. மெல்லத் திரும்பிப் போய்விட்டாள்.

    ‘கல்யாணம் என்று ஒன்று வேண்டியதுதானா அக்கா? ஆண்பிள்ளைத் துணை இல்லாமலேயே வாழ்ந்துவிட முடியாதா?’என்று எவ்வளவோ முறை சியாமா கேட்க எண்ணியதுண்டு. ஏன் கேட்கவில்லை? அப்படியொரு முரட்டுத்தனம் காட்டி மாமாவின் மனசை வருத்தப்படுத்தக் கூடாதென்ற நல்ல எண்ணமா? அல்லது அப்படிப் பேசுவது படித்த பண்பாடுள்ள பெண்ணுக்கு அழகல்ல என்ற நாகரிக உணர்வா? அல்லது, அல்லது... அந்தப் பேச்சை அவர்கள் அசலாக எடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் நம்மைக் கன்னியாகவே விட்டுவிடக் கூடாதே என்று உள்ளூர அவள் மனம் ஏங்குகிறதோ ஒரு வேளை?...

    பால் பாயிண்ட் பேனாவை வைத்து விட்டு விரலைச் சொடுக்கிக்கொண்டாள் சியாமா! விரல்கள் எப்படிச் சிவந்துவிட்டன. மாலுவுக்கு நாமொன்றும் குறைவில்லை நிறத்தில்.

    இரண்டாவது பைலைப் பிரித்திருப்பாள்...

    கணகணவென்ற மணியோசையும் வீய்ய்ய்ங் என்று ஊளையுமாக எங்கோ ஒரு தீயணைப்பு வண்டி விரைந்து கொண்டிருப்பது காதில் விழுந்தது.‘பாவம், எந்த வீட்டில் தீ விபத்தோ?’ என்று ஒரு வினாடி நினைத்துக்கொண்டு விட்டு மறுபடி வேலையில் மூழ்கினாள். ஆனால் உடனேயே இன்னொரு மணியோசை -

    திகைப்புடன் வாசலுக்குப் போய்ப் பார்த்த போது, தெருக்கோடியில் செக்கச் செவேலென்று ஒரே ஜோதியாக வானத்தில்...

    மாமா! நெருப்பு! குடிசைப் பகுதியிலே? என்று உள்புறம் ஒரு குரல் கொடுத்து விட்டு, மூட்டை முடிச்சுகளுடன் அலறி அடித்துக்கொண்டு ஓடி வரும் குடிசைவாசிகளிடம் ‘இப்படி வையுங்கள்’ என்று இடம் கொடுத்தாள்.

    சியாமா! நீ எங்கேடி போறே? போகாதே! எப்படி இருக்குமோ என்னவோ? என்று ரங்கம்மா கூவுவது அவள் காதில் விழவில்லை.

    அந்தத் தெருவும் அதற்கு இணையாக இருந்த மூன்று தெருக்களும் முடிகின்ற இடத்தில் ஒரு குடிசைப் பகுதி. ஐந்நூறு குடிசைகள் இருக்கும். அதன் நடுவே இருபது முப்பது குடிசைகள் திமுதிமுவென்று எரிந்து கொண்டிருப்பதும் மூன்று தீயணைப்பு வண்டிகள் தண்ணீரைப் பீய்ச்சிக் கொண்டிருப்பதும் விளக்குகள் அணைந்துவிட்ட அந்தக் கும்மிருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. அலை அலையாய் மண்டிக்கொண்டு வந்த புகை மூட்டத்தில் சியாமாவுக்கு நெஞ்சு கமறியது. அகப்பட்ட குழந்தை குட்டிகளையும் கிடைத்த தட்டு முட்டுச் சாமான்களையும் பொறுக்கிக் கொண்டு எதிரில் பலர் ஓடி வந்து மோதிக்கொண்டு தாண்டிச்செல்கிறார்கள். எத்தனை வகை ஓலங்கள்! அடி கசுமாலம்! அந்தச் சப்பாணிப் புள்ளையை உட்டுட்டுப் போறியேடி! தூக்குடி அதை... வயத்துப் புள்ளைக்காரி நீ ஏம்மே இஸிக்கிறே? இங்கேயே எதுனா ஆவப் போவுது ரோதனை!... ஓடுங்கடா டேய்! கூரை எகிறி உயுவுது... எந்தக் கொலைகாரப் பாவி கொள்ளி வைச்சானோ தெரியலையே...

    சேறும் சகதியுமாகிவிட்ட தெரு காலடியில் சதசதக்க, படீர், படீரென்று குடிசையின் மூங்கில்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1