Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kari Kodugal
Kari Kodugal
Kari Kodugal
Ebook87 pages35 minutes

Kari Kodugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது சிந்தையாலும், வாக்கினாலும், மொழியினாலும், சொந்த - சமூக வாழ்க்கையிலும் கடைப்பிடித்து இந்தக் ‘காகிதப்பிசாசு’களின் பேயாட்டத்தை எதிர்த்துப் போராடுகிறவன் நான்.

இலட்சியத்துடன் பேனாபிடிக்க வந்த எனது இந்த நிலை பிற கூலி எழுத்தாளர்களைக் கொண்டும், அதுவும் பெண் எழுத்தாளர்களையும், பெண்வேடம் புனைந்த எழுத்தாளர்களையும் படையாகக் கொண்டு முறியடித்து விடலாம் என்று ‘மொட்டை’க் கனவு காணும் கூட்டத்தில் ஒருவராக எனது ஒரு காலத்து நண்பர் மணியன் இடைக்காலத்தில் இழிந்து போனார்.

எந்தக் கடையனையும் நான் எனது பகைவனாய்க் கருதுவதில்லை. அவர்களை நான் எவ்வளவு தூரத்தில் விலக்கி வைத்தாலும், முகலோபனம்கூட அற்றிருக்கும்போது முரட்டுத்தனமாக வைதாலும் – ‘அவர்கள் என்னை, நண்பனாகக் கருதி அணுகினால், சென்றதை மறந்து’ ‘இன்று புதிதாக்கலாம் இந்த நட்பை’ என்று என் மனம் கனிந்துவிடுகிறது. இது எனது இயல்பு அல்ல; அது என் மனத்தின் இயல்பே ஆயிற்று. அப்படியொரு கனிவில் எழுதப்பட்ட கதை இந்தக் ‘கரிக்கோடுகள்.’ இந்தக் கதையின் ‘தீம்’, பாத்திரங்கள் எல்லாமே - எனக்கும் தற்கால இலக்கியச் சீரழிப்புக் கும்பலுக்கும் நடுவே நிகழும் நாகரிகமான யுத்தத்தின் உருவகமாகத் தெரிகிறது. இதில் வெற்றிகளைக் குவிப்பதைவிட, சமாதானமான சாதனைகளையே நான் ஆக்கப்பூர்வமானது என்று நம்புகிறேன். ஏனெனில் நான் படைப்பாளி. எனது கோபம்கூட ஆக்கும்; அழிக்காது என்பதற்கு அடையாளம் இந்தக் கரிக்கோடுகள்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580103906916
Kari Kodugal

Read more from Jayakanthan

Related to Kari Kodugal

Related ebooks

Reviews for Kari Kodugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kari Kodugal - Jayakanthan

    https://www.pustaka.co.in

    கரிக்கோடுகள்

    Kari Kodugal

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    இந்தக் கதையின் கதை

    சமீப காலத்தில் சிறுநூல் போன்ற பத்திரிகை வெளியீடுகள் தமிழில் பெருகியுள்ளன. ஆரம்பத்தில் இந்தப் பத்திரிகைகளின் இலக்கியம் குறித்த அசட்டைப் போக்குக் காரணமாகவே இந்த முயற்சி, படைப்பவர்களின் சார்பில் உருவாயிற்று.

    தமிழ்ப் பத்திரிகை என்பது புரட்டிப் பார்த்துவிட்டுத் தூக்கி எறிவதற்கு வசதியாகவும், தகுதியாகவும் தம்மை முற்றிலும் ஆக்கிக்கொள்ள ஒரு பக்கம் பெருமுயற்சி செய்கிறது. இன்னொரு பக்கம் இலக்கியத்தில் நம்பிக்கையும், இலட்சியமும் உடைய புதிய எழுத்தாளர்களுக்குப் பொய்யான இலக்கிய நம்பிக்கை தந்து ஈர்க்கின்றது. ஆரம்ப காலத்தில் ஒரு நன்நோக்கின் அடிப்படையில் எழுத வந்தவர்கள் இந்தப் பத்திரிகைத்தனம் எனும் உயர் பண்புகளற்ற ‘ஜர்னலிஸம்’ எனும் உருக்குநோய்க் கிருமிகளால் உருக்குலைக்கப்படுகின்றனர்.

    அச்சு வாகனத்தின் அசுரத்தனமான உருளைகளில் நசுக்கப்பட்ட தமது பெயர்களும், படங்களும், அசட்டுத்தனமான சுயபாதுகாப்புக் கருத்துக்களைப் பேட்டிகளில் பேசித் தம்மைப் பற்றிய சுயமரியாதையற்ற வாக்குமூலப் பதிவுகளும் - எல்லாவற்றுக்கும் மேலாக, அல்லது ஊடாக ஏதோ கொஞ்சம் சில்லறைக் காசுச் சன்மானங்களும் - இவையே எழுத்தாளர்களின் அக முக விலாசமாய் ஆகி விடவேண்டும் எனும் நச்சுத் தனத்தின் மொத்த உருவாய் அவதார வக்கிரம் கொண்டு விட்டன - நமது தற்கால வெகுஜனப் பத்திரிகைகள்.

    இந்த ‘வெகு ஜனங்’களும், வெகு ஜனக் கலைச் சாதனங்களும் எக்கேடும் கெட்டொழியட்டும்! - இக்காலத்தில் இவை இத்தகு கேடுகெட்ட நிலையடைவதை எவரும் தடுக்க ஏலாது.

    ஆனாலும் இது குறித்து புருஷத்வம் உடைய ஆண்களும், பெண்மை நலத்திற் சிறந்த பெண்டிரும் - தத்தமது சொந்த இயல்புகளுக்கு முற்றிலும் பொருத்தமற்ற - இந்த வியபசாரக் கலைகளைச் சொரணைகெட்டு ரசிப்பதும், நியாயப்படுத்தி வாழ்வதும் எத்தகைய சமூக வாழ்விலும் தமிழில் சகிக்க வொண்ணாத முறைகேடாகும்!

    மேலே சொன்ன இந்தக் கருத்தைச் சார்ந்து நின்று, எனது சிந்தையாலும், வாக்கினாலும், மொழியினாலும், சொந்த - சமூக வாழ்க்கையிலும் கடைப்பிடித்து இந்தக் ‘காகிதப்பிசாசு’களின் பேயாட்டத்தை எதிர்த்துப் போராடுகிறவன் நான்.

    இலட்சியத்துடன் பேனாபிடிக்க வந்த எனது இந்த நிலை பிற கூலி எழுத்தாளர்களைக் கொண்டும், அதுவும் பெண் எழுத்தாளர்களையும், பெண்வேடம் புனைந்த எழுத்தாளர்களையும் படையாகக் கொண்டு முறியடித்து விடலாம் என்று ‘மொட்டை’க் கனவு காணும் கூட்டத்தில் ஒருவராக எனது ஒரு காலத்து நண்பர் மணியன் இடைக்காலத்தில் இழிந்து போனார்.

    எந்தக் கடையனையும் நான் எனது பகைவனாய்க் கருதுவதில்லை. அவர்களை நான் எவ்வளவு தூரத்தில் விலக்கி வைத்தாலும், முகலோபனம்கூட அற்றிருக்கும்போது முரட்டுத்தனமாக வைதாலும் – ‘அவர்கள் என்னை, நண்பனாகக் கருதி அணுகினால், சென்றதை மறந்து’ ‘இன்று புதிதாக்கலாம் இந்த நட்பை’ என்று என் மனம் கனிந்துவிடுகிறது. இது எனது இயல்பு அல்ல; அது என் மனத்தின் இயல்பே ஆயிற்று. அப்படியொரு கனிவில் எழுதப்பட்ட கதை இந்தக் ‘கரிக்கோடுகள்.’

    இந்தப் பத்திரிகைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று நானே கண்ட ‘ஒரு வெளியீட்டு முறையின்படி ‘ஜய ஜய சங்கர’ நாவலை நான்கு சிறு வெளியீடுகளாக எனது வாசகர்களுக்கு அளித்தேன். அந்த முயற்சியில் எனது வாசகர்களின் பெருந்தொகையை அறிந்து நான் புதிய நம்பிக்கை கொண்டேன்.’

    விடுவான்களா? எல்லாப் பத்திரிகைக்காரர்களும், எல்லா இழிந்த வியபசார இலக்கிய வேந்தர்களும் இந்த சிறு வெளியீட்டுக் களத்தைக் கவிந்து தாக்கி ஆக்ரமித்து இதையும் நாசப்படுத்தி விட்டார்கள்.

    எப்படியும் போகட்டும். அத்தகு சிறு வெளியீட்டு முயற்சிகளில் ஒன்றான ‘மணியன்’ இதழில், நண்பர் மணியனின் தூண்டுதலால் இதனை நான் எழுதினேன்.

    எழுதிய பிறகு இப்போது புத்தக வடிவில்தான் மீண்டும் முழுமையாகப் படித்தேன்.

    இந்தக் கதையின் ‘தீம்’, பாத்திரங்கள் எல்லாமே - எனக்கும் தற்கால இலக்கியச் சீரழிப்புக் கும்பலுக்கும் நடுவே நிகழும் நாகரிகமான யுத்தத்தின் உருவகமாகத் தெரிகிறது. இதில் வெற்றிகளைக் குவிப்பதைவிட, சமாதானமான சாதனைகளையே நான் ஆக்கப்பூர்வமானது என்று நம்புகிறேன். ஏனெனில் நான் படைப்பாளி. எனது கோபம்கூட ஆக்கும்; அழிக்காது என்பதற்கு அடையாளம் இந்தக் கரிக்கோடுகள்.

    மணியனுக்கு நன்றி சொல்லத்தானே வேண்டும்!

    - த. ஜெயகாந்தன்

    சென்னை-78

    07.05.1981

    1

    மாதவராவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ரிடையராகி விட்டானாம்! என்னைவிடப் பத்து வயது குறைந்தவன். வடாற்காடு மாவட்டத்தில், ஜென்ம வாசனையில் எழுத்தறிவே பெறாத புதிய காட்டுமனிதக் குழந்தைகளின் மத்தியில் எழுத்தறிவிக்கும் இறைமைப்பணியில் வாழ்வின் நிறைவைக் கண்டவனாகிவிட்டான். அவனை நான் கடைசியாகப் பார்த்து இருபது வருஷங்களாகி இருக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1