Marakka Muyandrean... Mudiyavillai!
By Maheshwaran
5/5
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Un Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Kaadhal Nenjam…! Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsMalarukku Thendral Pagaiyanal… Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vizhigal Urangidumo…? Rating: 0 out of 5 stars0 ratingsPesu Thendrale! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsIravum Nilavum Valarattumey...! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyil... Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsKangal Irandum Unnai Kaanumo? Rating: 0 out of 5 stars0 ratingsKuruvi Maram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marakka Muyandrean... Mudiyavillai!
Related ebooks
Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsJenmam Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Magizhampoo Thendral Rating: 5 out of 5 stars5/5Vazhvenum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsMegalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsMarupadi Yen Vanthaai Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Kaadhalikku Kalyanam Rating: 5 out of 5 stars5/5Ennai Thavira Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsDhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Nayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Mudhal Moochu...! Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Thakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Soorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsPoi Mugangal Rating: 5 out of 5 stars5/5Thoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Marma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Varum Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsIzhantha Ulagam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Marakka Muyandrean... Mudiyavillai!
1 rating0 reviews
Book preview
Marakka Muyandrean... Mudiyavillai! - Maheshwaran
http://www.pustaka.co.in
மறக்க முயன்றேன்… முடியவில்லை!
Marakka Muyandrean... Mudiyavillai!
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
ஜனா... இந்த போட்டோவைப் பாரேன்...
சரசு வாஞ்சையோடு மகனை நெருங்கினாள்.
முகத்தில் ஆப்டர் ஷேவிங் லோஷனைப் பூசிக் கொண்டிருந்தான் ஜனா.
தாயின் பக்கம் திரும்பவேயில்லை.
ஜனா ஐந்தரையடி உயரம். பிரைவேட் கம்பெனி ஒன்றில் மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான். மாநிறம் தான் என்றாலும் லட்சணமான முகம். தினமும் உடற்பயிற்சி செய்து தேகத்தைக் கட்டுக்கோப்பாய் வைத்திருந்தான்.
தனபால் சரசு தம்பதியரின் ஒரே மகன்.
தனபால் தலைமை அஞ்சலக ஊழியராகப் பணிபுரிகிறார்.
சொந்தவீடு.
ஓரளவிற்கு பேங்க் பேலன்ஸ் எல்லாமே உண்டு.
மொத்தத்தில் எந்த சிரமமும் இல்லாத குடும்பம்.
தனபாலும் சரி சரசுவும் சரி அதிர்ந்து ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டார்கள். அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.
அவர்களின் ஒரே கவலை ஜனாவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்பது மட்டும்தான்.
ஜனாவிற்கு இருபத்தெட்டு வயது முடிந்துவிட்டது.
இருபத்தொன்பது நடக்கிறது.
ஐனாவை எந்த குறையும் சொல்ல முடியாது..
அழகான, வசீகரமான, துறுதுறுப்பான முகம்..
யாராக இருந்தாலும் பார்த்ததுமே பிடித்துப் போய்விடும்..
ஜனாவிற்கு பெண்ணைக் கட்டித்தர நிறையபேர் வீடுதேடி வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டுதான் போகிறார்கள்..
ஜனாதான் ஏதாவதொரு காரணம் சொல்லி.. கல்யாணத்தை தடுத்து விடுகிறான். இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம் என பிடிவாதம் பிடிக்கிறான்..
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ இல்லையோ... இரண்டு வீட்டு நல்ல இதயம் படைத்த சொந்தங்களால் நிச்சயிக்கப்பட வேண்டும்...
அந்த இனிமையான தருணத்திற்காகத்தான் தனபாலும் சரசுவும் காத்திருக்கிறார்கள்.. ஏனோ தெரியவில்லை அவர்களுடைய கனவு இன்னும் கைகூடாமலே இருக்கிறது...
உன்னைத்தான் ஜனா... இந்தப் போட்டோவைப் பாரேன்...
சரசு விடுவதாய் இல்லை.
ஜனாவின் முகத்திற்கு எதிரே உயர்த்திக்காட்டினாள்.
அம்மா.. நா எதையும் பார்க்க விரும்பவில்லை..
ஜனா தன் வேலையில் கவனமாய் இருந்தான்.
உள்ளங்கையளவு கண்ணாடியில் முகம் பார்த்து சிசரினால் மீசையை அழகாய் ட்ரிம் பண்ணிக் கொண்டான்.
ஏண்டா... விரும்பலை..?
அம்மா.. ப்ளீஸ்... இன்னைக்கு எங்க கம்பெனியில் ஆடிட்டிங்.. நா சீக்கிரமா போயாகனும்... தொல்லைப் பண்ணாதே...
கல்யாணம் பண்ணிக்கடான்னு சொல்றது தொல்லையா...?
சரசுவிற்கு அழுகை அடைத்தது.
எப்ப தோணுதோ அப்ப பண்ணிக்கிறேன்... அதுக்கு முந்தி என்னைக் கட்டாயப் படுத்தறது... தொல்லையாத்தான் நெனைக்கிறேன்..
"நாங்க ஒண்ணும் அடுத்தவங்க இல்லையே! உன்னைப் பெத்தவங்க...! காலாகாலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கறது எங்களோட கடமை. அப்பா பொறுப்பில்லாதவரா இருந்து உனக்கு கீழே தம்பியோ தங்கைகளோ இருந்தா... உன்னோட கல்யாணத்தை தள்ளிப் போடலாம்.
அவர்களுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கிறவரை நீ காத்திருக்கலாம்.. தப்பில்லை. ஆனா நம்மவீட்டு விஷயம் வேற. உனக்கொரு கல்யாணம் ஆகலையேங்கறதை தவிர.. வேற யாருக்கும் இங்கே எந்தப் பிரச்சினையும் கிடையாது.. புரிஞ்சுக்கடா... அம்மாவோட தவிப்பை... அப்பாவோட வேதனையைப் புரிஞ்சுக்கோடா..."
சரசு தழுதழுத்தாள்...
ஜனா எதையுமே காதில் வாங்கவில்லை.
பாத்ரூமிற்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
ஷவரைத் திறந்துவிட்டு... சுகமாய் நனையத் தொடங்கினான்..
உம்புள்ளைகிட்டே சொல்லிட்டியா சரசு..?
இத்தனைநேரமும் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளில் ஆழ்ந்திருந்த தனபால் மெதுவாய் உள்ளே வந்தார்.
சொல்லிட்டேன்..
சம்மதிச்சுட்டானா...?
அவன் எதையுமே காதுல வாங்கலை.. நா பேசிக்கிட்டிருக்கிறப்பவே பாத்ரூமுக்குள்ளே போயிட்டான்...
ஜனா மனசுல என்னதான் நெனைச்சுகிட்டிருக்கானாம்..?
அதை நீங்கதான் வெளியே கொண்டாரனும்..
சரசு சமையலறைக்குள் போய்விட்டாள்..
ஜனாவின் வருகையை எதிர்பார்த்து டைனிங்டேபிளில் போய் அமர்ந்தார் தனபால்.
ஜனாவின் காலை டிபன் அப்பாவோடுதான்..
எத்தனை அவசர வேலையாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுதான் வெளியே கிளம்புவார்கள்..
ஜனாவை தனபால் மறுபடியும் இரவில்தான் பார்க்க முடியும். ஜனாவிற்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது என்றாலும் சில நாட்கள் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்துவிட்டு தாமதமாகத்தான் வீடு திரும்புவான்..
அப்பாவும் மகனும் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வது.. காலையில் டிபன் சாப்பிடுகிறபோது மட்டும்தான்..
ஜனா குளித்து முடித்திருந்தான்.
அழகாய் டிரஸ் பண்ணிக்கொண்டு டைனிங்டேபிளில் வந்து அமர்ந்தான்.
சரசு... உம்புள்ளை வந்தாச்சு. ரெண்டுபேருக்கும் டிபன் எடுத்து வெய்...
ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி ஓடி வந்தாள் சரசு.
தும்பைப் பூ போன்ற மிருதுவான இட்லி...
கொத்துமல்லி புதினா சட்னி...
ரவா பாத்... இனிப்பு சாம்பார்.. என ஏராளமாய் தயார் பண்ணி வைத்திருந்தாள் சரசு. கணவருக்கும் பிள்ளைக்கும் பரிமாறினாள்.
'பேசுங்க' என்பது மாதிரி கணவருக்கு ஜாடைக் காட்டினாள்.
தனபால் புரிந்து கொண்டார்.
ஜனா..
சொல்லுங்கப்பா..
எனக்கு இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும்..
ஜனா சட்டென நிமிர்ந்தான்.
என்ன தெரிஞ்சாகனும்..?
வர்ற வரன்களையெல்லாம் எதனால தட்டிக்கழிக்கிறே.. கல்யாணமே வேணாம்னு எதுக்காக பிடிவாதம் பிடிக்கிறே..? கொறை உம் மனசுலயா..? இல்லை.. உடம்புலயா..? கேட்க கூடாத கேள்விதான்.. கேட்டுட்டேன். நீயும் தைரியமா வெளிப்படையா சொல்லிடு..! எதா இருந்தாலும்.. சரி பண்ணிடலாம்.!
தனபால் தன் மனதில் இருந்ததைக் கொட்டிவிட்டார்.
அவ்வளவுதான்...
ஜனாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே... ஆத்திரமும், கோபமும், எரிச்சலும் குபீரென பரவியது. பாதி சாப்பிட்டதோடு பிளேட்டிலேயே கையைக் கழுவினான்.
விருட்டென எழுந்து விட்டான்.
ஜனா.. ஏண்டா பாதி சாப்பிட்டதோட எழுந்துட்டே..
சரசு பதறினாள்.
என்னை.. எங்கே நிம்மதியா சாப்பிடவிடறீங்க...?
ஜனாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
ஆபிஸ்பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பைக்கை உதைத்து கிளப்பினான்.
சரசுவும் தனபாலும் திகைத்துப் போனார்கள்.
'ஜனா ஏன் இப்படி நடந்து கொள்கிறான்.?'
இருவருக்கும் எதுவுமே புரியவில்லை.
2
சொல்லிட்டியா சினேகா..?
ஆர்வமாய் புருவங்களை உயர்த்தினாள் அகல்யா.
ம்ஹும்..
அழகாய் உதட்டை சுழித்தாள் சினேகா.
இருவரும் ஆபிஸ் கேண்டினை விட்டு வெளியே வந்தார்கள்.
இருபுறமும் சீராய் வெட்டி விடப்பட்ட சவுக்கு மரக்கன்றுகளுக்கு இடையே நீண்டிருந்த நடைபாதையில் நடந்தார்கள்.
நேத்தைக்கே சொல்லியிருப்பேன்னு நெனைச்சேன்.. ஆபிஸ்க்கு ஒரு நாள் லீவு போட்டிருந்தாலும் மனசெல்லாம் உன்னையேதான் சுத்தி சுத்தி வந்தது.. எப்படா விடியும்.. எப்படா சினேகாவைப் பார்ப்போம்னு தவிச்சுக்கிட்டிருந்தேன்..
பெருமூச்சு விட்டாள் அகல்யா.
இரண்டுபேருமே ஆபிஸின் சீருடைச் சேலையைத்தான் கட்டியிருந்தார்கள் என்றாலும் சினேகாவின் முகம் திருத்தமாய் பளிச்சென்று மாசுமருவில்லாமல் காணப்பட்டது.
முடியலை அகல்யா.. என்னால முடியலை.. அவனோட மொகத்தையும் அந்த கண்களையும் நேருக்கு நேர் பார்க்கறப்போ எல்லாமே மறந்து போயிடுது.. இதயம் படபடன்னு துடிக்குது.. தொண்டைக்குள்ளே வார்த்தைகள் சிக்கிக்குதுடி.. நா என்ன பண்ணட்டும்..?
அப்போ ஒண்ணு செய்...
சொல்லுடி...
இனி ஜனாவைப் பத்தி நெனைக்காதே... பேசாதே... என்கிட்டே.. ஒரு நாளைக்கு முன்னூறு தடவை பொலம்பாதே.. மறந்துடு... அடியோட மறந்துடு.. உன் கனவுல கூட ஜனா வரக்கூடாது சரியா..?
இது ரொம்ப அநியாயம்டி... ஜனாவை மறக்கறதுக்குப்பதில் நா செத்துடலாம்...
ஓகே. தாராளமா செத்துப்போ... நானாவது.. நிம்மதியா உன் தொல்லையில்லாம இருப்பேன்...
சிரிக்காமல் சீரியஸாய் பேசினாள் அகல்யா.
உடனே சினேகாவின் முகத்தில் கடுகு வெடித்தது. மிளகாய் சிதறியது.
நா செத்துப் போறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமாடி..?
கோச்சுக்காதே... சினேகா.. நா வெளையாட்டுக்குச் சொன்னேன்...
"வெளையாட்டுக்குச் சொன்னியோ, வெனையா சொன்னியோ எனக்குத் தெரியாது. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க...