Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuruvi Maram
Kuruvi Maram
Kuruvi Maram
Ebook197 pages1 hour

Kuruvi Maram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குருவி மரம் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளுமே மிகவும் சிறப்பானவை பெரும்பாலான கதைகள் பரிசு பெற்ற கதைகள் . அதில் இடம் பெற்றுள்ள பரிசு பெற்ற கதை ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு கருத்தை வலியுறுத்தும் கதைகள் இந்த தொகுப்பை நான் மிகவும் சிரத்தையோடு படைத்திருக்கிறேன் இந்த சிறுகதை தொகுப்பு கல்லூரியில் பாடப் புத்தகமாக வரவேண்டும் என்பதே எனது ஆசை.

நிறைய நிறைய தேன் சிட்டு குருவிகளோடு, குஞ்சுகளும், கூடுகளும் வெட்டப்பட போகும் மரம் ஒன்றை காப்பாற்ற துடிக்கும் கிராமத்து வெள்ளந்தி இளம்பெண்ணின் ஏக்கமும், தவிப்புமே குருவிமரம் சிறுகதை என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580128310161
Kuruvi Maram

Read more from Maheshwaran

Related to Kuruvi Maram

Related ebooks

Reviews for Kuruvi Maram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuruvi Maram - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குருவி மரம்

    (சிறுகதை தொகுப்பு)

    Kuruvi Maram

    (Sirukathai Thoguppu)

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தெளிவு

    நம்பிக்கை

    குழந்தை

    சூடு

    செல்லக்கிளி

    கிளி

    பள்ளிக்கு அருகில் ஒரு இலந்தை மரம்

    குருவி மரம்

    பாலம்

    விடை

    வந்து போகும் மேகம்

    மாய சித்தர்

    என் பெயர் ரத்னா

    மலை

    உயிர்க்கிளி

    லாரி நிறைய மாடுகள்

    பசி

    காவிரி

    கண்மணியே காதல் என்பது கற்பனையோ?

    பூனை வீடு

    தெளிவு

    முருகேசனுக்கு மனசு வெடிக்கிற மாதிரி இருந்தது.

    அய்யோ... எம் பணம்...

    கூட்டமான பேருந்தினுள்ளேயே விழுந்து புரண்டு கதறத் தொடங்கினான்.

    யோவ்... பஸ்சை நிறுத்துய்யா...?

    யாரோ கத்தினார்கள். நடத்துனர் வேறு வழியின்றி விசிலடித்து பேருந்தை ஓரங்கட்டி நிறுத்த வைத்து விட்டார்.

    பேருந்து முழுக்க ஒரே முணுமுணுப்பு.

    பரிதாப சிணுங்கல்கள்... கேலி பேச்சுக்கள்.

    பணத்தை எதுல தம்பி வெச்சிருந்தே...?

    மஞ்சள் கலர் துணி பையில...

    எவ்ளோப்பா...?

    ஒன்றரை லட்சம்...

    முருகேசன் விம்மினான்.

    ஒன்றரை லட்சமா...?

    வாய் பிளந்தார்கள்.

    சிலர் நம்ப முடியாமல் பார்த்தார்கள்.

    ஒன்றரை லட்சத்தை துணிப் பையில வச்சு... எந்த கிறுக்கனாச்சும் இத்தனை கூட்டமான பேருந்துல ஏறுவானா? யாரோ ஒரு நபர் சற்று உரக்கவே கேட்டார்.

    ஒருவேளை பொய் சொல்கிறானோ?

    சாமி சத்தியமா உண்மைங்க...! நா இன்னும் பதினைஞ்சு நாள்ல சிங்கப்பூருக்குப் போகப் போறேன்... வேலங்குடியில இருக்கற டிராவல்ஸ் ஏஜெண்ட்டுகிட்டே கட்டவேண்டிய பணம்ங்க அது...! சாப்பாட்டுக்கு வெச்சிருந்த நிலத்தையும் என் தங்கச்சியோட கல்யாணத்துக்காக வெச்சிருந்த நகையையும்... வித்து புரட்டுன பணம்ங்க... பேக்குல கொண்டுபோனா யாராவது பிக்பாக்கெட் அடிச்சுடுவாங்கன்னுதான்... மஞ்சள் கலரு துணி பைல வெச்சு கொடுத்துச்சு... எங்கம்மா...! பையை மடியில வெச்சுக்கிட்டு ஜன்னலோர சீட்டுல உட்கார்ந்திருந்தேன். வீசின காத்தோட சுகத்துல... லேசா கண்ணை மூடிட்டேன். அதுக்குள்ளே பையை யாரோ களவாடிகிட்டுப் போயிட்டாங்க. பணத்தோட அந்தப் பையில... எங்க வீட்டு ரேஷன் கார்டு... என்னோட வாக்காளர் அட்டை... என்னோட டி.சி. ஜெராக்ஸ்... எல்லாமே இருந்துச்சு... எல்லாமே போயிடுச்சு...

    தலையில் அடித்துக் கொண்டான்... பரிதாபமாக இருந்தது.

    பக்கத்துல இருந்த ஆளு கொண்டு போய்ட்டானோ?

    அந்தத் தம்பிக்குப் பக்கத்துல நான்தான் உட்கார்ந்திருந்தேன். வேணுமின்னா என் பையை சோதனை பண்ணிப் பார்த்துக்கங்க...

    பெரியவர் ஒருவர் முன்னால் வந்தார். உரிக்கப்பட்ட தேங்காயும், ஒட்டு மாங்காய்களும் நிரம்பியிருந்த தனது ஒயர் கூடையை நீட்டினார்.

    உங்க பையை மட்டுமில்ல. எல்லாரோட பையையுமே... சோதனைப் போட்டுத்தான் ஆகணும்... ஒரு ரூபாயா ரெண்டு ரூபாயா... ஒன்றரை லட்சம்லெ... பணம் கெடைக்காட்டி அந்த பையனோட எதிர்காலமே வீணாயிடும்... அவன் குடும்பமும் நடுரோட்டுக்கு வந்துடும்...

    உரத்தக் குரலில் பேசினார் நடத்துனர்.

    யாராச்சும் தெரியாத்தனமா எடுத்திருந்தீங்கன்னா... தயவு செய்து... எடுத்தது தெரியாம... உங்களோட சீட்டுக்கு கீழேயே போட்டுடுங்க... என்றார் ஓட்டுநர்.

    பேருந்திற்குள் ஒரே சலசலப்பு.

    பயணிகள் ஒவ்வொருவராய் கீழே இறங்க... நடத்துனரும், ஓட்டுநரும் ஒவ்வொருவருடைய பையையும் வாங்கி... கிண்டி கிளறிப் பார்த்தார்கள்.

    எல்லா பயணிகளுமே கீழே இறக்கி விடப்பட்டுவிட்டார்கள்.

    பேருந்தே காலியாகி விட்டது.

    பயணிகளின் உடைமைகளை சோதனைப் போட்ட ஓட்டுநர், நடத்துநர் இருவருடைய முகத்திலும் ஏமாற்றம் பரவியது.

    உன்னோட பணப்பை யார்கிட்டயும் இல்லை...! பஸ்சுக்குள்ளேயே ஏறி... ஒவ்வொரு சீட்டுக்குக் கீழேயும்... பாருப்பா! உன் மடியில இருந்த பை... தவறி கீழே கூட விழுந்திருக்கலாம் இல்லியா...? என்றார் நடத்துனர்.

    முருகேசன் தளர்வாய் பேருந்தினுள் ஏறினான்.

    ஒவ்வொரு சீட்டுக்கு அடியிலும்... குனிந்து குனிந்து... தேடினான்.

    அவன் அமர்ந்து பயணித்த சீட்டிலிருந்து நான்கு சீட்டுகள் தள்ளி... அந்தப் பை கிடந்தது...

    முருகேசன் உற்சாகமானான்.

    போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருந்தது.

    முட்டி மோதிக் கொண்டு தாவிப்போய்... அந்தப் பையை

    கையில் எடுதுதான்.

    அந்தப் பை அவனுடைய துணிப் பை இல்லை.

    அதே நிறத்தில் இருந்த வேறொரு துணிப்பை.

    உள்ளே ஒருநூல் சேலையும், ரவிக்கையும் இருந்தது. ஒரு காகிதத்தில் இரண்டு பத்து ரூபாய்த்தாள்கள் மடிக்கப்பட்ட பொட்டலமாக கிடந்தது.

    பை... கெடைச்சிடுச்சாப்பா...?

    இல்ல... இது என்னோட பையில்ல... முருகேசன் வாய்விட்டு கதற தொடங்கினான்.

    ***

    பன்னிரண்டாவது வரைக்கும் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாமல் திருப்பூருக்குச் சென்று பனியன் கம்பெனியில் மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் தான் முருகேசன்.

    மாசாமாசம் தன் சம்பளத்தை வாங்கி... சாப்பாட்டு செலவு போக மீதி பணத்தை அப்படியே வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தவன்தான்.

    வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்ற ஆசையை அவனுடைய மனதில் யார் விதைத்தது என்று தெரியவில்லை.

    பனியன் கம்பெனி வேலையை உதறிவிட்டு... ஊருக்கு வந்து வீட்டிலேயே தங்கி நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.

    ஒனக்கு அதெல்லாம் வேணாம் ராசா...

    நடேசனும், கற்பகமும் அவனை முட்டுக்கட்டை போட்டு தடுக்கப்பார்த்தார்கள்... மீனைப் பிடிக்க ஒற்றைக் காலில் நிற்கும் கொக்கு மாதிரி... தன் முடிவில் உறுதியாய் இருந்தான் முருகேசன்.

    ஒங்களால பணத்தைப் புரட்டித் தர முடியுமா... முடியாதா...?

    அவ்ளோ ரூபாய்க்கு நா எங்கடா போவேன்...? ஒறவுக்காரப் பயலுகிட்டே எல்லாம் ஒத்த ரூபா கடனா கேட்டாலே அப்புறம் மொகம் குடுத்துப் பேச மாட்டான்க...! ஒன்றரை லட்ச ரூபாய ஆருகிட்ட கேட்கிறதாம்...?

    ஆருகிட்டயும் கேட்க வேணாம்... நம்ம நெலத்தை வித்துடுப்பா...

    நெலத்தை வித்தா... லட்ச ரூபா கூட தேறாதே...

    மீதிப் பணத்துக்கு தங்கச்சி வடிவோட கல்யாணத்துக்காக வாங்கி வெச்சிருக்கற அட்டிகையையும்... செயினையும்... வித்துடலாம்...

    யோசனையை சொல்லிக் கொடுத்தான்.

    டேய்... வடிவுக்காக குருவி சேர்க்கறாப்ல சேர்த்து... மொதமொதலா... ஆசை ஆசையா வாங்கின... நகையை விக்கச் சொல்றியே...?

    வித்தா என்னவாம்...? நா... வெளிநாட்டுக்குப் போயி வேலையில் சேர்ந்துட்டேன்னா... ஓவர்டைம்லாம் பார்த்து... மாசம் முப்பதாயிரத்துக்கு மேல சம்பாதிப்பேன்... வடிவுக்கும் ஒனக்கும் இதுமாதிரி இன்னும் எத்தனை நகை வேணும்னாலும் வாங்கித் தருவேன்...

    அதைக் கேட்டதும் கற்பகத்தின் முகத்தில் மின்மினிப் பூச்சிகள் பறந்தது.

    நெசமாத்தான் சொல்றியா ராசா...?

    பின்னே பொய்யா... சொல்லுவேன்...? இப்ப விக்கப் போற மூணுமா நெலத்துக்குப் பதிலா... மூணு ஏக்கர் வாங்கிடுவேன்மா... ஓட்டைப் பிரிச்சு போட்டுட்டு மாடி வீடா கட்டிடுவேன்மா...

    அண்ணே... மணியக்காரர் வீடு மாதிரி ரெண்டுமாடி வெச்சு கட்டணும்ணே...

    வடிவு இடையில் புகுந்தாள்.

    அவளுடைய முகத்திலும் கனவுகள் படிந்திருந்தது.

    வேலங்குடியில் டிராவல்ஸ் வைத்து நடத்தும் ஏஜெண்டைப் போய்ப் பார்த்தான்.

    மொதல்ல பணத்தைக் கொண்டுவந்து கட்டு தம்பி... மத்ததை நா பார்த்துக்கறேன்... என்றான் ஏஜெண்ட்.

    அதன் பிறகுதான் அரை மனசோடு சாப்பாட்டிற்கு என இருந்த நிலத்தையும், வடிவுவின் நகைகளையும் விற்றார் நடேசன். அப்படியும் ஒன்றரை லட்சம் தேறவில்லை. இருபதாயிரம் குறைந்தது வேறு வழியின்றி... குடியிருக்கும் வீட்டின் பத்திரத்தை மணியக்காரர் வீட்டில் அடமானம் வைக்க வேண்டியதாயிற்று.

    இந்தாருக்கு ராசா நீ கேட்ட ஒன்றரை லட்சம்... இன்னிக்கே கொண்டு போய் அந்தாளுகிட்டே கட்டிடு... சீக்கிரமா உன்னைய வெளிநாட்டுக்கு அனுப்பறதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு...

    கண்கள் கலங்க... குரல் தழுதழுக்க அவனிடம் பணக்கட்டுகளை நீட்டினார் நடேசன்.

    இரு ராசா... துணி பையில வெச்சு தர்றேன்...

    கற்பகம்தான் அந்த பணக்கட்டுகளை மஞ்சள் வண்ண துணி பையில் வைத்துத் தந்தாள்.

    பத்திரம் ராசா...?

    வாசலில் இறங்கும் வரை... திரும்பத் திரும்ப சொன்னாள்.

    சரிம்மா...

    அழுத்தமாய் தலையை ஆட்டி விட்டுத்தான் கிளம்பினான். இப்படி பேருந்தினுள் நடு வழியிலேயே தொலைப்போம் என்று நினைக்கவேயில்லை.

    ***

    "தம்பி... போலீஸ் ஸ்டேஷன்ல போய்... பணம் தொலைஞ்சதைப் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக் குடுத்துட்டு... வூடு போய் சேருப்பா... நேரம் நல்லா இருந்தா தொலைஞ்ச பணம் திரும்பக் கிடைச்சிடும்..."

    ஓட்டுனரும், நடத்துனரும் வழியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் முருகேசனை இறக்கிவிட்டுவிட்டு பேருந்தைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்கள்.

    இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை விவரித்து அழுதபடியே புகார் எழுதிக் கொடுத்தான்.

    வெளிறிப்போன முகத்தோடு...

    மத்தியானம் மூன்று மணி சுமாருக்கு வீடு திரும்பினான்.

    ***

    ‘போச்சு...’

    எல்லாமே போச்சு...

    கனவுகள் போச்சு... நம்பிக்கை போச்சு... எதிர்காலம் போச்சு... அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என்ன பதில் சொல்வது...?

    அதிர்ச்சியில் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துவிட்டால்...

    அய்யோ...

    முருகேசனுக்கு மனசெல்லாம் தீயால் சுட்டதுபோல வலித்தது. வீட்டை நெருங்கவும் கால்கள் பின்னிக் கொண்டது. அணிந்திருந்த செருப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீசிவிட்டு மெதுவாய் உள்ளே நுழைந்தான்.

    வீட்டுத் திண்ணையிலேயே அப்பா. அம்மா வடிவு... அமர்ந்திருந்திருந்தார்கள்... அவர்களுடன் புதிதாய் ஒரு நடுத்தரவயது பெண்மணியும் அமர்ந்திருந்தாள்.

    யாரிவள்...?

    புருவங்களை உயர்த்தினான்.

    பதறிப்போயிட்டியா ராசா...?

    கற்பகம் ஓடிவந்து முருகேசனின் கையைப் பற்றினாள்.

    பையைத் தொலைச்சுட்டோம்னு பதறிட்டியா ராசா...? மறுபடியும் கேட்டாள்.

    அம்மா....

    பயப்படாதே... உன்னோட பையும்... பணமும்... பத்திரமா இருக்கு...

    இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    என்னம்மா சொல்றே...?

    "இதோ... இவங்களும்... நீ போன பஸ்சுலதான் போயிருக்காங்க உனக்கு பின்னாடி நாலு சீட்டு தள்ளி... உட்கார்ந்திருந்திருக்காங்க... நீ பணம் வெச்சிருந்த மஞ்சள் துணி பை மாதிரியே... அவங்களும் ஒரு பை வெச்சிருந்திருக்காங்க... லேசா கண்ணை மூடிட்டாங்க போல... மடியில இருந்த பை கீழே விழுந்து... பஸ்சோட குலுக்கல்ல... முன்னாடி போயிட்டு... அதே மாதிரி... உன் மடியில இருந்த பையும்... கீழ விழுந்து பஸ்சோட குலுக்கல்ல நகர்ந்து இவங்க காலடியில வந்து கெடந்திருக்கு. கண்ணு முழிச்சுப் பார்த்திருக்காங்க... காலடியில கிடந்த பையை தன்னோடதுதான்னு நெனச்சு எடுத்துக்கிட்டு இறங்கிட்டாங்க... பஸ் நகர்ந்த பிறகுதான்... பையையும் உள்ளே இருந்த பணத்தையும் பார்த்திருக்காங்க... பதறிட்டாங்களாம்... நல்ல வேளை பணத்தோட

    Enjoying the preview?
    Page 1 of 1