Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gangai Kaainthu Pogathu
Gangai Kaainthu Pogathu
Gangai Kaainthu Pogathu
Ebook79 pages27 minutes

Gangai Kaainthu Pogathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்துகதைகளும் விறுவிறுப்பாக எழுதப்பட்டவை.மாயன் கதை படபடப்பை கூட்டும்.தரிசனம் கதை பலூன் கதை நெகிழ்வான படைப்புகள். நாவல் மரம் கதை கலங்கவைக்கும் கதை..வாசித்து மகிழுங்கள்

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580128308554
Gangai Kaainthu Pogathu

Read more from Maheshwaran

Related to Gangai Kaainthu Pogathu

Related ebooks

Reviews for Gangai Kaainthu Pogathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gangai Kaainthu Pogathu - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கங்கை காய்ந்து போகாது

    Gangai Kaainthu Pogathu

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கங்கை காய்ந்து போகாது

    2. கனவு

    3. பள்ளிக்கு எதிரில் ஒரு நாவல்மரம்

    4. தரிசனம்

    5. பலூன்...

    1. கங்கை காய்ந்து போகாது

    உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது.

    கோணியப்பனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

    தொண்டை வறண்டு தாகமெடுத்தது.

    கொண்டு வந்திருந்த முழு பாட்டில் தண்ணீரையும் காலையில் இருந்து குடித்துக் குடித்து காலி பண்ணிவிட்டான். ஒருவாய் கூட மிச்சமில்லை.

    பக்கத்திலேயே குளிர்பானக் கடை. கலர் கலராய் குளிர்பான பாட்டில்கள்.

    விதவிதமாய் சர்பத் பாட்டில்கள். எலுமிச்சை கலந்த பன்னீர் சோடாவை பெரிய கிளாசில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போடச் சொல்லி உதட்டில் வைத்து உறிஞ்சுகிறவர்களை எல்லாம் நாக்கில் எச்சில் ஊறப் பார்ப்பான்.

    அவ்வளவுதான்...

    அவர்கள் கிளாசில் இருக்கும் முழு சோடாவையும் குடிப்பதற்குள் இவனுடைய ஆசை அடங்கிவிடும்.

    ஒருதடவை கூட அந்தக் கடையில் போய் இவன் குளிர்பானம் குடித்தில்லை.

    எப்போதோ ஒருமுறை குடிக்கத் தண்ணீர் கேட்டான். நாற்பத்தி எட்டு நாட்கள் தடுப்பூசி போடுகிற அளவிற்கு குளிர்பான கடைக்காரன் வார்த்தைகளாலேயே கடித்து விரட்டிவிட்டான். ரோசக்காரன் கோணியப்பன். அன்றிலிருந்து குளிர்பானக் கடைப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான்.

    நல்ல மனிதருக்கும் ஒரே சூடுதான்...

    ***

    குடையின் கிளிலின் வழியே ஊடுருவிய கதிரவனின் கதிர்கள் கோணியப்பனின் தலைக்குள் ஊடுருவி இன்னும் தகதகக்கச் செய்தது.

    உயரமான மூங்கில் குச்சியில் அழுத்தமான சணல்கொண்டு குடையின் பிடியை இணைத்துக் கட்டியிருந்தான். அதன் கீழேதான் கோணியப்பனின் சாம்ராஜ்யம்.

    முதலாளியும் அவனே, தொழிலாளியும் அவனே.

    லாபமோ நஷ்டமோ எல்லாமே அவனைச் சார்ந்தது.

    ஏழு வயதில் அப்பாவிற்குத் துணையாய் வந்து அமர்ந்தான்.

    எப்பா... நான் ஒன்கூடவே தொழிலைக் கத்துக்கறேனே...?

    கெஞ்சிக் கூத்தாடிதான் ஊசியைக் குத்தி இழுக்கக் கற்றுக் கொண்டான்.

    பத்தாம் வகுப்பில் படுதோல்வி.

    படிப்பு ஏறவேயில்லை. ஒரு டிகிரி முடித்திருந்தால் வேறு எங்கேனும் வேலைக்குப் போயிருப்பான்.

    எல்லாம் விதி.

    இன்றைக்கு ஐம்பத்தேழு வயதாகிறது. இதுதான் தொழில் என்றாகிவிட்டது.

    ***

    மழைக்காலம்தான் கோணியப்பனுக்கு வசந்த காலம்.

    வருமானம் வரும் காலம். நிறையப்பேர் வருவார்கள்.

    வாறு அறுந்துடுச்சுன்னு தைத்துத் தரச் சொல்வார்கள்.

    பெரும்பாலும் ஒற்றை வார்தான் அறுந்துபோகும். இருபது ரூபாய்க்கு மேல் கேட்க மாட்டான். ஆனாலும், அதைக் கொடுக்க மனசு வரவே வராது.

    கசங்கிய பத்து ரூபாய்த் தாளையும் தேடிப் பொறுக்கி எண்ணி எண்ணி சில்லரைக் காசுகளாய் ஐந்து ரூபாயுமாகத் தருவார்கள். மவுனமாய் வாங்கிக் கொள்வான்.

    வாரைத் தைத்து வாங்கிக் கொண்ட பிறகு...

    பத்து ரூபாய்க்கு மேல தரவே மாட்டேன்...

    என அடம் பிடிப்பவர்களும் உண்டு.

    ஓங்கி அறைய வேண்டும் போல ஆத்திரம் பீறிடும்.

    கொடுக்கிறத கொடுங்க... நான் மிச்சத்தை தெருமுனை வெண்ணெய்ப் பிள்ளையாரோட கணக்கில சேர்த்துடறேன்...

    அவர்கள் தரும் பத்து ரூபாய்த் தாளை பொறுமையாக வாங்கிக் கொள்வான்.

    மாறி மாறி வந்து கொண்டே இருப்பார்கள். கிடைத்த வரை லாபம் என நினைத்துக் கொள்வான்.

    ஐம்பது அறுபது பேருக்குக் கூட தைத்துக் கொடுப்பது போல இருக்கும், ஓய்வே இருக்காது...

    வெயில் காலம் அப்படியில்லை...

    நேர் எதிர்...

    யாருடைய செருப்பும் வார் அறுந்து போகாது.

    ஆச்சரியமாய் ஒரு சிலருக்கு அறுந்தால்தான் உண்டு.

    புத்தகப்பை... கைப்பை...

    Enjoying the preview?
    Page 1 of 1