Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuyil Thoppu Marmam
Kuyil Thoppu Marmam
Kuyil Thoppu Marmam
Ebook80 pages57 minutes

Kuyil Thoppu Marmam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இது என்னுடைய 18வது வயதில் எழுதிய முதல் நாள் மிகவும் விறுப்பான கதை குயில்தோப்பு ஜமீனுக்கு ஆராய்ச்சி என்ற பெயரில் வருகின்ற இரண்டு இளைஞர்க்கும் இளம்பெண்ணுக்கும் எவ்வாறு தண்டிக்கப்படுகிறார்கள் என்பதே கதையின் கரு.
ராஜமாதா கயவர்களிடம் இருந்து ஜமீன் பொக்கிஷங்களான மரகதலிங்கம், வைரமாலை இவற்றை எப்படி காப்பாற்றுகிறார், என்பதை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305713
Kuyil Thoppu Marmam

Read more from Maheshwaran

Related to Kuyil Thoppu Marmam

Related ebooks

Related categories

Reviews for Kuyil Thoppu Marmam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuyil Thoppu Marmam - Maheshwaran

    http://www.pustaka.co.in

    குயில் தோப்பு மர்மம்

    Kuyil Thoppu Marmam

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    யார்ரது குயிலுதோப்பு... சல்தியா எறங்குங்க...

    சொல்லிவிட்டு, அந்த கண்டக்டர் நீளமாய் விசிலடிக்க... துருப்பிடித்த, வர்ணம் உதிர்ந்த, முன்பக்கம், பின்பக்கம், கண்ணாடிகள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்த... அந்த டவுன்பஸ் கிறீச்சிட்டு நின்றது. சூட்கேஸ்கள்... ஏர்பேக்குகள் சகிதமாய்...

    அந்த நால்வரும் பொத்பொத்தென்று குதித்தார்கள்.

    அவர்களுக்குப் பின்னால் இன்னும் யார் யாரோ இறங்கினார்கள். டவுன்பஸ் ஏறுகிறவர்களை ஏற்றிக் கொண்டு நகர்ந்தது. பஸ் நகரும் வரை அப்படியே... அந்த இடத்திலேயே நின்று... நாலாபுறமும் கண்களை அலைபாய விட்ட அந்த நால்வரும்... இப்போது மெல்ல நடந்தார்கள்.

    அந்த நால்வர்...?

    ஷ்யாம் சுந்தர்...

    பிரபுராம்...

    சாந்தமதி...

    தீப்தா...

    உயரமாய், சிவப்பாய் பாபு ஆண்டனி சாயலில் இருந்தவன் ஷ்யாம் சுந்தர். கருநீலநிற ஜீன்ஸ்பேண்ட் சட்டையில் இருந்தான்.

    மாநிறத்தில் கும்மென்ற கண்ணங்களோடு டிஸ்கோ கிராப்பில்... பெண்மைத்தனமான கண்களோடு இருந்தவன் பிரபுராம். ஆரஞ்சு நிறத்தில் கறுப்புப் பூக்களுடன்... மெல்லிய வாயில் சேலையும், நீளக்கை வைத்த ப்ளவுஸ்சும்... அணிந்திருந்தவள் சாந்தமதி. இன்றைய தமிழ் சினிபீல்டுக்கு ஏற்ற கதாநாயகி முகவெட்டும்... வழவழப்பான வெண்ணைக்கட்டி உடம்புமாய்... வேகமாய்... தோள்களில் வழிகிற கருங்கூந்தலை அலட்சியமாய் கோதியவாறே கிளிப்பச்சைநிற சேலை கட்டிய தேவதையாய்... சாந்தமதியின் தோள்களை உரசியபடியே நடப்பவள்... தீப்தா.

    நால்வருடைய கையிலும் மினிசூட்கேஸ் இருந்தது. தோள்களில் ஏர்பேக் தொங்கியது.

    நால்வருமே நகரவாசிகள். நாகரீகவாசிகள்.

    அவர்களுக்கு இந்த குயில்தோப்பு கிராமத்தில் என்ன வேலை...? எதற்காக வந்திருப்பார்கள்? கேள்விக் குறியோடு... ஆர்வமாய்.

    அவர்களையே வெறித்தான்...

    ஒரு பெட்டிக்கடைக்காரன். அவன் ஆர்வத்தைப் புரிந்து கொண்டவர்களாய்... அந்தப் பெட்டிக்கடையை நோக்கி நடந்தார்கள்.

    இந்தாப்பா... இரண்டு சிகரெட் குடு. கடைக்காரனிடம் ஒரு ஐந்து ரூபாய்த்தாளை நீட்டினான் ஷ்யாம் சுந்தர். கடைக்காரன் அவசரமாய் அந்த ஐந்து ரூபாய்த் தாளை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு... இரண்டு சிகரெட்டையும் மீதி சில்லரையையும் அவனிடம் நீட்டியபடி கேட்டான்.

    சாரெல்லாம் யாரு...? ஊருக்குப் புதுசுங்களா?

    ஆமாப்பா... என்றபடியே ஒரு சிகரெட்டை தன்னுடைய உதட்டில் பொருத்திக் கொண்டு இன்னொன்றை பிரபுராமிடம் நீட்டினான் ஷ்யாம்சுந்தர்.

    இருவரும் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டார்கள்.

    சாரெல்லாம் யாருவூட்டுக்குப் போறாப்ல? கடைக்காரன் அவர்களை விடுவதாய் இல்லை. மறுபடியும் கேட்டான்.

    நாங்க இங்க யாரு வீட்டுக்கும் வரலை...

    பின்னே?

    ஒரு ஆராய்ச்சிக்காக வந்துருக்கோம்

    ஆராய்ச்சியா...?

    என்று கேட்ட கடைக்காரனின் முகம் சுருங்கியது. கண்களில் கலவரம் சட்டென படர்ந்து மறைந்தது.

    ஆமாம். ஆராய்ச்சிக்காகத்தான் நாங்க இங்க வந்துருக்கோம். இந்த ஊருல ஒரு பெரிய கோவில் ஒண்ணு இருக்குது இல்லையா...? அங்க இருக்கற அபூர்வமான சிற்பங்களைப் பத்தியும்... ஆயிரங்கால் சிற்பமண்டபத்தைப் பத்தியும்தான் ஆராய்ச்சி பண்ணப் போறோம்.

    அய்யய்யோ... அந்த கோவிலுக்குள்ளயா ஆராய்ச்சி செய்யப் போறீங்க...? அதுக்குள்ள இப்பல்லாம் யாருமே போக முடியாது.

    ஏன்?

    பாழடைஞ்சு போய்ட்டு. வெறும் கல்லும், முள்ளுமா... செடி கொடிங்க மண்டிப்போயி... கோவில் பூரா வௌவாலும்... பூரானும்... பாம்புமாகத்தான் இருக்கு. முன்னல்லாம் அந்தக் கோவில் சாமிக்கு ஒரு வேளை பூஜையாவது நடக்கும். இப்ப அதுவும் இல்லை. அங்க இருக்கற பாம்புகளுக்குப் பயந்து கிட்டு... அந்தப் பக்கம் தலைவெச்சு கூடப் படுக்கறது இல்ல குருக்கள்.

    அப்படியா...?

    ஷ்யாம் சுந்தர் ஏளனமாய்ச் சிரித்தான்.

    "ஆமா... எங்க தங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1