Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaarathu... Nenjalli Ponathu?
Yaarathu... Nenjalli Ponathu?
Yaarathu... Nenjalli Ponathu?
Ebook85 pages28 minutes

Yaarathu... Nenjalli Ponathu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாரது நெஞ்சள்ளிப் போனது ரொம்ப வித்தியாசமானக் காதல்கதை நான் எழுதிய நாவல்களில் நிறைய வாசகர்கள் பாராட்டிய நாவல். ஆரம்பம் முதல் முடிவு வரை அப்படியொரு விறுவிறுப்பு.
காதல் சுகமானது, அது சோகத்தில் முடியவே கூடாது. இதயத்தை வீணையாய் மீட்டும் சக்தி காதலுக்கு உண்டு.
“யாரது நெஞ்சள்ளிப் போனது”
வாசகர்களின் நெஞ்சையள்ளிப் போகும் சுவையான காதல் கதை
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580128305532
Yaarathu... Nenjalli Ponathu?

Read more from Maheshwaran

Related to Yaarathu... Nenjalli Ponathu?

Related ebooks

Reviews for Yaarathu... Nenjalli Ponathu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaarathu... Nenjalli Ponathu? - Maheshwaran

    http://www.pustaka.co.in

    யாரது... நெஞ்சள்ளிப் போனது?

    Yaarathu... Nenjalli Ponathu?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அந்த அறையின் ஜன்னலையொட்டி அடர்த்தியான எலுமிச்சை மரம் ஒன்று இருந்தது. மரத்தின் கிளையிடுக்கில் ஒரு சிட்டுக் குருவிக்கூடு. கூட்டினுள் இருந்த தன் குஞ்சுகளுக்கு தாய்க்குருவி எங்கிருந்தோ இரையைத் தேடிக் கொண்டு வந்து, ஆசை ஆசையாய் ஊட்டிக் கொண்டிருந்தது.

    ஜன்னல் கம்பிகளில் கன்னங்கள் அழுந்த கண்கள் பனிக்க அக்காட்சியை ரசித்தபடி நின்றிருந்தாள் வைதேகி.

    வைதேகி... முதுகுப் பின்னால் வந்து நின்றாள் கௌசல்யா.

    ஏம்மா...? வைதேகி மெல்ல திரும்பினாள்.

    உங்கிட்டே ஒரு விஷயம் சொல்லனும். தப்பா நெனைக்க மாட்டியே...

    ச்சே... என்னம்மா... இது...! எதா இருந்தாலும் சொல்லும்மா. நா ஒண்ணும் நெனைச்சுக்க மாட்டேன்.

    இன்னைக்கு உன் தங்கச்சி நர்மதாவைப் பொண்ணு பார்க்க வாறாங்க...!

    அப்படியா... ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா...

    வைதேகியின் முகத்தில் மத்தாப்பு சிதறியது. அந்த சந்தோஷத்தை ஒரு நிமிடம் கூட முழுதாய் நீடிக்க விடவில்லை கௌசல்யா.

    அவங்கள்ளாம் வந்துட்டுப் போற வரைக்கும் நீ நம்ம வீட்ல இருக்க வேணாம்...

    அம்மா...

    உன்னப் பத்தின விபரங்கள் தெரிஞ்சா... அவங்க நம்ம வீட்ல பொண்ணு எடுக்க யோசிப்பாங்க வைதேகி...

    குப்பென்று நெஞ்சையடைத்தது. வைதேகி அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல்...

    சரிம்மா...! நா. அவங்கள்ளாம் வந்துட்டுப் போற வரைக்கும்... வீட்டுப் பக்கமே வரலை. பவானி அக்கா வீட்ல போய் இருக்கேன்... என்றாள்.

    ரொம்ப நன்றி வைதேகி...

    கௌசல்யா ஒரு டிபன் கேரியரை வைதேகியிடம் நீட்டினாள்.

    மத்தியான சாப்பாட்டை இதுல எடுத்து வெச்சுருக்கேன். வயிறைக் காயப் போட்டுடாதே... கரிசனமாய் சொன்னாள்.

    வைதேகிக்கு அழுகை வரும் போல இருந்தது.

    பொங்கிய கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

    அழக்கூடாது.

    அம்மாவின் முன்பு அழுதால் ரொம்ப உடைந்து போய் விடுவாள்.

    கௌசல்யா தந்த டிபன் கேரியரை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே நடந்தாள் வைதேகி.

    இதயத்தினுள் குத்தீட்டியை சொருகியதைப் போல வலித்தது.

    நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைத்தது இல்லையே. எனக்கேன் இவ்வளவு வேதனைகளும்... சோதனைகளும். என்னுடைய வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி ஆனது....? விதிக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை! எனது வாழ்க்கையில் மட்டும் மோசமாய்... மிக மிக மோசமாய் விளையாடிவிட்டதே...!

    வைதேகிக்குள் கடல் பொங்கியது.

    கதிர்! என்னவனே! எனது உயிரில் கலந்தவனே! உன்னால் தானடா எனக்கு இந்தக் கதி. நீ என்னைவிட்டு போனதால்தான் இத்தனை அவமானம். நீ மட்டும் என்னருகில் இருந்திருந்தால்... எனக்கு இத்தகைய கொடுமை வந்திருக்குமா? என் கண்ணாளனே! எனது கண்ணில் சிறு தூசி விழுந்தாலும் துடி துடித்து போவாயே. ஆனால் இப்போது என் தலையில் இடியே அல்லவா விழுந்துவிட்டது!

    கண்ணீர் தளிர்த்தது.

    தெருவில் எதிர் வரிசையில் இருக்கும் பவானி அக்கா வீட்டை நோக்கி நடந்தாள் வைதேகி.

    வா... வைதேகி...

    வாசற் படியிலேயே நின்று கொண்டிருந்தாள் பவானி.

    பவானியின் வீட்டுக்காரருக்கு வங்கியில் வேலை.

    அழகழகாய் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

    குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், வீட்டுக்காரர் வேலைக்கும் போயிருக்க, பவானி மட்டும் தனித்திருந்தாள்.

    பவானி எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவாள்.

    அந்த தெருவில்

    Enjoying the preview?
    Page 1 of 1