Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marakka Mudiyavillai...! - Part 2
Marakka Mudiyavillai...! - Part 2
Marakka Mudiyavillai...! - Part 2
Ebook54 pages22 minutes

Marakka Mudiyavillai...! - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய தலைமுறை இளைஞனான ஆனந்தனின் மனப்போராட்டம் - குடும்பமா? காதலா? என அவனுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்திலிருந்து அவன் மீண்டெழுந்தானா? உண்மையான பாசத்திற்கு முன்னால் ஜெயித்தது எது? குடும்பமா? காதலா?

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580128310156
Marakka Mudiyavillai...! - Part 2

Read more from Maheshwaran

Related to Marakka Mudiyavillai...! - Part 2

Related ebooks

Reviews for Marakka Mudiyavillai...! - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marakka Mudiyavillai...! - Part 2 - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மறக்க முடியவில்லை...! - பாகம் 2

    Marakka Mudiyavillai...! - Part 2

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    வீடு... இதுபோல ஒருநாளும் நிசப்தமாக இருந்தது இல்லை! வீட்டின் ஜன்னலை ஒட்டியிருந்த பெரிய மாமரம் அதன் அடர்ந்து படர்ந்த கிளைகளில்... சதா... சடுகுடு ஆடுகிற அணில்கள்கூட அமைதியாகத்தான் இருந்தன.

    கிளையிடுக்குகளில் அமர்ந்திருந்த... குருவிகள்கூட மௌனவிரதம்தான்.

    வீட்டின் இறுக்கமான சூழ்நிலை... அவைகளுக்கும்... புரிந்துபோயிருக்குமோ?

    பூஜையறைக்குள்... அதிகாலையில் ஏற்றிவைத்த... குத்துவிளக்கு... தூண்டிவிட... யாரும் வராததால்... கருகிக் கொண்டிருந்தது...

    முழங்காலில் முகம் புதைத்து... விசும்பிக்கொண்டு இருந்தாள்... மீனாட்சி...

    ஆனந்தனுக்காக ஆசை ஆசையாய் சமைத்துவைத்த சாப்பாடு... ஆறிக்கொண்டிருந்தது...

    திலகாவும், இளவரசியும், கல்யாணியும், தியாகராஜனின் காலடியில் அமர்ந்திருந்தார்கள்...

    தியாகராஜனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை... ஆனந்தனை எரித்துவிடுவதுபோல பார்த்தார்...

    ஆனந்தன் முகத்தை வேறுபக்கமாய் திருப்பிக்கொண்டான்.

    ***

    ஆனந்தனுக்கு சென்னையில் உத்யோகம்...

    பிரபல விளம்பர நிறுவனம் ஒன்றில்... கம்ப்யூட்டர் டிசைனராய் வேலைப்பார்க்கிறான்... கைநிறைய சம்பளம்... நல்ல அழகன் வேறு...! ஒரு ஆணுக்கு இதைவிட வேறென்ன தகுதிகள் வேண்டும்? அவனைப்பற்றியோ... அவனுடைய குடும்ப சூழ்நிலையைப்பற்றியோ... கவலைப்படாமல் தீவிரமாய் காதலிக்கத் தொடங்கிவிட்டாள் அட்சயா.

    அவளுக்கும் அதே நிறுவனத்தில்தான் வேலை.

    நுனிநாக்கு ஆங்கிலம் பேசும்... ரிஷப்சனிஸ்ட்...

    எத்தகைய... போர்வீரனையும் வீழ்த்திவிடும்... விழிகளுக்கு... சொந்தக்காரி...

    அவளை எத்தனையோ ஆண்கள் விரும்பினாலும்... அட்சயா விரும்பியதென்னவோ... ஆனந்தனைத்தான்.

    ஆனந்தனை தன் உயிராய் நினைத்தாள்...

    ஆனந்தனை தன் உலகமாய் நினைத்தாள்... ஆனந்தனை ஒருநாள் பார்க்காவிட்டாலும்... விளக்கில் விழுந்த விட்டிலாய் துடிதுடித்துப்போவாள்...

    இயந்திரத்தனமான சென்னையில்... ஆனந்தனுக்கு பிடித்த ஒரே விஷயம் அட்சயாதான்.

    அவளுக்காக... அவன்... எதையும் இழக்கத்தயாராய் இருந்தான்.

    ***

    பீச்

    இருவருமே சீறிவருகிற அலைகளை ரசிக்கிற மனநிலையில் இல்லை.

    படகுமீது சாய்ந்துகொண்டிருந்த இருவருடைய கால்களையும் சீண்டிக்கொண்டிருந்தது அலைகள்...

    அட்சயாதான் மவுனத்தை உடைத்தாள்.

    ஆனந்த்... உம்முன்னு இருந்தா... என்ன அர்த்தம்?

    .....

    கேக்கறேன்லெ...? முடியுமா... முடியாதா... ரெண்டுல ஒரு பதிலை... சொல்லுங்க...!

    தோள்பட்டையில் இடித்தாள்...

    நேற்று இரவு இரண்டாவது தடவையாக... அவளுடைய அம்மாவுக்கு... ஹார்ட் அட்டாக்... வந்துவிட்டதாம்... இன்னொரு தடவை வந்தால்... உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1