Marainthirunthu...
By SL Naanu
()
About this ebook
பிரபல ஜவுளிக் கடை அதிபர் மந்திரமூர்த்தியின் வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசுகிறது... அடி மேல் அடி விழுகிறது... இதற்குக் காரணம் யார்? மறைந்திருந்து நடத்தும் தாக்குதலுக்குக் காரணம் யார்? எதற்காக இந்தத் தாக்குதல்? இறுதியில் மந்திரமூர்த்தியின் நிலைப்பாடு என்ன? இதை மர்மமும் வேகமும் கலந்து வழங்குவதே “மறைந்திருந்து...” - அடுத்தது என்ன என்று இறுதி வரை எதிர்பார்க்க வைக்கும் கதையோட்டம்...
Read more from Sl Naanu
Anbulla Ammavukku... Rating: 0 out of 5 stars0 ratingsAvasthaiyo Avasthai Rating: 0 out of 5 stars0 ratingsThanimara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsSuper Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsIlakkilaatha Kirukkalgal Rating: 0 out of 5 stars0 ratingsNeenga Yaar Pakkam? Rating: 0 out of 5 stars0 ratingsPillayar Pidikka Rating: 0 out of 5 stars0 ratingsPachayanam Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 0 out of 5 stars0 ratingsAnbudan Rating: 0 out of 5 stars0 ratingsVeedu Varai Uravu Rating: 0 out of 5 stars0 ratingsTheethum Nandrum Rating: 0 out of 5 stars0 ratingsPatrathu Patratru Rating: 0 out of 5 stars0 ratingsAppa Appappa Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marainthirunthu...
Related ebooks
Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsTheansindhum Pooncholai... Rating: 0 out of 5 stars0 ratingsPookalin Mozhi Puriyalaye? Rating: 0 out of 5 stars0 ratingsEn Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Veethiyellaam Pooppanthal Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Pon Veedhiyil... Rating: 0 out of 5 stars0 ratingsGandhi Desam Rating: 0 out of 5 stars0 ratingsUnnudan Naan... Ennudan Nee... Rating: 4 out of 5 stars4/5Unnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsThaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsThodamaley Sudum Thanal Rating: 4 out of 5 stars4/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsHello Mister Kaadhala! Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5காகித இருதயங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsInimai Kanavugal Thodrattume Rating: 0 out of 5 stars0 ratingsPuthithaga Oru Bhoopalam Rating: 4 out of 5 stars4/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Manam Kooduthillaiye Rating: 5 out of 5 stars5/5Ullaththaik Killaathey! Rating: 0 out of 5 stars0 ratingsNovember Raththirigal Rating: 0 out of 5 stars0 ratingsSonna Sollai Marandhidalamo… Rating: 4 out of 5 stars4/5Sivappu Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSontham Eppothum Thodar Kathaithan... Rating: 3 out of 5 stars3/5Pakkam Vara Thudithean... Rating: 4 out of 5 stars4/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Marainthirunthu...
0 ratings0 reviews
Book preview
Marainthirunthu... - SL Naanu
https://www.pustaka.co.in
மறைந்திருந்து...
Marainthirunthu...
Author:
SL நாணு
SL Naanu
For more books
https://www.pustaka.co.in/home/author/sl-naanu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
நிச்சயமா நடக்காது
நந்தினி கொஞ்சம் காட்டமாகவே சொன்னாள். அவள் குரலைக் கேட்டு மந்திரமூர்த்தி பதட்டமடைந்தார்...
அந்தக் குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்ட கடந்த சில மாதங்களில் ஒரு முறைகூட நந்தினி இப்படிக் குரல் உயர்த்திப் பேசியதே இல்லை...
ஆனால் அதே சமயம்...
நந்தினியின் குரலில் தெரித்த ஆக்ரோஷம்... அது வெளிப்பட்ட விதம்...
மந்திரமூர்த்திக்கு இதற்கு முன் எங்கேயோ கேட்டது போலவே இருந்தது...
எங்கே? எங்கே?
இது நாள் வரை பார்த்திராத நந்தினியின் ஆவேசம்...
காரணம் இருந்தது. அது நியாயமான காரணமும் கூட...
இருந்தாலும் இந்த ஆக்ரோஷம்...
யாரிடம் பார்த்திருக்கிறோம்?
மந்திரமூர்த்தி புரியாமல் தவித்தார்...
இதப் பாரும்மா... உன் பக்கம் நியாயம் இருக்கு... இல்லைன்னு சொல்லலை... அதுக்காக என் மகன் அரவிந்த் சார்புல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்... இந்த விஷயத்தைப் பெரிசா எடுத்துக்காதே... பேசி சரி பண்ணிரலாம்... ஆனா தயவு செய்து உன் முடிவை மாத்திக்க... உன்னுடைய இந்த முடிவுனால இந்தக் குடும்பத்தோட மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே காத்துல கரைஞ்சுரும்...
நந்தினி மௌனமாக இருந்தாள். ஆனால் அவள் முகத்தில் இறுக்கம்.
மந்திரமூர்த்தி...
அன்றோடு அவருக்கு அறுபத்தைந்து வயது பூர்த்தியாகிறது... கிட்டத்தட்ட ஆறடி உயரம்... சதைப் பிடிப்பு தளும்பி வழியும் உடம்பு... வழுக்கையில்லாத வெள்ளை முடி... நெற்றியில் பட்டை விபூதி... புதிய ஐம்பது காசு அளவுக்கு குங்குமப் பொட்டு... மழு மழுவென்று சவரம் செய்யப்பட்ட மீசையில்லாத முகம்... விலை உசத்தியான மூக்குக் கண்ணாடி... சர்ப் ஏரியல் விளம்பரத்தில் தென்படுவது போன்ற பளீர் வெள்ளை ஜிப்பா... பாலிஸ்ட்ர் வேஷ்டி... கழுத்தில் காத்திரமான சங்கிலி... கை விரல்களில் தாராளமாக மோதிரங்கள்... சிலது நவர்த்தினக் கற்கள் பதித்து...
ஆஜானுபாகுவான உருவம் இப்போது கூனிக் குறுகி செய்வதறியாது உட்கார்ந்திருந்தது... பிறந்த நாள் கொண்டாட வேண்டியவர் இப்படிப் பரிதவிப்புடன்...
கணவனின் நிலமையைக் கண்டு மருகினாள் காமேஷ்வரி...
ஏம்மா நந்தினி... இவர் இவ்வளவு சொல்றாரே... கொஞ்சம் எங்க நிலமையை யோசிச்சுப் பாரும்மா... கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு... எல்லா ஏற்பாடுகளும் பண்ணியாச்சு... ஊர் முழுக்கப் பத்திரிகை வெச்சு அழைச்சாச்சு... எம்.எல்.ஏ. உட்பட ஊருல இருக்கிற பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் கல்யாணத்துக்கு வரப் போறாங்க... இப்பப் போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எப்படிம்மா?
நந்தினியின் இறுக்கம் இன்னும் கூடியது...
மந்திரமூர்த்தி எழுந்து நந்தினியின் அருகில் வந்தார்...
நந்தினி... தயவு செய்து நான் சொல்றதைக் கேளு... இப்பப் போய் கல்யாணம் நின்னுதுன்னா... ஊர் உலகம் தாறுமாறா பேசறது மட்டுமில்லை... எங்க உறவுக்காரங்களே தேவையில்லாம கண்ணு காது மூக்கு வெச்சு விஷயத்தைப் பெரிசாக்கி எங்களை தலை குனிய வெச்சிருவானுங்க... ஊர் முழுக்க வதந்திய பரப்பிடுவானுங்க... அப்புறம் அரவிந்துக்குப் பொண்ணு கொடுக்கவே எல்லாரும் தயங்குவாங்க... அதனால தயவு செய்து உன் முடிவை மாத்திக்க... உன் காலுல வேணாலும் விழறேன்
நந்தினியின் காலில் விழப் போனவரை வெளியிலிருந்து வந்த அரவிந்தின் குரல் தடுத்தது...
நிறுத்துங்கப்பா... நீங்க எதுக்கு இவ காலுல விழணும்?
திடுக்கிட்டுத் திரும்பினார் மந்திரமூர்த்து...
அரவிந்த்... ப்ளீஸ்... நீ மேல எதையும் பேசிக் குழப்பாதே.
இல்லைப்பா... இவ என்ன சொல்றது? நான் சொல்றேன்... இந்தக் கல்யாணம் நடக்காது...
டேய்... என்னடா சொல்றே? நம்ம குடும்ப மானம்...
தூக்கிக் குப்பைல போடுங்கப்பா குடும்ப மானத்தை... இவ கூட என்னால கண்டிப்பா வாழ முடியாது...
ஏன்?
"அப்பா... கோபப் படடறவங்க கூட வாழலாம்... ஏன்னா கோபப்படற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க... ஆனா உண்மையைப் புரிஞ்சுக்காம... நம்பாம... இன்னும் சொல்லப் போனா நம்பத் தயாரா இல்லாம சந்தேகப் படறவ கூட கண்டிப்பா வாழ முடியாது... அப்புறம் வாழ்நாள் முழுக்க சந்தேகம் தான் ஆட்டிப் படைக்கும்.
நந்தினிக்கு கோபம் ஏறியது...
சந்தேகமா?... கண்ணுக்கு முன்னால அசிங்கம் நடந்து நிரூபணமாயிருக்கு.
அரவிந்த் கத்தினான்...
அதெல்லாம் பொய்... இதுல ஏதோ சதி இருக்கு
நந்தினி அழுத்தமாக...
"கண்டிப்பா சதி இருக்கு... நீ உன்னை ரொம்ப யோக்கியனா