Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillayar Pidikka
Pillayar Pidikka
Pillayar Pidikka
Ebook106 pages36 minutes

Pillayar Pidikka

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பது பழைய மொழி,, இந்தக் காலத்தில் ஏராளமான ஹவுஸிங் லோன் தயவில் சுலபமாக வீடு கட்டவும் முடிகிறது.. அதே மாதிரி கையில் பணம் இருந்தால் போதும்.. காண்ட்ராக்ட் மூலம் கல்யாணத்தையும் சுலபமாக நடத்தி விட முடிகிறது. ஆனால் ஒரே சிக்கல்.. கல்யாணத்துக்குப் பெண் கிடைப்பது.. இப்போது கல்யாணப் பெண்களுக்கு அவ்வளவு டிமாண்ட்.. இதை இயல்பான நகைச்சுவையுடன் சித்தரிப்பதே பலரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற “பிள்ளையார் பிடிக்க” என்ற இந்த நாடகம். திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” குடும்பத்தினரால் பல முறை மேடையேற்றப் பட்ட நாடகம்..
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142306692
Pillayar Pidikka

Read more from Sl Naanu

Related to Pillayar Pidikka

Related ebooks

Reviews for Pillayar Pidikka

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillayar Pidikka - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிள்ளையார் பிடிக்க

    Pillayar Pidikka

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    சமர்ப்பணம்

    என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய எனது

    தகப்பனார் திரு. சகஸ்ரநாமன் மற்றும் எனது

    தாயார் திருமதி. சிவகாமி அவர்களுக்கு.

    காட்சி - 1

    இடம்: சிவராமன் வீடு

    பாத்திரங்கள்: சிவராமன், லலிதா, சுரேஷ்

    (லலிதா உள்ளிருந்து வந்து)

    லலிதா: ஆண்டவனே.... எல்லாம் நல்லபடியா நடக்கணும்.

    (என்றதும் சுரேஷ் டிராக் சூட்டில் தோளில் டர்கி டவல் தொங்கியபடி வெளியிலிருந்து வந்து)

    சுரேஷ்: ஹாய் மா...

    லலிதா: வாடா சுரேஷ்... கர்லா கட்டையைத் தூக்கிட்டு வந்தாச்சா?

    சுரேஷ்: கர்லா கட்டையா? மா... நான் போறது ஹை டெக் ஜிம்...

    லலிதா: ஆமா... பழைய கர்லா கட்டைல கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி ரெண்டு வயரை செருகினா உடனே ஹைடெக்னு சொல்லிருவேள்...

    சுரேஷ்: This is too much மா (உட்கார்ந்து ஷூவைக் கழட்டியபடி) ஆமா, அப்பா வாக்கிங் போயிட்டு வந்தாச்சா?

    லலிதா: பொல்லாத வாக்கிங்... தினம் பந்தாவா வாக்கிங் டிரெஸ்லாம் மாட்டிண்டு ஷூவெல்லாம் போட்டுண்டு கிளம்ப வேண்டியது. நேரா பார்க்குல போய் உட்கார்ந்து இருக்கிற கெழம் கட்டைகளோட அரட்டை அடிக்க வேண்டியது... அங்கயே சைக்கிள்ள வர்ர ஆளுகிட்ட ரெண்டு மூணு டோஸ் காப்பி குடிக்க வேண்டியது... அப்புறம் வீட்டுக்கு வரும் போது இதோ... இந்த வாசல்லேர்ந்து இதுவரைக்கும் ஜாகிங் பண்ணிண்டே வருவார். ஏதோ வாக்கிங் போய் ரொம்பக் களைச்சுப் போன மாதிரி போஸ் கொடுத்துண்டு சோபாவுல பொத்துன்னு உட்கார்ந்து லலிதா... டயர்டா இருக்கு, கொஞ்சம் தண்ணி கொண்டுவான்னு சொல்ல வேண்டியது... வழக்கமா நடக்கறதுதானே?

    (என்றவுடன் சிவராமன் லலிதா கூறியது போலவே வெளியிலிருந்து வந்து அவர்களைப் பார்த்ததும் ஜாகிங் செய்வது போல் வந்து களைத்துப் போனது போல் சோபாவில் உட்கார்ந்து)

    சிவராமன்: லலிதா... டயர்டா இருக்கு, கொஞ்சம் தண்ணி கொண்டு வா...

    (என்றவுடன் லலிதா சுரேஷை நமுட்டுச் சிரிப்புடன் பார்க்க, அதைப் பார்த்து சுரேஷ் கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டுச் சிரிக்க, லலிதா உள்ளே சென்று தண்ணி கொண்டு வந்து கொடுக்க)

    சிவராமன்: ஏண்டா... நான் தண்ணிதானே கேட்டேன்...? தண்ணி அடிச்சிட்டு வந்தாக் கேட்டேன்...? இப்படிச் சிரிக்கறே?

    சுரேஷ்: அதில்லைப்பா... அம்மா இப்பத்தான் சொல்லிண்டிருந்தா...

    சிவராமன்: நான் தண்ணி அடிச்சிட்டு வருவேன்னா?

    சுரேஷ்: இல்லை... வந்த உடனே தண்ணி அடிப்பீங்கன்னு...

    சிவராமன்: (தண்ணி குடிப்பதை நிறுத்தி) என்ன?

    சுரேஷ்: இல்லை... தண்ணி கேட்பீங்கன்னு...

    சிவராமன்: கடுமையா வாக்கிங் போயிட்டு வந்தா தாகம் எடுக்கத்தான் செய்யும்...

    சுரேஷ்: சொன்னா சொன்னா... அம்மா அதையும் சொன்னா.

    சிவராமன்: தெரிஞ்ச விஷயம்தானே? இதை அம்மா எதுக்குச் சொல்லணும்?

    சுரேஷ்: அதில்லை... நீங்க கடுமையா வாக்கிங் போறதை பத்திச் சொன்னா...

    சிவராமன்: பின்ன... இன்னிக்கு நேத்தா வாக்கிங் போறேன்? இருபது வருஷமா வாக்கிங் போயிண்டிருக்கேன்... சொல்லப் போனா இத்தனை வருஷமா விடாம வாக்கிங் போறதுக்கு எனக்கு நள சக்ரவர்த்தி மாதிரி நட சக்கரவர்த்தின்னு அவார்ட் தரலாமான்னு வாக்கர்ஸ் அஸோஸியேஷன்ல யோசிச்சிண்டிருக்கா...

    லலிதா: போறும் உங்க வாக்கிங் புராணம்... இன்னிக்கு ஆபீஸ் லீவுதானே?

    சிவராமன்: என் இத்தனை வருஷ சர்வீஸ்ல எனக்குத் தெரிஞ்சு ஞாயித்துக்கிழமைன்னா ஆபீஸ் லீவுதான்? அதுல உனக்கு என்ன அவ்வளவு சந்தேகம்?

    லலிதா: உங்களைக் கேட்கலை... உங்க புள்ளையைக் கேட்டேன்... அவன் ஞாயித்துக்கிழமைகூட ஆபீஸ்லதானே குடி இருக்கான்... ஆனா உங்களுக்கு தினமும் ஞாயித்துக்கிழமை மாதிரிதான். ஏதோ உங்க ஃபிரெண்டோட கம்பினிங்கறதுனால ரிடையர் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் ஏதோ உ.சவா உங்களை இன்னமும் ஆபீஸ்ல வெச்சிண்டிருக்கா...

    சுரேஷ்: அதென்ன உ.ச?

    லலிதா: உப்புக்குச் சப்பாணி...

    சிவராமன்: மாசம் பொறந்தா கைநிறைய சம்பளம் கொடுக்கறாளே... அப்ப மட்டும் உப்புக்குச் சப்பாணியா தெரியலையா? அதில்லை... என்னுடைய திறமைக்கும் experienceக்கும் சரியான replacement அவாளுக்குக் கிடைக்கலை... அதான் இன்னமும் என்னை விடமாட்டேங்கறா...

    லலிதா: ஆமா...

    Enjoying the preview?
    Page 1 of 1