Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandaam Manaiviyagiya Naan...
Irandaam Manaiviyagiya Naan...
Irandaam Manaiviyagiya Naan...
Ebook162 pages59 minutes

Irandaam Manaiviyagiya Naan...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பெண் பாரதி' என்று தன் கல்லூரி தோழிகளால் அழைக்கப்படும் புரட்சிகரமான பெண் சுஜாதாவிற்கு தனது வருங்கால கணவரைப் பற்றி நிறைய கனவுகளும் வாழ்கையைப் பற்றிய லட்சியங்களும் உள்ளன. அவளது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் என்ன? அவளது கனவு நிறைவேறியதா? அமல்ராஜ் என்பவர் யார்? வாருங்கள் வாசிப்போம் பல திருப்பங்கள் நிறைந்த இக்கதையை...

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580130009568
Irandaam Manaiviyagiya Naan...

Read more from Mukil Dinakaran

Related to Irandaam Manaiviyagiya Naan...

Related ebooks

Reviews for Irandaam Manaiviyagiya Naan...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandaam Manaiviyagiya Naan... - Mukil Dinakaran

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    இரண்டாம் மனைவியாகிய நான்…

    Irandaam Manaiviyagiya Naan...

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 1

    அந்த ஷாப்பிங் மாலில் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. காரணம்...? ஞாயிற்றுக்கிழமை என்பது மட்டுமல்ல, அதன் இரண்டாம் தளத்தில் இருக்கும் மூன்று தியேட்டர்களிலும் அசத்தல் ஸ்டார்... ஆதவன் நடித்த வசியக்காரன் திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்ததுதான். அங்கு, டிக்கெட் கிடைக்காதவர்கள் ‘வந்ததுதான் வந்தோம்... அப்படியே ஷாப்பிங் காம்ப்ளக்ஸை சுத்திப் பார்த்திட்டுப் போவோமே?’ என்கிற எண்ணத்தில் எல்லாத் தளங்களிலும் வலம் வந்து கொண்டிருந்தனர்.

    அடுத்த மாதம் தனக்கு நிகழவிருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழ் வாங்க அந்தக் காம்ப்ளக்ஸில் உள்ள மாதேஸ்வரி கார்ட்ஸ் கடைக்கு வந்திருந்தாள் சுஜாதா. கார்ட் செல்கட் பண்ணுவதற்காக தங்கை கல்பனவையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.

    அக்கா... இந்தக் கார்டு செம சூப்பராயிருக்கு... யோசிக்கவே யோசிக்காதே... இதையே செலக்ட் பண்ணிடு கல்பனா சொல்ல,

    ப்ச்... சத்தம் போட்டுச் சொல்லாதே... அதோட விலையைப் பாரு கிசுகிசு குரலில் சொன்னாள் சுஜாதா.

    அந்தக் கார்டை மறுபுறம் திருப்பி, அதன் அடிப்பகுதியில் பென்சிலால் எழுதப்பட்டிருந்த விலையைப் பார்த்துவிட்டு, இருபத்தி அஞ்சு ரூபான்னு போட்டிருக்கு என்றாள் கல்பனா.

    ம்... வெறும் கார்டு மட்டுமே இருபத்தி அஞ்சு ரூபா... இன்னும் பிரிண்டிங் இருக்கு... அதுவும் சேரும் போது ஒரு கார்டோட காஸ்ட் முப்பது முப்பத்தியஞ்சு ரூபா ஆயிடும்... நம்ம பட்ஜெட்டுக்கு இது ஒத்து வராது வேற பாரு என்றாள் சுஜாதா நாசூக்கான குரலில்.

    சரி... நம்ம பட்ஜெட்தான் எவ்வளவு... அதையாவது சொல்லு கோபமாய்க் கேட்டாள் கல்பனா.

    ம்ம்ம்... கார்டு... பிரிண்டிங்... ரெண்டும் சேர்த்து ஒரு பதினஞ்சிலிருந்து... இருபது வரைக்கும் போதும்.

    க்கும்... அந்த விலைக்கெல்லாம் இந்தக் கடைல கார்டே இருக்காது... தேடுறது வேஸ்ட் சலித்துக் கொண்டாள் கல்பனா.

    இங்க பாரு உனக்குத் தேடுறதுக்கு சங்கடமாயிருந்தா... அதோ அங்க ஒரு சேர் இருக்கு பாரு... அங்க போய் உட்கார்ந்துக்க... நான் தேடி எடுத்திட்டு வர்றேன்... என்ன? வெய்ட்டிங் ஏரியாவைக் கை காட்டிச் சொன்னாள் சுஜாதா.

    அதுவும் செரிதான்... உன்கூட நின்னு தேடறதெல்லாம் நமக்கு ஒத்து வராது சாமி... நான் எங்கியே போய் உட்கார்ந்துக்கறேன் சொல்லியவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் கல்பனா.

    அங்கு சென்றதும் முதல் வேலையாய் மொபைலை எடுத்து யாருடனோ பேச ஆரம்பித்தாள். பேச்சின் இடையில் மாளாத சிரிப்பு. அவ்வப்போது வெட்கம் வேறு.

    தூரத்திலிருந்து அதைக் கவனித்த சுஜாதாவிற்குத் தெரியும் அவள் யாருடன் பேசுகிறாள்...? ஏன் இப்படி வழிகிறாள்? என்று.

    சரியாக இருபதாவது நிமிடம் தன் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற் போல் ஒரு கார்டைத் தேர்வு செய்து கொண்டு, பில் போடுமிடத்திற்கு வந்தாள். அங்கிருந்த பெண் பில் போட, திரும்பி கல்பனாவைப் பார்த்தாள். அவள் இன்னமும் வழிந்து கொண்டுதானிருந்தாள்.

    மெலிதாய் முறுவலித்த சுஜாதா, மெல்ல நடந்து அவளருகே செல்ல, அவள் வருவதைக் கண்டதும் சட்டென்று பேச்சை மாற்றிக் கொண்டு, இல்லை வேணி... என்னால அங்க வர முடியாது... அக்காவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதிலிருந்து அவகூட பர்ச்சேசிங் அது இதுன்னு வெளிய போய் வரவே சரியாயிருக்கு... என்றாள்.

    மறுபுறம் பேசுவது ஒரு ஆண், அதுவும், கல்பனாவின் இதயத்தைத் திருடிக் கொண்ட இளைஞன் என்பதும் சுஜாதாவிற்குத் தெரியும். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், ஏய் கிளம்பு போகலாம் என்றாள் தங்கையின் தோளைத் தொட்டு.

    சரி... வேணி... நாளைக்கு பேசறேன்... வெச்சிடட்டுமா? என்று சொல்லிவிட்டு கல்பனா இணைப்பைத் துண்டிக்க,

    ‘போடி... போடி... உன்னோட ஜாலாக்கெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன?’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே, கேஷ் கௌண்டருக்குச் சென்று பணத்தைக் கட்டிவிட்டு, அங்கு கொடுக்கப்பட்ட பண்டலைப் பெற்றுக் கொண்டு கடையைவிட்டு வெளியே நடந்தாள் சுஜாதா.

    அவளைப் பின்தொடர்ந்து அமைதியாய் வந்தாள் கல்பனா.

    இருவரும் நிதானமாக மற்ற கடைகளை நோட்டமிட்டுக் கொண்டே சென்ற போதுதான் சுஜாதாவின் முதுகிற்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது.

    ஏய்ய்ய்... சுஜீ... சுஜீ

    நின்று திரும்பினாள் சுஜாதா. அவளுடன் கல்லூரியில் படித்த சக தோழி சித்ரா. அவளுடன் நின்றிருந்த ஆண்மகன் கண்டிப்பாய் அவளுடைய புருஷனாகத்தான் இருக்க வேண்டும்.

    அட... சித்ரா...! வாட் எ சர்ப்ரைஸ்...? எப்படிடி இருக்கே...? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து... புளகாங்கிதமடைந்தாள் சுஜாதா.

    ஏங்க... நான் அடிக்கடி சொல்வேனல்ல...? என்னோட குளோஸ் ஃபிரெண்ட் சுஜாதா... இவங்கதான்...! ஏய்... ஹி ஈஸ் மை ஹஸ்பெண்ட் நவீன்... ஸாப்ட்வேர் எஞ்சினியர் தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள் சித்ரா.

    சுஜாதா...ன்னா...? யூ மீன்... பொம்பள பாரதி... அந்த இளைஞன் இழுக்க,

    யெஸ்... யெஸ்... அதே... அதே சுஜாதாதான்...! மீசை மட்டும்தான் குறைச்சல்... அதுவும் இருந்திருந்தா... பாரதியேதான்! என்றாள் சித்ரா.

    ஏய்... சித்ரா... போதும்டி... ரொம்ப ஓட்டாதே சுஜாதா புன்னகையோடு சொல்ல,

    இங்க பாருங்க... காலேஜ் டேஸ்ல பசங்களெல்லாம் இவளைப் பார்த்தாலே மிரண்டு ஓடுவாங்க...! காலேஜ் ஃபங்ஷன்ல பாரதி வேஷம் போட்டுக்கிட்டு அவரோட பெண் விடுதலைப் பாடல்களை ஆக்ரோஷமா மேடையில் இவ பாடுற போது லேடீஸ் சைடுல கை தட்டல் பிச்சுக்கும்...! சித்ரா சொல்லிக் கொண்டே போக,

    அதெல்லாம் ஒரு காலம் சித்ரா விரக்தியாய்ச் சொன்னாள் சுஜாதா.

    ஆமாம்... உன் லட்சியக் கணவர் எப்படியிருக்கார்? சித்ரா கேட்க, கல்பனா அந்த இடத்தைவிட்டு மெல்ல நழுவினாள். பின்னே? சுஜாதா காலேஜை விட்டு வெளிய வந்து சுத்தமா எட்டு வருஷமாச்சு... அந்த சித்ரா புருஷன்கூட சுத்திக்கிட்டிருக்கா... இவ இப்பத்தான் இன்விடேஷன் செலக்ட் பண்ணிட்டிருக்கா."

    வந்து... சித்ரா எனக்கும் இன்னும் மேரேஜ் ஆகலைடி சற்றும் தயக்கமில்லாமல் சொன்னாள் சுஜாதா.

    நெனச்சேன்...! ஏன்னா... நீ காலேஜ்ல படிக்கும் போதே சொல்லியிருக்கே... ‘எனக்குன்னு எப்படி சில லட்சியங்கள் இருக்கோ... அதே மாதிரி எனக்கு கணவராய் வருகிறவர் எப்படி இருக்கணும்னு நான் ஒரு பட்டியலே போட்டு வெச்சிருக்கேன்! அப்படிப்பட்ட மாப்பிள்ளை வருவதற்கு எத்தனை வருஷமானாலும் நான் வெய்ட் பண்ணுவேன்’னு நீ அடிக்கடி சொல்லுவே...! அதுதான் இப்ப நடந்திட்டிருக்கு...! ஒண்ணும் தப்பில்லை... உன் லட்சியக் கணவர் கூடிய சீக்கிரத்திலேயே கிடைக்க என் வாழ்த்துக்கள்...! அப்படிக் கிடைச்சு கல்யாணம் பண்ணுறப்போ மறக்காம எனக்கு இன்விடேஷன் அனுப்புடி... கண்டிப்பா வருவேன்... உனக்காக இல்லேன்னா உன்னோட லட்சியக் கணவரைப் பார்க்க வருவேன்.

    எந்த பதிலும் சொல்ல முடியாமல் அவஸ்தையாய்ப் புன்னகைத்தாள் சுஜாதா.

    அப்போது சுஜாதாவின் கையிலிருந்த பண்டலையும் அந்த பண்டலின் மேல்பகுதியில் செருகி வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழின் சாம்பிளையும் கவனித்துவிட்ட அந்த சித்ரா, அடடே... லட்சியக் கணவர் கிடைத்துவிட்டார் போலிருக்கே...? இன்விடேஷன் கார்டெல்லாம் பர்ச்சேஸ் பண்ணியிருக்கே? விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள் சித்ரா.

    அது... வந்து... ஆமாம்டி... மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு... அடுத்தமாசம் இருபத்தி ஒண்ணாம் தேதி.

    அடி சக்கை... ஏய்... இப்பவே உன் லட்சியக் கணவரைப் பார்க்கணும் போலிருக்குடி...! எந்த ஊர்டி?

    பொள்ளாச்சி...

    என்ன பண்றார்... ஸாப்ட்வேர் ஃபீல்டா?

    இல்லை...! ரியல் எஸ்டேட் பிசினஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1