Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varum Kaalam… Vasantha Kaalam!
Varum Kaalam… Vasantha Kaalam!
Varum Kaalam… Vasantha Kaalam!
Ebook154 pages59 minutes

Varum Kaalam… Vasantha Kaalam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோதிக் கொம்பை மலைக் கிராமத்தில் அவ்வூர் மக்கள் இதுவரையில் கண்டிடாத அளவிற்கு வினோதமான காய்ச்சலும், வித்தியாசமான வியாதிகளும் வந்து கொண்டேயிருக்க, உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவ்வூரை ராக்காவல் காக்கும் ரங்கத்தான், அதன் காரணத்தை ஆராய்கிறான். ஒரு நாள் அதைக் கண்டுபிடித்ததும் ஆடிப் போகிறான். நகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை தன் மருத்துவக் கழிவுகள் அந்த மலைக் கிராமத்தின் பள்ளத்தாக்கில் டன் கணக்கில் கொட்டி சுற்றுச் சூழலை ஆண்டுக் கணக்கில் பாதித்து வந்துள்ளது.
அக்குற்றத்தை வெளிக் கொணர முயன்ற அந்த ராக்காவல் ஆள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவக் கழிவோடு கழிவாய் புதைக்கப்படுகிறான். ஆனால் அவனை ஒரு வயதான டாக்டர் காப்பாற்றுகிறார். அவரிடம் அவன் உண்மையைச் சொல்ல, அவர் பிரைவேட் டிடெக்டிவ் சூர்யாவிடம் அப்பொறுப்பைத் தருகிறார்.
சூர்யா அந்தப் பிரச்சினையைத் துருவியதில், மருத்துவக் கழிவுகள், ராக்காவலை மரணத்திலிருந்து காப்பாற்றிய, அதே டாக்டரின் மருத்துவமனையிலிருந்துதான் செல்கின்றன, என்பதைக் கண்டுபிடிக்கிறான்.
அடுத்து நடந்தது என்ன?
நாவலைப் படியுங்கள்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130005016
Varum Kaalam… Vasantha Kaalam!

Read more from Mukil Dinakaran

Related to Varum Kaalam… Vasantha Kaalam!

Related ebooks

Related categories

Reviews for Varum Kaalam… Vasantha Kaalam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varum Kaalam… Vasantha Kaalam! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    வரும் காலம்... வசந்த காலம்!

    Varum Kaalam… Vasantha Kaalam!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    கோவை மாநகரின் வடக்குப் பகுதியில், உதகை செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான டி.ஜே.மெடிக்கல் சென்டர் மருத்துவனையின் சேர்மேன் மற்றும் மானேஜிங் டைரக்டரான டாக்டர்.துரை ஜீவானந்தம், தன் மேஜைக்கு எதிரே வந்து நின்ற அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸர் கோமதி நாயகத்தை அமரச் சொல்லி விட்டு, கம்ப்யூட்டர் மானிட்டரிலேயே நீண்ட நேரம் பார்வையைப் பதித்திருந்தார்.

    ஏ.சி.யின் ரும்ம்ம்ம் சப்தத்தைத் தவிர அறைக்குள் கரும் நிசப்தம்.

    நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. சேர்மேன் மானிட்டரிலிருந்து விடுபடவேயில்லை. பொறுமையிழந்த கோமதி நாயகம், எக்ஸ்க்யூஸ் மீ சார்... என்று லேசான குரலில் அழைக்க,

    ஓ... ஸாரி... நான் வேறொரு ப்ராஜக்ட்ல மூழ்கிட்டேன் என்ற டாக்டர் துரை ஜீவானந்தம், ம்... சொல்லுங்க மிஸ்டர் கோமதி? என்றார்.

    சார்... ஒரு சின்னப் பிரச்சினை?...

    வாட்?... வாட் பிரச்சினை?... எப்பவுமே நீங்க எந்தப் பிரச்சினையையும் என்கிட்டக் கொண்டு வ்ராம நீங்களே முடிச்சிடுவீங்களே?... இன்னிக்கு என்ன திடீர்னு... என்கிட்ட வந்திட்டீங்க? தங்க பிரேமிடப்பட்ட தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, மேஜை மீது வைத்தபடியே கேட்டார் துரை ஜீவானந்தம்.

    அது... வந்து பிரச்சினை கொஞ்சம் சீரியஸ்... பாலிஸி மேட்டர்ன்னே சொல்லலாம்!... அதனாலதான் உங்க நாலெட்ஜுக்குக் கொண்டு வந்தேன்!... வழக்கமா நம்ம ஆஸ்பத்திரில விழற மருத்துவக் கழிவுகளை... ஸ்மித் பயோ லைன் ங்கற கம்பெனிக்காரங்கதான்... தினமும் வந்து எடுத்திட்டுப் போவாங்க!... மாசம் இருபத்தி அஞ்சாயிரம் சர்வீஸ் சார்ஜ் பில் குடுத்திட்டிருந்தாங்க!... இப்ப திடீர்னு அந்த சர்வீஸ் சார்ஜை உயர்த்திட்டாங்க... என்று கோமதி நாயகம் சொல்ல,

    எவ்வளவு உயர்த்திட்டாங்க? புருவங்களை உயர்த்திக் கேட்டார் துரை ஜீவானந்தம்.

    ஐம்பதாயிரம் ஆக்கிட்டாங்க சார்

    வாட்?... ஐம்பதாயிரமா?... என்னப்பா இது ஒரேயடியா டபுள் மடங்கு உயர்த்தியிருக்காங்களே? மீண்டும் மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார் டாக்டர் துரை ஜீவானந்தம்.

    அதான் சார்..நானும் எவ்வளவோ பேரம் பேசிப் பார்த்திட்டேன்... கொஞ்சம் கூடக் குறைக்க மாட்டேனுட்டாங்க என்று கோமதி நாயகம் சொல்ல,

    சரி... எதனால திடீர்னு சார்ஜை உயர்த்தினாங்க?... முன்னடியே தகவல் குடுக்கலையா?

    சார்... அவங்க இப்ப பழைய டிஸ்போசல் முறைகளையெல்லாம் முற்றிலும் மாத்திட்டாங்களாம்... மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கென்றே புதுசா காஸ்ட்லி மெஷின்ஸ் இம்போர்ட் பண்ணியிருக்காங்களாம்!... டன் கணக்கிலான மருத்துவக் கழிவுகளைக் கூட நிமிஷத்துல டெஸ்ட்ராய் பண்ணிடுமாம் அந்த மெஷின்!... அதே போல் நூறு சதவீதம் ஹைஜீனிக்காம்!... பொல்யூஸன் பிராப்ளமே வராதாம்!... அந்த மெடிக்கல் ஸ்கிராப்புகளை டெஸ்ட்ராய் பண்ணுவதற்காக இம்போர்ட்டட் கெமிக்கல்ஸ் வேற யூஸ் பண்றாங்களாம்!... அதனால்தான் சார்ஜை உயர்த்திட்டாங்களாம்!... அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸர் கோமதி நாயகம் சொல்லிக் கொண்டே போக,

    வாட் மிஸ்டர்?... நீங்க சொல்றதெல்லாம் அவங்களோட டெவலப்மெண்ட் ஆக்டிவிடீஸ்!... அதையெல்லாம் நாம ஏத்துக்க முடியுமா?... நோ... நோ... கண்டிப்பா முடியாது! ன்னு சொல்லிடுங்க!... ரொம்ப ஆர்க்யூ பண்ணினா... அவங்க காண்ட்ராக்டை கேன்ஸல் பண்ணிட்டு... வேற யாரையாவது எங்கேஜ் பண்ணிடுங்க! என்றார் டாக்டர் துரை ஜீவானந்தம்.

    சார்... அதுல ஒரு பிரச்சினை இருக்கு சார்!... இந்த ஸ்மித் பயோ லைன் கம்பெனிக்காரங்க ஒரு அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி சார்... அவங்க குடுக்கற சர்ட்டிபிகேட் நமக்கு ரொம்ப முக்கியம் சார்!..

    ஏன்... மத்த கம்பெனிக்காரங்க சர்ட்டிபிகேட் தர மாட்டாங்களா?... துரை ஜீவானந்தம் கேட்க,

    தருவாங்க சார்... ஆனா இந்த ஸ்மித் பயோ லைன் ங்கற கம்பெனிக்காரங்க நல்ல பெயர் பெற்ற நிறுவனம் என்பதால் இவங்களோட சர்ட்டிபிகேட்டை பார்த்தாலே கவர்ன்மெண்ட் ஆளுங்க எந்த இன்ஸ்பெக்‌ஷனும் பண்ணாம... எந்தக் கேள்வியும் கேட்காமப் போயிடுவாங்க சார்!... மற்ற சின்னச் சின்ன கம்பெனிக்காரங்களோட சர்டிபிகேட்டைக் காட்டினா... தேவையில்லாத செக்கிங்கெல்லாம் பண்ணுவாங்க சார் கோமதி நாயகம் நடைமுறைப் பிரச்சினைகளை எடுத்துச் சொன்னார்.

    ஸோ வாட்?... நாமதான் எல்லாத்தையும் பர்ஃபெக்டா செஞ்சிட்டிருக்கோமே?... அப்புறம் எதுக்கு பயப்படணும்?... கவர்ன்மென்ட் ஆளுங்க இன்ஸ்பெக்‌ஷன் பண்ணினா பண்ணிட்டுப் போகட்டும்!... துரை ஜீவானந்தம் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார்.

    சார்... உங்களுக்குத் தெரியாததில்லை... கவர்ன்மென்ட் ஆபீஸர்கள் காசு கறக்கறதுக்காகவே நோண்டி நோண்டிப் பார்த்து... ஒண்ணுமில்லாத குறையை பெரிசாப் பேசுவாங்க சார்!... நாம என்னதான் நூறு சதவீதம் கரெக்டா இருந்தாலும் அவனுக ஏதோ சொல்லணும் என்பதற்காக சொல்லுவானுக சார்!... நான் என்ன சொல்ல வர்றேன்னா... பிராக்டிகலா... நிறைய பிரச்சினைகள் இருக்கு சார் என்று கோமதி நாயகம் விவரிக்க,

    ப்ளீஸ்... டோண்ட் ஆர்க்யூ... இது வரைக்கும் நம்ம ஹாஸ்பிடல்ல... நாம ஸ்கிராப்ஸை சிஸ்டமேடிக்காத்தான் டிஸ்போஸ் பண்ணிட்டிருக்கோம்... அதுக்கான ரெக்கார்ட்ஸ் பக்காவா இருக்கு!..யாரும் நம்ம மேல் எந்தக் குற்றமும் சொல்ல முடியாத அளவுக்குத்தான் நாம பிராப்பரா மெயிண்டெய்ண் பண்ணிட்டிருக்கோம்!... ஸோ... நாம யாருக்கும்... எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை!..கவர்ன்மெண்ட் ஆளுங்க வந்தா என் கிட்ட அனுப்புங்க!... ஐ வில் மேனேஜ்!... அதனால... எதையும் யோசிக்காம... யாராவது வேறொரு ஆளிடம் அந்தக் காண்ட்ராக்டை ஒப்படைச்சிடுங்க!... அவங்க சர்ட்டிபிகேட் தரலேன்னாலும் பரவாயில்லை... என்றார் டாக்டர் துரை ஜீவானந்தம்.

    ஓ.கே.சார் என்று சொல்லி விட்டு சந்தோஷமாய் அந்த அறையை விட்டு வெளியேறினார் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர் கோமதி நாயகம். அவருக்குத் தேவை அதுதானே?... எத்தனை நாள்தான் அவரும் நேர்மையாகவே உழைப்பார்?... எத்தனை வருடங்கள்தான் அவரும் அரை குறை சம்பளத்தில் காலத்தை ஓட்டுவார்?... கொஞ்சம் அப்படிஇப்படி இருந்தால் காசு தானா வந்து குவியும், என்கிற சூட்சுமத்தை இதுநாள் வரையில் அறியாதவர் இப்போதுதான் அறிந்துள்ளார். அதன் காரணமாய்... அவரும் நிறம் மாறினார். அதன் முதல் போணிதான் இந்த மெடிக்கல் ஸ்கிராப் டிஸ்போசல்.

    ***

    மாலை ஏழு மணி.

    அந்த ரெஸ்டாரெண்டில் வேலுச்சாமிக்காக காத்திருந்தார் கோமதி நாயகம். சரியாக பத்து நிமிடக் காத்திருப்பிற்குப் பின் வந்த சேர்ந்த வேலுச்சாமியிடம் லேசாய் விஸ்கி வாடை. என்னப்பா... இப்பவே சரக்கை ஏத்திக்கிட்டே போலிருக்கு? கேட்டார் கோமதி நாயகம்.

    பிசினஸ் ஃபிரெண்ட் ஒருத்தர் வந்திருந்தார்... அவரை பாருக்குக் கூட்டிட்டுப் போக வேண்டியதாய்ப் போச்சு!... போன இடத்துல அவருக்கு கம்பெனி குடுப்பதற்காக ஒரு பெக் ஊத்தினேன்... அவ்வளவுதான்!... என்ற வேலுச்சாமி, சட்டென்று குரலை தணித்துக் கொண்டு, என்னாச்சு சார்?... அந்த ஸ்மித் பயோ லைன் கம்பெனியோட காண்ட்ராக்டை ரத்து பண்றதுக்கு உங்க சேர்மேன் ஒத்துக்கிட்டாரா? கேட்க,

    ஒத்துக்க வெச்சிட்டேன்!... இருபத்தி அஞ்சாயிரத்தை ஐம்பதாயிரம் ஆக்கிட்டாங்க!... ன்னு ஒரு கதையைச் சொன்னேன்!... அதனால வருஷத்துக்கு நமக்கு கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஸ்கிராப் டிஸ்போசலுக்கே ஆயிடும் சார்! ன்னு அழுத்திச் சொன்னேன்... மனுஷன் உடனே காண்ட்ராக்டை கேன்ஸல் பண்ணச் சொல்லிட்டார்... வேற யாருக்காவது குடுக்கச் சொல்லிட்டார் சந்தோஷமாய்ச் சொன்னார் கோமதி நாயகம்.

    அந்த வேற யாராவது... நாங்கதானே சார்? அசிங்கமாய்ச் சிரித்தவாறே கேட்டான் வேலுச்சாமி.

    நிச்சயமா?... உனக்குத்தான்!... அந்த ஸ்மித் பயோ லைனுக்குக் குடுத்த அதே இருபதாயிரத்தை உனக்கு சாங்ஷன் பண்றேன்... அதுக்கு பிரதியுபகாரமா..நீ எனக்கு என்ன செய்யப் போறே? நிர்வாக அலுவலர் கோமதி நாயகம் அதை விட அசிங்கமாய்ச் சிரித்தபடி கேட்டார்.

    என்ன வேணும்னு சொல்லுங்க சார்... பண்ணிடலாம்

    ம்ம்ம்... அமௌண்ட் பத்தி அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்!... என் சம்சாரம் ஒரு ஆப்பிள் மொபைல போன் வேணுமின்னு ரொம்ப நாளா கேட்டுட்டிருக்கா... அதனால இப்போதைக்கு அதைச் செய்... என்று கோமதி நாயகம்

    Enjoying the preview?
    Page 1 of 1