Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatrin Viralgal!
Kaatrin Viralgal!
Kaatrin Viralgal!
Ebook136 pages1 hour

Kaatrin Viralgal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விஜய் தன் நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்கிறான். நீண்ட வைகையாற்றுப் பாலத்தைக் கண்டதும் அதன் மீது நின்று போட்டோ எடுக்க ஆசை பிறக்கின்றது அவனுக்கு. பாலத்தின் மத்தியில் தன் ஜீப்பை நிறுத்தி வித விதமாய் போஸ் கொடுத்து போட்டோ எடுக்கின்றனர்.
ஊர் திரும்பியதும் போட்டோக்களை பிரிண்ட் போட்டுப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். எல்லா போட்டோவிலும் அவர்களுடன் கட்டம் போட்ட சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்த ஒரு இளைஞன் இருக்கின்றான். தாங்கள் அந்தப் புகைப்படங்கள் எடுக்கும் போது அப்படியொரு இளைஞனே அந்த ஏரியாவில் இல்லை, என்கிற போது அவன் எப்படி போட்டோவில்?
குழப்பமாகி மறுபடியும் அதே வைகையாற்றுப் பாலத்திற்குச் சென்று பக்கத்து கிராமத்தில் விசாரிக்கின்றனர். அந்த இளைஞன் பல வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தகவல் கிடைக்க பீதியடைகின்றனர்.
மீதியை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005116
Kaatrin Viralgal!

Read more from Mukil Dinakaran

Related to Kaatrin Viralgal!

Related ebooks

Related categories

Reviews for Kaatrin Viralgal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatrin Viralgal! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    காற்றின் விரல்கள்!

    Kaatrin Viralgal!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    சிவகங்கை மாவட்டம்.

    திருபுவனத்தை விட்டு வெளியேறி, கரு நாகம் போல் படுத்துக் கிடக்கும் தார் சாலையில், மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த அந்த டாடா சுமோ, வைகை ஆற்றின் மேல் நீளமாய்ப் படுத்திருந்த அந்தப் பாலத்தைத் தொட்டதும், சற்று வேகம் மட்டுப்பட்டது.

    டேய்... விஜி... வண்டியை நிப்பாட்டுடா! குணா அடித் தொண்டையில் கத்தினான்.

    க்ரீச்சென்ற சப்தத்துடன் சடன் பிரேக்கிட்ட விஜய், என்னடா? என்ன ஆச்சு? பதட்டமாய்க் கேட்டான்.

    ஒண்ணுமில்லைடா... இந்த லொக்கேஷன் படு சூப்பராயிருக்கு... அதான்... கீழிறங்கி... நாலஞ்சு போட்டோஸ் எடுத்திட்டுப் போகலாம்னு... நிப்பாட்டச் சொன்னேன்! என்றான் குணா படு காஷூவலாய்.

    த்தூ... இதுக்குத்தான் அப்படிக் கத்தினாயா? நான் கூட என்னமோ... ஏதோன்னு பயந்துட்டேன்! என்றபடியே வண்டியை ஆஃப் செய்து கீழிறங்கினான் விஜய். நடிகர் பிரசாந்த் போன்ற தோற்றம். நிறம் மட்டும் கொஞ்சம் மட்டு.

    குணாவும் கேமராவை கழுத்தில் தொங்க விட்டபடி இறங்கினான்.

    இருவரும் பாலத்தின் கைப்பிடிச் சுவரருகே வந்து நின்று, கீழே சுழித்துக் கொண்டோடும் வைகை ஆற்றையும், அதில் துள்ளி விளையாடும் மீன்களையும் ஒரு வித ரசனையுடன் பார்த்தவாறு நின்றனர்.

    ஆஹா... மீன்களைப் பார்த்தாலே நாக்குல ஜலம் ஊறுது... இதுல ஒரு பத்து மீனைப் பிடிச்சு... மசாலா தடவி அப்படியே எண்ணைப் போட்டுப் பொரிச்செடுத்தா எச்சிலை உறிஞ்சினான் குணா.

    டேய்... டேய்... சாப்பாட்டு ராமா... உன் புத்தி ஏண்டா எப்பவுமே திங்கற விஷயத்திலேயே சுத்துது? அவன் பின் மண்டையில் லேசாய்த் தட்டிய அப்போதுதான் ஞாபகம் வந்தவனாய், டேய்... அவனுக ரெண்டு பேரும் எங்கேடா? கேட்டான்.

    முருகனும்... ஆனந்த ராஜுமா? வண்டிக்குள்ளார வாயைப் பொளந்துட்டு தூங்கிட்டிருக்கானுக... நேத்திக்குப் போட்டது இன்னும் எறங்குல போலிருக்கு! என்றான் குணா.

    ச்சை!.இவனுகளோட இதே ரோதனையா போச்சு... ராத்திரி பூராவும் மூக்கு முட்டக் குடிக்கறது! பகல்ல படுத்துத் தூங்கறது! கர்மம்... கர்மம்! என்று தலையிலடித்துக் கொண்ட விஜய், போடா... போய் .அவனுகளை எழுப்பிக் கூட்டிட்டு வாடா? குணாவுக்கு ஆணையிட்டான்.

    ப்ச்... விடுடா... அவனுக அங்கியே கெடந்து உருளட்டும்! என்ற குணாவை முறைத்துப் பார்த்த விஜய், இப்ப நீ போறியா? இல்லை உன்னோட காமிராவைப் பிடுங்கி வைகை ஆத்துக்குள்ளார போடவா? என்று மிரட்ட, குணா வேண்டுமென்றே மெதுவாக நடந்தான்.

    அவன் கள்ளத்தனத்தைப் புரிந்து கொண்ட விஜய், தானே ஜீப்பிற்குச் சென்றான்.

    மல்லாந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்த முருகனின் கால் கட்டை விரலைப் பிடித்துத் திருகினான்.

    ம்... ம்! நமீ... மை ஸ்வீட்டி... முனகியபடியே கண் விழித்த முருகன், எங்கேடா நமீதா? எங்கேடா நமீதா? சுற்றும் முற்றும் தேடி விட்டு மலங்க... மலங்க விழித்தான். கனவில் நமீதாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்திருப்பான் போலிருக்கு.

    ம். இப்பத்தான்... அவங்கம்மா வீட்டுக்கு டெலிவரிக்கு போயிருக்காங்க... என்று சிரித்தவாறே சொன்ன விஜய், இறங்குடா... இந்த லொக்கேஷன் சூப்பராயிருக்கு போட்டோஸ் எடுக்கலாம்! என்றான்.

    முணுமுணுத்தபடியே வண்டியை விட்டு இறங்கினான் முருகன். ஆண்டவா... பாதில நின்னு போன நமீதா கனவை மறுபடியும் கண்டினியூ பண்ண அருள் செய்யப்பா மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.

    ஹூம்... அடுத்தது இவனுக்கு தனியாச் சொல்லணும்...

    டேய்... எந்திரிடா தடிமாடு அரைக்கண் திறந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த ஆனந்த ராஜ் தன் பின்புறத்தில் விழுந்த அடிக்கு துள்ளிக் கொண்டு எழுந்தான்.

    வாங்கடா ரெண்டு பேரும்! நீங்கெல்லாம் எதுக்குடா டூர் வர்றீங்க? வண்டில ஏறுனா உடனே தூங்கிடறீங்க! ரூமுக்குப் போனா உடனே தண்ணியப் போட்டுட்டு படுத்துடறீங்க! சொல்லியவாறே விஜய் முன் நடக்க, அவர்களிருவரும் பின் தொடர்ந்தனர்.

    பாலத்தின் கைப்பிடிச் சுவரருகே சென்றதும், அரே... வாவ்... சூப்பர்யா! ஆனந்த ராஜ் தன்னையுமறியாமல் கூவினான்.

    ம்... இப்பக் கத்து! நான்சென்ஸ்! இதுக்குத்தாண்டா எழுப்பினேன்!

    தேங்க்ஸ்டா... தேங்க்ஸ்டா!

    சுற்றிச் சுற்றி அந்தச் சூழலை மொத்தமாய் ரசித்த குணா, டேய்... விஜய்... போட்டோ எடுக்கலாம்டா!

    ம்... தாராளமா! நீங்க மூணு பேரும் அப்படியே அந்தக் கைப்பிடிச் சுவர்ல சாய்ஞ்சு நில்லுங்க நான் எடுக்கறேன்!

    அவர்கள் கோரஸாய் ஓக்கே! என்றவாறு போஸ் கொடுக்க,

    விஜய் கிளிக்கினான்.

    பின்னாடி தெரியற மலை நல்லாக் கவர் ஆச்சா? முருகன் திரும்பிப் பார்த்து கேட்டான்.

    ம்... அதெல்லாம்... சூப்பரா! அப்படியே வந்து வண்டிக்கு முன்னாடி நில்லுங்க... மொத்தப் பாலத்தையும் கவர் பண்ணி ஒரு ஸ்நாப் அடிச்சுறேன்!

    அடித்தான்.

    டேய்... விஜய்... நீயே எடுத்திட்டிருந்தா எப்படி? வா... நீ வந்து இவனுக கூட நில்லு நான் ரெண்டு ஸ்நாப்ஸ் எடுக்கறேன்!

    குணாவிடம் கேமராவைக் கொடுத்து விட்டு, வேனின் முன் வந்து நண்பர்களுடன் நின்றான் விஜய்.

    கேமரா இன்னொரு முறை க்ளிக் சொன்னது.

    ம்ம்ம்... என்று தாடையைச் சொறிந்தவாறு யோசித்த விஜய். டேய்... வண்டியைக் கொஞ்சம் மூவ் பண்ணி அதா... அங்க போய் ரெண்டு மூணு ஸ்டில் எடுப்போம்!

    விஜய் வண்டியைக் கிளப்பி பாலத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டு வந்து நிறுத்தினான்.

    தொடர்ந்து அவர்கள் நால்வரும்... வண்டி மீது படுத்துக் கொண்டும்... தரையில் அமர்ந்து கொண்டும்... மானாவாரியாய் போ;டேக்களை எடுத்துத் தள்ளினர்.

    ஓ.கே.டா... கௌம்புவோம்!" என்றான் விஜய்.

    இனி... நேரா ஊருக்குத்தானே? குணா தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்க,

    ஆமாம்டா... இங்கிருந்து நேரா திருப்பாச்சேத்தி... அங்க லன்ச் சாப்பிட்டுட்டு... அங்கிருந்து நேரா ஊருக்குத்தான்!

    அந்த டாடா சுமோ மறுபடியும் பழைய வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.

    காமிராவைக் கையில் வைத்துக் கொண்டு இது வரை எடுத்த போட்டோக்களெல்லாம் எப்படி வந்திருக்கின்றது என்பதை ஆராய்ந்து கொண்டு வந்த முருகனை அதட்டினான் விஜய். டேய்... தடியா... அதை எதுக்குடா நோண்டிட்டிருக்கே?

    ச்சூ! ஸ்டில்ஸ் எல்லாம் எப்படி வந்திருக்குன்னு பார்க்கிறேன்!

    அடேய்... வேண்டாம்டா... போன தடவை இப்படித்தான் பார்க்கறேன்னு சொல்லி எடுத்த போட்டோக்களையெல்லாம் அழிச்சு வெச்சே! இப்பவும் அது மாதிரி பண்ணிடாதடா சாமி!

    விஜய் கத்த, அவன் கையிலிருந்த காமிராவை வெடுக்கென்று பிடுங்கி பேக்கினுள் திணித்தான் ஆனந்த ராஜ்.

    அவர்களுக்கு அப்போது தெரியாது அந்தக் காமிராவிற்குள் ஒரு அதிர்ச்சி தரும்

    Enjoying the preview?
    Page 1 of 1