Aasaiye Alai Polea...!
()
About this ebook
பிரித்து வந்த சொத்தைக் கொண்டு புது தொழில் துவங்கிய சின்ன மாப்பிள்ளை சித்தார்த் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக, ரத்த அழுத்தம் அதிகமாகி கோமாவில் விழுகிறான். குடும்ப வண்டியை ஓட்ட பார்கவி வேலைக்குச் செல்கிறாள். அண்ணனும் தம்பியும் பிரிகின்றனர்.
பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தனரா?....சதித் திட்டக்காரர்கள் ஓய்ந்தனரா?
நாவலைப் படியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Uyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Oruvan Manathu Onbathada! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Odangal Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsAntha Violet Kangal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Aatuvithal Yaaroruvar? Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aasaiye Alai Polea...!
Related ebooks
Anbe Azhaikkirean Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsInba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkoru Kaadhali Irukkindral Rating: 0 out of 5 stars0 ratingsகாதலால் தவிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Vazhkkai Enbathu Varam Rating: 0 out of 5 stars0 ratingsNishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Vendugirean Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Paravai Rating: 5 out of 5 stars5/5Aasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsமெல்ல வரும் தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsThenaruvi Nathiyagi! Rating: 0 out of 5 stars0 ratingsMella Varum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsShruthi - Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5மனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsNin Uchithanai Muharnthaal... Rating: 5 out of 5 stars5/5புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Azhagana Thee Rating: 0 out of 5 stars0 ratingsPoimai Perunthee! Rating: 0 out of 5 stars0 ratingsMayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Aasaiye Alai Polea...!
0 ratings0 reviews
Book preview
Aasaiye Alai Polea...! - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
ஆசையே அலை போல...!
Aasaiye Alai Polea...!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
"ஆசையே... அலை போலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே... வாழ் நாளிலே!"
பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சியிலிருந்து ஒலித்த அந்தப் பாடலை மௌனமாய் ரசித்தவாறே, உள் அறையில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.
வாசலில் ஆட்டோ வந்து நிற்க, ஆசையோடு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே அவள் தாயார் தேவிகாவும், தந்தை சுகுமாரனும் ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.
உருவத்தில் தேவிகா நடிகை காந்திமதி. ஆனால், சுகுமாரனோ நாகேஷ். அதிலும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் வைத்தி
நாகேஷ்.
அவசரமாய்க் கூடத்திற்கு வந்து, ஆசையோடு வாசலுக்கு ஓடி, அவர்களை வாசலிலேயே வரவேற்க பூர்ணிமாவின் மனம் ஆசைப்பட்டாலும் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்து ஆறு மாதமே ஆன புது மருமகள் தான் அவ்வாறு செய்தால் அது வீட்டிலுள்ளோர் மத்தியில் தன் மதிப்பைக் கெடுத்து விடும் என்பதை உணர்ந்து, அவர்கள் உள்ளே நுழைந்த பின் வரவேற்க காத்திருந்தாள்.
வாசலில் செருப்பைக் கழற்றி விட்டபடி தேவிகாவும், சுகுமாரனும் முன் ஹாலுக்குள் வந்ததும், அப்போதுதான் பார்த்தவள் போல் ஓடிச் சென்று, வாங்க அம்மா! வாங்க அப்பா!
என்று முக மலர்ச்சியோடு வரவேற்றாள்.
மகளின் மலர்ச்சியான முகம் அந்தப் பெற்றோருக்கு லேசான மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவளது ஆரவாரக் குரலைக் கேட்டு உள் அறையிலிருந்து வெளியே வந்த பூர்ணிமாவின் மாமியார் புவனேஸ்வரி, சம்மந்திகளைப் பார்த்ததும், அடடே... வாங்க... வாங்க! நிற்கறீங்களே... உட்காருங்க
என்றவாறே சோபாவைக் காட்டினாள்.
புன்னகையோடு அமர்ந்த பூர்ணிமாவின் தாயும், தந்தையும், அப்புறம் சம்மந்தியம்மா... சௌக்கியம்தானே?
சுகுமாரன் கேட்டார்.
என்னோட சௌக்கியத்தை என்ன? ன்னு சொல்ல சம்மந்தி! ஒரு நாளைக்கு நல்லா இருக்குது! மறுநாளே ஏதோ ஒரு நோக்காடு வந்து வாட்டியெடுக்குது! ஹூம் வயசாயிடுச்சல்ல? இனி இது தான் வாடிக்கை! நின்னா காலு வலிக்கும்... உட்கார்ந்தா இடுப்பு வலிக்கும்... படுத்தா முதுகு வலிக்கும்... நடந்தா தலை கிறுகிறுக்கும்! நாமதான் எல்லாத்தையும் சமாளிச்சுப் பழகிக்கணும்
புவனேஸ்வரி வரிசையாய்ச் சொன்னாள்.
நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க சம்மந்திம்மா! ஆண்டவன் உங்களை மாதிரி நல்ல மனசுக்காரங்களுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டான்!
தேவிகா சம்மந்தியம்மாவின் தலையில் ஒரு பனிக்கட்டி மலையையே வைத்தாள்.
தன் மனைவி அவ்வாறு சொல்வதன் அர்த்தம் புரியாதவரா என்ன சுகுமாரன்? அவரும் தன் பங்குக்கு அடுக்கினார். சம்மந்தியம்மா... நீங்க நல்ல மக்களைப் பெற்ற மகராசி! மனசளவுல கூட அடுத்தவங்களுக்கு கெடுதல் நினைக்காத ஜீவன்! நான் சொல்றேன் எழுதி வெச்சுக்கங்க... உங்களுக்கு ஆயுசு நூறு!
சொல்லி விட்டு தன் மனைவியை ஜாடையாகப் பார்த்தார்.
ம்... இதை... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்... இப்படியே பேசுங்க போதும்! நாம நெனைக்கற எல்லாக் காரியங்களையும் சிறப்பா சாதிச்சுடலாம்!
தேவிகா மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
என்ன பூர்ணிமா... மகளைப் பார்க்கணும்னு... உன்னைப் பெத்தவங்க ஆசையோட வந்திருக்காங்க நீ பாட்டுக்கு சும்மா நிற்கறே? போம்மா... போய் அவங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வாம்மா!
புவனேஸ்வரி மருமகளைப் பார்த்துச் சொன்னாள்.
இதோ ஒரே நிமிஷத்துல காஃபி போட்டு எடுத்தாரேன் அத்தை!
என்றபடி பூர்ணிமா திரும்ப,
அது செரி... வேகாத வெய்யில்ல... வியர்த்துப் போய் வந்திருக்காங்க... இதுல காஃபி குடிச்சா இன்னும் அதிகமாய்த்தான் வியர்க்கும்... மோர் எடுத்தாம்மா!
புவனேஸ்வரி மாமியார் பதவியை நிரூபிக்கும் விதமாகவும், தன் வயதின் அனுபவத்தைப் பறை சாற்றும் விதமாகவும் மருமகளுக்கு ஆணையிட்டாள்.
ம்ம்... மோரும் தயாராய்த்தான் இருக்கு!
சொல்லி விட்டு சமையலறையை நோக்கி ஓடினாள் பூர்ணிமா.
ஐந்தே நிமிடத்தில் மூன்று டம்ளர்களில் மோரோடு வந்தவள், புன்னகையோடு வினியோகித்தாள்.
இன்னிக்கு மாப்பிள்ளைக்கு லீவுதானே?
சுகுமாரன் சுற்றும் முற்றும் தேடியவாறே கேட்க,
ஆமாம்ப்பா... அவருக்கு லீவுதான்... கொஞ்சம் வெளிய வேலையிருக்குன்னு போனார்... இப்ப வந்திடுவார்!
பூர்ணிமா சொன்னாள்.
எப்போதுமே காரியத்தில் கண்ணாயிருக்கும் தேவிகா, அப்புறம் சின்ன மாப்பிள்ளை நல்லயிருக்காரா? வந்திட்டுப் போனாரா?
புவனேஸ்வரியின் இரண்டாவது மகனைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தாள்.
க்கும்... அவனாவது வர்றதாவது? ஒரு தடவைக்கு நூறு தடவை கேட்டால்தான் மெல்ல வந்து எட்டிப் பார்ப்பான்! அதுவும் கண்ணைக் கசக்கி அழுகையை வெளிப்படுத்தினால்தான் மனம் உருகுவான் அந்த மகராசன்! ஹும்... அப்படி என்னதான் இருக்குதோ அந்த பெங்களூர்ல? அட... மாசாமாசம் வர வேண்டாம்... மூணு மாசத்துக்கு ஒரு தரமாவது வந்து அம்மாவைப் பார்த்திட்டுப் போகலாமல்ல? அந்த எண்ணமே வர மாட்டேங்குது! அம்மா மேலே கொஞ்சம் கூட அன்புமில்லை... பாசமுமில்லை! இவனுகளையெல்லாம் வளர்க்க நான் பட்ட பாடு கொஞ்சமா? நஞ்சமா?
பெங்களூரில் பணி புரியும் தன் இரண்டாவது மகனை வசை பாடினாள் புவனேஸ்வரி.
அப்படி சொல்லாதீங்க சம்மந்தியம்மா! பாவம் அவருக்கு அங்க என்ன சூழ்நிலையோ? கம்பெனில வேலை ஜாஸ்தியோ... இல்லை லீவு கிடைக்கலையோ... என்னமோ?
சித்தார்த்துக்கு ஆதரவாய்ப் பேசினாள் தேவிகா. அவள் பேச்சு எப்போதுமே காரியப் பேச்சு.
அட என்னதான் ஆபீஸ் வேலைன்னாலும் அதுக்காக பெத்த தாயைப் பார்க்கக் கூட லீவு தரமாட்டாங்களா என்ன? ஹும்... எப்பத்தான் இவனுக்கெல்லாம் குடும்ப பொறுப்பு வரப் போகுதோ?
புவனேஸ்வரி தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
கவலையே படாதீங்க! சீக்கிரம் உங்க ரெண்டாவது மகனுக்கும் ஒரு கால் கட்டைப் போட்டுடுங்க... அப்புறம் எல்லாப் பொறுப்பும் தானா வந்திடும்!
சரியான நேரம் பார்த்து தன் எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டு அசிங்கமாய்ச் சிரித்தார் சுகுமாரன்.
தன் கணவரின் புத்திசாலித்தனத்தை கண்களால் பாராட்டினாள் தேவிகா. பலே... பலே... மனுஷன் நல்லாவே தேறிட்டார்
.
நாம அப்படி நினைக்கலாம்... எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வரணுமல்ல?
பொத்தாம் பொதுவாய் நிலவும் சம்பிரதாய பதிலைச் சொல்லி வைத்தாள் புவனேஸ்வரி.
"நல்ல காரியம்