Anbe Azhaikkirean
By R. Manimala
()
About this ebook
இளமையிலே வாழ்க்கைத் துணையால் ஏமாற்றப்பட்டு, பல கனவுகளோடு வாழ்கிறாள் அம்ருதாவின் தாய் புஷ்பா. இச்சூழ்நிலையில் அம்ருதா எதிர்பாராத விதமாக ப்ரவீணை சந்திக்கிறாள். இச்சந்திப்பு காதலாக மாறியது. இந்தக் காதல் கைகூடியதா? இல்லை, அம்ருதாவின் தாய் புஷ்பாவின் கனவு நிறைவேறியதா? இறுதியில் நடந்தது என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!
Read more from R. Manimala
Nee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsKanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsKalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Sollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Megangal Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Amaithi Theda…! Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaivil Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsMugarasi Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru... Rating: 0 out of 5 stars0 ratingsEn Priyasakhi Rating: 2 out of 5 stars2/5Enakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5
Related to Anbe Azhaikkirean
Related ebooks
Aasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Aasaikkanavugal and PonVilakku Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam! Rating: 5 out of 5 stars5/5மலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsUllam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Enakkoru Kaadhali Irukkindral Rating: 0 out of 5 stars0 ratingsமெல்ல வரும் தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsMella Varum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEllaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Indriravu Unnai Rating: 5 out of 5 stars5/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsவானில் விழுந்த கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Paathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Pootha Malar Rating: 5 out of 5 stars5/5Poimai Perunthee! Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Vaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anbe Azhaikkirean
0 ratings0 reviews
Book preview
Anbe Azhaikkirean - R. Manimala
https://www.pustaka.co.in
அன்பே அழைக்கிறேன்
Anbe Azhaikkirean
Author:
ஆர். மணிமாலா
R. Manimala
For more books
https://www.pustaka.co.in/home/author/r-manimala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
"அலைபாயுதே... கண்ணா...
என் மனம் அலைபாயுதே...!"
பங்கஜத்திற்கு ரொம்ப பிடித்த பாட்டு! டேப் ரெக்கார்டரிலிருந்து கசிந்து... படிதாண்டி மொட்டை மாடிக்கு வந்தது. இரவில் உறங்கி காலையில் கண்விழிப்பது எவ்வளவு இயல்பான, அதே சமயம் அவசியமான விஷயமோ, அந்தளவிற்கு தினசரி இந்தப் பாட்டைக் கேட்பதும் அவளுக்கு வழக்கமான விஷயமாயிற்று.
கனத்த மேகங்கள் கண்ணீருடன் காத்திருந்தன. எந்த தேவதையோ குளிர்சாதன பெட்டியின் கதவை திறந்திருப்பாள் போலும்... காற்றில் குளுமை! தேகத்தில் மோதும் போதெல்லாம் சிலிர்த்தது.
ப்ரவீண் கடந்த ஒரு மணி நேரமாய் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் உடலில் ஒரு பொட்டு வியர்வைகூட உற்பத்தியாகவில்லை. காற்று அந்தளவிற்கு சில்மிஷம் செய்துகொண்டிருந்தது.
உடல்தான் களைத்துப்போயிற்று.
ப்ரவீண் உடற்பயிற்சிக் கருவிகளை ஒரு ஓரமாய் எடுத்து பத்திரப்படுத்திவிட்டு... டவலை எடுத்துத் திண்ணென்று புடைத்து கம்பீரம் காட்டிய வெற்று மார்பில் மாலையாய் போட்டுக்கொண்டு மாடியின் கட்டைச் சுவற்றின்மீது அமர்ந்தான்.
இரண்டு மாடிக்குக் கீழே அப்பா தெரிந்தார். சிவந்த நிறம், வெள்ளை வேட்டி, வெற்று மார்பு, விபூதி அப்பிய நெற்றி! மேகம் கனத்து, கறுத்துப்போயிருப்பது தெரிந்தும்... ஹோஸ் பைப் மூலம் செடி, கொடிகளுக்குத் தண்ணீர்விட்டுக் கொண்டிருந்தார்.
ப்ரவீணுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் சென்னை மாநகரம்... மழையால் குளிக்கப் போகிறது. அப்படியிருக்க... எதற்காக தண்ணீர் விட்டுக்கொண்டு?
புருஷோத்தமன் அப்படித்தான் மற்றவர்களைவிட தன்மேல் நம்பிக்கை அதிகம். தனக்கு தோன்றியதை... யார் தடுத்தாலும் விடாப்பிடியாய் செயல்படுத்தும் ரகம்! பல சமயங்களில் அவர் கூறுவது அப்படியே நடக்கும்! எனினும், எதிலும் தன் கை ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம்.
இந்த இடத்தில்... ஆரம்பத்தில் யாருமே நிலம் வாங்க முன்வரவில்லையாம்! சிட்டியின் ஒதுக்குப்புறமாய்... இன்டீரியராய்... இருந்தது. வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான பொருட்களுக்கு... லொங்கு... லொங்கு என்று அரைமணி நேரம் நடந்தாக வேண்டும்.
பங்கஜம் கணவரிடம் எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள்...
கேட்டால்தானே? ஒரே பார்வையில் அலட்சியப்படுத்தினார்.
எல்லாம் எனக்குத் தெரியும்… நீ போய் சூடா ஒரு காபி போட்டுக் கொண்டுவா!
புருஷோத்தமன் தன் விருப்பப்படி அதே இடத்தில் நிலம் வாங்கி... யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் தன் இஷ்டப்படியே கட்டிமுடித்தார். தோட்டத்திற்காக... முன்புறம் இடம்விட்டு கட்டி இருந்தார். வீடு அழகாய்தானிருந்தது. ஆனால் அதிலுள்ள ஒவ்வொரு செங்கல்லும் புருஷோத்தமனின் ஆணவ முகத்தை பிரதிபலித்ததால்... வீட்டிலுள்ள மற்ற மூவருக்குமே அது ஒரு சிறைச்சாலைதான்.
புருஷோத்தமன் எம்.ஆர்.எல். கம்பெனியில் சூபர்வைசராய் பணிபுரிகிறார். சுளையாய் இருபது ஆயிரம் சம்பளம். மூத்தப் பிள்ளை ப்ரவீண், பி.காம். முடித்துவிட்டு ஷிப்பிங் கம்பெனியில் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆக பணிபுரிகிறான். பதினைந்தாயிரம் சம்பளம். சுயமாய் உழைத்து ஆறு மாதம் முன்புதான் தனக்கு பிடித்த ப்ளூ கலரில் ஒரு யமஹா வாங்கியிருந்தான்.
அடுத்தவள் விநயா! குயின் மேரீஸில் பி.எஸ்.சி. இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தாள்.
பங்கஜம் - ஹவுஸ் ஒய்ஃப்! எல்லா படித்த ஆண்களும் கொண்டுள்ள கொள்கையிலிருந்து சற்றும் மாறாமல் அதே கொள்கையுடன் தேடிப்பிடித்த மனைவி. அழகாய், அடக்கமாய், வாய்க்கு ருசியாய் சமைக்கத் தெரிந்த, குறைவாய் படித்த... எதிர்த்து பேசவோ, அறிவுப்பூர்வமாக ஆலோசனை கூறத் தேவையில்லாத... வீட்டுப் பறவையாய்... பல்லாயிரம் பெண்மணிகளின் ஒருத்தியாய் பங்கஜமும் இருந்தாள்.
கணவர் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதை வியப்புடன் பார்த்தபடி அங்கு வந்தாள் பங்கஜம்.
ஏங்க... மழை வரும் போலிருக்கே... ஏன் தண்ணீர் விடறீங்க?
மழை வராது!
திரும்பாமல் சப்போட்டா மரத்திற்கு தண்ணீர் பீய்ச்சினார்.
இல்லைங்க... வானம் இருட்டிக்கிட்டு இருக்கு!
அது வானமில்லை... மேகம், மேகம்தான் இருட்டும். உன் அறிவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். உள்ளே போ!
ஏளனமாய் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு தன் காரியத்தில் கவனமாயிருந்தார்.
இதுதான்... இப்படித்தான், இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடிமண்டு
என்று மனைவியின் தலையில் குட்டதான் நிறையக் கணவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
பங்கஜம் உள்ளே போய்விட்டாள்.
மொட்டை மாடியிலிருந்து இங்கே நடந்த உரையாடல்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தான் ப்ரவீண்.
அம்மாவிற்காக மனசு வருத்தப்பட்டு சுருங்கியது.
நான் அப்பாவைப் போலில்லை. எனக்கு மனைவியாய் வருபவளுக்கு நான் எல்லா மரியாதையும் கொடுப்பேன்!
ப்ரவீண் கிச்சனுக்குள் சென்றான்.
அம்மா... காபி!
இதோ... ரெடியாய்டுச்சுப்பா!
பாலில் டிகாக்ஷன் கலந்து... மணக்க மணக்க பீங்கான் கோப்பையை மகனிடம் நீட்டினாள்... முகத்தில் புன்னகை தேக்கி.
தாங்க்ஸ்ம்மா... விநயா எங்கே?
இன்னும் எந்திரிக்கலை... எழுப்பி விடு ப்ரவீண்... உங்கப்பா பார்த்தார்னா அவ்வளவுதான்!
இன்னுமா எந்திரிக்கலே?
வியந்தபடி தங்கையின் அறையை நோக்கிச் சென்றான்.
எப்போதும் உள் தாழிடக் கூடாதென்பது அப்பாவின் உத்தரவு என்பதால் கதவில் கை வைத்ததும்... திறந்துகொண்டது.
கை கால்களை பரப்பிக்கொண்டு வசதியாய் உறங்கிக்கொண்டிருந்த தங்கையைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.
அப்பா பார்க்க கொடுத்து வைக்கவில்லையே!
ப்ரவீண் மெல்ல தங்கையின் அருகில் சென்றான். அலுங்காமல், நலுங்காமல் கட்டில் முனையில் அமர்ந்தான்.
எப்போதும் அஞ்சரை மணிக்கே எழுந்து விடும் விநயாவிற்கு இன்றைக்கென்ன அப்படியொரு அசுரத் தூக்கம்?
வியந்தபடி காபி கோப்பையை அவள் நாசிக்கருகில் கொண்டு சென்றான்.
ஃபில்டர் காபியின் மணம் அவள் மூக்கினைத் தொட, விநயாவின் முகபாவனை மாறியது. கண்கள் மெல்லத் திறந்தன.
ப்ரவீண் காபி கோப்பையை இழுத்துக்கொள்ள... விநயா படுக்கையவிட்டு எழுந்தமர்ந்தாள்.
குட்மார்னிங் மேடம்!
ஹாய் ப்ரவீண்!!
பதிலுக்கு குட்மார்னிங் சொல்லக்கூட மேடத்துக்கு வாய் வலிக்குதோ?
காலையிலே உன் முகத்துல முழிச்சாச்சா? போச்சு... இன்னைக்கு பொழுது நல்லா விடிஞ்சா மாதிரிதான்!
சலித்துக்கொண்டாள்.
பொழுது விடியணுமா? இனிமேல் பட்டா? மேடம் நீங்க என்ன நினைச்சிட்டிருக்கீங்க? காலையிலேர்ந்து ஒண்ணும் சாப்பிடாம படுத்துக்கிடக்கறியே... லன்ச்சாவது சாப்பிடட்டும்னு பெரிய மனசு பண்ணி எழுப்பி விட்டா... என் முகத்துக்கே கணக்கெடுக்கறியா?
வாட்? லன்ச்சா? இப்ப டைமென்ன?
ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்சத் தூக்கமும் விடைபெற... விநயாவின் முகத்தில் அதிர்ச்சி.
நீயே பார்!