Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Valaiyil Vizhalama!
Kaadhal Valaiyil Vizhalama!
Kaadhal Valaiyil Vizhalama!
Ebook104 pages30 minutes

Kaadhal Valaiyil Vizhalama!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய சமூக வலைத்தளங்களில் இளம்பருவத்தினருக்கு ஏற்படும் மிக பெரிய பாதிப்பை உணர்த்தும் கதை.

இன்டர்நெட்டின் மூலம் காதல் வசப்படும் ரமேஷ். ஆனால் அவன் கொண்ட காதல் மெய்யல்ல பொய் என அறிய வரும் நிலை அவனை மட்டுமின்றி அவன் குடும்பத்தையும் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கிறது. ரமேஷ் துணிவோடு அப்பாதிப்பிலிருந்து வெளிவந்தானா? இல்லை அந்த வலைத்தள பாதிப்பில் நஞ்சுண்டானா? தொடர்ந்து காண்போம்...

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580140608582
Kaadhal Valaiyil Vizhalama!

Read more from R. Manimala

Related to Kaadhal Valaiyil Vizhalama!

Related ebooks

Reviews for Kaadhal Valaiyil Vizhalama!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Valaiyil Vizhalama! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் வலையில் விழலாமா!

    Kaadhal Valaiyil Vizhalama!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    பறவைகள் சோம்பல் முறித்ததில் அவைகளின் சிறகுகளைப் போலவே... இலைகளும் படபடத்தன.

    சென்னை நகரம் விழித்துக் கொண்டது.

    கேரியரிலிருந்து உருவி சர்ரென தினசரியை வீசியெறிந்தான் பேப்பர்காரப் பையன்.

    சாலையில் வாக்கிங் போகும் நபர்களை அதிகம் பார்க்க முடிந்தது. அதில் வயதானவர்களை மட்டுமின்றி இளவயதானவர்களையும் நிறையப் பேரை காண முடிந்தது... புருவத்தை உயர வைத்தது.

    விசாலமான அந்தத் தெருவில் கால்டாக்ஸியொன்று நுழைந்தது. உறங்கிக் கொண்டிருந்த நாயொன்று பதறி... விருட்டென எழுந்தோடியது.

    இந்தத் தெருதான் அதோ... மாமரம் இருக்குதே... அதுக்குப் பக்கத்து வீடுதான் என்றாள், பாக்யலஷ்மி.

    அவள் சொன்ன வீட்டின் முன் டாக்ஸி நின்றது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் தலைகள் முளைத்தன.

    பணத்தை எண்ணி டிரைவரிடம் கொடுத்தவள், இறங்கு தேஜா! என்றாள்.

    பர்தா அணிந்த இளம் பெண்ணொருத்தி இறங்கினாள்.

    கண்களால் வீட்டை அளந்தாள்.

    வெள்ளை பெயிண்டில் பளிச்சிட்ட அடக்கமான பங்களா. அசோகா மரமும், மாமரங்களும் வீட்டிற்கு காவல் காத்தன.

    கேட்டைத் தாண்டி விசாலமாய் இடமிருந்தது.

    பிடிச்சிருக்கா தேஜா?

    அவுட்சைட் ஓக்கே! உள்ளே எப்படின்று பார்த்தப்பிறகு சொல்கிறேன்.

    உள்ளேயும் பிடிக்கும்! என்றபடி சாவியை நுழைத்து கதவைத் திறந்தாள்.

    இருவரும் உள்ளேச் சென்றனர்.

    உயர்தர கற்களால் பளபளத்த தரை! இரண்டு பெட்ரூம் உட்பட இதர அறைகள். மாடியில் விசாலமாய் ஒரு அறை! ஜன்னலருகே குசலம் விசாரித்த மாமரக்கிளை!

    தேஜாவின் முகம் புன்னகையில் விரிந்தது.

    வெரி நைஸ்ம்மா... பிடிச்சிருக்கு... ரொம்பவே பிடிச்சிருக்கு! என்றாள் மனப்பூர்வமாய்.

    பாக்யலஷ்மி அன்புடன் மகளின் தலையை கோதிவிட்டாள்.

    உனக்குப் பிடிக்காமப் போய்டுமோன்னு பயந்தேன். இப்பதான் நிம்மதி.

    சரிம்மா... ரொம்ப களைப்பாத் தெரியறே! நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு! சமையலறையை முதலில் ரெடி பண்ணிட்டு வர்றேன் அதுக்குள்ளே...

    எல்லாம் போனவாரம் வந்தப்பவே ரெடி பண்ணிட்டேன். நீ போய்த் தூங்கு... நான் குளிச்சிட்டு பால் காய்ச்சிடறேன்.

    தேஜஸ்வினி அம்மாவை கருணைப் பொங்கப் பார்த்தாள். இந்த ஆறு மாசத்துல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேம்மா! நீ நாம என்னம்மா பாவம் செஞ்சோம்? ஏன் நம்ம குடும்பத்துல இப்படியெல்லாம் நடந்தது?

    அதையெல்லாம் மறக்கணும்னுதானே அகதிகள் மாதிரி இங்கே வந்திருக்கிறோம்? எதுக்குமா அதையே நினைச்சிட்டிருக்கே. அதெல்லாம் கெட்ட கனவு... மறந்துடு தேஜா... எல்லாத்தையும் மறந்துடு!

    எப்படிம்மா முடியும்? நடக்கிற காரியமா அது?

    நடக்கணும். அதில்தான் உன் வெற்றியே அடங்கி இருக்கு. நேரமாகுது... பால் காய்ச்சணும்... நீ போய்...

    ப்ச்... தூக்கம் வராது. போம்மா... உன் வேலையை கவனி நான் மாடியறைக்குப் போகிறேன். அந்த ரூமை நான் எடுத்துக்கட்டுமா?

    இந்த வீடே உனக்குதான் அப்புறமென்ன கேள்வி? மகளின் குழந்தைத்தனமான கேள்விக்கு சிரித்தபடி நகர்ந்தாள்.

    மெல்லப் படியேறிய தேஜஸ்வினியின் உதடுகள் நடுங்கின.

    ரமேஷ்... ரமேஷ்... எப்படி மறப்பேன் உன்னை என்னை நானே பார்த்துக்கொள்ளும் போதெல்லாம் உன் நினைவு அதிகப்படுமே! உனக்காகத்தான், உன் நினைவை மறக்கத்தான் எல்லாவற்றையும் விற்று... இங்கே வந்தாள் அம்மா. பைத்தியக்காரி! மறந்துவிட முடியுமா?

    மாடியறையை தனக்கேற்றாற்போல் மெருகேற்றத் தொடங்கினாள் தேஜஸ்வினி.

    மதுரையில் செல்வ செழிப்புள்ள குடும்பங்களில் ஒன்றுதான் பாக்யலஷ்மியின் குடும்பம்.

    அங்கிருக்கப் பிடிக்காமல், வீடு, நிலம், தொழிற்சாலை என்று எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்று... சென்னையில் முப்பது லட்சத்திற்கு இந்த வீட்டை வாங்கி குடியேறிவிட்டாள்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த வீட்டிற்கு உயிர் வந்தது. தாயும் மகளும் குளித்து முடித்து பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தனர். தெய்வப்படங்கள் மாலையிடப்பட்டு, குத்து விளக்குகள் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தன.

    பால் பாயாசமும், கேசரியும் படையலில் இருந்தன.

    இருப்பதோ நாம ரெண்டு பேர் எதுக்கும்மா இவ்ளோ பாயாசமும் கேசரியும்?

    அக்கம் பக்கத்துல கொடுக்க வேண்டாமா?

    அக்கம் பக்கமா? மிரட்சியுடன் பார்த்தாள்.

    அங்கேதான் யார்கிட்டேயும் ஒட்டாம பழகினோம். அது ரொம்பத் தப்புனு பட்டப்பிறகுதானே புரிஞ்சுது? ஆபத்து அவசரத்துக்கு அடுத்தவங்க உதவுறமாதிரி அண்ணன் தம்பிங்கக்கூட உதவ மாட்டாங்க!

    ஒரு ட்ரேயில் பாயாச கிண்ணங்களையும், கேசரி கிண்ணங்களையும் அடுக்கினாள்.

    அவள் சொல்வதிலும் நியாயமிருக்க... மவுனமாய் இருந்தாள் தேஜஸ்வினி.

    கதவை சார்த்திக்க... வந்துடறேன்

    Enjoying the preview?
    Page 1 of 1