Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Samsaram Enbathu Veenai!
Samsaram Enbathu Veenai!
Samsaram Enbathu Veenai!
Ebook102 pages44 minutes

Samsaram Enbathu Veenai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்சாரம் என்பது வீணை!
தன் மனைவியுடன் வாழ முடியாமல் தவிக்கும் பரந்தாமன். ஆனால் அவர் மனைவி, கோகுல் என்பவருடன் வாழ்ந்து வருகிறாள். யார் அந்த கோகுல்? இவர்கள் வாழ்வில் நடந்த திருப்பங்கள் என்ன? வாசிக்கலாம் மணிமாலாவின் விறுவிறுப்பான நடையில்...
Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606479
Samsaram Enbathu Veenai!

Read more from R. Manimala

Related to Samsaram Enbathu Veenai!

Related ebooks

Reviews for Samsaram Enbathu Veenai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Samsaram Enbathu Veenai! - R. Manimala

    https://www.pustaka.co.in

    சம்சாரம் என்பது வீணை!

    Samsaram Enbathu Veenai

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    காலிருந்து கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உடம்பை கொஞ்சம் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் நளினி.

    கறுப்பு கம்பளியிலிருந்து வட்ட நிலவாய் எட்டிப் பார்த்த அவள் முக அழகின் வசீகரத்தில் ஈர்க்கப்பட்டு விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா.

    'என் மகள் தான் எவ்வளவு அழகு? சந்தன நிறமும், சுருட்டை முடியும், நீளமான மூக்கும் என்னைக் கொண்டிருந்தாலும், அந்த வரிசை தப்பாத பல் வரிசையும், நட்புடன் ஈர்க்கும் சிரிப்பும், சட்டென ஹலோ சொல்லும் கண்களும் அவள் அப்பனையல்லவா நினைவுபடுத்துகிறது?'

    பெருமிதத்தோடு கொஞ்சம் பெருமூச்சும் கலந்து வந்தது.

    மெல்ல மகளின் அருகில் சென்ற நர்மதா, குனிந்து அவள் கன்னத்தில் உதடுகளை பதித்தாள்

    குறுகுறுப்பாய் முகத்தில் ஏதோ உரச, சூடான மூச்சுக்காற்று அந்தக் குளிருக்கு ஒத்தடம் தர, அதைத் தொடர்ந்து வந்தமெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே மை டியர் நளினி! என்ற அம்மாவின் குரலும் நளினியின் தூக்கத்தை உடனடியாக பறித்துக் கொண்டாலும் வேண்டுமென்றே கண்களைத் திறக்காமல் அப்படியே கிடந்தாள்.

    ஏய்... ஏய்... விடு... சிரித்தபடி கைகளை விலக்க முயன்றாள்.

    ஏன்... நான் கிஸ் பண்ணா பிடிக்காதா? டாடி கிஸ் பண்ணினா மட்டும்தான் பிடிக்குமா?

    ச்சீய்... என்று வெட்கப்பட்ட நர்மதா அவள் போர்வையை இழுத்தாள்.

    எந்திரி நளினி... நேரமாச்சு... குளிச்சிட்டு கோவிலுக்குப் போக வேண்டாமா?"

    ஸ்... ஸ்... விடு மம்மி... குளிருது! மறுபடி இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

    சோம்பேறி... மார்கழி முடிந்து தை பிறந்து பதினைஞ்சு நாள் முடிஞ்சாச்சு... குளிருதா? எந்திரிடா... அடம் பிடிக்காதே! அவளை எழுப்பி உட்கார வைத்தாள்.

    ப்பா... ஆர்மியில இருக்க வேண்டிய லேடிய அம்மாவா இந்த வீட்டுக்கு அனுப்பி வச்ச கடவுளைக் கேட்கணும்... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி பண்றியே... குளிருதும்மா! சிணுங்கினாள்.

    அதை ரசித்தபடி மகளின் கையைப் பற்றி எழுப்பினாள்.

    ஏன் நளினி... அம்மா அந்தளவுக்கு கசந்துப் போயிட்டேனா?

    ஐயோ... மம்மி... சீரியஸா எடுத்துக்கிட்டியா? நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்... என்றாள் பதற்றமாய்.

    தெரியும்! நீ சீரியஸா சொன்னாலும் நான் தப்பா எடுத்துக்கமாட்டேன். என் உலகமே நீதானடி

    அப்ப டாடி? என்றாள் குறும்பாய்.

    என் உலகமும் நீதான்! என்றபடி வந்தார் கோகுல் என்கிற கோகுல கிருஷ்ணன்.

    குட்மார்னிங்... என் இனிய நளினிக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களோடு இதோ என்னுடைய சிறிய பிறந்தநாள் பரிசு! என்று பவ்யமாய் சிறிய பார்சல் ஒன்றை நீட்டினார்.

    ஹை... ப்ரசென்ட்டா? தாங்க்ஸ் டாடி! என்று அவசர அவசரமாய் பிரிக்க முற்பட்டாள்.

    ம்... ஹூம்... அவசரப்படக்கூடாது கண்ணா! முதல்ல குளிச்சிட்டு கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு அப்புறமாத்தான் பிரிச்சுப் பார்க்கணும்! கொடுத்ததை மறுபடி வாங்கிக் கொண்டார்.

    ப்பா... இந்த வீட்லே எல்லாருமே ரொம்ப மோசம். நீங்க ரெண்டு பேருமே ஆர்மியிலே இருக்க வேண்டியவங்க தான்! தப்பித்தவறி எனக்கு அப்பா, அம்மாவா வந்து பொறந்திட்டீங்க! வழியை விடுங்க... உடம்புல கொஞ்சம் தண்ணிய தெளிச்சிட்டு வந்திடறேன்! செல்லமாய் அலுத்தபடி சென்றாள்.

    அம்மாடி... இன்னைக்கு உன் பிறந்தநாள். இன்னைக்காவது குளிச்சிட்டு வா... தெளிச்சுக்கிட்டு வராதே... என்றாள் நர்மதா

    கோகுல் அடக்க முடியாமல் சிரித்தார். நர்மதாவும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள்.

    அவர்கள் சிரிப்பிற்கு இடையூறாய் கடமுடா என்ற பெரும் சப்தம் எழுந்தது.

    என்னங்க சத்தம்...?

    எதிர்வீட்ல புதுசா யாரோ குடி வந்திருக்காங்க. லாரிலேர்ந்து சாமானெல்லாம் இறக்கிட்டிருக்காங்க. அதான் இவ்வளவு சத்தம்...

    ரொம்ப நாளா பூட்டி வச்சிருந்த வீடு! இதுக்கு முன்னாடி இருந்த ஒரு லேடி அந்த வீட்லே தற்கொலை பண்ணிக்கிட்டதனால... யாருமே அந்த வீட்டுக்கு வர பயந்தாங்க. இப்ப வர்றவங்க தெரிஞ்சி வர்றாங்களா? தெரியாம வர்றாங்களா?

    "இதெல்லாம் மூடநம்பிக்கை நர்மதா! பேய், பிசாசு, பூதமெல்லாம் ஒண்ணுமில்லே. அப்படியே இருந்தாலும்... அதுங்க மனுஷனை விட மோசமா இருந்துவிட முடியுமா? செத்துப் போறவங்க அத்தனை பேரும் பேயா அலைவாங்கன்னா... நாள் முழுக்க எத்தனை பேர் சாகறாங்க? வீட்ல மட்டுமில்லாம, ஆஸ்பிடல்ல, ரோட்டுல, தெருவில், கடல்ல, குளத்திலேன்னு எத்தனை பேர் சாகறாங்க. சாகறவங்க பேயாமாறி அதே இடத்திலேயே இருப்பாங்கன்னா... நாமெல்லாம் அந்த இடங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1