Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suzhal
Suzhal
Suzhal
Ebook74 pages28 minutes

Suzhal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704011
Suzhal

Read more from Vidya Subramaniam

Related to Suzhal

Related ebooks

Reviews for Suzhal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suzhal - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுழல்

    Suzhal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    என்னுரை...

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    என்னுரை...

    வாழ்க்கையைச் ‘சாகரம்’ என்பார்கள். ‘சாகரம்’ போலதான் பேரலைகளும், புயல் கொந்தளிப்புகளும், பெரும் சுழல்களும், அரிய நல்முத்துக்களும்கூட நிறைந்தவை. வாழ்க்கைக் கடலின் ‘சுழல்’ என காதலையும், பாசத்தையும் கூறலாம்.

    இரண்டுமே சிக்கியவரை சுழற்றி இழுத்துக்கொள்ளும் வலிமை மிக்கவை. அதிலும் தாய்ப்பாசம் என்பது வலிமை வாய்ந்தது. அந்தச் சுழலில் சிக்கியவர்களைப் பற்றிய சித்திரம்தான் இந்தச் ‘சுழல்!’

    அன்புடன்...

    வித்யா சுப்ரமணியம்

    1

    கண் விழிக்கும்போதே ரங்கனின் நினைவு வந்தது. ஸ்வர்ணா, ஜன்னல் வழியே தெரிந்த மாமரத்தைப் பார்த்தாள். பத்து வயது ரங்கன், நிஜாரை இழுத்து விட்டுக்கொண்டு மாங்கிளைகளில் ஏறுவது மனக்கண்ணில் தெரிய... புன்சிரிப்போடு எழுந்தாள்.

    இன்று ரங்கராஜனின் ஜென்ம நட்சத்திரம். கீழே அத்தை பால் பாயாசம் வைத்துக் கொண்டிருப்பாள். ஒரு வருட மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு, இந்தியா திரும்புகிறான். இன்னும் மூன்றே மணி நேரத்தில், அவன் வரும் விமானம் சென்னை தரையைத் தொட்டுவிடும். அடுத்த ஒரு மணியில் அவனது கார் இந்த ‘போர்டிகோ’வில் நுழைந்து நிற்கும்.

    வந்ததும் என்ன செய்வான் அவன்? அம்மாவிடம் அரை மணி பேசிவிட்டு அரக்க பரக்க மாடிக்கு வந்து அவளிடம் வம்பு செய்வான். அவளைச் சீண்டாவிட்டால் அவனுக்கு நாட்கள் நிறைவடையாது.

    அமெரிக்காவுக்கு கிளம்பும் முன்புகூட அவளை அழ வைத்தான்.

    அடிக்கடி ‘போன்’ பண்ணிப் பேசு ரங்கா.

    ஏன்... ‘போன்’ல வேற அறுக்கப் போறியா? உங்கிட்டேருந்து தப்பிக்கணும்னுதானே கடல் கடந்து போறேன். ‘நோ... போன்’, ‘நோ... இமெயில்!’

    வெறும் பேச்சு இது. உன்னால என்கூட பேசாம இருக்க முடியாது.

    ஏதோ இங்க இருந்த வரை வேறு நாதி இல்லாம உன்கூட பேசியிருக்கலாம். ஆனா, இனிமே அப்படியா? அய்யா எங்கே போறேன்னு தெரியும்ல? அமெரிக்கா! உன்னைவிட ‘படா, படா’ பொண்ணுகள் எல்லாம் என்னைச் சுத்தி சுத்தி வருவாங்க. அவங்களோடு பேசவே நேரம் பத்தாதாம். வேலை மெனக்கெட்டு ‘போன்’ பண்ணி இந்த பழம் ‘பா(ர்)ட்டி’கிட்ட பேசணுமாம்.

    படவா யாரைப் பார்த்து பழசுங்கற?

    உன்னைத்தான்!

    நீ எப்படி அமெரிக்கா போறேன்னு பார்க்கிறேன்!

    ‘ஃபிளைட்’லதான் போவேன், மொட்டைமாடியில நின்னு பாரேன். முடிஞ்சா மேலேருந்து கையாட்டுறேன்.

    ராஸ்கல்!

    நீ வேணா பாரு ஸ்வர்ணா... அமெரிக்காலேருந்து திரும்பி வரும்போது ஜம்முன்னு அந்த ஊர் குட்டியோடுதான் வருவேன். இந்த விளக்கெண்ணெய் மூஞ்சியை எவன் கட்டிப்பான் எனக்கு வேண்டாம்ப்பா!

    போயேன்! இந்த விளக்கெண்ணெய் மூஞ்சிக்கும் ஒருத்தன் கிடைப்பான்.

    கிடைப்பாங்கற! எனக்கு நம்பிக்கை இல்ல! அப்படி யாரும் கிடைக்காட்டி சொல்லு... போனா போகுது, ஒண்ணுக்கு ரெண்டா நானே உன்னை வெச்சிக்கறேன். என் அந்தப்புரத்துல சின்ன மகாராணியா இருந்துட்டுப் போ!

    ஸ்வர்ணா முகம் சிவந்து கண் கலங்க... விருட்டென்று எழுந்து ஓட... பின்னால் அவன் சிரிப்பு துரத்தியது.

    ‘ஏர்போர்ட்’டுக்குக்கூட அவள் போகவில்லை. அவ்வளவு கோபம். அவனும் அழைக்கவில்லை. அத்தையும், அவளின் மூத்த பிள்ளை உப்பிலியும் ஏறிக்கொண்டதும் கார் ‘விர்’ரென்று கிளம்ப... மாடி ஜன்னல் வழியே அழுகையும், ஆதங்கமுமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. அவர்கள் திரும்பி வரும் வரை ஜன்னலை விட்டு நகரவில்லை.

    ஸ்வர்ணா... - உப்பிலியின் குரல், பின்னால் கேட்டதும் திரும்பினாள்.

    ரங்கன் இதை உங்கிட்ட கொடுக்கச் சொன்னான் என்றபடி சின்ன பார்சலை நீட்டினான்.

    என்ன அது?

    எனக்கு எப்படி தெரியும்?

    உப்பிலி ‘பார்சலை’க் கொடுத்துவிட்டுப் போக... கதவைத் தாளிட்டுவிட்டு பரபரப்போடு அதைப் பிரித்தாள். பிரிக்க பிரிக்க காகிதமாக வர, இறுதியில் சிறிய அட்டைப் பெட்டிக்குள் சின்ன விளக்கெண்ணெய் ‘பாட்டில்.’ அதற்கு அடியில் ‘அன்புடன்...?’ என்ற வார்த்தை.

    ஸ்வர்ணா வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாய் வலிக்க சிரித்தாள். புரைக்கு ஏறி கண்களில் நீர்

    Enjoying the preview?
    Page 1 of 1