Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppu Nila
Neruppu Nila
Neruppu Nila
Ebook130 pages46 minutes

Neruppu Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352857302
Neruppu Nila

Read more from Vidya Subramaniam

Related to Neruppu Nila

Related ebooks

Reviews for Neruppu Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppu Nila - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    நெருப்பு நிலா

    Neruppu Nila

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    இரவு எட்டு மணி இருக்கும்.

    அருணா உள்ளே நுழைந்தபோது வீட்டில் ஒரு செயற்கை மவுனம் பரவியிருந்தது. எல்லாருடைய பேச்சுக்களும் அவள் வருகையால் தடக் என்று தடைபட்டு விட்டது.

    கைப்பையை அலமாரியில் வைத்துவிட்டு, கைகால் அலம்ப பின்பக்கம் போனாள்.

    தள்ளிப் போடாம சட்டுனு கேட்டுடும்மா. மூத்தவள் ஜானா அம்மாவைத் தூண்டினாள்.

    மொதல்ல சாப்டட்டும், அப்பறம் கேட்கறேன். ஜானா கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு அடுக்களையிலிருந்து கூடத்திற்கு வந்தாள்.

    மாலு, நீ போய் படிப்பு, எழுத்து ஏதானம் உண்டுன்னா கவனி விரட்டினாள்.

    ஏண்டா, உனக்கு என்ன தனியா ஒரு தரம் சொல்லணுமோ? ரகுவிடம் உறும இருவரும் அலுப்புடன் நகர்ந்த பின் அருணாவுக்கு சாப்பிட தட்டை வைத்து நீரையும் வைத்தாள்.

    முகத்தைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்தாள், அருணா.

    என்னம்மா. உபசாரம் எல்லாம் பலமா இருக்கு? உட்கார்ந்தாள்.

    சாப்பிடு மொதல்ல, சொல்றேன். தட்டில் சாதத்தைப் போட்டாள் மங்களம்.

    ம்ம்... சாம்பார் வேண்டாம். ரசம் விடு.

    ரசம் சாதத்தைப் பிசைந்து ரெண்டு வாய் போட்டுக் கொண்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.

    நா சாப்ட்டுண்டே இருக்கேன். நீ சொல்லிண்டே இரேன்.

    சொல்றதுக்கு என்ன இருக்கு? அந்தப் பையன் மறுபடியும் இன்னிக்கு வந்தான்.

    வாயருகில் கொண்டுபோன சாதத்தை தட்டில் போட்டுவிட்டுக் கேட்டாள், யாரு அந்த கெளஷிக்கா?

    ம்!

    ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன தாயை முறைத்துப் பார்த்தாள்.

    எதுக்கு திருப்பித் திருப்பி வரான் அவன்?

    மங்களம் பதில் சொல்லாமல் போகவே அவளே தொடர்ந்து, அதான் எனக்கு பிடிக்கலைன்னு அப்பவே அழுத்தந்திருத்தமா சொல்லியாச்சே! அப்பறம் எதுக்கு சொரணை கெட்டு வரான்?

    அவனுக்குப் பிடிச்சிருக்கே அருணா?

    அதுக்காக...? எனக்குன்னு ஒரு மனசு, அதுல எனக்குன்னு விருப்பு வெறுப்பு எதுவுமே இருக்கக் கூடாதுங்கறேளா?

    இங்க பார் அருணா! கெளஷிக் பணக்காரன். கல்யாணம் பண்ணிண்டு ஜாம் ஜாம்னு காரும் பங்களாவுமா வாழ ஆரம்பிச்சுட்டா உனக்குன்னு தனி மனசாவது, புண்ணாக்காவது! எல்லாம் ஓடிப்போய்டும் நடுவில் புகுந்து புத்தி சொன்ன ஜானாவை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள்.

    போதுங்க்கா, ஏன்தான் இப்படி பணத்தோட பகட்டுல எல்லாரும் மயங்கறேளோ தெரியலை!

    இன்னிக்கு பணமில்லாட்டா நாய் கூட மதிக்காது தெரியுமோன்னோ...

    நாய் மதிக்கலையேன்னு கவலைப்படற அளவுக்கு இப்போ ஒண்ணும் குடி முழுகிப் போய்டலை...

    அப்படி என்னதான் குறையக் கண்ட அவங்கிட்ட.. சொல்லித் தொலை! மங்களம் எரிந்து விழுந்தாள். அவங்கிட்ட அழகில்லையா? படிப்பில்லையா, நல்ல சுபாவமில்லையா? எல்லாத்துக்கும் மேலே பணமில்லையா? என்ன இல்லை அவங்கிட்ட? உன்னைத்தான் பண்ணிக்ணும்னு நடையா நடக்கறதப் பார்த்தா பாவமா இருக்கு.

    ஏன் கார் இல்லையாமா? இடக்காகக் கேட்டதை, முறைத்து விட்டுத் தொடர்ந்தாள்.

    அப்படி ஒரு மாப்பிள்ளை வீடு தேடிண்டு வர மாட்டானான்னு பொண்ணைப் பெத்தவா ஓரொருத்தர் ஏங்கறா! நீ என்னடான்னா வலிய வர சீதேவிய எட்டி உதைக்கற, வேண்டாம்னு.

    என்ன செய்யறது! எனக்கு அந்த சீதேவனைப் பிடிக்கலையே! ஒண்ணு செய்! அவன்தான் உனக்கு மாப்பிள்ளையா வரணும்னு ஆசையா இருந்தா பேசாம மாலுவுக்குப் பண்ணிடு. எழுந்து கையலம்பப் போனாள்.

    வாயை மூடுடி! பெரிசா யோசனை சொல்றா! அகம்பாவம் பிடிச்சவ நிஷ்டூரமாய்க் கத்திவிட்டு சோற்றுப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டாள்.

    அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. எல்லார்க்கும் அவள் மீது மகா கோபம். இப்படி ஒரு பைத்தியம் உண்டா என்று எண்ணினர்.

    தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள் அருணா. எதற்காக இவன் இப்படி சுற்றிச் சுற்றி வருகிறான்? பணம் கொழுத்துப் போய் இருக்கிறது. அதனால் விருப்பப்பட்ட எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம் என்ற திமிரா? அம்மா சொல்வது போல் அவனிடம் என்ன குறையைக் காண்கிறாள் அவள்?

    ஆறடி உயரத்திற்கு கிரேக்கச் சிலை போல மதர்ப்பான உடம்பு, தீட்சண்யம் மிக்க கண்கள், கருகருப்பான மீசைக்கு கீழே அழுத்தமான சிவந்த உதடுகள், மெல்லிய சில்வர் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, மொத்தத்தில் ஒரு சினிமா நடிகனின் சாயல் தெரியும் முகம். மேல்நாட்டுப் படிப்பு, லட்ச லட்சமாய் வாரிக்கொட்டும் சொந்த கம்பெனிகள், கணக்கில்லாத பங்களாக்கள், தாராள மனசு, என்ன குறை அவனிடம்? அவளுக்கே புரியவில்லை. அவளுக்கும் அவனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத உயரத்தில் செல்வாக்கில் மிதப்பவன். இன்று காலடியில் மண்டியிட்டுக் கெஞ்சுகிறான். அம்மா சொல்வது போல் இது போல் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைக்காதுதான்.

    ஆனால் அவளால் இதை அதிர்ஷ்டமாக நினைக்க முடியவில்லையே. எந்தக் குறையும் அவனிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அவனைப் பிடித்துத்தான் ஆகவேண்டும் என்று கட்டாயமா என்ன? எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. அது போதாதா, உனக்கென்று ஏன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்ற பாணியில் பணபலத்தால் தன்னை வளைத்துப் போட அவன் முயற்சிப்பதாகவே பட்டது அருணாவுக்கு. அதுவே அவன் மேல் ஒரு அலாதி வெறுப்பைத் தோற்றுவித்தது. இவ்வளவு பெரிய வசதி மிகுந்த வாழ்க்கை வேண்டும் என்று யார் அழுதார்கள்? ஒரு சாதாரண குமாஸ்தாவாக இருந்தால் கூடப் போதும். ஆனால் இவளுடைய விருப்பு வெறுப்பை மதிக்கிறவனாய் அனுசரணையாய்.. அது போதுமே, பணம் எதற்கு என்று தோன்றியது. முடியாது என்று சொல்லியும் திருப்பித் திருப்பி வந்து வற்புறுத்தும் அவன் குணத்தை நினைத்து எரிச்சல்தான் வந்தது. அவனை முதன் முதலில் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பத்தை நினைத்து ஆத்திரம் கொண்டாள்.

    ஒரு மாதம் முன்பு எதேச்சையாய் ஒரு பத்திரிகை விளம்பரம் கண்களில் பட, குடும்பத்தில் பொருளாதார நிலை காரணமாக உடனே எழுதிப் போட ஒரே வாரத்தில் நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி அழைப்பும் வர, குறிப்பிட்ட நாளில் சென்றாள்.

    முப்பது பெண்களுக்கு மேல் வந்திருந்தனர். அவர்களில் சிலர் ஆங்கிலோ இந்தியப் பெண்கள். வேலையோ, திறமை மிகுதியாகத் தேவைப்படும் பர்ஸனல் செக்ரட்டரி போஸ்ட். கண்டிப்பாய் இது நமக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற அவநம்பிக்கை மனதில் உதயமாக அலுப்புடன் ஒரு ஓரமாய்ப் போய் உட்கார்ந்தாள்.

    பதினைந்தாவது ஆளாக இவள் அழைக்கப்பட்டாள்.

    ‘திடும்’ ‘திடும்’ என்று மனசு பயத்தில் அதிர, PUSH என்று எழுதப்பட்டிருந்த கதவை மெதுவாகத் தள்ளிய போது சில்லென்ற ஏ.சி.யின்

    Enjoying the preview?
    Page 1 of 1