Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadhiyai Thedi Vandha Kadal
Nadhiyai Thedi Vandha Kadal
Nadhiyai Thedi Vandha Kadal
Ebook205 pages1 hour

Nadhiyai Thedi Vandha Kadal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 27, 2018
ISBN6580105703321
Nadhiyai Thedi Vandha Kadal

Read more from Vidya Subramaniam

Related to Nadhiyai Thedi Vandha Kadal

Related ebooks

Reviews for Nadhiyai Thedi Vandha Kadal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadhiyai Thedi Vandha Kadal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    நதியைத் தேடிவந்த கடல்

    Nadhiyai Thedi Vandha Kadal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சந்திரசேகரன் இந்த வெகேஷனுக்கு ஏற்காடு வந்திருக்கிறார். ஒரு மாத காலம் தங்கலாம். வழக்கமாக அவருடன் வரும் உதவியாளர்கள் யாரும் வரவில்லை. ஒரு மாத காலம் ஏற்காட்டில் தங்க உத்தேசித்துள்ள அவருக்கு ஒரு சரியான, பொருத்தமான உதவியாளரை நியமித்துத் தர வேண்டிய பொறுப்பு, ஒரு புத்தகக் கம்பெனிக்குத் தவிர்க்கமுடியாத அவசியமாக இருந்தது. விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள தாக்கிக் கொள்ளவும், ஓரளவு சரியான சன்மானத்துடனும் கழிக்க விருப்பமுள்ள இளம் வயதினர் ஆண், பெண் யாராக இருந்தாலும் சிபாரிசு செய்யுங்கள். செலவுகள் அனைத்தையும் பிரசுராலயம் ஏற்கும் என்று டெல்லியிலுள்ள அந்தப் புத்தகப் பிரசுராலயம் கோவையிலுள்ள ராமபத்ரனுக்கு எழுதியிருந்தது. –

    ராமபத்ரனுக்கு சுமித்ராவின் நினைவுதான் உடனே வந்தது. பி.ஏ. முடித்துவிட்டு, நான்கைந்து ஆண்டுகளாக வேலையின்றி இருக்கிறாள். அவள் சற்றே துணிவுள்ளவள். ஒரு மாத காலம் ஏற்காடு போய்விட்டு வரட்டுமே என்ற எண்ணத்துடன் அவளுக்குச் சொன்னார். –

    பிரசுராலயம் வைத்திருப்பவர்கள் எனக்கு வேண்டியவர்கள். அதை நடத்துகிறவன் என் நண்பன். என்ன சொல்லுகிறாய்? கை நிறைய சன்மானம். வெய்யில் காலத்தை ஏற்காட்டில் கழித்த மாதிரி இருக்கும். சந்திர சேகரும் என் நண்பன் தான் என்றார்.

    என்னமாதிரி வேலை? என்று கேட்டாள் சுமித்ரா.

    எழுத்து வேலைதான். அவன் டிக்டேட் செய்வான், எழுதவேண்டும். ஒரு நாளைக்கெல்லாம் பத்து இருபது பக்கங்கள் வரை டிக்டேட் செய்வான். அதற்குப் பின் நான்கு நாள் சும்மாவே இருப்பான். திடீரென்று 'மூட்' வரும்போது 'டிக் டேட்' செய்வான். பொருளாதாரம் பற்றியும், கிழக்கிந்தியப் பொருளாதார அமைப்புடன், நமது பொருளாதார அமைப் புக்களை விமர்சிக்கும் புத்தகம் ஒன்று அவன் எழுதுகிறான். அதை டெல்லி புத்தக நிலையம் பிரசுரிக்கவிருக்கிறது. இந்த வெகேஷனில் இதை அவன் முடித்துவிட்டு, ஸ்ரீலங்கா புறப்படப் போகிறான். அதோடு, உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்யவும் அவனிடம் சிபாரிசு செய்துறேன். நான் சொன்னால் ஏதேனும் செய்வான். என்ன சொல்கிறாய்?

    நீங்கள் சொன்னால் சரி தான். எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

    எங்களிடையே அதிக வயது வித்தியாசமிருந்தாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி நாட்களிலேயே ரொம்பவும் புத்திசாலி அவன். பிற்பட்டு அதிகமாகச் சந்திக்க முடியாவிட்டாலும், வழக்கு விஷயமாக சென்னை போகும் போது, பார்க்காமல் வரமாட்டேன். பழைய சிநேகம் மாறாமல் இருக்கிறான். ஏராளமான நண்பர்கள், வெள்ளி நாட்டுப் பயணம், பொருளாதாரம் பற்றி, கூர்மையான கண்ணோட்டம், சர்க்காருக்கு ஆலோசனை... என்றிப்படி படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறான், அவனுடைய சுறுசுறுப்பான சேவைக்குக் கிடைத்த பெருமைதான்... பல சமயங்களில் - பிரச்னைக்குரியவனாக வெளிப்படுகிறான் - 'வெளிப்படுகிறான்' என்பதைவிட ஆக்கப்படுகிறான்--- ஆனால், அதையெல்லாம் அவன் அதிகம் பொருட்படுத்துவதில்லை. தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகக் கூறி விடுகிறான். நான் சந்திக்கும்போது கூட, 'ஏன் இப்படிக் கருத்துக்களைச் சொல்லி, பிரச்னைகளைக் கிளப்புகிறாய்' என்று விளையாட்டாகக் கேட்பேன். அதற்கு அவன் என்ன சொல்வான், தெரியுமா?

    "ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது வேகமாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் சுழலவேண்டிய பல்சக்கரம் போல. அதில் ஒரு பல் தேய்ந்துவிட்டாலும்கூட அந்த சக்கரத்தை உடனே மாற்றி அமைத்து இயக்கத்தை சுழல விடவேண்டும். ஒரு பல்தானே போய்விட்டது என்று அதைமட்டும் சரிசெய்து போட முயன்றால், அதன் தொடர் பாகப் பல உருப்புக்கள் அடுத்தடுத்துப் பழுதடைந்து, ஒரு பெரிய இயந்திரமே கடைசியில் இயக்கம் அற்று நின்று, எல்லாக் காரியத்தையும் ஸ்தம்பிக்க வைத்துவிடும். அந்தக் காரியத்தைத்தான் இன்று நமது அரசாங்கம் செய்கிறது.

    சில சமூக வரையறைகளுக்கு உட்பட்ட ஆரோக்யமான சுதந்திர வியாபாரப் போட்டி முறைதான் தொழிலதிபர்களையும், வியாபாரிகளின் போக்கையும் திருத்தும். விலைவாசி குறையும். பொருள்களின் தரம் உயரும். மக்கள் லாபம் அடைவார்கள்.

    போட்டி முறை வியாபாரத்தை ஏற்படுத்தவேண்டியது, ஏகபோக உரிமைகளைத் தகர்ப்பது, மக்கள் நலனைக் காப்பது. இவைதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். இதைச் செப்பனிடாமல், உடைந்த சக்கரத்தையே மேலும், மேலும் சுழலவிட்டால்... அதன் முடிவு..ஒரு பெரிய கோளாறுக்கு அடிகோலுவது போலாகிவிடும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறான். இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எடுத்து வைத்துக் கொண்டு அவனைத் தாக்குகின்றன.

    அந்த மேதையைக் காணவும், அவருக்கு ஒருமாத காலம் உதவியாளராக இருக்கவும், அவள் முடிவு செய்து விட்டாள். அதோடு அவரிடமே, தனது பிற்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியைக் காட்டவும், ராமபத்ரனின் சிபாரிசுக் கடிதம் உதவப்போகிறது என்றவுடன் சுமித்ராவுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

    ஏற்காடு புறப்பட்டு விட்டாள்.

    அவள் காலை பஸ் ஒன்றில் வந்து சேலத்தில் இறங்கிய போது, பிற்பகல் நெருங்கிக்கொண்டிருந்தது. ஹோட்டல் ஒன்றில் உணவருந்திவிட்டு ஏற்காடு புறப்பட்டுவிட்டாள். இன்று எப்படியும் சந்திரசேகரனைச் சந்தித்தாக வேண்டும் என்பதில் ஆர்வமாகவும் வேகமாகவும் இருந்தாள்,

    மலையின் வளைவுகளைக் கடந்து, பஸ் ஏற்காடை அடைந்தபோது அவள் பிரயாணக் களைப்பு குறைந்து விட்டது, எல்லாம் மறைந்து விட்டதைப்போல உணர்ந்தாள். மனதில் அளவற்ற உற்சாகம், எதிர்பார்த்த ஒன்றைத் திடீரென்று அடைந்துவிட்ட திருப்தி.

    பஸ்ஸைவிட்டு இறங்கியவுடன் கேசம், மற்றும் நெகிழ்ந்திருந்த உடை இவற்றை சரி செய்து கொள்ளவேண்டியிருந்தது. மலைப் பிராந்தியமாகையால் அதிக ஆள் நடமாட்டமிருக்கவில்லை. ஒரு மலைச்சரிவில் குறுக்கே ஏறி, மரத்தடியை மறைவாகப் பயன்படுத்திக்கொண்டு, நெகிழ்ந்த உடையை சரி செய்து கொண்டாள்.

    அவருடைய தரிசனம் கிடைக்கும்போது மணி ஏழு அடித்துவிட்டது. வாழ்க்கைப் பிரச்னைக்கு முன் அவளுக்கு வேறு எதுவுமே பெரிதாகப் படவில்லை.

    அவரைப் பேட்டி காண வந்திருந்தவர்களுள் பெரும்பாலோர், அருகில் உள்ள சேலம் டவுனிலிருந்து வந்திருந்தார்கள். ஒவ்வொருவராக விடைபெற்று அவர் தனிமை அடையும்போது மணி ஏழு. - சந்திரசேகரிடம் போய் அவர்முன் நிற்கும்போது வெளியே இருட்டி விட்டது.

    சிபாரிசுக் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு மெளனமாக நின்றாள். கடிதத்தை முடித்துவிட்டு சுமித்ராவைப் பார்த்தார்.

    *'வெரி குட்.. பை தி பை உனக்கு என்னால் உதவ முடியும். ஆனால், எனக்கு அவகாசம் வேண்டும். சென்னையில் ஒரு கம்பெனியில் உனக்கு ஒரு நல்ல உத்தியோகம் சொல்லி வைக்கிறேன். கொஞ்சம் தாமதித்தால் நல்ல இடமாக ஏற்பாடு செய்யலாம். கோயம்புத்தூரிலிருந்து என்னைப் பார்க்கவென்றே வந்திருக்கிறாய். இங்கே வேறு யாரையேனும் தெரியுமா?" அவள் உட்காருவதற்கு சோபாவைக் காட்டிக்கொண்டே கேட்டார்.

    அவள் உட்கார்ந்து கொண்டாள். யாருமில்லை, சேலத்தில் தங்க ஒரு விலாசம் கொடுத்தார். அங்கேதான் தங்கவேண்டும்.

    அவசியமில்லை இங்கேயே தங்கலாம்.

    உனக்கு இனிமேல் கீழேபோக வசதி இருக்காது.

    சுமித்ரா ரொம்பவும் சங்கோஜப்பட்டாள். அதைப் புரிந்து கொண்டவர்போல, "சங்கோஜப்படாதே. உனக்குக் கடிதம் கொடுத்தாரே, ராமபத்ரன், என்னுடைய நெருங்கிய நண்பர். நெருங்கிய நண்பர்கள் என்று எனக்கு ஒருசிலரை கூறமுடியுமென்றால், ராமபத்ரன் அந்த வரிசையில் முதலில் இருப்பார்.

    சந்திரசேகரன் ரொம்பவும் சரளமாகப் பேசினார். அழகாகப் பேசினார். அதே நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் பேசினார். அவருடைய பேச்சில், கரைபுரண்ட உற்சாகத்தில், சுமித்ராவின் மனதில் நம்பிக்கை வேர் விட்டது. ஒரு சரியான நபரிடம் தான், தான் அறிமுகம் படுத்தப்பட்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கை.

    இரவு சாப்பாடு வந்தது.

    இருவருமாகச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர் சந்திரசேகரன் சுமித்ராவுடன் நிறையப் பேசினார். வெளிநாட்டுப் பயணங்களில் அநுபவங்கள், மேலை நாடுகளின் பொருளாதாரம் எப்படி ஒரு சராசரி பிரஜையை நேரிடையாக பாதிக்கிறது. அதே நேரத்தில் நமது பொருளாதாரம் சாதாரண மனிதனை ஏன் நெருங்கி வரமாட்டேன் என்கிறது, அதன் காரணம் என்ன, திட்டமிடுவதற்கும், உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி, உற்பத்திக்கும், விநியோக முறைக்கும் இடையே உள்ள இடைவெளி, விநியோக முறைக்கும் சந்தைக்கும் வரும்போது ஏற்படும் அதிகமான விலையேற்றத்தின் விளைவுகளால் சாதாரண பிரஜைபடும் அவதி என்று இப்படி ஒவ்வொன்றையும் ஒன்றன்பின் ஒன்றாக விவரித்தார்.

    அவர் புத்தகத்திற்கான விஷயத்தை டிக்டேட் செய்து கொண்டிருந்தார். சுமித்ரா அதை நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்

    பத்துப் பதினைந்து தினங்கள் அவர்களுக்கு இடையறாத வேலை இருந்தது. அவர், தான் எந்தப் பணியை மேற் கொண்டு ஏற்காடு வந்திருக்கிறாரோ, அதில் மிகுந்த கவனமாக இருந்தார். ஏராளமான குறிப்புகளை நாள் பூராவும் சேகரித்தார். அவரைச் சுற்றி நிறையப் புத்தகங்கள் எப்பொழுதும் சிதறிக் கிடந்தன, அவருக்கு எதிரே எந்நேரமும் நோட்டுப் புத்தகமும் கையுமாக அவள் பிரசன்னமாகியிருந்தாள்.

    சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்க வேண்டியது, பிறகு அதை டைப் அடிக்க வேண்டியது. அவரிடம் - படித்துக் காட்டவேண்டியது. திருத்தங்கள், புதிய சேர்க்கைகள், புதிய கருத்துக்கள் தொனிக்கும் வார்த்தைகள், ஒட்டுதல், பிறகு மீண்டும் டைப், ஐந்து பக்கம் டைப் அடித்து அது ஃபைனல் ஆக்கப்படுதல்.

    அவர் தங்கியிருப்பது ஏரிக்கு அருகில் செல்லும் ஒத்தக் கடைச்சாலையில் அருள் எஸ்டேட் கஸ்ட் ஹவுஸில். அது, மேடான குன்றின் மேல் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் எதிரே வனராமன் ஏரியின் தோற்றம். மற்றொரு புறம் சேர்வராயன் மலை செல்லும் மெயின் ரோடும் தெரியும். எஸ்டேட்டைச் சுற்றி நாகை, சடை, சவுக்கு போன்ற மரங்களுடன், தைல மரங்களும், கொய்யா மரங்களும், நாரத்தை மரங்களும், ஒரு இருட்போர்வையைப் போர்த்திக் கொண்டிருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. –

    அன்று ஒரு நாள் மாலை, வெளியே புல்வெளியில் எதிரெதிரே கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, உன்னைப்பற்றி ஏதேனும் கொஞ்சம் சொல்லேன், தெரிந்து கொள்கிறேன் என்றார்.

    தூரத்தில் கீழே ரஸ்தாவுக்கு மேலே மேடான பகுதியில் தெரியும் கருங்காளியம்மன் கோயில். எதிரே தெரியும் கமலா ஆரஞ்சு மரங்கள்.

    "அப்பா அம்மா இல்லை. எனக்கு முன்னால் இரண்டு தமக்கைகள். இருவரும் விவாஹமாகி டெல்லியில் ஒருத்தியும், எர்ணாகுளத்தில் ஒருத்தியுமாக இருக்கிறார்கள். டெல்லியில் இருப்பவருக்கு பிரபல ரேடியோ உற்பத்திக் கம்பெனியில் வேலை. எர்ணாகுளத்தில் இருப்பவருக்கு சீசனல் வுட் வியாபாரம். எல்லோருமே கோயம்புத்தூரில் படித்தவர்கள். வாசனைத் தைலம் உற்பத்தி செய்வதில் அப்பா மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரையில் வியாபாரமும், பிரமாதமாக நடந்தது. நிறையப் பேர்களை வைத்து சம்பளம் கொடுத்தார். பெரிய வியாபார நிறுவனம்போல எப்பொழுதும் கூட்டம் இருக்கும். அவர் காலமான பின்பு கொஞ்ச நாள் வரைதான் எங்களால் அதை நடத்தமுடிந்தது. ஓடியாடி வேலை செய்ய போட்டிச் சந்தையில் நிமிர்ந்து நிற்க எங்களால் முடியவில்லை. வேலை செய்தவர்களும், அப்பா இருந்த வரை நாணயமாக இருந்தவர்கள் நாணயம் - தவற ஆரம்பித்தார்கள். முன்பு, உற்பத்திச் செலவு ஒன்றாகவும், லாபம் பல மடங்காகவும் வந்த கணக்குகள் தலை கீழாகத் திரும்பத் தொடங்கின. வேலியே பயிரை மேயத் தொடங்கியபோது, எங்களால் அதைக் கண்காணிக்க முடியவில்லை. ஒருநாள் எல்லாவற்றையும் விற்றுவிட்டோம். எங்களுடைய நிர்வாகத் திறமைக் குறைவினால் சில ஆயிரம் ரூபாய் நஷ்டங்களுடன் ஒதுங்கிய அதிர்ச்சியில் அம்மா படுத்த படுக்கை ஆகிவிட்டாள். அவளை மீண்டும் எழுந்து உட்கார வைக்க எங்களால் முடியவில்லை. நோய்ப் படுக்கை மரணப் படுக்கையாகி விட்டது.

    என் படிப்பை பி.ஏ.வுடன் முடித்தேன். இரண்டரை லட்சம் தேறும் பிரம்மாண்டமான வீட்டை, ஈனக் கிரயத்திற்கு, எங்கள் அவசரமுடைக்கு, ஒண்ணே முக்கால் லக்ஷத்திற்கு விற்றோம். கடன்களை எல்லாம் அடைத்தோம். நான் மட்டும்தான் முழுமையாக மிஞ்சி நிற்கிறேன். எனக்கு யாருடனும் போயிருக்க இஷ்டமில்லை. என்னுடைய படிப்பாலேயே நிற்க விரும்புகிறேன்.

    காற்று எப்போதையும் போலவே மிக வேகமாகவும், குளிர்ச்சியாகவும் வீசிக்கொண்டிருந்தது.

    ராமபத்ரனை எப்படித் தெரியும் உனக்கு?

    எங்கள் குடும்ப நண்பர். அப்பாவின் லீகல் அட்வைசர்

    "உன்னை நம்பி யாரும் இல்லை என்றாலும், உன்னுடைய எதிர்காலத்திற்கு உனக்கொரு ஊன்றுகோல் வேண்டும். அதை

    Enjoying the preview?
    Page 1 of 1