Innoru Vanavasam
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5
Related to Innoru Vanavasam
Related ebooks
Irandu Manam Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5Ullamella Un Vasamai… Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsPenmai Thorpathillai Rating: 0 out of 5 stars0 ratingsVeesum Thendral Naan Unakku Rating: 0 out of 5 stars0 ratingsUllathil Nalla Ullam Rating: 0 out of 5 stars0 ratingsNerungi Vaa Nilave Rating: 5 out of 5 stars5/5Idhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsNaaloru Poo Malarum Rating: 0 out of 5 stars0 ratingsIni Aval Urangattum Rating: 0 out of 5 stars0 ratingsThanthai Sol Mikkathor Rating: 0 out of 5 stars0 ratingsAthikaalai Aanantham Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsVikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nee Nirainthaai Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Rudhra Thaandavam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Innoru Vanavasam
0 ratings0 reviews
Book preview
Innoru Vanavasam - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
இன்னொரு வனவாசம்
Innoru Vanavasam
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
நாலு முழம் மல்லிகைப் பூவை மூன்று மடிப்பாக்கி அருணாவின் தலையில் வைத்தாள் அம்மா. பெண்ணின் முன்னால் வந்து நின்று ஏற இறங்க ஒருமுறை பெருமையோடு பார்த்துவிட்டு முகம் வழித்து நெற்றியில் சுடக்கிட்டாள். விரல்கள் படபடவென்று சொடுங்கியது. யம்மா எவ்ளோ திருஷ்டி எம் பொண்ணுக்கு! என்று வியந்தாள். அருணா எவ்வித உணர்ச்சியும் இல்லாது நின்றிருந்தாள்.
சம்பந்தி வீட்டுல எல்லாரும் நல்லவங்களா தெரியறாங்க அருணா. நீயும் அவங்க மனசு கோணாம நடந்துக்கிட்டு போற இடத்துல நம்ம வீட்டு பேரை காப்பாத்தணும்
வழக்கமாக எல்லா அம்மாக்களும் சொல்லும் வசனத்தை சொன்னாள். அருணா எரிச்சலை மறைத்துக் கொண்டாள்.
கெளசல்யா, பொண்ணோட பேசினது போதும் சீக்கிரம் அவளை அனுப்பு
விஜயகுமார் எட்டிப்பார்த்து குரல் கொடுத்தார்.
அவங்க சம்பிரதாயப்படி அவங்க கிராமத்துல குல தெய்வத்துக்கு பொங்கல் வெச்ச பிறகு கிராமத்து வீட்டுல தான் சாந்தி முகூர்த்தம் வெக்கறது வழக்கமாம். எங்களையும் வாங்கன்னுதான் கூப்பிட்டாங்க. ஆனா அப்பா நாளைக்கு மந்திரியோட ஜப்பான் புறப்படணும். அஜீத்துக்கும் அர்ச்சனாக்கும் காலேஜ் இருக்கு. எங்கேர்ந்து நாங்க வரது. அதனால பார்த்து பதவிசா நடந்துக்கோ அருணா.
அருணா எதற்கும் பதில் சொல்லவில்லை.
ஆச்சா...
விஜயகுமார் மீண்டும் எட்டிப்பார்த்தார்.
அருணா, அறையிலிருந்து வெளியில் வந்தாள். சத்திரம் இன்னும் சற்று நேரத்தில் முழுக்க காலியாகிவிடும். சாமான்கள் இரண்டு டெம்போக்களில் ஏறிக் கொண்டிருந்தது. ஒன்று மாப்பிள்ளை வீட்டுக்கும் மற்றொன்று பெண் வீட்டுக்கும் போக வேண்டிய டெம்போக்கள். டெம்போ தவிர மாப்பிள்ளை வீட்டு சாமான்களும், மனிதர்களும் சேர்ந்து மூன்று கார்களில் வேறு அடைந்திருந்தார்கள். நாலாவது கார் அருணாவுக்கும் சூர்யாவுக்கும் மட்டும். கார் முழுக்க மலர் அலங்காரம் செய்திருந்தது. முன்பக்க இருக்கைக்கும் பின் இருக்கைகளுக்கும் நடுவில் வெல்வெட் துணியால் ஆன ஸ்கிரீன் போட்டிருந்தது.
கார் அருகில் வந்ததும் அதுவரை அடக்கிக் கொண்டிருந்த அழுகை மெல்ல எட்டிப் பார்த்தது அப்பாவுக்கும் அம்மாவுக்கும். அருணாவுக்கு அழுகை வரவில்லை. அம்மா அப்பா அழுதபோது எரிச்சலாக வந்தது. எதற்காக கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்? எதற்காக அழ வேண்டும்? கல்யாணமாகிப் போகும் பெண்ணை அழுகையோடு வழியனுப்புவதென்பது கட்டாயமான சம்பிரதாயமாகிவிட்டது. வழக்கமாய் பெண்ணும் அழுவாள். ஆனால் அருணா அழவில்லை. கல்யாணம் இப்போது வேண்டாம் என்று முதலிலேயே வேண்டிய அளவுக்கு அழுதாகிவிட்டது. அவள் அழுகையை யாரும் மதிக்கவுமில்லை, இரக்கப்படவில்லை. பெண் என்பவள் பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டால் திருமணத்திற்கு தயாராகிவிட வேண்டும் என்கிற சித்தாந்தம் என்று உடையும்? பெண்ணுக்கென்று கனவுகளும் லட்சியங்களும் இருக்கக் கூடாதா? இந்த விஷயத்தில் சாதாரண குமாஸ்தாவும் சரி, ஐ ஏ எஸ் அப்பாவும் சரி, ஒரே போன்றுதான் நடந்து கொள்வார்கள் போலும். கடனை கழித்துவிட வேண்டும்! பெண் என்பவள் வெறும் கடன்.
உன்னை மாதிரி ஐ ஏ எஸ் ஆகணும்ங்கறது என்னோட லட்சியம்ப்பா. அதுக்குள்ள எனக்கெதுக்கு கல்யாணம்?
போதும் கண்ணா. நா ஒருத்தன் படற அவதி போதும். இப்பல்லாம் ஐ ஏ எஸ் க்கு மரியாதையே இல்லம்மா. எழுதப் படிக்கத் தெரியாத அரசியல்வாதிகளுக்கெல்லாம் சல்யூட் அடிக்கற சாதாரண காஸ்டபிள் மாதிரி ஆய்ட்டோம் நாங்க. நம்ம வீட்டுல நா ஒரு கான்ஸ்டபிள் போதும்மா, உனக்கெதுக்கு தேவையில்லாத சுமைகள்? கல்யாணம் பண்ணிக்கிட்டு வீடு வாசல் புருஷன் குழந்தைகள்னு நிம்மதியா இரேன்?
கல்யாணம் தாம்ப்பா எனக்கு சுமை. உங்களைப் பார்த்து பார்த்து உங்களை மாதிரியே ஐ ஏ எஸ் ஆகணும்கற லட்சியத்தை சின்ன வயசுலேர்ந்தே வளர்த்து வெச்சிருக்கேன். நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல. என் லட்சியப்படி நா ஐ ஏ எஸ் ஆனதும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன். இப்போ வேணாம்ப்பா.
தோ பார் அருணா. உன் ஜாதகப்படி உனக்கு கல்யாண யோகம் வந்துடுச்சு. இப்பொ தட்டிப் போச்சுன்னா இன்னும் அஞ்சு வருஷத்துக்கு தலைகீழா நின்னாலும் ஆகாதுன்னு எல்லா ஜோசியருமே சொல்லிட்டாங்க. அதுக்கேற்றாற்போல் அருமையான ஒரு இடமும் வந்திருக்கு. பையன் உன்னை பலமுறை பல இடத்தில் - பார்த்துட்டு, ரொம்பவும் விரும்பி பண்ணிக்கிட்டா உன்னைத்தான் பண்ணிப்பேன்னு அடம் பிடிச்சு அப்பா அம்மாவை முறையா அனுப்பி வெச்சிருக்கான். ஜாதகமும் அருமையா சேர்ந்திருக்கு. மனுஷங்களும் ரொம்ப நல்லவாகளா இருக்காங்க. எல்லாம் கூடிவர நேரத்துல எதையாவது நினச்சுக்கிட்டு காரியத்தை கெடுத்துடாதே. கல்யாணத்துக்கப்புறம் மாப்பிள்ளை சம்மதிச்சா படியேன். யார் வேண்டாம்னாங்க?
அவங்க சம்மதிக்காட்டி...?
நீ கேட்கற விதத்துல கேட்டுப் பார்த்தா நிச்சயம் சமமதிப்பாங்க.
ஒண்ணு செய்ங்க! கல்யாணத்துக்குப் பிறகு நா ஐ ஏ எஸ் பரிட்சை எழுதணும்னு அவங்ககிட்ட முதல்லயே கேட்ருங்க. அவங்க கூடாதுன்னுட்டா இந்த வரனே வேணாம்னு விட்ருங்க.
பைத்தியம் மாதிரி பேசாதே அருண வாழ்க்கைங்கறது வியாபாரமில்ல ஸ்டாம்ப் பேப்பர்ல அக்ரிவெண்ட் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுக்க. மனுஷங்களை நம்பு முதல்ல.
அப்பா கோவமாக போய்விட, அருணா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுதாள்.
அப்பா சொல்றதைக் கேளு அருணா, படிப்பு படிப்புன்னு குதிக்காதே. நீ படிக்கறதுக்காக எங்க கடமையை நாங்க செய்யாம இருக்க முடியுமா?
அருணாவின் எந்த கெஞ்சலும் எடுபடவில்லை. கண்ணீருக்கு யாரும் இரக்கப்படவுமில்லை. அப்பா அவர்களை பெண் பார்க்க வரச் சொன்னார். அருணா உம்மென்று வந்து நின்றாள்.
சூர்யாவோட ஏதாவது பேசணுமா அருணா?
சூர்யாவின் அம்மா கேட்க அருணா ஆமாம் என்றாள்.
அதெல்லாம் எதுக்கு அருணா?
அப்பா வேண்டாம் என்றார்.
பரவால்ல. பேசணும்னா பேசட்டும்.
பேசறதுக்கு நா ரெடி சூர்யா எழுந்தான்.
அப்பா அவளை சுட்டெரிப்பது போல் பார்த்தார் அந்தப் பார்வையில் ஒரு வினாடி நடுங்கினாள் அருணா.
இ…ல்ல... வேணாம்... சும்மா தான் கேட்டேன்
சட்டென்று உள்ளே போனாள்.
அப்பாவும் சம்பந்தி வீட்டினரும் நிச்சயதார்த்தத்திற்கும் முகூர்த்தத்திற்கும் ஜோசியரை வைத்துக்கொண்டு நாள் பார்த்தார்கள். அருணாவுக்கு அந்த முன் பின் தெரியாத சூர்யா மீது அளவிட முடியாத வெறுப்பு ஏற்பட்டது. தன் லட்சியத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்ட எமனாகத்தான் அவன் தெரிந்தான்.
கல்யாண ஏற்பாடுகள் எதுவும் அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தவில்லை. பட்டுப் புடவைகளின் அழகும் நிறமும் கண்டு பிரம்மிக்கவில்லை. தங்க வைர நகைகளைக் கண்டு துள்ளி குதிக்கவில்லை. அம்மா ஏதாவது கேட்டால் எறிந்து விழுந்தாள். எல்லாவற்றிற்கும் அடம் பிடித்தாள்.
போகப் போக