Mohana Punnagai
()
About this ebook
அதிர்ஷ்டம்! துரதிர்ஷ்டம்! எத்தனை பேர் இவற்றை நம்புகிறார்களோ, எனக்குத் தெரியாது. இரயிலில் தற்செயலாக சந்திக்கும் நபரால் கூட திடீர் அதிர்ஷ்டம் வரலாமே! உமோகனப்புன்னகை கதாநாயகி மோகனாவை இரயில் நிலையத்தில் தற்செயலாக நிகழும் ஒரு சம்பவத்தில், "காட்ச்" பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான் ஹீரோ ஆனந்த். அவன் தாங்கிப் பிடித்தது, ‘மோகனாவை அல்ல; அவள் உருவத்தில் வந்த அதிர்ஷ்டத்தை' என்று பின்னர் உணருகிறான். இரயிலில் தற்செயலாக சந்தித்த ஒருவரால் அதிர்ஷ்டம் வருமா? மோகனப்புன்னகையில்...
Read more from Kamala Sadagopan
Unakkey Uyiranean! Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thottam Rating: 0 out of 5 stars0 ratingsPadigal Rating: 0 out of 5 stars0 ratingsKanavum Kalyanamum Rating: 0 out of 5 stars0 ratingsKodu Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Kaithi Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsMegalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Manthira Koley Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mohana Punnagai
Related ebooks
Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethaney Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsOdi Va, Omana...! Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsMegalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsOru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsMaaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vannapparavai Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Naalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsUllamella Un Vasamai… Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Roja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsAnbaal Vellalaam! Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5
Reviews for Mohana Punnagai
0 ratings0 reviews
Book preview
Mohana Punnagai - Kamala Sadagopan
https://www.pustaka.co.in
மோகனப் புன்னகை
Mohana Punnagai
Author:
கமலா சடகோபன்
Kamala Sadagopan
For more books
https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
முன்னுரை
அதிர்ஷ்டம்! துரதிர்ஷ்டம்! எத்தனை பேர் இவற்றை நம்புகிறார்களோ, எனக்குத் தெரியாது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு சராசரி பெண்ணுக்கு உள்ள ஆசைகள் எதுவுமே இருந்ததில்லை. வை.மு.கோ. அம்மாளின் 'ஜகன் மோகினி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்து, கதை கட்டுரைகளை எழுதத் துவங்கிய போது, அதை என் வாழ்க்கையின் பேரதிர்ஷ்டமாக கருதினேன். திருமணம் எனது எழுத்துலகப் பணியைத் திசைத்திருப்பி விடக்கூடும் என்கிற ஐயம் எழுந்து, திருமணம் என் வாழ்க்கையில் நடக்கக் கூடாதே! அப்படி நிகழ்ந்தால் என் துரதிர்ஷ்டம் அது
என்று என்னுள் புலம்பிக்கொண்டும் இருந்திருக்கிறேன். அப்போது தான் ஒரு உண்மை புலப்பட்டது! நான் அதிர்ஷ்டமாக கருதுவது மற்றவர்களுக்கு துரதிர்ஷ்டமாகப்படும் என்பது. என் தாய் எனக்கு திருமணத்தை நிச்சயித்தாள். 'நல்ல இடம் அமைந்திருப்பது நீ செய்த அதிர்ஷ்டம்'- என்று டயலாக் வேறு...
இன்றுவரை என் வாழ்க்கையை நிர்ணயித்திருப்பது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று எனக்குத் தெரியாது... நான் பத்திரிகைகளில் படிக்கும் செய்திகள் இவற்றைப் பற்றிய எனது கருத்தைக் குழப்பி வருகின்றன.
குஜராத் பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒரு வாரம் புதைந்து கிடந்து உயிர் பிழைத்தவர் கதையும் உண்டு. வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்து மண்டையைப் போட்ட மனிதனின் கதையும் உண்டு.
உண்மையே அதிர்ஷ்டம் என்று ஒன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். சுனாமி சென்னையை தாக்கியது துரதிர்ஷ்டம்! அதே சுனாமி காணும் பொங்கல் அன்று கடற்கரையை தாக்கியிருந்தால் லட்சக்கணக்கில் அல்லவா உயிர்ச்சேதம். ஏற்பட்டிருக்கும்! அப்படி நிகழாதது நம் அதிர்ஷ்டம்!
இரயிலில் தற்செயலாக சந்திக்கும் நபரால் கூட திடீர் அதிர்ஷ்டம் வரலாமே! மோகனப்புன்னகை கதாநாயகி மோகனாவை இரயில் நிலையத்தில் தற்செயலாக நிகழும் ஒரு சம்பவத்தில், 'காட்ச்' பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான் ஹீரோ ஆனந்த். அவன் தாங்கிப் பிடித்தது, ‘மோகனாவை அல்ல; அவள் உருவத்தில் வந்த அதிர்ஷ்டத்தை' என்று பின்னர் உணருகிறான். இரயிலில் தற்செயலாக சந்தித்த ஒருவரால் அதிர்ஷ்டம் வந்ததை கூறும் கதை மோகனப்புன்னகை என்று சொல்லலாம்.
இந்த கதையைப் படித்தபின், அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் மாறினாலும் மாறலாம்.
மோகனப்புன்னகை குமுதம், மாலை மதியில் 'காதல் சின்னம்' என்ற பெயரில் வெளியானது.
அவ்வப்போது தொலைபேசி மூலம் பேசி என் சந்தேக கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிய திரு. கங்கை ராமநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.
கமலாசடகோபன்
1
மும்பை நகரின் புறநகர் ரயில்வே ஸ்டேஷன் ஒன்று. எலக்ட்ரிக் ட்ரெய்ன், ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டு இருந்தது.
அதற்கே உரித்தான பரபரப்பு அதிகமாகியது. வந்து கொண்டிருந்த ட்ரெய்னில் பயணம் செய்தவர்கள், இறங்குவதற்காக நுழைவாயிலை நோக்கிக் கூட்டமாக நகர்ந்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு அவசரமாக எழுந்தார்.
மோகனா, சீக்கிரம் வாம்மா. இந்த ட்ரெய்ன் ரொம்ப நேரம் நிற்காது.
சுடிதாரில் இருந்த அந்த இருபது வயதுப் பெண்ணும் அவசரமாகத்தான் எழுந்தாள். வேகமாகத்தான் தன் தந்தையைப் பின் தொடர்ந்தாள்.
ஆனால்...
நுழைவாயிலில் ஏறியவர்களும், இறங்குபவர்களுமாக ஆண்கள் கூட்டமாக நிறைந்திருந்தார்கள்.
பெண்களும் இல்லாமல் இல்லை. இறங்குவதே லட்சியமாகக் கொண்ட அந்தப் பெண்கள் நாலைந்து பேரும் இடித்துக்கொண்டு இறங்கினர்.
அவள் ஒருத்தி மட்டும் கூச்சத்துடன் ஒதுங்கி ஒதுங்கி நின்றதால், அவள் தந்தை பிளாட்பாரத்தில் இவளுக்காக காத்து நிற்க, இவள் ட்ரெயினிலேயே தங்கி விட்டாள்.
அதன் பலன்,
ட்ரெயின் புறப்பட்ட சமயத்தில் அப்பா - அப்பா
என்று அலறிக்கொண்டு ட்ரெயினிலிருந்து அவள் குதிக்க முயற்சி செய்தாள்.
அதைக் கவனித்த அவளது தந்தை பதறினார்.
மோகனா... வேண்டாம்மா... வேண்டாம் குதிக்காதே
என்று உரத்த குரலில் கத்தினார்.
அடுத்த நிமிடம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிக சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.
மோகனாவுக்கு பக்கத்தில் இருந்த ஒரு சர்தார்ஜி தன் இரு கைகளினால் அவளை அலக்காக தூக்கி பிளாட்பாரம் பக்கம் வீசினார்.
அதே கணத்தில் அங்கிருந்த வாலிபன் ஒருவன் இரண்டே எட்டில் தாவி ஓடி வந்து இலாவகமாக மோகனாவை பூக்குவியல் போன்று தன் இரண்டு கரங்களில் ஏந்திக் கொண்டான்.
ஒரே நொடியில் இத்தனையும் நடந்து விட்டது.
ட்ரெயினில் பயணம் செய்தவர்கள், பிளாட்பார்மில் இருந்த கூட்டம் அத்தனையும், நடந்த ஸ்டண்ட் செயலைப்