Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Kaithi
Kalyana Kaithi
Kalyana Kaithi
Ebook78 pages23 minutes

Kalyana Kaithi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனமேடையேறிய மணப்பெண்ணின் மணக்கோலம் அலங்கோலமாகும் நிலையில் அவளுக்கு கிடைக்கும் மாற்று வாழ்க்கை.....

அந்த வாழ்க்கை இனிமையாக அமையாமல் கல்யாண கைதியாக மாறும் பவித்ராவின் வாழ்வில் நல்ல மாறுதல் ஏற்பட்டதா என்பதை தொடர்ந்து காண்போம் ....

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580132608257
Kalyana Kaithi

Read more from Kamala Sadagopan

Related to Kalyana Kaithi

Related ebooks

Reviews for Kalyana Kaithi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Kaithi - Kamala Sadagopan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்யாணக் கைதி

    Kalyana Kaithi

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அடுத்த வீட்டு பங்கஜம் எத்தனாவது தடவை எட்டிப் பார்த்தாளோ அவளுக்கே தெரியாது.

    காலையில் ஆறு மணிக்கு பக்கத்து வீட்டு வாசலில் வந்து நின்ற பஸ் இன்னும் புறப்பட்ட பாடில்லை.

    பங்கஜத்தின் கணவன் கோபாலன் கேட்டான். உன்னை எப்படியும் கல்யாணத்துக்குக் கூப்பிட்டிருப்பாளே... நீயும் ஜம்முனு இந்த பஸ்லேயே ஏறிப் போகலாமே...

    "எனக்கு அதெல்லாம் சரிப்படாது. எல்லாம் ரிசெப்ஷனுக்குப் போனால் போதும். சாய்ந்திரம் நாம் ரெண்டு பேருமே போகலாம்!

    அப்படின்னா நீ உள்ளே வந்திடும்மா, ஏன் அசிங்கமா எட்டிப் பார்க்கறே?

    பங்கஜம் கழுத்தை நொடித்துக்கொண்டு உள்ளே போனாள். கீச்சு, கீச்சென்று கத்தும் சிறு பறவைக் கூட்டங்கள் போன்று சிறுவர் சிறுமியரின் ஆரவாரக் கூச்சல் ஒரு பக்கம்.

    வயதுக்கு வந்த பெண்களின் இரகசியக் குரலில் பேசும் வார்த்தைகளும், வார்த்தைகளின் நடுவே அடிக்கடி களுக், களுக்கென்று சலங்கை ஒலி போன்று எழும் சிரிப்பொலிகள் ஒரு பக்கம்.

    இப்படி இந்தப் பெண்கள் அடிக்கடி சிரிக்கும் விதத்தில் இவர்கள் என்னதான் பேசிக் கொள்வார்களோ என்று வயதான பெரியவர்கள் வியந்து நிற்க,

    திருமண மண்டபத்திற்குப் போக வேண்டிய பேக் செய்யப்பட்ட பொருள்கள் ஒன்று விடாமல் பஸ் மேல் ஏற்றப்பட்டதா என்று ஆண்களின் சிலர் அதட்டும் ஒலியில் கேட்கும் கேள்விகள் ஒரு பக்கம் எல்லாவற்றையும் கடந்து ஒலித்தது.

    திருமணப் பெண்ணான, பவித்ராவின் ஆபிஸ் தோழிகள் நால்வர் வந்திருந்தனர்.

    பவித்ராவின் ஒன்றுவிட்ட அத்தை செல்லம்மா தன் கணவருடன் வந்திருந்தாள். அவளது கணவர் வேணு கோபாலையரும் அவளும், இளம் வயது மாதிரி நகைச்சுவையுடன் பேசிக் கலகலப்பாகப் பழகுவார்கள்.

    அந்த தம்பதிகளுக்கு புத்திர பாக்யமே ஏற்படவில்லை. எழுவதுவயதைக் கடந்துவிட்ட அந்த தம்பதிகள் ஆரம்ப நாட்களில் கவலைப்பட்டிருக்கலாம். இப்பொழுது மற்றவர்கள் சந்தோஷத்தில் தாங்களும் கலந்து கொண்டு தங்களாலான உதவிகளைச் செய்து கொண்டும், பலர் மெச்சும் தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

    பஸ்ஸில் கடைசியில் ஏறிய செல்லம்மாள் உரத்த குரலில் கத்தினான்.

    எனக்கு முக்கியமாக ரெண்டு பேர்களுடைய விவரம் பற்றி தெரிந்தாகணும். கல்யாணப் பெண் பவித்ரா பஸ்ஸில் ஏறிவிட்டாளா! இல்லையா?

    பவித்ரா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றாள்.

    இதோ இருக்கேன்

    என் கண்ணே, சீக்கிரம் உட்காரு... என் கண்ணே பட்டுரும் போலிருக்கு

    இன்னொருத்தி யாரு? அத்தை? - அத்தை உறவு கொண்டாடிக் கொண்டு பவித்ராவின் ஆபீஸ் தோழி லாவண்யா கேட்டாள்.

    போம்மா! -என்று அத்தை வெட்கப்படுபவள் போல் ஒரு போஸ் கொடுத்தாள்.

    பஸ்ஸில் சிரிப்பலைகள் எழுந்தன. கைதட்டலும் அமர்க்களப்பட்டது.

    அச்சமயம் பஸ்ஸின் முன் பக்கத்திலிருந்து ஒரு கம்பீரமான ஆண் குரல் கேட்டது.

    என் செல்லமே, கவலைப்படாதே... நான் இங்கே இருக்கேன்... எழுந்து நிற்க முடியாமல் இங்கே இரண்டு பக்கங்களிலும் ரெண்டு கிழப் பசங்கள் என்னை சாண்ட்விச் பண்ணிக்கிட்டிருக்கான்கள். என்னை நீதான் வந்து காப்பாத்தணும் டியர்...

    மறுபடியும் பஸ்ஸில் உரத்த குரலில் சிரிப்பு எழுந்தது. அதனால் அந்தத் தெருவே அதிர்ந்தது.

    பவித்ராவின் பெற்றோர் ஸ்ரீனிவாசனும், சுகுணாவும் அவர்களது கவலைகளுக்கிடையில்,

    Enjoying the preview?
    Page 1 of 1