Ullam Irandum Ondru
()
About this ebook
I am basically from Chennai, a Fine Arts graduate from Stella Maris College. Worked in various positions and settled to be a freelance web and print media designer.
Always had a great passion for Thamizh language and music. As an avid reader of all genres of Thamizh writers, it was a natural instinct to get into writing in 2012.
I have written 28 novels, multiple short stories and poetry. I maintain blogs in English and Thamizh.
Read more from Sudha Sadasivam
Engirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Un Kannil Neer Vazhinthal... Rating: 3 out of 5 stars3/5Nenjam Irandin Sangamam sudha Rating: 1 out of 5 stars1/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsAaruyire Mannipaaya Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ullam Irandum Ondru
Related ebooks
Indha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Kaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Kuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsNeeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Marakkumo Kaadhal Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsVaanathaipola Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nayanangalil... Rating: 2 out of 5 stars2/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Nandhanin Anuragam..! Rating: 4 out of 5 stars4/5Anbin Vizhiye Rating: 0 out of 5 stars0 ratingsUnakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Oru Naal Oru Kanavu... Rating: 0 out of 5 stars0 ratingsKadal Serum Vinmeengal Rating: 5 out of 5 stars5/5Mangai Necklace Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Ullam Irandum Ondru
0 ratings0 reviews
Book preview
Ullam Irandum Ondru - Sudha Sadasivam
http://www.pustaka.co.in
உள்ளம் இரண்டும் ஒன்று
Ullam Irandum Ondru
Author:
சுதா சதாசிவம்
Sudha Sadasivam
For more books
http://www.pustaka.co.in/home/author/sudha-sadasivam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு
அத்தியாயம் ஒன்பது
அத்தியாயம் பத்து
அத்தியாயம் பதினொன்று
அத்தியாயம் பன்னிரெண்டு
அத்தியாயம் பதிமூன்று
அத்தியாயம் பதினான்கு
அத்தியாயம் பதினைந்து
அத்தியாயம் பதினாறு
அத்தியாயம் பதினேழு
அத்தியாயம் பதினெட்டு
அத்தியாயம் பத்தொன்பது
அத்தியாயம் இருபது
அத்தியாயம் இருபத்தி ஒன்று
அத்தியாயம் இருபத்தி இரண்டு
அத்தியாயம் இருபத்தி மூன்று
அத்தியாயம் இருபத்தி நான்கு
அத்தியாயம் இருபத்தி ஐந்து
அத்தியாயம் இருபத்தி ஆறு
அத்தியாயம் ஒன்று
ஈசி சேரில் அமர்ந்தபடி டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார் வெற்றிவேலன்.
அவரருகே வந்து அமர்ந்து வெற்றிலை மடித்து கொடுத்தாள் அவர் மனைவி. அறுபது தாண்டி இருந்தபோதும் திடகாத்திரமாக இருந்தார் வெற்றி. கண்களில் இன்னமும் குறும்பு தாண்டவமாடியது. மனைவியியைப் பார்க்கும்போது இன்றும் கண்ணில் ஒரு மின்னல் தோன்றும். அவள் மடித்துக்கொடுத்த வெற்றிலையை கையில் வாங்காமல் ஆ என்றார்.
நல்லாத்தான் இருக்கு, இன்னும் என்ன வாலிபம்னு நினைப்பாக்கும்..... பேரப்பிள்ளையை கொஞ்சிகிட்டு இருக்கோம் இப்போ போய் இப்படி வம்பு பண்ணிக்கிட்டு
என்றாலும் அவளது முகம் மலர்ந்து நாணத்தில் சிவந்துபோயிருந்தது. அவர் கேட்டபடி வாயில் கொடுக்க அதை அவள் விரல் கடித்து வாங்கிக்கொண்டார்.
என்ன அத்தான் இது
என்று மேலும் நாணினாள்.
அடியே நீ இப்படி சிவக்கணும்னுதான்... நீ கொடுத்த வெற்றிலையினால என் நாக்கு சிவக்குதோ இல்லையோ உன் கன்னம் சிவக்குது..... அதப் பார்க்கத்தான்
என்று கண் சிமிட்டினார்.
போதுமே.... வேலையப் பாருங்க
என்று எழுந்துகொண்டாள்.
எங்க ஓடறே, உட்காருடீ
என்று அவள் கைபிடித்துப் போக விடாமல் அமர்த்தினார்.
என்ன இது, விடுங்க வேல கிடக்கு
என்றாள் கையை விடுவித்தபடி.
எல்லாம் செய்யலாம் இரு
என்று கூறி அமர்த்தினார். இருக்கறது நாம ரெண்டே பேரு.... இதுல என்னமோ ஒரு விருந்துக்கே சமைக்கறாப்போல அமர்க்களம் பண்ணிக்கிட்டு சமையல்கட்ட கட்டிக்கிட்டு அழணுமாக்கும்
என்று அலுத்துக் கொண்டார்.
அவர் முக சுணக்கம் கண்டு, சரி சரி என்னனு சொல்லுங்க
என்றாள் அருகே அமர்ந்து. அவள் கையைப் பிடித்து தன் மார்பின்மீது வைத்துக்கொண்டு பொதுவாக பேசிக்கொண்டிருந்தார் வெற்றி. அவளும் அதைக்கேட்டபடி அமர்ந்திருந்தாள்.
இதுதான் தாம்பத்திய ரகசியம் போலும். அந்த வயதில்தான் முக்கியமாக எல்லோருக்கும் ஒரு துணைத் தேவை அல்லவா.... வயதில் வருவது காதல்.... மணந்தபின் வருவது புரிதல், விட்டுக்கொடுத்தல்.... அதன்பின் வருவது அரவணைப்பு.... இவை எல்லாவற்றையும் தாண்டி வயது ஏறி வருவது பாசம். ஆம் பாசம்தான்.... ஒருவருக்கொருவர் தாயாக தோழியாக தோன்றும் பாசம்..... அவளுக்கு அவன் தந்தையுமாய் தோழனுமாய் தோன்றும் அன்பு.... அதுவும் காதல் தான். தாயாகி தாங்கினாலும் அதில் தாய்மையைவிட காதலாகி கசிந்துருகி அன்பே மேலோங்கி நிற்கும்.
அங்கே காமம் இல்லை களங்கம் இல்லை கலக்கம் இல்லை.... வெறுமனே ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடந்தாலும், அமர்ந்து பேசினாலும் அதுவும் காதல்தான். ஒருவர் மற்றவர் தோளில் சாய்ந்து அமைதி கொண்டாலும் அதுவும் அன்பின் வெளிப்பாடுதான். அந்த வயதில் அதுதான் சொர்க்கம்.
இப்படியாக மனம் ஒன்றி வாழும் துணை கிடைத்தால் அது வாழ்வின் பெரும் வரம். அந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து தேவைகள் அறிந்து கை கொடுத்து வாழ்ந்தால் அது சாதனை.
வெற்றிவேலன் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின.
***
அத்தியாயம் இரண்டு
படபடவென ஓசையுடன் மண் ரோட்டில் வந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக். அதில் கம்பீரமாக வீற்றிருந்தபடி அந்த கிராமத்தக் காலை பொழுதின் அழகை ரசித்தான் வெற்றிவேலன். தினமும் ஓட்டிப் போய் வந்த பாதையில் பழகிய குதிரையாக வண்டி ஓடிக்கொண்டிருக்க வெற்றி சுற்றும் இருந்த சூழலை தன்னை மறந்து ரசித்தான். ஒற்றைக் கையால் தன் சிகையை கோதி விட்டுக்கொண்டான். விடிந்து மணி ஒன்பதை நெருங்க வெய்யில் மெல்ல மேலேறிக் கொண்டிருந்தபோதும் சில்லென்ற காற்று சாமரம் வீசியது. கோடை காலம் தான், ஆயினும் கிராமத்தின் நாலாபுறமும் அணைத்துக் கொண்டிருந்த சோலைகளும் தோட்டங்களும் தோப்புகளும் கோடையின் வெட்பத்தை தணித்தபடி பாதுகாத்தது.
வெற்றி எனப் பலராலும் அழைக்கப்படும் வெற்றிவேலன், அழகிய ஆண்மகன். சுருள் முடியும் முறுக்கு மீசையும் உடற்பயிற்சியால் உரமேறிய உடலும் காந்தக் கண்களும் என்று வர்ணித்துக்கொண்டே போகலாம். இருபத்தி எட்டு வயதில் இன்னமும் மணம் முடிக்காமல் இருக்கிறான். தங்கையின் மணம் முடிந்தபின் செய்துகொள்வேன் என்று கூறிவிட்டான்.
அவனைக்கண்டு ஏக்கப் பெருமூச்சு விடாத குமுறிகளே அந்த வட்டாரத்தில் இல்லை. ‘யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ’ என்று பொருமினர்.
விவசாயம் முக்கிய பாடமாக எடுத்து இளங்கலை பட்டம் பெற்றிருந்தான். தந்தை செய்து வந்த விவசாயத்தை தொடர்ந்து ஊரே மெச்சும்படி செய்தான். அதில் பல புதுமைகளை புகுத்தினான். உரம் இடாத பயிர்வளர்ப்பு வேறு ஒரு பக்கம். ஐம்பதுக்கும் மேல் பசுமாடுகளும் கூடவே எருமைகளுமாக பால் பண்ணை வைத்து நடத்தி வந்தான். கைபடாது சுகாதாரமான வகையில் பால் கறந்து சொசைடிக்கென பால் விநியோகம் செய்து வந்தான்.
சென்ற வருடமும் எப்போதும் போல சிறந்த பண்ணை என்றும் சிறந்த விவசாயி என்றும் பட்டங்களும் கப்புகளும் வென்றான்.
வீடு இன்னும் சிறிது தூரம் தான் என்ற நிலையில் தனக்கு முன்னே ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கும் பெண்களைக் கண்டான்.
‘ஒன்று அவன் அருமைத தங்கை கெளரி, மற்றொன்று யார்! இங்கே இந்த கிராமத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லையே, ஒருவேளை வெளி ஊரோ’ என்று நினைத்தபடியே வண்டியை வேகமாக விட்டான். அவர்களை சமீபிக்க அந்த பெண்ணின் கூந்தலினால் பெரிதும் கவரப்பட்டான். நீண்டு அடர்ந்து விரிந்து முதுகு மொத்தமும் படர்ந்திருந்தது. குளித்து கீழே ஒரு முடிச்சிட்டு விட்டிருந்தாள். அதே நேரம் அந்தப் பெண் கௌரியின் பக்கம் குனிந்து
யாருடி அது, நம்பள பின் தொடர்ந்து வராப்போல இருக்கு?
என்றாள் மெல்ல ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்து.
கௌரி திரும்பாமலே எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவங்கதான், பேசாம வா
என்றாள் சிரித்தபடி.
என்னடி நீ சிரிக்கறே?
என்பதற்குள் வெற்றி அவர்களைத் தாண்டி வண்டியின் வேகத்தை குறைத்து காலை கீழே ஊன்றி நிறுத்தினான்.
என்ன கௌரி, எங்க போயிட்டு வரே? ஆமா இது யாரு?
என்றான் அந்தப் பெண்ணை லேசாக பார்த்தவண்ணம். கிராமம் ஆயிற்றே. முகத்தோடு முகம் நேராகப் பார்க்க முடியாதே. ஆயினும் அவன் பார்வையினை எதிர்கொள்ள முடியாமல் அந்தப் பெண் தலை குனிந்து நின்றிருந்தாள்.
‘இவன்.... இவன் வெற்றி அத்தான் அல்லவா! மறக்கவும் முடியுமா இந்த முகத்தை!!’ என்று நெஞ்சு படபடத்தது.
அவன் பார்த்த அந்த வட்ட முகம் அதில் கருவண்டு போன்ற கண்கள் அலைபாய்ந்தன.... அதனை குடைபோல விரிந்து அடை காப்பதுபோல மூடியது அவளது நீண்டு வளைந்த கண் இமைகள்.... ‘இந்த நீண்ட இமைகள் இந்தக் கண்கள் எனக்கு எங்கேயோ பரிச்சயம் போல....’ என்று தோன்றியது வெற்றிக்கு.
அண்ணா நீ எங்க இங்க.... காலையில போனியே உரம் வாங்க, இப்போத்தான் வரியா அண்ணா.... இது யாருன்னா கேக்கறே.... இன்னுமா தெரியல?
என்று சிரித்தாள்.
இல்லை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு...
என்றான் தயங்கி அவள் முகத்தைக் கண்டும் காணாமல்.
இதுதாண்ணா....
என்று கௌரி கூறும் முன்னே அவன் இதழ்கள் முணுமுணுத்தன, நித்யகல்யாணி
என்று.
அட கண்டுபிடிச்சுட்டியே!
என்றாள் கலகலவென சிரித்தபடி.
‘ஓ சிறு பெண்ணாக பத்து வயதில் பாவாடை சட்டை அணிந்து பார்த்தது... இவ்வளவு வளர்ந்து விட்டாளா!’ என்று ஒரு பிரமிப்பு.
எப்போ வந்தாங்க?
என்று கேட்டான்.
சித்திரை திருவிழா வருதே அண்ணா, அதான் வரச்சொல்லி அப்பா எழுதி இருந்தாரு..... இன்னிக்கிக் காலையில தான் வந்து இறங்கினாங்க
என்றாள்.
சரி வீட்டுக்குத்தானே, வெய்யில் ஏறுது, வண்டியில ஏறுங்க போய்டலாம்
என்றான்.
அந்தப் பெண் தயங்கி வேண்டாம் கௌரி, வீடு பக்கம்தானே... நாம நடந்தே போய்டலாம்
என்று கௌரியின் காதை கடித்தாள்.
அண்ணா தோ வந்துட்டோமே.... நீ முன்னே போ.... நாங்க பின்னாடியே வந்துடுவோம்
என்றாள்.
சரி என்று அவன் வேகம் கூட்டிச் சென்றுவிட்டான்.
அவன் போனபின் ‘இந்த வெற்றி அத்தான் என்ன அழகு ... என் மாமான் மகன்தான் என்ன ஒரு கம்பீரம்’