Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjam Irandin Sangamam sudha
Nenjam Irandin Sangamam sudha
Nenjam Irandin Sangamam sudha
Ebook279 pages2 hours

Nenjam Irandin Sangamam sudha

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

I am basically from Chennai, a Fine Arts graduate from Stella Maris College. Worked in various positions and settled to be a freelance web and print media designer.

Always had a great passion for Thamizh language and music. As an avid reader of all genres of Thamizh writers, it was a natural instinct to get into writing in 2012.

I have written 28 novels, multiple short stories and poetry. I maintain blogs in English and Thamizh.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123702872
Nenjam Irandin Sangamam sudha

Read more from Sudha Sadasivam

Related to Nenjam Irandin Sangamam sudha

Related ebooks

Reviews for Nenjam Irandin Sangamam sudha

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjam Irandin Sangamam sudha - Sudha Sadasivam

    http://www.pustaka.co.in

    நெஞ்சம் இரண்டின் சங்கமம்

    Nenjam Irandin Sangamam

    Author:

    சுதா சதாசிவம்

    Sudha Sadasivam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sudha-sadasivam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் நான்கு

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    அத்தியாயம் எட்டு

    அத்தியாயம் ஒன்பது

    அத்தியாயம் பத்து

    அத்தியாயம் பதினொன்று

    அத்தியாயம் பன்னிரண்டு

    அத்தியாயம் பதிமூன்று

    அத்தியாயம் பதினான்கு

    அத்தியாயம் பதினைந்து

    அத்தியாயம் பதினாறு

    அத்தியாயம் பதினேழு

    அத்தியாயம் பதினெட்டு

    அத்தியாயம் பத்தொன்பது

    அத்தியாயம் இருபது

    அத்தியாயம் இருபத்தி ஒன்று

    அத்தியாயம் இருபத்தி இரண்டு

    அத்தியாயம் இருபத்தி மூன்று

    அத்தியாயம் இருபத்தி நான்கு

    அத்தியாயம் இருபத்தி ஐந்து

    அத்தியாயம் இருபத்தி ஆறு

    அத்தியாயம் இருபத்தி ஏழு

    அத்தியாயம் இருபத்தி எட்டு

    அத்தியாயம் இருபத்தி ஒன்பது

    அத்தியாயம் முப்பது

    அத்தியாயம் முப்பத்தி ஒன்று

    அத்தியாயம் முப்பத்தி இரண்டு

    அத்தியாயம் முப்பத்தி மூன்று

    அத்தியாயம் முப்பத்தி நான்கு

    அத்தியாயம் முப்பத்தி ஐந்து

    அத்தியாயம் முப்பத்தி ஆறு

    அத்தியாயம் முப்பத்தி ஏழு

    அத்தியாயம் முப்பத்தி எட்டு

    அத்தியாயம் முப்பத்தி ஒன்பது

    அத்தியாயம் நாற்பது

    அத்தியாயம் நாற்பத்தி ஒன்று

    அத்தியாயம் நாற்பத்தி இரண்டு

    அத்தியாயம் நாற்பத்தி மூன்று

    அத்தியாயம் நாற்பத்தி நான்கு

    அத்தியாயம் நாற்பத்தி ஐந்து

    ***

    அத்தியாயம் ஒன்று

    அர்விந்தன் துயிலெழுந்தான். கண் திறந்து கைக்கூப்பி வணங்கி தேய்த்து பார்த்துக்கொண்டு விழித்தான். ‘இறைவா இந்நாள் எல்லோருக்கும் எனக்கும் இனிய நாளாகுக’ என்றபடி எழுந்து சென்றான்.

    காலைக் கடன்களை முடித்து வெளியே பால்கனியில் வந்து நின்றான். விடிந்து கொண்டிருந்தது. நீலமும் இளஞ்சிவப்புமாக வானம் வண்ணமயமானதாய் காட்சியளித்தது. குயில்களும் கிளிகளும் கூவக்கேட்டு புத்துணர்வு பெற்றான். பல விதமான பறவைகள் வானில் கூட்டம் கூட்டமாக பறந்து அவனை உற்சாகமூட்டின. ‘இந்த அதிகாலை பொழுது தான் எத்தனை ரம்மியமானது...! இந்தப் பறவைகளின் சுறுசுறுப்பை பார்க்கும்போது நமக்கும் அது தொற்று வியாதியாக ஒட்டிக்கொள்கிறதே...!’ என ஆச்சர்யப்பட்டபடி திரும்பினான். அங்கே அவன் அம்மா குளித்து தலையில் ஈரத் துவாலையுடன் அவர்களது தோட்டத்தில் பூத்து குலுங்கிய பலவிதமான பூக்களை பூஜைக்காக என பறித்துக் கொண்டிருக்கக் கண்டான்.

    அவன் கீழே இறங்கி வந்த அதே நேரம் ஜானகியும் தோட்டத்திலிருந்து உள்ளே வந்தாள். அம்மா என்று போய் பின்னாலிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் அரவிந்தன்.

    என்னடா பைய்யா இது, இன்னும் சின்னக் குழந்தை மாதிரி, அம்மா கழுத்தை கட்டிகிட்டு எனச் செல்லமாக கடிந்து கொண்டாலும் ஜானகி முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சிதான்.

    என்ன, எப்போவும் போல அம்மாவும் பிள்ளையும் காலங்காலையில கொஞ்சலா... என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே வந்தார் தந்தை ரகுநந்தன்.

    என்னடா அரவின், சீக்கிரமே எழுந்திட்டியே! ஏதானும் ஆபிஸ் வேலையா? என்று விசாரித்தாள்.

    ஆமாம்மா இன்னிக்கி ஒரு முக்கியமான மீட்டிங்... அம்மா காபி என்று நினைவு படுத்தினான்.

    தோ வந்திட்டேன் என அவசரமாக பூக்களை பூஜை அறையில் வைத்துவிட்டு போய் மூவருக்கும் காபியுடன் வந்தாள்.

    டைனிங் டேபிளில் அமர்ந்து சின்னக் கதைகள் பேசியபடி அம்மாவுடன் காபி அருந்த, சிற்றுண்டி உண்ண அரவிந்தனுக்கு எப்போதுமே பிடிக்கும். அந்த வேளைகள் ஜானகிக்கு பொக்கிஷமானவை. மற்ற நேரங்களில் காலில் சக்கரம் கட்டியதுபோல் பறக்கும் மகனும் தன் கணவரும், இந்தக் காலை பொழுதில் அவளுடன் கழிக்கும் இந்தப் பொழுதை அவள் என்றுமே ஆவலோடு எதிர்பார்ப்பாள்.

    நடுவில் பல வருடங்கள் இந்த சந்தோஷம் மட்டுப்பட்டிருந்தது. உள்ளார்ந்த நிறைவுடன், அவள் இந்த நேரங்களை மீண்டும் அனுபவிக்கத் தொடங்கி இருப்பது சமீபத்தில்தான்.

    ஆயிற்று அர்விந்தனுக்கும் முப்பத்தி இரண்டு வயது. அவன் வயது பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் செய்து ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கையில் அரவிந்தனிடம் திருமணப் பேச்சை எடுக்கவே பயந்தனர், அவன் பெற்றோர். அந்த அளவு அவன் திருமணத்தையும் பெண்களையும் வெறுத்திருந்தான்.

    அர்விந்த் காபி குடித்து மா, நான் ஜாக்கிங் போயிட்டு வரேன் என்று குரல் கொடுத்தபடி தன் டிராக் சூட்டில் வெளியே சென்றான். சில நேரம் அவன் தந்தை ரகுநந்தனும் கூடச் செல்வார். இப்போது கோடை காலம் ஆகையால் அவர் வீட்டினுள்ளே யோகா செய்யவே விரும்பினார். அர்விந்த் கிளம்பியதும் அவரும் தன் யோகா முடிக்கவென சென்றுவிட, ஜானகி பூஜை அறையினுள் புகுந்துகொண்டாள்.

    அர்விந்த் தன் நடை முடித்து வீட்டிற்கு திரும்ப, அவனது தாயின் மெல்லிய குரல் பூஜை அறையிலிருந்து கேட்டது. அபிராமி அந்தாதி சொல்லி முடித்து கல்பூர ஆரத்தி எடுத்து கண் மூடி தன் செல்வனின் நல்வாழ்விற்காகவும் தன் கணவரின் நல் வாழ்விற்காகவும் கடவுளை மனதார பிரார்த்தித்தாள் ஜானகி. அவள் ஆரத்தி தட்டுடன் வெளியே வர அர்விந்த் உள்ளே நுழைந்ததைக் கண்டு அவனுக்கு ஆரத்தி ஒற்றி எடுத்தாள். கணவர் குளித்து ஆபிஸ் உடையில் தயாராக கீழே இறங்கி வந்தவர் தானும் ஆரத்தி ஒற்றிக் கொண்டார்.

    அரவிந்தும் போய் குளித்து அபிசிற்கு ரெடியாக ஆழ்ந்த நீல வண்ண சூட்டில் கீழே வர, மூவரும் பேசிக்கொண்டே சிற்றுண்டி முடித்தனர். பை மா என்று அம்மாவின் கன்னத்தில் ஒரு சிறு முத்தம் வைத்துவிட்டு, பை பா என்று அவரிடமும் சென்று கூறிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டான்.

    ***

    அத்தியாயம் இரண்டு

    அர்விந்த் ஒரு ஆர்கிடெக்ட். அதற்குண்டான முதுகலை படிப்பு, இந்தியாவில் முடித்து பின் இங்கிலாந்தில் போய் அதில் மேற்படிப்பும் இரண்டு வருடம் முடித்துத் திரும்பி இருந்தான்.

    அவனது தந்தை ஒரு இஞ்சினியர், அவருக்கென சின்ன அளவில் ஒரு தொழிற்சாலை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். கார்களுக்குண்டான உதிரி பாகங்களை தயாரித்தது அவர் தொழிற்கூடம்.

    அரவிந்தனுக்கு பள்ளி நாட்களிலிருந்தே அதில் நாட்டமில்லை. கல்லூரி நுழையும்போது தன் தந்தையிடம் அதை சொல்ல, அவரும் அவனை வற்புறுத்தவில்லை.

    அரவின், படிப்பு தொழில் எல்லாம் அவரவர் இஷ்டம் போலத்தான் இருக்கணும் டா... நீ உனக்கெது பிடிச்சிருக்கோ படி... ஆனா என்ன செய்யணும்னு நல்லா யோசித்து முடிவு செய்... செய்த முடிவிலே நில்லு... அதுதான் முக்கியம் என அவனுக்கு அறிவுறித்தினார்.

    அதன்படி அர்விந்த் படித்து முடித்து அவன் கண்ட கனவின்படி இப்போது தனக்கென ஒரு ஆர்கிடெக்ட் கன்சல்டன்சி கம்பனி நிறுவி நல்ல பேரும் வாங்கிவிட்டான். இப்போது தமிழ்நாட்டில் அவனது கம்பனி ‘ரகுவம்சி ஆர்கிடக்ட்ஸ் அண்ட் கன்சல்டண்ட்ஸ்’ மிகப் பிரபலம். சென்னைவாசிகள் மட்டும் இன்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலும் அவனது ப்ராஜக்ட்ஸ் நடந்து கொண்டிருந்தன. அவனே ஒரு இளைஞன் என்பதால் மற்ற இளம் வல்லுனர்களை கண்டறிந்து வேலைக்கு எடுத்து நண்பர்கள் போல அவர்களுடன் கூடி சகஜமாக பழகி அதே சமயம் நன்றாக வேலையும் வாங்கினான். அதில் அவனது தனித்திறமை மிளிர்ந்தது. அவன் செய்து கொடுத்த ஒவ்வொரு ப்ராஜக்டும் அவன் திறமையை பறை சாற்றியது.

    ***

    அத்தியாயம் மூன்று

    அவனது ஸ்கோடா லாரா சென்னை, அடையாரில் இருந்த அவனது ஆபிசில் நுழைந்தது. சல்யுட் அடித்தபடி காவலாளி ஓடி வந்து கேட்டை திறந்தான். உள்ளே நுழைந்து பார்க் செய்துவிட்டு லிப்டில் ஏறி மேல் தளத்தில் உள்ள தன் அறையை அடைந்தான். அவனது அறையும் இன்னொரு தலைமை வல்லுனரின் அறையும் ஒரு கான்பரன்ஸ் ஹாலும் மட்டுமே மேல் தளத்தில். மற்றபடி, ரிசெப்ஷன் மேஜை, டிராப்ட்ஸ்மென் கட்டிட வரைகலை நிபுணர்), டிசைனர்ஸ், ஜூனியர் ஆர்கிடக்ட்ஸ் அறைகள் கீழேயே இருந்தன.

    இந்த இடம் மெயின் ரோட்டில் முக்கிய திருப்பத்தில் இருந்தது. எல்லோர் கண்ணிலும் உடனே பளிச்சென படும்... அதனால் இந்த இடம் விலைக்கு வந்த உடன் அர்விந்த் வளைத்து போட்டுவிட்டான். அங்கே தன் ஆபிசை தன் ரசனைக்கேற்றபடி அழகாக வடிவமைத்து கட்டினான்.

    கடவுளை வணங்கி அவன் இருக்கையில் அமர்ந்து அன்று மீட்டிங்கிற்கு தேவையானதை புரட்டி பார்த்தான்.

    தன் கூட பணிபுரியும் சற்று நடுத்தர வயதுள்ள ஸ்ரீநிவாசன் சாரை அவரது அறையில் கண்டு வேண்டிய சில விஷயங்களை சொல்லி கேட்டுவிட்டு, சார் உடனடி பிரச்சனை நமக்கு ‘இன்டீரியர் டிசைனர்’ தான் இல்லியா...? என்றான்.

    ஸ்ரீநி சாரும் ஆமா அர்விந்த், என்னதான் இந்த ரெண்டு மாசமா நம்ம பசங்க மேனேஜ் பண்ணினாலும் நமக்குன்னு ஒரு இன்டீரியர் டிசைனர் கண்டிப்பா வேணும்... எல்லா வேலைகளையும் நாமளே பாக்க முடியாது... நம்ம வேலையே நமக்கு தலைக்கு மேல இருக்கே, தினம் தினம் வேலை பளு ஏறிகிட்டு இல்ல போய்கிட்டிருக்கு... என்றார்.

    அதில் சலிப்பில்லை சந்தோஷமே காணப்பட்டது. அரவிந்தின் அயராத உழைப்பால் அவன் உயர்ந்து வருவதை ஒரு மூத்த சகோதரர் போல கூட இருந்து பார்த்து சந்தோஷமாக கை கொடுப்பவர் அவர். அரவிந்தும் அவரை தன் அண்ணனாகவே எண்ணினான்.

    ஹ்ம், ஆமா நானும் யோசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்... நாம நேர்முகத்துக்கு அழைத்து யாரையானும் தேர்ந்தெடுத்து அமர்த்தி பழக்கி எல்லாம் செய்ய எப்பிடியும் மூணு மாசமானும் ஆகும்... அதுக்காக இந்த ஈ சி ஆர் ப்ரஜச்ட காக்க வைக்க முடியாது... பார்ட்டி அவசரப்பட்றாங்க... அதுனால எனக்கு ஒரு யோசனை சார்... என்று நிறுத்தினான்.

    ‘என்ன’ என்பதுபோல அவர் பார்க்க, "நம்ம ‘தினேஷ் அசோசியேட்ஸ்’ இருக்காங்க இல்ல,

    அதான் சார் சிடியின் மற்றொரு பிரபலமான ஆர்கிடக்ட், அவன் தினேஷ், என் நண்பன்தான். ஸ்கூல் வரை ஒண்ணாதான் படிச்சோம். ரொம்ப நெருக்கம் இல்லேனாலும் நல்லவன்..." ‘மேலே சொல்லு’ என்பதுபோல பார்த்திருந்தார் ஸ்ரீநி.

    அவன்கிட்ட இந்த ஒரு ப்ராஜக்டுகு மட்டும் அவனோட இன்டீரியர் டிசைனர் யாரைனும் நமக்கு உதவிக்கு அனுப்பும்படி நான் ரிக்வெஸ்ட் பண்ணி பார்க்கறேன்... அதற்குள்ளாக நாம யாரையானும் தேர்ந்தேடுத்துடலாம், என்ன சொல்றீங்க? என அவர் முகம் பார்த்தான்.

    நல்ல யோசனைதான், கேட்டுப் பாருங்க. அமைஞ்சா நல்லது... நானும் இன்னிக்கே நம்ம காரியதரிசி மூலமா பத்திரிகைகளிலும் ஆன்லைனிலும் நமக்குத் தேவைப்படும் இன்டீரியர் டிசைனருக்கு விளம்பரம் போட ஏற்பாடு பண்ணிடறேன் என்றார்.

    சரி என இருவரும் அவரவர் வேலையில் பிசியாகினர். அர்விந்த் கீழே இறங்கி வந்து அங்கு பணியாற்றும் எல்லோரையும் கண்டு விஷ் செய்து அன்னாளுக்குண்டான வேலை சரியாக நடக்கின்றதா என்று பார்த்துவிட்டு மேலே சென்று தினேஷிற்கு போன் செய்தான்.

    ஹாய் டா தினேஷ், எப்பிடி இருக்கே... ஓ நான் நல்லா இருக்கேன்... எப்பிடி போய்கிட்டிருக்கு...? என்று விசாரித்தான்.

    என்னடா அரவின், அதிசயமா என் ஞாபகம் வந்து கூப்பிட்டிருக்கே.... நான் நல்லா இருக்கேன்... உன் கம்பனி லீட்ல இருக்கும்போது எங்களுது எப்போதும் நம்பர் டூ தானே... என்னடா பார்த்தே நாளாச்சு, ரொம்ப பிசி மான் நீ என்றான் சிரித்தபடி. அதில் எந்த வேற்றுமையும் இருக்கவில்லை.

    எங்கடா உனக்கு தெரியாததா, ஒழிவே இல்லை... எனக்கு ஒன்னோட ஒரு உதவி வேணுமே தினேஷ் என்றான்.

    என்னடா சொல்லு, நீ எப்போதும் ஒண்ணும் கேட்காதவன்... செய்ய காத்திருக்கேன் என்றான் ஆர்வமாக.

    நான் ஒரு இக்கட்டுல மாட்டி இருக்கேன்... எனக்கு இங்க ஈ சி ஆர் ல ஒரு ப்ராஜக்ட். ரொம்ப நாளா தெரிஞ்ச ஒரு நல்ல பார்ட்டி. அவங்க ப்ராஜக்ட் நல்லபடியா முடிக்க எனக்கு ஒரு இன்டீரியர் டிசைனர் தேவைப் படறாங்க. ஆண் பெண் யாரா இருந்தாலும் ஓகே... உன்கிட்ட வேலை செய்யறவங்கள்ளையே நல்லவங்களா திறமைசாலியா யாரையானும் அனுப்ப முடியுமா? ஒரு நாள் பொழுதில சில மணி நேரம் எங்க வேலைக்கு ஒதுக்கினாலும் போதும் டா... என்றான் கெஞ்சும் குரலில்.

    ஓ அப்படியா! சரி நான் பார்க்கறேன். இப்போதைக்கு ரெண்டு பேர் இருக்காங்க. ஒரு ஆள், அவன் கொஞ்சம் வேலைக்கு சுணங்குபவன். ஒரு லேடி இருக்காங்க, ரொம்ப ப்ரைட்... அவங்களுக்கு இங்கே புல் வேலை இல்லைன்னு தான் சொல்லணும்... இப்போதைக்கு அவங்க திறமைக்கு ஏற்ப என்னால அவங்களுக்கு வேலை குடுக்க முடியல... அவங்ககிட்ட பேசிட்டு நான் சொல்றேண்டா என்றான் தினேஷ்.

    ரொம்ப தாங்க்ஸ் டா, அயாம் வெரி க்ரெட்புள்... என்றான் நெஞ்சார்ந்து அர்விந்த்.

    டேய் என்னடா, ஏன் பெரிய வார்த்தை எல்லாம்... நம்ம துறைல இதெல்லாம் சகஜம் தானே, விடுடா... நான் பேசிட்டு கூப்பிடறேன் என்றான்.

    அவள், அந்த பெண், ஒத்துக்கொள்ள வேண்டுமே என வேண்டியபடி தன் மீட்டிங்கை கவனிக்க சென்றான் அர்விந்த். அதுவும் ஒரு முக்கிய க்ளையண்ட் அதிலும் அரசிய செல்வாக்கு கொண்டவர். அவனை பேசி பேசியே பிழிந்தெடுத்துவிட்டார் மனிதர்... அர்விந்த் வெறுத்து களைத்துவிட்டான்... அப்போதுதான் பார்த்தான் தினேஷிடமிருந்து இரண்டு மிஸ்டு கால்... உடனே அழைக்க அவனே எடுத்தான்.

    சாரிடா ஒரு முக்கியமான மீட்டிங்... என்றான் அர்விந்த்.

    இட்ஸ் ஓகே.. நான் அவங்ககிட்ட பேசிட்டேன்... அவங்க கொஞ்சம் தயங்கினாங்க... சில நாட்களுக்குத்தான்னு சொல்லி ஒப்புக்க வெச்சுட்டேன்... ஷி இஸ் பூர்ணிமா. இளம் வயது பெண்தான்... நல்ல திறமை, சுறுசுறுப்பு... அவங்க கலர் ஸ்கீம் எல்லாமே ரொம்ப அழகா கண்ணுக்கு இதமா இருக்கும்... அவங்களோட ஸ்பெஷாலிடியே பழமையும் புதுமையும் அவங்க ப்ளண்ட் பண்ற அழகுதான்... என்று வர்ணித்துக் கொண்டே போனான் தினேஷ்.

    அர்விந்த்கோ ‘ஒரு ப்ராஜக்ட், அத யாரனும் கொஞ்சம் நல்லா பண்ணிக்குடுத்திட்டா பிறகு பார்த்துக்கலாம்’ என்றவரை மட்டுமே மனதில் இருந்தது. சரிடா அப்போ நாளைக்கே வர முடியுமா? எர்லியர் த பெட்டர் என்றான் அர்விந்த்.

    சரி வரச் சொல்றேன்... உன் ஆபிசுக்குதானே, நாளை காலை பதினோரு மணிக்கு அங்க இருப்பாங்க பூர்ணிமா என்று முடித்தான் தினேஷ். ‘ஹப்பா ஒரு கவலை விட்டது’ என்று பெருமூச்சுவிட்டான் அர்விந்த் வரப்போவது அறியாமல்.

    ***

    அத்தியாயம் நான்கு

    அடுத்த நாள் நல்லபடி விடிய அர்விந்த் எப்போதும் போல அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பி அபிசிற்கு வந்தான். டார்க் கிரேயில் சூட் அணிந்து, அதற்கு ஏற்றபடி அரக்கு நிற டை அணிந்து கம்பீரமாக தனது அறையில் அமர்ந்தபடி வேலையில் மூழ்கி இருக்க, சார், ஒன் மிஸ் பூர்ணிமா இஸ் ஹியர் டு சி யு என்றாள் வரவேற்பாளர் வனிதா. உடனே மலர்ந்து ஓ குட், மேலே அனுப்புங்க என்றான்.

    சில நிமிடங்களில் மெல்ல கதவை தட்டியபடி ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்தாள். ஐந்தரை அடி உயரத்தில், சந்தன நிறத்தில் நெடுநெடுவென திட்டமான உடலுடன் இருந்தாள்... கருவிழிகளும், சிவந்த உதடுகளுமாக இடுப்பை தாண்டி தழைந்து நிற்கும் நீள தலைமுடியை தளர பின்னி இருந்தாள்... எந்தவித செயற்கை அலங்காரமும் இல்லாதபோது மிக களையான அமைதியான அழகுடன் இருந்தாள் பூர்ணிமா.

    தலை நிமிர்த்தாமலே அவளை கம் இன் என்றவன் அவள் உள்ளே வந்ததும் அமரச்சொல்லி கை காட்டினான். அவளும் அமர்ந்து இருவரும் ஒருசேர நிமிர்ந்து ஒருவரை ஒருவர் கண்டு திகைத்து திடுக்கிட்டு கண்கள் வெளியே தெரித்துவிடுமோ என பார்த்துக்கொண்டனர்.

    அவனுக்கு அவளை கண்டு பூர்ணிமாவா... இவளா? இவ பூரணி அல்லவா... ஓ ஆமாம், மறந்தேவிட்டது... பூர்ணிமாவைத்தானே எல்லோரும் பூரணி என்றழைத்தனர்... இவள் இங்கே எப்படி... யாரை நான் இந்த ஜென்மத்தில் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவளையே என் ஆபிசிலேயே இன்று பார்க்க வைத்துவிட்டாயே இறைவா...! என்று கோபம் ஆத்திரம் சோகம் என தன் உணர்வுகளோடு போராடினான் அர்விந்த்.

    அவளது

    Enjoying the preview?
    Page 1 of 1